Thursday, September 2, 2010

அமைச்சர் தம்பி உயிருக்கு குறி! தமிழகத்தைக் கலக்கும் பிரபல தாதா திகில் வாக்குமூலம்!


தமிழக அளவில்... கூலிப்படை நெட் ஒர்க்காக செயல்பட்டு.. பகீர் க்ரைம்களை அரங் கேற்றிவந்த ஒரு டேஞ்சரஸ் தாதாவைக் காக்கிகள் சுற்றி வளைக்க... விசாரணையில் அவன் கொடுத்திருக்கும் வாக்குமூலம்... அரசியல்வட் டாரத்தில் பதட்டப் பரபரப் பை ஏற்படுத்த ஆரம்பித்திருக் கிறது.

பிடிபட்டிருக்கும் தாதா வேறுயாருமல்ல, திருச்சி குணா. டெல்டா மாவட்டங் களை சாதி ரீதியில் எதிரும் புதிருமாய் நின்று கதிகலங்க வைத்த மணல்மேடு சங்கரும், முட்டை ரவியும் இப்போது இல்லை. முதலில் போலீஸ் டீம், முட்டை ரவியை 2006-ல் என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ளியது. இதைக்கண்டு தன்னையும் போலீஸ் சுடலாம் என பதறிய மணல்மேடு சங்கர்... தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பலவகைகளிலும் முயன்றான். எனினும்... அவ னது உயிரையும் உருவியெடுத்தது காக்கிகளின் துப்பாக்கி. இதற் கிடையே முட்டை ரவி இறந்தபிறகு... ரவியின் டீமுக்கு தலைமை ஏற்றவன்தான் இந்தத் திருச்சி குணா. இவன் டெல்டா லிமிட்டையும் தாண்டி.. ஆத்தூர் சுமன், செங்கல்பட்டு ரவிபிரகாஷ், சீர்காழி சத்யா, செல்லதுரை, சுந்தரபாண்டி, சின்ன ஆனந்த், பல்லு குமார், விக்டர், ஒத்தக்கை வினோத் ஆகிய தன் சிஷ்யகோடிகள் மூலம்... தமிழகம் முழுக்க தன் க்ரைம் சாம்ராஜ்யத்தை விஸ்தரித்திருக் கிறான். இந்த குணாவின் க்ரைம் ஜாதகத்தை மேலும் துருவியபோது மேலும்பல அதிரடித் தகவல்கள் கிடைத்தன.

திருச்சி குணாவுக்குப் பூர்வீகம் இலங்கை. சின்ன வயதில் குடும்பத்தோடு அகதியாய் தமிழகம் வந்தான் குணா. திருச்சி பெரிய கடைவீதி சந்துக்கடை மார்க்கெட் பகுதியில் அவன்குடும்பம் அடைக்கலமானது. அம்மா நர்ஸாக இருக்க... குணாவோ... சேர்வார் தோஷத்தால் ரவுடியாக வளர ஆரம்பித்தான். இவனது க்ரைம் அதிரடிகளைக்கண்ட அப்போதைய திருச்சியின் பிரபல தாதாவான பிச்சைமுத்து... ’"நீ என்னோடு இருக்கவேண்டியவன்டா... வாடா'’என இவனைத் தன் சிஷ்யனாக சேர்த்துக்கொண்டான். அவனால் மனித ரத்த வாசனையை அறிந்துகொண்ட குணா... பிச்சை முத்துவின் என்கவுண்ட்டருக்குப் பின்தான் முட்டை ரவி டீமில் ஐக்கியமானான்.


முட்டை ரவிக்காக... தலித் சமூகத்தைச் சேர்ந்த சேட்டு, டிங்கி, சுரேஷ் ஆகிய மூவரையும் மணிகண்டம் பைபாஸ் பகுதியில்.. பட்டப்பகலில் படு பயங்கரமாகக் கொன்று... குணா திருச்சியையே பரபரக்க வைத்தான். அதேபோல் செங்கல்பட்டு தாதாவான குரங்கு குமாரை... அவனது எதிரிகளுக்காகத் தீர்த்துக்கட்டியும் பதட்டத் தகிப்பை ஏற்படுத்தினான். இதேபோல்... கீரனூர் வழக்கறிஞர் கார்த்திகேயனை.. நாகேந்திரன் டீம் போட்டுத்தள்ள.. கார்த்தி டீம் நாகேந்திரனை பதிலுக்குப் பொலி போட்டது. உடனே கார்த்தி டீமைச் சேர்ந்த சக்தி, சிவா, அண்ணாமலை ஆகியோரை படுகொலை செய்யும் அசைன்மெண்ட்டை சிறையில் இருந்த குணாவிடம் நாகு டீம் கொடுத்து... அவனை ஜாமீனிலும் வெளியே எடுத்தது. இந்தத் தகவல் மெல்ல காக்கிகளுக் குப் போக... எஸ்.ஐ. மணிமாறன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த டீம்தான் கடலூரில் பதுங்கியிருந்த குணாவைத் தற்போது மடக்கியிருக்கிறது. அப்போதுதான் அவன் வைத்திருந்த ஒரு வி.ஐ.பி. பற்றிய பகீர் அசைன்மெண்ட் காக்கிகளுக்குத் தெரியவந்தது..

