Saturday, September 4, 2010

ராஜா vs ராஜேந்திரன்!



ராஜாவா? ராஜேந்திரனா? கிங் ஆஃப் சேலம் யார்? -இதுதான் இப்போ தைக்கு சேலம் உ.பி.க்கள் எழுப்பும் கேள்வி. அந்தளவு இருதரப்பும் கோஷ்டி பூசலால் முட்டிக் கொண்டு நிற்க இது சமீபத்தில் சேலம் வந்த ஸ்டாலின் வரவேற்பில் பூதாகரமாய் வெடித்து உச்சகட்டத்தை அடைந்துள்ளது. ஈரோடு கூட்டத்திற்கு செல்ல சேலம் கமலாபுரம் விமான நிலையத்தில் வந்திறங்கிய ஸ்டாலினை வரவேற்க பனைமரத்துப்பட்டி எம்.எல்.ஏ. ராஜேந்திரன் செல்ல, "நீங்க போகக்கூடாது' என வீரபாண்டி எம்.எல்.ஏ. ராஜா பார்வையாளர் பகுதியிலேயே தடுத்து நிறுத்தினார். "என்னை தடுக்க நீங்க யார்?' என ராஜேந்திரன் திருப்பிக் கேட்க ராஜா மீண்டும் தடுக்க இவர்களின் நீயா? நானா? சண்டையால் விமான நிலையமே பரபரப்பானது.

என்ன நடந்தது? அங்கிருந்த உ.பி.க்களிடம் கேட்டோம்.

""ராஜா தன்னோட ஆதரவாளர்களுடன் வெயிட்டிங் ரூம்கிட்ட இருந்தாரு அப்போ ராஜேந்திரன் தன்னோட ஆதரவாளர்களோட வந்தாரு. உடனே ராஜா, ராஜேந்திரனை "போகக் கூடாதுன்னு' தடுக்க இவர் மீறிப் போனாரு. நான் சொல்ல சொல்ல போறாங்களானு ராஜா சத்தம் போட, கடுப்பான ராஜேந்திரன் "யார்கிட்ட சத்தம் போ டுறீங்க'ன்னு முறைச்சுக்கிட்டே திரும்பி வந்தாரு. அங்க இருந்த வங்க மட்டும் சமாதானம் செய்ய லேன்னா ஸ்டாலின் முன்னாடியே அடிதடி வரைக்கும் போயிருக்கும்' என்றனர் பீதியோடு.

இது உண்மையா? என அறிய பனைமரத்துப்பட்டி எம்.எல்.ஏ. ராஜேந்திரனிடம் பேசினோம். ""அஞ்சு பேருதான் ஓடுதளம் வரை செல்ல ஏர்போர்ட் அனுமதி தந் திருக்குனு' ராஜா சொன்னாரு. நான் ஏர்போர்ட் அத்தாரிடிகிட்ட கேட்டப்போ அப்படிலாம் இல் லைன்னு சொன்னாங்க. இருந் தாலும் நான் அங்க அமைதி யாத்தான் இருந்தேன். திடீர்னு பார்த்தா ராஜா கூட 50 பேருக்கு மேல திபுதிபுன்னு உள்ளே போனாங்க. கட்சி யில் உறுப்பினரா இல்லா தவங்க கூட உள்ள போ னாங்க. அப்புறம்தான் நம்மள வேணுமின்னே அவாய்ட் பண்றாங்கன்னு புரிஞ்சுக்கிட்டு நானும் தடா லடியா துணை முதல்வரை வரவேற்க உள்ளே போ னேன். அவ்வளவுதான்' என மேற்கொண்டு விரிவாய் பேச தயங்க அவரின் ஆதரவாளர் களிடம் கேட்டோம்.

"ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மட்டுமல்ல, மாநில இளைஞரணி துணை செயலாளர் துணை முதல் வர் வரும்போது அண்ணன் அங்க வரவேற்க இல்லாம போனா ஸ்டாலின்கிட்டே கெட்ட பேரு வரும்னுதான் ராஜா தடுத்து இருக்காரு. இதேபோலதான் ஒரு மாசத்துக்கு முன்னாடி ராஜேந் திரன் தன்னோட பனைமரத்துப் பட்டி தொகுதியில் உள்ள குமார கிரி கோயிலுக்கு. நமக்கு நாமே திட்டத்தில் தார்ச்சாலை போடும் வேலையை தொடங்கி வைத்து விட்டு போனாரு. "நான் இருக்கும் போது அவரெப்படி தொடங்கி வைக்கலாம்னு' சொல்லி மறுபடி யும் ஒரு பூஜை போட்டாரு ராஜா. முதல்வர் சேலம் வருகையப்போ அஸ்தம்பட்டியில் ராஜேந்திரன் பேர் போட்டு வச்சு இருந்த வளைவு பேனரை அமைச்சர் வீர பாண்டியார் சொல்லி ராஜா ஆளுங்க அதை கிழிச்சாங்க. முதல்வர் வரும்போது பிரச்சினை வேணாம்னு தான் இன்னும் இருபது இடத்துல வைக்க இருந்த பேனரை கூட வைக்காம அஸ்தம்பட்டி காவல்நிலையத்துல புகார் மட்டும் குடுத்துட்டு நிறுத் திக்கிட்டோம். ஆனா தன்னை தாண்டி ராஜேந்திரனுக்கு செல் வாக்கு பெருகிறத பொறுக்காமத் தான் ராஜா இப்படிப் பண்ணி னாரு'னு குமுறியவர்கள் தொ டர்ந்து "ராஜேந்திரன் ஸ்டாலின் ஆதரவாளர் என்பதால் எங்கே பிரச்சனை பெருசாகிடுமோனு ஏர் போர்ட் உள்ளே வந்த ராஜா "நான் வேணும்னு உங்கள தடுக்கல கூட் டம் அதிகம் வேணாம்னு நினைச்சு தான் சொன்னேன்'னு காம்ப்ர மைஸ் பேசுறாரு'' என்றனர்.

