Thursday, September 2, 2010

தடுத்த ஈழ ஆதரவுத் தலைவர்கள்! ஆதாரங்களுடன் போராளிகள்!


"விடுதலைப் போராட்டத்தை அழித்து முடிப்பதில் முழு மூச்சோடு நின்ற காங்கிரசு அரசைக் காப்பாற்ற உங்கள் எழுத்து உதவாதிருக்கட்டும்' என கடந்த இதழ் கட்டுரை படித்தபின் வாசகர் ஒருவர் மின் அஞ்சல் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். கவலைப்படாதீர்கள் தோழர். தமிழருக்கெனவும் உலக வரைபடத்தில் ஓர் நாடு அமைகிற காலம் கனிந்து வந்த தருணத்தை குரூரமாகக் கலைத்ததில் இந்திய அரசமைப்பின் பங்களிப்பினை, யுத்தக் குற் றங்கள் பல புரிந்த ராஜபக்சே அரசினை பாதுகாப்ப தில் இன்றுவரை அது ஆற்றி வரும் ஒழுக்கமிலா வெளியுறவு வேலைகளை வரலாறு பதிவு செய்து விட்டது. இவற்றிற்கான பதிலை இந்திய அரசமைப் பிடமிருந்து விழிப்புணர்வடைந்து விட்ட தமிழின் பிள்ளைகள் என்றேனும் ஒருநாள் பெறாமல் விடமாட்டார்கள். எனவே இந்திய அரசமைப்பினை குற்றப் பழியிலிருந்து பாதுகாக்கிற வேலையை நாம் செய்ய முயல்கிறோம் என்று எந்த உணர்வாளரும் ஐயமுறத் தேவையில்லை.

இந்தப் பதிவின் நோக்கம் எளிதானது, நேர்முக மானது. கருணம்மானின் துரோகத்தை வரலாறு பதிவு செய்துவிட்டது. அவர் ஒரு காலத்தில் தேசிய தலைவரின் நெஞ்சம் நிறைந்த வீரனாய் இருந்தபோதும் கூட. கே.பி.யின் சந்தர்ப்பவாதத் தை வரலாறு பதிவு செய்து விட்டது. அவர் விடுதலைப் போராட்டத்தை வளர்த்தெடுத்த பிதாமகர்களில் ஒருவராக இருந்தபோதும் கூட. அதுபோலத்தான் தமிழகத்தின் ஈழ ஆதரவுத் தலைவர்களும். ஈழ விடுதலைக் களத்தில் நின்று பல்வேறு தியாகங்களை அவர்கள் செய்திருந்த போதும் -போராட்டத்தை எப்பாடு பட்டேனும் காப்பாற்றியிருக்க வேண்டிய ஒரு வாழ்வா -சாவா கட்டத்தில் தங்கள் அரசியல் கணக்கு வட்டத்திற்குள் போராட்டத்தை வளைத்து போ ராட்டத்தின் கட்டளைக் கட்டமைப்பு அழிக்கப் படக் காரணமாய் இருந்தார்கள் என்பதுதான் குற்றச்சாட்டு. 2009 ஜனவரி இறுதியில் இந்தியா மேற்கொண்ட முதல் சண்டை நிறுத்த முயற்சி யில் நேர்மை இருந்ததா? அப்படியே அப்போது சண்டை நிறுத்தம் ஏற்பட்டிருந்தாலும் அது நீண்டு நிலைத்திருக்குமா? -போன்ற கேள்விகள் மிகச் சரியானவை.

எந்த நோக்குடன் சண்டை நிறுத்த முயற்சியை இந்திய ஆட்சி அமைப்பு மேற்கொண்டது என்பதை நாம் எவருமே அறியப் போவதில்லை. விரைவில் வரவிருந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத் தொகுதிகளை வெல்ல ஓர் சண்டை நிறுத்தம் உதவி யாக இருக்கும் என காங்கிரஸ் அரசு கருதியிருக்கலாம்... மேற்குலக நாடுகள் முயன்று சண்டை நிறுத்தம் கொணர் வதைவிட தானே அதைச் செய்யலாம் என்று நினைத்திருக்கலாம்... விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக பலமழிக் கப்படுவதை விரும்பாமல் கூட இருந் திருக்கலாம்... இவற்றையெல்லாம் நாம் யூகிக்க மட்டும்தான் முடியும்.

ஆனால் ஒன்று. அன்று சண்டை நிறுத்தம் ஏற்பட்டிருந்தால் பொதுத் தேர்தல் முடியும் வரையாவது அது நீடித்திருக்கும். சற்றேறக் குறைய நூறு நாட்கள் சண்டை நிறுத்த இடை வெளி கிடைத்திருக்கும். அது விடு தலைப் புலிகள் இயக்கத்தை பொறுத்தவரையும், போராட்டத்தை பொறுத்தவரையும் மிகப்பெரிய விஷயமாக இருந்திருக்கும். புலிகள் தங்களை மறு ஒருங்கமைவு செய்திட (தங்ஞ்ழ்ர்ன்ல்), காயம்பட்டவர்களை காப் பாற்ற, உணவுப் பொருட்கள் சேக ரிக்க, யுக்திகளை மாற்றியமைக்க, ஏன் நிஜமாகவே மீண்டும் பேச்சுவார்த்தை கள் தொடங்க அந்த இடைவெளி வழி சமைத்திருக்க முடியும். மிக முக் கியமாக கட்டளைக் கட்டமைப்பை ஈர்ம்ம்ஹய்க் ள்ற்ழ்ன்ஸ்ரீற்ன்ழ்ங்ஐ காப்பாற்றி யிருக்க முடியும்.