நம்மிடம் அந்த காக்கி அதிகாரி ""குணா டேஞ்சரஸான ஆள். திருச்சி ஃபைனான்ஸியர் பாலுவிடம் பணம்கேட்டு கொலைமிரட்டல் விடுத்த அவனை சமீபத்தில் பிடிக்கப் பார்த்தோம். ஆனா எங்க கைகளையே வெட்டிட்டு தப்பிச்சிட்டான். அடுத்து மண்ணச்சநல்லூர் பகுதியில் பதுங்கியிருந்த அவனைப் பிடிக்க முயன்றோம். துப்பாக்கியால் சுட்டப்ப மயிரிழையில் தப்பிசிட்டான். இப்பதான் வசமா மாட்டியிருக்கான். இவனுக்கு தி.மு.க. வட்டச் செயலாளர் ஒருவரே பினாமியா இருப்பதையும்... டிரிபிள் மர்டர் அசைமெண்ட்டுக்காக... நாகுவின் உறவினரான மாஜி.. அ.தி.மு.க. ஒ.செ ஒருவர் இவனுக்கு கார் வாங்கிக் கொடுத் திருப்பதையும் சொன்னான். அதோட திருச்சியின் பிரபல வி.ஐ.பி ஒருத்தரையும் குறிவைத்திருந்ததாக எங்கக்கிட்ட வாக்குமூலம் கொடுத்தான்''’ என்று அதிரவைத்தார்.

விசாரணையின்போது குணா ""வக்கீல் கார்த்திகேயன் டீமைச் சேர்ந்த 3 பேரைப் பொலி போடறதோட... அந்த ராமஜெயத் தையும் தீர்த்துக்கட்டும் அசைன்மெண்ட்டோட இருந்தேன். அதுக்குள்ளப் பிடிச்சிட்டீங்க'' என்று சொல்ல...’""எந்த ராமஜெயத்தை?''’என காக்கி அதிகாரிகள் நெற்றி சுருக்கினர். குணாவோ ""அதாங்க... போக்குவரத்துத்துறை அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயத்தைத் தான்''’என்றான் கேஷுவ லாய். இதைக்கேட்டு வெல வெலத்துப்போன காக்கி அதிகாரிகள்... ""யார்றா உனக்கு இந்த அசைன் மெண்ட்டைக் கொடுத்தது?'' என்றபோது... ""இங்க லோக்கல்ல இருக்கும் சில அரசியல் புள்ளிகள் தான். அதை இப்போ பகிரங்கமா சொல்ல மாட்டேன்''’என்றான் அழுத்தமாக. இந்தத் தகவலை மேலிடத்திற்கு அனுப்பி வைத்து விட்டு... மேற்கொண்டு அவனை விசாரிக்கும் முடிவில் பரபரத் துக் கொண்டிருக்கிறார்கள் காக்கிகள்.

அமைச்சரின் இளவலைக் கொல்லும் அளவிற்கு... யார் எதிரிகள் இருக்கிறார்கள்? இந்தக் கேள்வியை... திருச்சிக்காரர்களால் எம்.டி. என அழைக்கப்படு பவரும் அமைச்சர் நேருவின் தம்பியுமான ராம ஜெயத்திடமே கேட்டோம். புன்னகையோடு பேச ஆரம்பித்தவர்.... ""நானும் கேள்விப்பட்டேன். எனக் கும் ரவுடிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எந்த ரவுடிக்கும் ஆதரவாகவோ...எதிராகவோ நான் போலீஸில் பேசியது கூட கிடையாது. தலைவர் கலைஞர் இடும் கட்டளைக்கு ஏற்றபடி... அண்ணனுக்கு ஒத்தாசையாக கழகப்பணிகளைச் செய்துவருகிறேன். வியாபாரத்தில் கூட எனக்கு எதிரிகள் என்று யாரும் இல்லையே''’என்றார் யோசனையாய்.

மேலும், மிகப்பெரிய டெரர் அசைன்மெண்டு களை அரங்கேற்றும் முன்... திருச்சி குணா மடக்கப் பட்டிருப்பது ஆறுதலான ஒன்று.

No comments:

Post a Comment