Thursday, September 2, 2010

ஆடம்பர வாழ்க்கை சபலம் முடிவு?



""ச்சே... கணவனா அவன்? காம மிருகம்ங்க. மனைவி யான என்னையே வீடியோ படம் எடுத்து டார்ச்சர் பண்றான். அது மட்டுமில்லீங்க... அவன் டாக்டருக்குப் படிக்கும்போதே பெண்களுக்குப் பிரசவம் ஆகுறதை அப்படியே ஃபோட்டோ எடுத்து வெச்சுருக்கான். இப்படிப்பட்ட ஒருத்தனை என் கணவன்னு சொல்லிக்கிறதுக்கே கேவலமா இருக்குங்க'' என்று அனுராதா என்கிற இளம்பெண் பகீர் புகாரை கொடுக்க...

""படுபாவிப்பய... இவ்வளவு அழகான மனைவியை வெச்சு வாழத் தெரியாம எவ்வளவு கேவலமா நடந்திருக்கான்? அதான் சொல்வாங்களே... கிளி மாதிரி ஒரு மனைவி இருந்தாலும் குரங்கு மாதிரி ஒரு வைப்பாட்டியை தேடுவானுங்க சில ஜொள்ளன்கள்னு. ப்ச்... பாவம்யா அந்த அப்பாவி அனுராதா'' என்றெல்லாம் பல ரும் அனுதாபப்பட ஆரம்பித்துவிட்டார்கள்.

அதே அனுதாபத்துடன் அனுராதாவின் வழக்கறிஞர் ஜீவக்குமார் மூலம் அனுராதாவை நேரில் சந்தித்துப் பேசினோம்.

தயக்கமில்லாமல் பேசத் தொடங்கினார்.

""என் அப்பா ஜனார்த்தனன் டெல்லியில் "ரா' உளவுப் பிரிவில் வேலை பார்த்தாருங்க. அம்மா இறந்துட்டாங்க. அதனால 10-ம் வகுப்பு படிச்சு முடிக்கும்போதே மதுரையில் சதீஷ்ங்கிறவர்கூட கல்யாணம் ஆகிடுச்சு. கொஞ்சநாள் சந்தோஷமா போன என் வாழ்க்கையில வரதட்சணைங்கிற புயல் வீச ஆரம்பிச்சிடுச்சு. அதே நேரத்துல ஒரே பிரசவத்துல ரெட்டைக் குழந்தை பிறந்தது. மூணு மாசத்துக்கப்புறம் அதே கொடுமை தொடர... மதுரையில இருக்கிற "மக்கள் கண்காணிப்பகம்' உதவியை நாடினேன். குழந்தைத் திருமணம் செல்லாதுன்னு பிரிஞ்சுட்டோம். என் குழந்தைகள் கணவன் சதீஷ் வீட்டில் வளர்ந்தது. நான் காப்பகத்தில் இருந்தபடியே +1, +2 படிச்சு முடிச்சேன். அதுக்கப்புறம் என் பிள்ளைகளை அழைச்சுக்கிட்டு வந்து தனியா தங்கினேன்.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் இன்சூரன்ஸ் பிரிவுல வேலைக்குச் சேர்ந்தேன். பாலிசி எடுக்க நிறைய பேருக்கு கால்பண்ணி பேசும்போது தான் டாக்டர் மனோஜ்கிட்டேயும் பேசினேன். ரொம்ப நல்லா பேசினவர், பாலிசி போடுறதா சொல்லி ஒத்துக்கிட்டு அடிக்கடி எனக்கு ஃபோன்பண்ணி பேசிக்கிட்டிருப் பாரு. இப்படியே ஒரு வருஷம் ஓடிப்போச்சு. "ஒருநாள் நீ சென்னைக்கு வந்தா அஞ்சு லட்சம் ரூபாய்க்கு பாலிசி எடுக்குறேன்'னாரு. அதை நம்பித்தான் 2007 ஜூன் 21-ந் தேதி மதுரையில் இருந்து சென்னைக்கு வந்தேன். என்னை மீட்பண்ணின மனோஜ், இன்னொரு நாளைக்கு பாலிசி போடுறேன்னாரு. சரி... என்னோட தோழி வீட்டுக்குப் போறேன்னு சொல்லிட்டு கிளம்பினேன். நானே கார்ல கொண்டுபோய் விடுறேன்னாரு. சரின்னு கார்ல ஏறினேன். எனக்கு கூல் ட்ரிங்க்ஸ் வாங்கிக் கொடுத்தாரு. குடிச்சேன். கண் விழிச்சுப் பார்த்தா ஒரு பெட்ல கிடக்கு றேன். (ப்ச்... பாவம் நெறைய பெண்கள் இப்படித்தான் ஏமாறுறாங்க!) பயங்கர ஷாக் ஆயிட்டேன். அதுக்கப்புறம்தான் நான் பாண் டிச்சேரியில இருக்கிற "கிரீஷ்' ஹோட்டல் ரூமில் இருக்கேன்னும் அவன் என்னைக் கெடுத்ததும் தெரிந்தது. "என்னம்மா கண்ணு நீ போலீசுக்குப் போகணும்னு நினைச்சே... உன்னோட கோலத்தை இந்த உலகமே பார்த்து ரசிக்கும்'னு சொன்ன படுபாவி என்கூட இருந் ததை வீடியோ எடுத்து அதை "லேப்டாப்'ல காண்பிச்சான். அதுக்கப்புறம் இதைக் காண்பிச்சே என்கிட்ட பலமுறை இருந்தான். எனக்கும் துணை இல்லாததால அவனோடு தனி வீடு எடுத்து குடும்பம் நடத்த ஆரம்பிச்சேன்.

ஆனா... இந்த காமக்கொடூர டாக்டர் மதுரை மருத்துவமனையில வேலை பார்க்கிற இளம்பொண்ணுங்களையும் ஆபாச படம் எடுத்து வெச்சிருக்கிறதோடு... கருக்கலைப் புக்கு வர்ற இளம்பெண்களையும் படம் எடுத்து வெச்சிருக்கிறதை அவனோட லேப்டாப்ல பார்த்துட்டு அதிர்ச்சியாயிட்டேன். என்னை மாதிரியே பல பெண்களை படம் பிடிச்சு... தன்னோட காம இச்சைக்கு பயன்படுத்தியிருக்கான்ங்கிறது தெரிஞ்சுதான் மாவட்ட எஸ்.பி.செந்தில்வேலன் சார்கிட்ட புகார் கொ டுத்தேன். இந்த மனோஜோட ஃப்ரெண்ட் ஜிம் வெச்சிருக்கான். அந்த ஜிம்முக்கு வர்ற பெண்களையும் படம் புடுச்சு சீரழிச்சிருக்கானுங்க'' என்கிறார் டென்ஷனாக.

ஆபாச மன்னனாக குற்றம்சாட்டப்பட்ட டாக்டர் மனோஜையே சந்தித்துப் பேசினோம். ""மதுரை டி.வி.எஸ். நகரில் இவளைத் தெரியாத ரைஸ்மில் ஓனர்களே கிடையாது. குழந்தைகளை வெச்சுக்கிட்டு கஷ்டப்படுறதா சொன்னா. அவமேல இரக்கப்பட்டு தான் உதவி செஞ்சேன். (ப்ச்... பாவம் நிறைய ஆண்கள் இப்படித்தான் ஏமாறுறாங்க!) ஆனா, என்னையே ப்ளாக்மெயில் பண்ண ஆரம்பிச்சிட்டா'' என்றவர் அனுராதா தனது செல்ஃபோனில் பேசியதாக பதிவு செய்த ஆடியோவை நம்மிடம் கேட்கச் செய்தார். அதில் "டேய்... மனோஜ் உனக்கு பத்து நிமிஷம் டைம் தர்றேன். ஒழுங்கா என்கூட வந்திடு. வேற எந்த பொண்ணையாவது கல்யாணம் பண்ணணும்னு நினைச்சா அவ்ளோதான். டேய்... நான் சாக்கடதாண்டா... உன்னையும் அதே சாக்கடையில இழுத்துத் தள்ளாம விடமாட்டேன். நீ என்கூட ஒண்ணா இருந்ததையே நான் படம்புடிச்சு வெச்சிருக்கேன். எப்படீங்கிறியா? நமக்கு இதுக்கெல்லாம் பசங்க இருக்கானுங்கள்ல' என்று அந்த மிடுக்கான குரல் மிரட்டுகிறது. நம்மிடம் பவ்யமாக பேசிய அனுராதாவா இப்படிப் பேசுகிறார் என்ற ஆச்சர்யமும் ஒருபக்கம்.

அதுமட்டுமில்லீங்க... ""யாரோ ஒரு இளைஞன்கூட போட்ல போற மாதிரி படம் எடுத்து வெச்சிருக்கியே யாருடி'ன்னு கேட்டதுக்கு "என்னோட முன்னாள் கணவன் சதீஷ்'னு சொன்னா. ஆனா அது அவளோட கண வனே இல்லைன்னு தெரிய வந்தது. அவளுக்கு சினிமா வுல நடிக்கணும்னும் ஆடம்பரமா வாழணும்னும் ஆசை. அதனால விதவிதமா படம் எடுத்து வெச்சுக்கிட்டு அவ ளோட ஆசையை தீர்த்துக்க என்னை பலிகடாவாக் குறா'' என்றவர் ""அபார்ஷனுக்காக வர்ற கேஸ்களை படம் பிடித்து பயிற்சி உபயோகத்துக்காக பயன்படுத்து வோம்ங்க. அதைத்தான் அவ பார்த்துட்டு என்னைத் தப்பா சொல்றா'' என்றார் டாக்டர் மனோஜ் கேஷுவலாக.

பிரபல மருத்துவர்களோ... ""டாக்டர் மனோஜ் மருத்துவமனைக்கு வரும் பெண்களின் அபார்ஷன் காட்சிகளை படம் பிடித்தது உண்மையாக இருந்தால் மருத்துவ விதிக்கு எதிராக செயல்பட்டிருக்கும் அவரை மருத்துவச் சட்டப்படி தண்டிக்க வேண்டும்'' என்கிறார் கள் கொந்தளிப்பாக.

ஆடம்பர வாழ்க்கை.. சபலம்... இந்த இரண் டுக்குமே முடிவு பேராபத்துதான்.

No comments:

Post a Comment