""ஸ்டாலினிடம் கெட்ட பெயர் வாங்கணும்னு தான் நீங்கள் ராஜேந்திரனை தடுத்த தாக கூறுகிறார்களே?'' என்றோம் வீரபாண்டி ராஜாவிடம்.

""அந்த அவசியம் எனக்கில்லை'' கோபத் தோடு பேசத் தொடங் கிய ராஜா, ""ஏர்போர்ட்ல தடுத்தா சென்னையில் போயி இவங்க துணை முதல்வரை பாக்குறது இல்லையா இல்ல தனியா அவரை ரூம்ல போயி தான் பாக்காம இருக்காங் களா? நாங்க யார்கிட்ட யாவது ராஜேந்திரனுக்கு முக்கியத்துவம் குடுக்கா தீங்க'னு சொல்றமா? இல்லையே நாங்க யாரையுமே ஏர்போர்ட்ல தடுக்க கிடையாது'' என்றவர் தொடர்ந்து "இவர் கூட தான் என் படம் கூட இல்லாம பேனர் வைக்கிறாரு. அத நான் பெருசா எடுத்துக்கலையே. இவர் பேனர் வச்சுதான் எனக்கு அடையாளம் கிடைக்கணும்னு இல்லை. இந்த ராஜாவ சேலம் மக்களுக்கு அடையாளம் தெரியும். மாவட்ட மாநகர ஒன்றிய கூட்டத்தில் பேசி முதல்வர் வரப்போ யார் யாருக்கு எந்த எந்த இடத்துல கட் அவுட் பேனர் வைக்கணும்னு ஏரியா பிக்ஸ் பண்ணி தந்துட்டாங்க. அதன்படி கட்சித் தொண்டர்கள் இரவு பகல் பாக்காம வேலை செய்யும் போது இவர் பாட்டுக்கும் போயி இன்னொருத்தர் ஏரியால "வளைவு' வச்சா யார்தான் ஏத் துக்குவாங்க. ஒரு மொராலிட்டி வேணாமா? இவரு தொழிற்சங்கத்துல. இளைஞ ரணியில பொறுப்புல இருக்கலாம். ஆனாலும் கட்சி மாவட்ட நிர்வாகத்துல எடுக்கிற முடிவுக்கு கட்டுப்படணும் அதைத்தாண்டி இவர் பிரியப்பட்டாருனா எங்ககிட்ட வந்து இடம் ஒதுக்கிதாங்கன்னு கேட்டா ஒதுக்கி தந்துருப்போம் எல்லாமே தலைவருக்காக (கலைஞர்) தானே. வாய்தாராணி ஆர்ப்பாட்டத்துலகூட தனியா நின்னுகிட்டு இருந்தாரு. நான்தான் கூப்பிட்டு மேடையில மைக் தந்து பேசச் சொன்னேன். மற்றபடி அவரு தான் (ராஜேந்திரன்) பெரிய மனுசனாக ணும்னு என்னென்னமோ சொல்லிக் கிட்டு இருக்காரு. அதையெல்லாம் நான் பெரிசா எடுத்துக்கல'' என்றார் கூலாக.

சேலம் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை விழாவில் ""அனை வரும் ஒற்றுமையாய் இருந்தால் தமிழகத்திற்கு பல நன்மைகள் உண்டு'' என கலைஞர் பேசினார். இது கட்சிக்குள்ளும் தான் என புரிந்து கொள்வார்களா உரசிக் கொள்ளும் எம்.எல்.ஏ.க்கள்?


அப்படியா!



அந்த முன்னாள் முதல் குடிமகனை மேடம் சேனலுக்காக பேட்டியெடுக்க பகீரத முயற்சிகள் தொடர்ந்துகொண்டே இருக்கின் றன. தனக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக் காமல் போனதற்கு தமிழகத்தின் ஆட்சித் தலைமைதான் காரணம் என்றும், மொழி மாநாட்டிற்கு அழைக்காததற்கும் அதே கார ணம்தான் என்றும் அவர் வாயால் சொல்ல வைக்க வேண்டும் என்பதுதான் பேட்டியின் நோக்கமாம். அப்படியெல்லாம் பொய்சொல்ல மாட்டேன் என மறுத்துவிட்டாராம் முன்னாள் முதல் குடிமகன்.

No comments:

Post a Comment