அப்போது நடந்ததையும் பின்னர் நான் அறிய வந்தவற்றையும் வர லாற்றிற்காய் மீண்டும் ஒருமுறை இங்கு பதிவு செய்கிறேன்:





2009 ஜனவரி இறுதி, பிப்ரவரி தொடக்க நாட்கள். தமிழகம் கொந் தளித்துக் கிடந்த காலம் அது. தமிழக அரசு தனது வழிகளில் மத்திய அரசு மீது தொடர் அழுத்தம் கொணர்ந்து கொண்டிருந்த தருணம் அது. களத் தில் தலைவரது நம்பிக்கைக்குரிய ஒருவரோடு, தலைவரது சார்பில் பேசும் தகுதியுடைத்த ஒருவரோடான தொடர்பு கோரப்பட்டது. ஒரே ஒரு நிபந்தனையடிப் படையில் உடனடி சண்டைநிறுத்தம் கொணர இந்திய அரசு தயாராயிருப்பதாய் அவர்களுக்குச் சொல்லும் படியும் கோரப்பட்டது. "ஒய்ற்ங்ய்ற்ண்ர்ய் ற்ர் கஹஹ் உர்ஜ்ய் ஆழ்ம்ள்' - "ஆயுதங்களை ஒப்படைப்பதற் கான விருப்பம்' மட்டும்தான் அப் போது விதிக்கப்பட்ட நிபந்தனை.

நான் எனது லண்டன் நண்பர் வழியாக இதனைத் தெரிவிக்க லண் டன் விடுதலைப் புலிகள் இயக்க சார்பில் "ரூட் ரவி' தொடர்புக்கு வந்தார். விபரங்கள் அவருக்குத் தெரிவிக்கப்பட அவர் களத்திற் குத் தகவல் சொல்லி விடுதலைப்புலிகளின் அரசியற் பிரிவு பொறுப்பாளர் நடேசன் தொடர்புக்கு வந்தார். யுத்தம் முழு உக்கிரமாய் நடந்த அக்காலத்திலும் கூட அவரது குரலில் சாந்தமும் உறுதியும் வெளிப்பட்டது. நான் அவருக்கு இப்படித்தான் சொன்னேன். ""அண்ணை... நீங்கள் சண்டை பிடித்து தாக்குப் பிடிக்க முடியுமென்று நினைத்தால் இந்த வாய்ப்பை நிராகரியுங்கள். ஆனால் வேறு வழியில்லை, ஓர் சண்டை நிறுத்தம் உதவக்கூடுமென நினைத்தால் இந்த வாய்ப்பினை பிடித்துக் கொள்ளுங்கள்'' நிபந்தனையை தெளிவாகக் கேட்டுக்கொண்டார்.

தலைவரிடம் பேசிவிட்டு மீண்டும் தொடர்புகொள்வ தாய் கூறினார். அவ்வாறே தலைவரிடம் பேசிவிட்டுத் தொடர்புகொண்ட அவர், (ஒய்ற்ங்ய்ற்ண்ர்ய் பர் ப்ஹஹ் உர்ஜ்ய் ஆழ்ம்ள்) -ஆயுதங்களை ஒப்படைக்கும் விருப்பம் தொடர்பான நிபந்தனையின் உண்மையான விளைவு என்ன? என்பது பற்றி தலைவர் அறிய விரும்புவதாகக் கூறினார்.

சண்டை நிறுத்த முயற்சியை மேற்கொண்டிருந்தவர் களிடம் இதனை நான் தெரிவித்தபோது, ""ஆயுதங்களை ஒப்படைக்கும் விருப்பத்தை வெளிப்படையாக அவர்கள் அறிவிக்க வேண்டும். அதற்கான மாதிரி வரைவினை (உழ்ஹச்ற்) அவர்களே முதலில் பரிந்துரைக்கட்டும்'' என்றார்கள். நடேசன் அவர்களிடம் இதனைத் தெரிவித்தபோது ""நீங்களே ஒரு மாதிரி வரைவு தயாரித்து அவர்களுக்கு அது சம்மதமா என கேட்டுச் சொல்லுங்களேன்'' என்றார். அதன்படி அந்த வரைவு இவ்வாறு தயாரிக்கப்பட்டது. ""இந்திய அரசின் முயற்சியால் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்குமிடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டு, இந்திய அரசின் முயற்சி யாலோ உலக நாடுகளின் முயற்சியாலோ மீண்டும் அமைதி பேச்சுவார்த்தைகள் தொ டங்கி தமிழ் மக்களுக்கு திருப்தியானதோர் அரசியற்தீர்வு ஏற்படும்பட்சத் தில் ஆயுதங்களை ஒப்படைப்ப தற்குத் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தயாராக இருக்கிறது.'' ஆயுதங்களை ஒப்படைப்பதற்கும் தமிழ் மக்களது அரசியற் சிக்கலுக்கு திருப்தியான ஓர் தீர்வு ஏற்படுவதற்கும் இடை யே ஓர் முடிச்சினை ஏற்படுத்துதன் மூலம், எதிர்காலத் தில் ஒப்பந்தத்திலிருந்து புலிகள் இயக்கம் விலகவேண் டிய நிர்பந்தம் எழுந்தாலும் அதற்கான நியாயம் கட்டமைவு செய்யப்பட்டது. நடேசன் அண்ணைக்கு இந்த வரைவு பிடித்திருந்தது. ""இதற்கு புதுடில்லிக்காரர்கள் ஒத்துக் கொள்வார்களா?'' என ஐயத்துடன் கேட்டார். ஆனால் நானே ஆச்சரியப்படும் வண்ணம் அந்த வரைவினை புது டில்லிக்காரர்கள் ஏற்றுக்கொண்டார்கள். அத் தோடு வெறும் தபால்காரனாகிய எனது வேலை முடிந்தது. நடேசன் அண்ணனே புதுடில்லி உயர் அதிகாரி ஒருவ ரோடு நேரடிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கினார்.

ஆனால் தொடங்கிய வேகத்திலேயே பேச்சுவார்த் தைகள் முடங்கின. இரண்டு சுற்று உரையாடல்களுக்குப் பின் நடேசன் மீண்டும் தொடர்புக்கு வரவில்லை என புதுடில்லிக்காரர்கள் சொன்னார்கள். ஏன் என்பதை அறிய விரும்பினார்கள். எதுவானாலும் பேசலாம் என் றார்கள். சண்டை நிறுத்தம் ஏற்படுத்துவதில் அன்றைய உறுதியை மீண்டும் வலியுறுத்தினார்கள். நடேசன் அண்ணையை மீண்டும் நான் தொடர்புகொண்ட போது, ""இஞ்செ வேறெ மாதிரி யோசிக்கினும்'' என்று மட்டும் சொன்னார்.

ஏன் சண்டை நிறுத்தத்திற்கான அந்த வரலாற்று வாய்ப்பு தவறவிடப்பட்டது என்பதற்கான காரணத்தை நடேசன் அவர்கள் சொல்லவில்லைதான். ஆனால் முள்ளிவாய்க்கால் முடிவுற்றபின் களத்தில் நின்ற பலரோ டும் விரிவாக விவாதிக்கும் வாய்ப்பு கிட்டியது. அப் போதுதான் தமிழகத்தில் ஈழ ஆதரவுத் தலைவர்கள் எவ் வளவு அரசியற் சுயநலத்துடன் நடந்துகொண்டிருக் கிறார்கள் -அந்த சண்டை நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாதென எத்தகு அழுத் தங்களை கொணர்ந்திருக்கிறார்கள் என்ப தெல்லாம் தெரியக்கூடியதாயிருந்தது. காங் கிரசு மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை. தமிழகத்தில் எல்லா தொகுதிகளையும் தங்கள் கூட்டணிதான் வெல்லப்போகிறது... சண்டை நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டால் கொந்தளித் துக் கிடக்கும் தமிழக மக்கள் அதை ஏற்க மாட்டார்கள்.... என்றெல்லாம் பேசியிருக் கிறார்கள். இந்திய அரசை நம்பாதீர்கள் என்று எச்சரித்திருக்கிறார்கள்.

இவற்றினாலெல்லாம்தான் விடுதலைப் புலிகள் அந்த வாய்ப்பை நழுவவிட்டார்களா இல்லை வேறு காரணங்கள் இருந்தனவா என்பது நமக்குத் தெரியாது. ஆனால் பின்னோக்கிப் பார்க்கையில் -அந்த வாய்ப்பு பயன்படுத்தப்பட்டிருந்தால் புலிகளின் கட்டளை கட்டமைப்பு (ஈர்ம்ம்ஹய்க் நற்ழ்ன்ஸ்ரீற்ன்ழ்ங்) காப்பாற்றப்பட்டிருக்கும். மீண்டும் விடுதலைப் போராட்டம் கம்பீரத்தோடு தொடர்ந்திருக்கும். சூன்யப் புள்ளியை தொட்டிருக்கமாட்டோம்.

கடைசியாக ஒரு வார்த்தை: களத் தோடு கடைசி நாட்களில் ஆதரவுத் தலைவர்கள் இங்கிருந்து பேசிய ஆதாரங்களை வைத்திருக்கிற போராளிகள் இன்னும் உயி ரோடுதான் இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment