Saturday, September 4, 2010

விஜயகாந்த்துக்கு வேறு வழி இல்லை'' "ஜெ.' சொன்ன கணக்கு!



""ஹலோ தலைவரே... மீண்டும் கொடநாட்டில் ஓய்வெடுக்கப் போய்விட்டார் ஜெ.''

""இந்த முறை ஓய்வுங்கிறது யாருடன் கூட்டணிங்கிற ஆய்வாக இருக்கும்னும், கூட்டணி பற்றி ஒரு முடிவெடுத்துவிட்டுத்தான் மலையிலிருந்து ஜெ இறங்குவார்னும் அ.தி.மு.க. நிர்வாகிகள் சொல்றாங்கப்பா..''

""என்கிட்டேயும் சொன்னாங்க தலைவரே... .. கோவையிலும் திருச்சியிலும் கூட்டம் அதிகமா வந்ததிலிருந்து, கூட்டணி பற்றிய ஜெ.வின் சிந்தனை மாறியிருப்பது பற்றி நாம்தான் முதன்முதலில் சொன்னோம். அ.தி.மு.க. கூட்டணிக்கு காங்கிரஸ் வரப்போறதில்லைங்கிறதை தெரிஞ்சுக்கிட்ட ஜெ., விஜயகாந்த் நம்ம பக்கம் வந்தா வரட்டும், இல்லைன்னா தற்போது இருக்கிற ம.தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ., சின்ன கட்சிகளோடு தேர்தல் களத்தை சந்திப்போம்ங்கிற எண்ணத்திற்கு வந்திருந்தார். இதனால ஜெ.வின் நலனில் அக்கறையுள்ள ஆலோசகர்கள் சில பேர் பதறிப் போயிட்டாங்க. தங்களோட ஆலோசனைகளை சொல்வதற்காக ஜெ.வை சந்திச்சாங்க.''

"""என்ன ஆலோசனை?''

""காங்கிரஸ் வராதுங்கிற நிலையில், அ.தி.மு.க.வோடு விஜயகாந்த் கட்சி கூட்டணி அமைச்சாதான் ஜெயிக்க முடியும். தி.மு.க.-அ.தி.மு.க. இரண்டையும் விஜயகாந்த் விமர்சிக்கிறாரு. அதற்கு கலைஞர் உடனே ரியாக்ட் பண்ணி பதிலடி கொடுக்குறாரு. அது மாதிரி, நீங்க எதுவும் பதில் கொடுத்திடவேணாம். விஜயகாந்த்தைப் பக்குவமா அ.தி.மு.க. அணிக்கு கொண்டு வந்திடணும்ங்கிறதுதான் அவங்களோட ஆலோசனை.''

""ஜெ.வின் ரியாக்ஷன் என்னவாம்?''

""கொடநாடு கிளம்புறதுக்கு முன்னாடி கட்சி நிர்வாகி கள்கிட்டே ஜெ. பேசியிருக்கிறார். மூன்றாவது அணின்னு விஜயகாந்த் பேசுறார். அவர் சொல்ற மூன்றாவது அணியில் காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க. மூன்றும் இருக்கும்னு சொல்றாங்க. காங்கிரசுக்கு 8% ஓட்டு இருக்குது. தே.மு.தி.க.வுக்கு 8% ஓட்டு இருக்குது. பா.ம.க.வுக்கு 2% தான் ஓட்டு இருக்குது. எல்லாத்தையும் சேர்த்தாலும் 18% ஓட்டுதான் வரும். இதை வச்சிக்கிட்டு மூன்றாவது அணியால எப்படி ஜெயிக்க முடியும்? விஜயகாந்த்தை தி.மு.க. கூட்டணிக்கு காங்கிரஸ் அழைச்சிக்கிட்டுப் போகாது. அதனால அவருக்கு வேற வழியே இல்லை, நம்ம கூட்டணிக்குத்தான் வந்தாகணும். நம்ம கட்சி சார்பா அவங்களோடு பேசிக்கிட்டிருக்கிறவங்களைத் தொடர்ந்து பேசச் சொல்லுங்க. அவங்க தரப்பில் 60 சீட் கேட்குறாங்க. நாம 40 சீட்தான் தரமுடியும். அதற்குத் தகுந்த மாதிரி பேசச் சொல்லுங்க. வேற வழியில் லைங்கிறதால நாம சொல்றதுக்கு ஒத்துக்கிட்டு கடைசியா கூட்டணிக்குள்ளே விஜயகாந்த் வந்திடுவாருன்னு ஜெ. சொன்னாராம்.''

""கொடநாட்டுக்கு கிளம்புறதுக்கு முன்னாடி கட்சி நிர்வாகிகள்கிட்டே வேற என்னென்ன சொன்னாராம்?''

""இந்த முறை ஸ்ரீரங்கத்தில்தான் ஜெ. போட்டி போடப்போறாருன்னு அ.தி.மு.க. தரப்பில் பலத்த எதிர்பார்ப்பு இருக்குதே, அதைப் பற்றியும் ஜெ. சொல்லியிருக்கிறார். "என் தாய்வழி தாத்தா ரங்கசாமி அய்யங் காரும், தந்தை வழி தாத்தா ரங்காச்சாரி அய்யங்காரும் ஸ்ரீரங்கம் பக்கத்திலே இருக்கிற நங்கவரத்திலே பிறந்தவங்க. அதனால நான் ஸ்ரீரங்கத்திலே போட்டி போடப்போறதா எல்லோரும் எதிர்பார்க்குறாங்க. என் தாத்தா ரங்கசாமி அய்யங்கார் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் சீஃப் அக்கவுண்ட் மேனேஜரா இருந்தாரு. அவர் சித்த வைத்தியமும் பாப்பாரு. அதன் மூலம்தான் மைசூர் அரண்மனையோடு தொடர்பு ஏற்பட்டது. எங்க குடும்பத்துக்கு மைசூர் அரண்மனையில் நல்ல செல்வாக்கு. இதுதான் என் பூர்வீக விவரம். ஆனா, இந்த எலெக்ஷனில் எங்கே போட்டி போடுறதுன்னு நான் இன்னும் முடிவு செய்யலை'ன்னு ஜெ. சொல்லியிருக்கிறார்.''

""கொடநாட்டில் ஓய்வெடுக்கும்போது, தன்னோட தொகுதி எதுன்னும் ஜெ. முடிவு பண்ணிட்டு வருவார்னு சொல்லு.''

""அதைவிட முக்கியமான ஒரு விஷயத்தில் அவர் ரொம்ப தீவிரமா கவனம் செலுத்துறார். வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்தது சம்பந்தமான வழக்கைப்போல, அவர் முதலமைச்சரா இருந்தப்ப, பிறந்தநாள் பரிசா வந்த 3 லட்சம் டாலருக்கான காசோலையை தன் அக்கவுண்ட்டில் போட்டுக் கொண்டது சம்பந்தமான வழக்கும் ரொம்ப சிக்கலான வழக்குங்கிறதை ஜெ. புரிஞ்சு வச்சிருக்கிறார்.''

""வாய்தா.. வாய்தான்னு இந்த வழக்கையும் அவர் தொடர்ந்து இழுத்தடிப்பதிலிருந்தே புரியுதுப்பா.''

""சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடக்குது. இதை டிஸ்மிஸ் செய்யணும்னு ஜெ தரப்பில் மனு போடப்பட்டது. அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்துட்டதால, ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது ஜெ. தரப்பு. இதை முதலில் விசாரித்தவர் நீதிபதி சி.டி.செல்வம். அவர் ஏற்கனவே, ஜெ.வுக்கு எதிரா வக்கீலா ஆஜராகியிருப்பதால் வேறு நீதிபதிக்கு இந்த வழக்கை பரிந்துரைத்தார். அதையடுத்து, இந்த மனுவை விசாரிக்க வந்த நீதிபதி மதிவாணனும் வேற நீதிபதி இதை விசாரிக்கட்டும்னு பரிந்துரை பண்ணிட்டார். அதனால, சி.பி.ஐ. கோர்ட்டில் வழக்கு விசாரணை தேங்கிக் கிடக்குது. ஹைகோர்ட்டில் போடப்பட்டுள்ள பெட்டிஷனைக் காட்டியே ஜெ. தரப்பு இந்த வழக்கை இழுத்தடிச்சிக்கிட்டிருக்குது. எப்படியாவது இந்த வழக்கிலிருந்து வெளியே வந்திடணும்ங்கிற துடிப்பு ஜெ. தரப்பில் அதிகமா தெரியுதுங்க தலைவரே..''

""ஏன் இத்தனை துடிப்பு?''

""தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் அ.தி. மு.க.வினர் 3 பேரின் தூக்குத் தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்ததிலிருந்து, தனக்கு எதிரா எந்த தீர்ப்பும் வந்திடக்கூடாதுங்கிற பதட்டத்தில் இருக்கிறார் ஜெ. அதனால தன்னோட வக்கீல்கள் டீமிடம், எப்படியாவது இந்த கேஸி லிருந்து என்னை விடுவிக்கிறதுக் கான நடவடிக்கையை சீக்கிரமா எடுங்கன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லியிருக்காராம். ஹைகோர்ட்டில் போட் டிருக்கிற பெட்டிஷன் டிஸ்மிஸ் ஆனா, சுப்ரீம் கோர்ட்டுக்குப் போயா வது கேஸிலிருந்து விடுபடணும்ங்கிறதுதான் ஜெ.வோட இன்ஸ்ட்ரக் ஷன். இந்த அக்கறையை பஸ் எரிப்பு வழக்கிலும் காட்டியிருக்கலா மேன்னு கட்சி நிர்வாகிகள் சொல்றாங்க... தொண்டர்களுக்கு தூக்கு கயிறை ஊசலாடவிட்டுவிட்டு, தன்னை மட்டும் கட்சித்தலைமை காப்பாத்திக்குதுன்னு பேச்சு அடிபடுதுங்க தலைவரே..''

""புதிய தலைமைச் செயலாளர், புதிய தகவல் ஆணையர் நியமனம் பற்றி என்ன பேச்சு அடிபடுது?''



""இரண்டையும் முன்கூட்டியே சொன்னது நம்ம நக்கீரன் தான்னு கோட்டை வட்டாரத்தில் பேசிக்கிறாங்க. தலைமைச் செயலாளர் பதவிக்கு கடுமையான போட்டி. 7 பேர் இந்த கேடரில் இருந்த நிலையில், மாலதி ஐ.ஏ.எஸ்.ஸை முதல்வர் செலக்ட் பண்ணினார். நேர்மையான அதிகாரின்னு பெயரெடுத்திருக்கும் மாலதியை தலைமைச் செயலாளரா நியமித்தது கோட்டை வட்டாரத் தில் வரவேற்பை பெற்றிருக்குது. மாநிலத் தலைமை தகவல் ஆணை யர் பதவிக்கு தலித் அதிகாரி நியமிக்கப்படுவார்னு எதிர்பார்க் கப்பட்டது. ஆனா, தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து ரிடை யர்டான ஸ்ரீபதிக்கு ஏற்கனவே வாக்குறுதி கொடுத்துட்டதால, அதன்படியே இந்த பதவி கொடுக்கப்பட்டதாம். தலித் அதிகாரியான கிறிஸ்துதாஸ் காந்திக்கு வளர்ச்சித் துறை ஆணையர் பதவி கொடுக்கப் பட்டிருக்குது. கவர்னர் மாளிகை யில் ஸ்ரீபதி பதவியேற்றுக் கொண் டதும் அவரைச் சூழ்ந்த பத்திரி கையாளர்கள், "இந்தப் பதவி நீங்கள் விரும்பிக் கேட்டதா, அவர்களாக தந்ததா'ன்னு கேட் டாங்க. அதை தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டுத் தெரிஞ்சுக்குங்கன்னு சாமார்த்தி யமா பதில் சொன்னார் ஸ்ரீபதி.''

""அரசியலிலும் அதி காரத்திலும் சாமர்த்தியம் ரொம்ப முக்கியமாச்சே!''

""எங்க தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சின்னசாமிக்கு ரொம்பவே சாமர்த்தியம்னு மருங்காபுரி தொகுதிவாசிகள் சொல்றாங்க. என்ன விஷயம்னு விசாரிச்சேன். ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள அரசாங்க ரோடு கான்ட்ராக்ட்டை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்குத்தான் தரணும்னு உத்தரவு வந்திருக்குதாம். நம்ம ஆட்சியில இவருக்குத் தரச்சொல்லி எப்படி உத்தரவு போட்டாங்கன்னு உ.பிக்கள் தலையைப் பிய்ச்சிக்கிட்டு விசாரித்தப்ப, உள்ளாட்சித்துறை மந்திரி அலுவலகத்திலிருந்தே இன்ஸ்ட்ரக்ஷன் வந்திருக்குன்னு தெரிஞ்சு ஷாக்காகியிருக்காங்க. அ.தி.மு.க. ஆட்களோ, "எங்க எம்.எல்.ஏ.வுக்கு இந்த ஆட்சியில் ஏற்கனவே இப்படி பல காண்ட் ராக்ட் கிடைத்திருக்குது. ரொம்ப அதிர்ஷ்டமான ஆளு'ன்னு சொல்றாங்க. எம்.எல்.ஏ சின்னசாமி இப்ப பங்களா கட்டிக்கிட்டிருக்காராம். அதற்குப் பணத்தேவை இருப்பதால ஆளுங்கட்சியோடு அனுசரித்துப்போய் இந்த மாதிரியான கான்ட் ராக்ட்டுகளை வாங்கிடுறாருன்னும், அ.தி.மு.க.வி லிருந்து கூடிய சீக்கிரம் அவர் ஜம்ப் ஆகப்போ றாருன்னும் மருங்காபுரியிலிருந்து மதராசப் பட்டினம் வரைக்கும் பேச்சு இருக்குது.''

