Tuesday, September 7, 2010

யுவராஜ் சிங்கை தீவிரமாக காதலித்த இந்தி நடிகை கிம் சர்மா...கென்ய தொழிலதிபரை திருமணம் செய்தார்


இந்தி நடிகை கிம் சர்மா திடீரென கல்யாணம் செய்து கொண்டுள்ளார். கென்ய சேர்ந்த தொழிலதிபரை அவர் மணந்துள்ளார்.

கென்யாவின் மொம்பாஸா நகரில் இந்த கல்யாணம் 2 வாரங்களுக்கு முன் நடைபெற்றதாக தெரிகிறது. கிம் சர்மா மணந்துள்ள தொழிலதிபரின் பெயர் அலி புஞ்சனி. நீண்ட நாட்களாக இருவரும் காதலித்து வந்தனர். ஆனால் கல்யாணத்தை இப்போது ரகசியமாக நடத்தி முடித்துள்ளார் கிம்.

இரு வீட்டார், குடும்ப நண்பர்கள், நெருக்கமான உறவினர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டனராம்.

கிம் முன்பு ஸ்பெயிந் நாட்டைச் சேர்ந்த கார்லோஸ் மரின் என்பவரை காதலித்து வந்தார். அவருடன் நிச்சயதார்ததமும் நடந்தது. ஆனால் அதிரடியாக அதை ரத்து செய்தார் கிம். அதே வேகத்தில் தற்போது புஞ்சனியை மணந்து விட்டார்.

நான்கு ஆணடுகளுக்கு முன்பு யுவராஜ் சிங்கை தீவிரமாக காதலித்தவர் கிம் சர்மா. ஆனால் அது பாதியிலேயே புட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

செஸ் விளையாட்டில் காய்களை நகர்த்துவது போல காதலர்களை மின்னல் வேகத்தில் மாற்றி கிம் சர்மா ஆடிய இந்த திருமண விளையாட்டு பாலிவுட்டை மிரட்டலுக்குள்ளாக்கியுள்ளது.

No comments:

Post a Comment