Thursday, September 2, 2010

கவனம்... அக்கறை! முதல்வர் நடத்திய அதிகாரிகள் மாநாடு!



மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளின் இரண்டுநாள் மாநாட்டை 27, 28 தேதிகளில் கோட்டையில் நடத்தினார் கலைஞர்.

முதல் நாள் கூட்டத்தில் மக்கள் பிரச்சினைகளோடு இணைந்த சில முக்கிய துறைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. குறிப் பாக பொதுப்பணி, குடிநீர் வடி கால் வாரியம், சுற்றுப்புறச் சூழல் உள்ளிட்ட துறைகளும் அரசின் நலத்திட்டங்கள் குறித்தும் ஆலோ சிக்கப்பட்டது. "ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் சாயப் பட்டறைகளால் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக நிறைய புகார்கள் வருகிறது. சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண் டும்' என்று கேட்டுக் கொண்டார் சுற்றுச் சூழல் துறை செக்ரட்டரி தேவேந்திரநாத் சாரங்கி. பொதுப் பணித்துறை முதன்மைச் செயலாளர் ராமசுந்தரம், "ஏரிகள், ஆறுகள் மற்றும் குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் தூர்வாரும் பணிகள் சில மாவட்டங்களில் சுணக்கமாக இருக்கிறது. மழைக்காலம் துவங்கி விட்டதால் மழைநீரை சேமிப்பதிலும், வெள்ளத் தடுப்புகளிலும் அதிக அக்கறை காட்ட வேண்டும் என்று தனது ஆலோசனையாக வெளிப்படுத்திவிட்டு, "இம்மாதிரியான பணிகளை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார் திண்டுக்கல் கலெக்டர் வள்ளலார்' என்று பணிகள் நடந்துள்ள மாவட்டத்தை பாராட்டவும் செய்தார்.

ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும் தங்களுக்கு கொடுக்கப் பட்ட 3 நிமிடத்தில், அரசு நலத் திட்டங்களை நடைமுறைப் படுத்தும் விதம் குறித்து விவரித்தனர். திருச்சி மாவட்ட கலெக் டர் சௌண்டையா, கலர் டி.வி. வழங்கப்பட்டிருப்பது குறித்துப் பேசிய விபரம் பலத்த விவாதங்களுக்கு அடிபோட்டது. ""திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை அரசு நலத் திட்டங்கள், அரசு உதவிகள் உள்ளிட்டவைகளில் எதுவும் பெண்டிங்கில் இல்லை. வண்ணத் தொலைக்காட்சி பெற்ற 6900 குடும்பங்கள், அதனை பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்'' என்று சொன்ன போது, முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் பலரும் உன்னிப் பாக கவனித்தனர். ""எதனால் அந்த பிரச்சினை?'' என்று தலை மைச் செயலாளர் ஸ்ரீபதி கேள்வி கேட்க, ""அந்த 6900 குடும்பத் தினரின் வீடுகளுக்கும் மின்சப்ளை கிடையாது. காரணம், அவர்கள் பொறம்போக்கு நிலத்தில் வீடு கட்டியிருப்பதுதான். பொதுப்பணித்துறையும், வருவாய்த்துறையும் என்.ஓ.சி. தராததால் அந்த வீடுகளுக்கு மின்சப்ளை கொடுக்க மறுக்கிறது மின்சார வாரியம்!'' என்று சுட்டிக் காட்டினார் சௌண்டையா.

உடனே ஸ்ரீபதி, மின்வாரிய சேர்மன் சி.பி.சிங் கைப் பார்த்து கேட்க, அவரோ ""சம்மந்தப்பட்ட துறைகள் என்.ஓ.சி. தந்தால்தான் மின்சப்ளை தர வேண்டும்ங்கிறது விதி'' என்று சொல்ல, வருவாய்த்துறை, பொ.ப.துறை செக்ரட்டரிகளிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பினார். அவர்களோ, ""அவர்களுக்கு பட்டா இல்லை. அதனால்தான்'' என்றனர். உடனே முதல்வர் குறுக்கிட்டு ""அவர்களுக்கு மின்சப்ளை கிடைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விவாதித்து ஒரு முடிவை எடுங்கள்'' என்று அட்வைஸ் செய்தார்.





மக்களிடமிருந்து எந்த மாதிரியான கோரிக் கைகள் வருகிறது என்பதை சில கலெக்டர்கள் எடுத்துச் சொன்னார்கள். அதில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் விஜயகுமார், ""சேலம் மாவட் டத்தில் உள்ள கெங்கவல்லி கிராமத்தைச் சேர்ந்த மக்கள், தங்கள் ஊரை பெரம்பலூர் மாவட்டத்தோடு இணைக்க வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக் கையை வைத்துள்ளனர்'' என்றார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், ""அப்படியெல்லாம் கோரிக்கை வந்திருக்காது. சேலம் மாவட்டத்தை விட பெரம்பலூர் மாவட்டத்தில் என்ன வளர்ச்சி இருக்கிறது? எல்லா வசதிகளும் கெங்கவல்லி மக்களுக்கு சேலம் மாவட்டத்தில்தான் கிடைக்கிறது'' என்று கோபமாக கேட்டார்.

காவல்துறை அதிகாரிகள், கலெக்டர்கள் இணைந்து கலந்து கொண்ட 2ம் நாள் கூட்டுக் கூட் டத்தில், இரண்டு, 3 வருடங்களாக பெண்டிங்கில் இருக்கும் பல வழக்குகளின் பட்டியலை தயாரித்து வைத்திருந்தார் முதல்வர். குறிப்பாக, சி.பி.சி.ஐ.டி. வசம் உள்ள வழக்குகள் பற்றித்தான் பட்டியலில் நிறைய இருந்தது. இதுபற்றி பேசத் துவங்கிய ஸ்ரீபதி சென்னை சென்ட்ரலில் ரயிலை கடத்திய வழக்கு, கோவை லஷ்மி நகைக் கடையில் கொள் ளையடிக்கப்பட்ட வழக்கு, திருச்சியில் துரைராஜ் என்பவர் காரில் வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் ஆகியவைகளின் நிலை என்ன? என்று கேள்வி கேட் டார். அதேபோல, நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் கொள்ளை வழக்கு என்னாயிற்று? என்று சென்னை கமிஷனரிடம் ஸ்ரீபதி கேட்க, இவ ரும் பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார்.

மாநிலத்தின் சட்ட-ஒழுங்கு குறித்து விவா தம் நடந்தபோது, காவல்துறை உயரதிகாரிகள் சில விஷயங்களில் தீவிர கவனம் செலுத்த வேண்டுமென்பதை எடுத்துச் சொன்னார் உள வுத்துறை ஐ.ஜி.ஜாபர்சேட். குறிப்பாக, தர்மபுரி- கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நக்ஸலைட்டு களின் ஆதிக்கம் அதிகரிக்கும் அபாயம் இருப்ப தாகவும் அதேபோல தென் மாவட்டங்களில் சாதி மோதல்கள் ஏற்படுகிற சூழல் இருந்து வருவதாகவும் சுட்டிக் காட்டிவிட்டு இவை களை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளில் அதிகாரிகளுக்கு சீரியஸ்னஸ் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனை காவல்துறை அதிகாரிகள் பலர் குறித்துக் கொண்டனர்.

அரசு நலத்திட்டங்கள் குறித்து விவரித்த முதல்வர், தொலைக்காட்சிப் பெட்டி கிடைக் காதவர்களுக்கு வரும் டிசம்பருக்குள் கிடைக்க வழிவகை காண வேண்டும் என்றும், குடிசை களை அகற்றி கான்கிரீட் வீடுகளாக மாற்றும் இலக்கை மார்ச் 31-க்குள் அனைத்து மாவட்டங் களிலும் ஒரே சமயத்தில் முடிக்க வேண்டுமென்றும் கலெக்டர்களுக்கு கடுமையாக வலியுறுத் தினார். அதேபோல, சமீபத்தில் விவசாயிகளுக் காக இலவச பம்பு செட் அறிவிக்கப்பட்ட திட்டம் குறித்து பேசிய முதல்வர், இதனை எப்படி வினியோகிக்கப் போகிறீர்கள்? என்று மின் வாரிய சேர்மன் சி.பி.சிங்கைப் பார்த்து கேள்வி எழுப்பினார். இதுகுறித்து முழுமையான ஒரு ரிப்போர்ட் தயாரித்து வருகிற 15-ந் தேதிக்குள் தருகிறோம் என்று பதிலளித்தார் சி.பி.சிங்.

கடந்த 4 வருடங்களில் நடந்த கலெக்டர் மாநாட்டினைப் போல, இந்த மாநாட்டில் அமைச்சர்களின் குறுக்கீடுகளோ, முதல்வரின் கோபமோ இல்லை என்பதே கலந்து கொண்ட அதிகாரிகளின் எண்ணங்களாக பிரதிபலித்தன.

No comments:

Post a Comment