""பரபரப்பா பேசப்படுற ஒரு விஷயம் பற்றி நான் சொல்றேன்.. அமைச்சர் தம்பி உயிருக்கு குறின்னு போன இதழில் வெளியான செய்தியோட ஃபாலோ அப் இது. மந்திரி தம்பியை ஏன் குறிவைக்க ணும், ரவுடி திருச்சி குணாவை இயக்கி யது யாருங்கிறது போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்குது. எம்பி, எம்பி பந்தை போட்டு பாயிண்ட் எடுக்கும் விளையாட்டு தொடர்பான சங்கத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்களின் பிடியிலிருந்து சங்கத் தை மீட்டு, விளையாட்டையும் வீரர்களையும் சர்வதேச தரத்துக்கு உயர்த்தியவர் மாண்பு மிகுவின் தம்பி. தங்கள் கையிலிருந்த அதி காரம் பறிபோன கடுப்பில்தான் உயிருக்கே குறிவைக்கும் சதியில் இறங்கியதாம் சங்கத் தைப் பறிகொடுத்த தரப்பு.''

மிஸ்டுகால்!



தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் சமீபத்தில், தலைமையின் அழைப்பின் பேரில் டெல்லிக்கு சென்றிருந்தார். மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு விளக்கும் விதத்தில் அக்டோபர் 2-ந் தேதி முதல் 45 நாட் களுக்கு பாதயாத்திரை நடத்த வேண்டும் என அவருக்கு அசைன்மெண்ட் தரப்பட்டுள் ளது. சென்னை, தேனி, கன்னி யாகுமரி என 3 பாயிண்ட்டு களில் ஒரே நாளில் தொடங் கும் இந்த யாத்திரை திருச்சி யில் நிறைவடைகிறது. தமிழக காங்கிரசின் சீனியர் தலை வர்களும் ஆங்காங்கே இந்த யாத்திரையில் கலந்துகொள்ள வேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளது. டெல்லியில் ராகுலை சந்தித்த யுவராஜ், பிறந்தநாள் வாழ்த்து சொல் வதற்காக விஜயகாந்தை சந் திக்க அனுமதி கேட்டிருக்கிறார். ஒப்புதல் வழங்கப்பட்டதால் விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்துச் சொல்லியிருக்கிறார் யுவராஜ்.


ஒரு நபர் கமிஷனின் பரிந்துரையை ஏற்று ஊதிய முரண்பாட்டை நீக்கியதற்காக ஒவ்வொரு துறையைச் சேர்ந்த அரசு ஊழியர் சங்க நிர்வாகி களும் முதல்வரை நேரில் சந் தித்து நன்றி தெரிவித்தனர். வியாழக்கிழமையில் மட்டும் 85 சங்கங்களின் நிர்வாகிகள் நன்றி தெரிவித்ததால் முதல்வரின் அறை நீண்ட நேரம் பரபரப்பாக இருந்தது. இந்த செய்தியை டி.வியில் பார்த்த நடுநிலை யாளர்கள் பலரும், ""இத்தனை பேரை சந்திக்க அனுமதித்தால், முதல்வரின் உடல்நிலை என் னாவது? அவரது உடல்நிலை கருதியாவது சம்பந்தப்பட்டவர் கள் இத்தகைய சந்திப்புகளில் கட்டுப்பாடு விதித்து, இன்ஃபெக் ஷன் போன்றவை ஏற்படாமல் தடுக்கலாமே?'' என்றனர் அக்கறையோடு.


அமெரிக்காவில் நடக்கும் ஐ.நா.சபையின் சிறப்புக்கூட் டத்தில் கலந்துகொள்ளத் திட்ட மிட்டிருக்கிறார் இலங்கை அதிபர் ராஜபக்சே. அவர் அமெரிக்கா வரும்போது, கைது செய்து நாடு கடத்த வேண்டும் என்று ஒபாமா விடம் கோரிக்கை வைத்திருக் கின்றன தமிழர் அமைப்புகள். இனஅழிப்பு செய்த பல நாட்டு அதிபர்களை இதற்குமுன் அமெ ரிக்கா, நாடு கடத்தியிருப்பதைச் சுட்டிக்காட்டி, அதனடிப்படை யில் ராஜபக்சேவை நாடு கடத் தக்கோரி அமெரிக்க நீதிமன்றத் தில் வழக்கும் போடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment