Sunday, August 1, 2010

காமராஜ் - எம்.ஜி.ஆர் சகாப்தம்! தேர்தல் ஆய்வு!


முதல் பொதுத்தேர்தல் நடந்த 1952-க்கும் எதிர்வரும் 2011 சட்டமன்றத் தேர்தலுக்கும் இடை யே தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. திராவிட அரசியல் இயக்கங்களின் வளர்ச்சிக் குப்பின், இந்திய அளவில் தமிழகம் தனித்துவம் வாய்ந்த மாநிலமாகிவிட்டது. பலம் மிக்க பெரிய கட்சி கள் இருந்தாலும் அவை கூட்டணியின் துணையின்றி ஆட்சியைப் பிடிக்க முடியாது என்ற நிலைமையே தமிழகத்தில் நிலவுகிறது. தனித்து நிற்கும் சூழலை பெரிய கட்சிகள் தவிர்க்கவே செய்கின்றன.

தமிழகத் தேர்தல் களத்தின் முறைப்படியான கூட்டணி வரலாறு 1967-ல் தொடங்கியது. அந்த தேர்தல் முடிவுகளால் காமராஜரின் ஆட்சி நிறைவுபெற்று, தி.மு.க. முதன்முறையாக ஆட்சியைப் பிடித்து, அண்ணா தலைமையில் அரசு அமைந்தது. இதன்பிறகு நடந்த தேர் தல்களில் ஏதேனும் ஒரு வகையில் கூட்டணி அமைப் பதையே கட்சிகள் விரும்புகின்றன. மாநிலத்தில் உள்ள இருபெரும் கழகங்களுடன் தேசிய கட்சிகள்கை கோர்ப்பதும், சிறிய கட்சிகள் இந்த கூட்டணிகளுக்குள் இணைந்து கொள்வதும் வழக்கமாக இருக்கிறது. எனவே, கூட்டணியைத் தவிர்த்துவிட்டு கட்சிகளின் பலம் என்று தனியாகக் கணக்கிடுவது பொருத்தமாக இருக்காது.

அந்த அடிப்படையில், கூட்டணி அரசியல் வலுப் பெற்று பெருந்தலைவர் காமராஜர் மறைவு வரையிலான காலகட்டத்தை காமராஜர் சகாப்தம் என்றும், தி.மு.க. விலிருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கி ஆட்சி யமைத்த எம்.ஜி.ஆரின் பதவிக்காலத்தை எம்.ஜி. ஆர். சகாப்தம் என்றும், எம்.ஜி.ஆரின் மறைவுக் குப் பிறகு அ.தி.மு.க. பிளவுபட்ட காலத்தை ஒரு பகுதியாகவும், பிரிந்த அ.தி.மு.க. ஒன்றுசேர்ந்து இன்றுவரையிலான அரசியல் நிலவரத்தை இன் னொரு பகுதியாகவும் கொண்டு கட்சிகளின் பலம் மதிப்பிடப்பட்டுள்ளது.

காமராஜர் சகாப்தம்

தமிழக அரசியலில் தேர்தலுக்கு முந் தைய வலுவான கூட்டணி 1967 தேர்தலில் அமைந்தது. அதில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. எனினும், தி.மு.கவுக்கு தனி மெஜா ரிட்டி இருந்ததால் கூட்டணி அரசு அமையா மல், தனிக்கட்சியின் ஆட்சியே அமைந்தது. அதன்பின்னர் நடந்த தேர்தல்களிலும் இதே நிலைமை தொடர்ந்தது. 1971 தேர்தலில் தமிழகத்தின் இருபெரும் தலைவர்களான காமராஜர் தலைமையிலான காங்கிரசும், ராஜாஜி தலைமையிலான சுதந்திரா கட்சியும் கைகோர்த்து மெகா கூட்டணியை அமைத் தது. எனினும், தி.மு.க., இந்திரா காங்கிரஸ் மற்றும் சிறுகட்சிகளை மட்டுமே தன் பக்கம் வைத்துக்கொண்டு பெரும் வெற்றி பெற்றது. தி.மு.க. மட்டும் 183 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காமராஜர்-ராஜாஜி இருவரும் இணைந்தும் காங்கிரசால் வெற்றிபெறமுடி யாமல் போனது இன்றுவரையிலும் அரசியல் அதிர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.

எம்.ஜி.ஆர். சகாப்தம்

பெருந்தலைவர் காமராஜர் 1975-ல் மறைந்தார். அதன்பின், தமிழக அரசியல் களம் என்பது எம்.ஜி.ஆர்-கலைஞர் என்ற இரு தலைவர்களுக்கிடையிலான போட்டிக்களமாக மாறியது. காமராஜரின் ஆதரவாளர்கள் பலரும் இந்திரா காங்கிரசில் சேர்ந்தனர். அங்கே சேரவிரும்பா தவர்கள் ஜனதா கட்சியில் செயல்பட்டனர்.

எம்.ஜி.ஆரைத் தி.மு.க.விலிருந்து பிரித்து, தனிக்கட்சி தொடங்க வைப்பதன் மூலம் தமி ழகத்தில் காங்கிரஸ் மீண்டும் பலம் பெறும் என்பது மத்தியில் ஆட்சியி லிருந்த காங்கிரசின் திட் டம். ஆனால், அதன் கணக்குப் பலிக்கவில்லை. அ.தி.மு.க. என்ற கட்சி யைத் தொடங்கிய எம்.ஜி.ஆர்., தி.மு.க.விற்கு ஏற்படுத்திய சேதம் கொஞ்சம்தான். தி.மு.க. வுக்கு எதிராகவும் காங் கிரசுக்கு ஆதரவாகவும் இருந்த வாக்குகளே பெரு மளவில் எம்.ஜி.ஆர் பக்கம் திரும்பியது. கிராமப்புற ஏழைகள், விவசாயத் தொழிலாளர்கள், தலித் மக்கள், பிராமணர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் ஆதரவு வாக்குகள் எம்.ஜி.ஆருக்கு சாதகமாக அமைய 1977, 1980, 1984 ஆகிய 3 தேர்தல்களிலும் அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத் தது. இதில், 1984-ல் மட்டும்தான் காங் கிரசுடன் எம்.ஜி.ஆர். கூட்டணி அமைத்திருந் தார். 1977, 80 இரு தேர்தல்களிலும் அவ ருக்குத் துணை நின்ற வை கம்யூனிஸ்ட் கட்சி கள். எனினும், இந்த காலகட்டத்தில் கம்யூ னிஸ்ட்டுகள் தங்கள் சொந்த பலத்தைப் பெருக்கிக்கொள்ள வில்லை. காங்கிரஸ் எதிர்ப்பு என்ற விடாப் பிடிக் கொள்கையால், காங்கிரசுடன் கூட்டணி சேராத கழகம் எதுவோ அதன் கூட்டணியில் சில தொகுதிகளைப் பெற்றுக்கொண்டு தேர்தலை சந்தித்தனர். 3 சட்டமன்றத் தேர் தல்களில் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனபோதும், கலைஞரின் அரசியல் வியூகங்களால் தி.மு.க என்ற கட்சி அமைப்பு உறுதியாகவே இருந்தது.

(எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள், கட்சிகளின் செல்வாக்கு நிலைமை பற்றிய விபரங்கள் வரும் இதழில்)

No comments:

Post a Comment