Thursday, August 5, 2010

தேர்தல் கள ஆய்வு இந்த இதழில்... திண்டுக்கல் மண்டலம்.


இந்தியாவின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்ற எஸ்.ஒய்.குரேஷியின் முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட முக்கியமான கேள்வி, "தமிழகத்தில் முன்கூட்டியே சட்டமன்றத் தேர்தல் வருமா' என்பதுதான். தமிழகத் தேர்தல் குறித்த எதிர்பார்ப்பு இந்திய அளவில் இருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.

தமிழக அரசியல் கட்சிகள் தங்க ளின் தேர்தல் வியூகங்களை வகுத்து, கூட்டணிப் பேச்சு வார்த்தைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி என இரண்டு தரப்பிலுமே போராட்டங்கள், பாராட்டு விழாக்கள், பொதுக்கூட்டங்கள் என தேர்தலை மனதில் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இரு பெரிய கட்சிகளுக்கு அடுத்த நிலையில் உள்ள கட்சிகளும் தேர்தலுக்கான தயாரிப்புகளில் மும்முர மாக இருக்கின்றன. அணி சேர்க்கைகள் எப்படி அமையும் என்கிற ஆர்வம் அரசியல் நோக்கர்களிட மும் வாக்காளர்களிட மும் இருக்கிறது. எனவே, உங்கள் நக்கீரனில் மண் டலவாரியாக வெளியிடப் படும் தேர்தல் கள ஆய்வு முடிவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைகின்றன.

இந்த இதழில்... திண்டுக்கல் மண்டலம்.






மதுரை மண்டலத்தின் இரண்டாவது பகுதி என்று இதனைச் சொல்லலாம். முல்லைப் பெரியாறு அணையின் பாசனப்பகுதிகளே இம்மண்டலத்தில் அதிகளவில் உள்ளன. உணவுப்பயிர், பணப்பயிர் ஆகியவை விளைகின்ற இந்த மண்ணில் அதனைச் சார்ந்த உபதொழில்களும் நடைபெறுகின்றன. திண்டுக்கல் மண்டலத்தில் திண்டுக்கல், தேனி ஆகிய 2 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட திண்டுக் கல், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், பழனி, ஒட்டன்சத்திரம், ஆண்டிபட்டி, கம்பம், போடி பெரியகுளம், உசிலம்பட்டி, சோழவந்தான் ஆகிய 12 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

கட்சிகளின் செல்வாக்கு பற்றிய நம் கள ஆய்வின் படி இம்மண்டலத்தில் எந்த கட்சிக்கு எவ்வளவு செல்வாக்கு என்பது வரைபடம் மூலமாக காட்டப்பட்டுள்ளது.

திண்டுக்கல்

அ.தி.மு.க.வின் தேர்தல் வெற்றிக்கணக்கைத் தொடங்கிவைத்த நாடாளுமன்றத் தொகுதி இதுதான் என்பதால், நீண்டகாலமாக இது அ.தி.மு.க.வின் கோட்டையாகவே கருதப்பட்டு வந்தது. எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட செல்வாக்கும் அவரது அபிமானிகள் இன்றுவரை இரட்டை இலைக்கு வாக்களித்து வருவதும் இதற்கு முக்கியம் காரணம் என்றாலும், திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகு தியில் அதிக எண்ணிக்கையில் இருந்த முக்குலத்தோர் வாக்குகளும் கூடுதல் காரணமாகும். எனினும், தொகுதி மறுசீரமைப்பிற்குப்பிறகு வெற்றி- தோல் வியை நிர்ணயிக்கக்கூடிய சக்தியாக கவுண்டர் சமுதாய வாக்குகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

கவுண்டர்கள், முக்குலத்தோர், தாழ்த்தப் பட்டோர், பிள்ளைமார், நாயுடு, முஸ்லிம், கிறிஸ்தவர்கள், அம்பலம், செட்டியார் என்ற வரிசையில் இங்கு ஜாதி ஓட்டுகளின் கணக்கு அமைந்துள்ளது. கவுண்டர்கள், முக்குலத்தோ ரில் அ.தி.மு.க.வுக்கு செல்வாக்கு அதிகம். மற்ற சமுதாயத்தினரில் தி.மு.க.வுக்கு கூடுதல் செல்வாக்கு காணப்படுகிறது. எனினும், ஜாதி செல்வாக்கைக் கடந்து அரசின் திட்டங்களால் மக்கள் பெற்றுள்ள பலன்களின் அடிப்படையில் திண்டுக்கல் எம்.பி. தொகுதிக்குட்பட்ட சட்ட மன்றத் தொகுதிகளில் வாக்குகள் பதிவாவதை கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகளின் அடிப்படையில் சுட்டிக்காட்டுகிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.

6 தொகுதிகளில் திண்டுக்கல்லைத் தவிர மற்ற 5 தொகுதிகளிலும் ஜாதிபேதமின்றி தி.மு.க. அணி கூடுதல் வாக்குகளைப் பெற்றதால், அக்கூட்டணியின் காங் கிரஸ் வேட்பாளர் சித்தன் அதிக வாக்கு வித்தியாசத் தில் வெற்றி பெற்றார்.

2 ஆண்டுகளாக திண் டுக்கல் நகருக்குள் நடை பெற்றுக்கொண்டிருக்கும் பாதாள சாக்கடைப் பணிகளின் ஆமை வேக மும் அதனால் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதும் பொதுமக்க ளை ரொம்பவே சங்கடப் படுத்துகிறது. இதை சி.பி. எம். எம்.எல்.ஏ. பால பாரதியும் அ.தி.மு.க. நிர் வாகிகளும் மிகச் சரியா கவே கையாண்டு தங்க ளுக்கு சாதகமாக்கியிருக் கிறார்கள். மற்ற ஏரியாக் களில் அ.தி.மு.க.வில் நடக் கும் உள்கட்சிக் குழப்பங் களும் கட்சித்தாவல் களும் அந்தக் கட்சியின் செல்வாக்கில் சேதா ரத்தை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரசுக்கு இங்கு நிலையான வாக்கு வங்கி உள்ளது. தே.மு.தி.க.வால் கடந்த எம்.பி. தேர்த லுக்குப்பிறகு பெரியள வில் வளரமுடியாவிட் டாலும் தொகுதிக்கு 15 ஆயிரம் ஓட்டுகள் வரை வாங்கக்கூடிய வலிமை யுடன் அக்கட்சி உள்ளது. சி.பி.எம். கட்சியின் வாக்கு வங்கி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கலைக்கல்லூரி, கூட்டுக் குடிநீர்த்திட்டம் ஆகி யவற்றை ஓட்டுகளாக மாற்ற முடியுமா என ஆளுந்தரப்பு யோசித் தாலும், பூ விளைச்ச லுக்குப் பெயர் பெற்ற நிலக்கோட்டையிலும், மாம்பழத்திற்கு பெயர் பெற்ற நத்தத்திலும் குளிர்சாதன கிடங்குகள் அமைக்க வேண் டும் என்ற விவசாயிகளின் நீண்டகால கோரிக்கை கண்டுகொள்ளப்படாமலே இருப்பது ஆளுந்தரப் புக்கு பாதிப்பை உண்டாக்கும் அம்சமாகும். அ.தி. மு.க.வின் பழைய செல்வாக்கைக் குறைத்திருப்பது தான் ஆளுங்கட்சியின் கொடியை இத்தொகுதியில் கொஞ்சம் கூடுதல் உயரத்தில் பறக்க விடுகிறது.

தேனி

ஜெயலலிதாவை இரு முறை தேர்ந்தெடுத்த ஆண்டிப்பட்டி தொகுதி அடங்கியுள்ள மாவட்டம் என்பதால் அ.தி.மு.க.வினர் இங்கு எப்போதும் தெம்பாக இருப்பது வழக்கம். முக்குலத்தோர் வாக்கு கள் நிறைந்த இங்கு, ஆண்டிபட்டி, கம்பம், போடி, பெரியகுளம் ஆகிய 4 தொகுதிகள் தேனி மாவட்டத் தைச் சேர்ந்தவையாகவும், தொகுதி சீரமைப்புக்குப் பின் இணைந்துள்ள உசிலம்பட்டி, சோழவந்தான் தொகுதிகள் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவையாக வும் உள்ளன. இந்த 2 தொகுதிகளிலும் முக்குலத்தோர் வாக்குகளே முக்கியத்துவம் பெறுகின்றன.

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து பெறப் படும் நீரைப் பயன்படுத்தி நெல், வாழை, திராட்சை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் இப் பகுதியில் விளைவிக்கப்படு கின்றன. விவசா யத்திற்குப் போதுமான தண்ணீரை கேரள அரசிடமிருந்து தமிழக அரசு பெற்றுத்தர வில்லை என்ற வருத்தம் இப்பகுதி விவசாயி களிடம் உள்ளது. அதேநேரத்தில், அரசின் இலவச திட்டங்கள் பெருமளவில் மக்க ளிடம் சேர்ந்திருக்கிறது. அதனை ஓட்டாக ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளில் ஆளுங் கட்சி மா.செ. ஆர்வம் காட்டவில்லை. ஆளுங்கட்சியில் கோஷ்டிப்பூசல் என்பது தேனி மாவட்டத்தில் தாராளமாகவே இருக்கிறது. அதே அளவுக்கு பிரதான எதிர்க்கட்சியிலும் பூசல்கள் நிலவுகின்றன.

முக்குலத்தோர் வாக்குகளில் பெரும்பாலானவை அ.தி.மு.க. வுக்கு சாதகமாக உள்ள நிலை யில், அடுத்த நிலையில் உள்ள தாழ்த்தப்பட்டோர், முஸ்லிம் சமுதாயத்தினரின் வாக்குகள் தி.மு.க.வுக்கு பக்கபலமாக இருக்கின்றன. நாயுடு, பிள்ளைமார் உள்ளிட்ட மற்ற சமுதாயத்தினரின் ஓட்டுகள் இரு கட்சி களுக்கும் பரவலாக கிடைக்கின்றன. இம் மாவட்டத்தில் ம.தி.மு.கவுக்கென குறிப் பிடத்தக்க வாக்கு வங்கி உள்ளது. நாயுடு சமுதாயத்தினரின் வாக்குகளே இதில் முதன் மையாக உள்ளன. தே.மு.தி.கவுக்கும் கணிச மான செல்வாக்கு இங்கு காணப்படுகிறது. தேவேந்திரகுல சமுதாயத்தினர் நிறைந் துள்ள பகுதிகளில் புதிய தமிழகம் செல் வாக்குடன் உள்ளது. முக்குலத்தோர் அமைப்புகள், ஃபார்வர்டு ப்ளாக் போன்ற கட்சி களுக்கும் இங்கு வாக்கு வங்கிகள் உள்ளன.

2006 சட்டமன்றத் தேர்தலில் ஆண்டிப்பட்டியில் 25ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றார் ஜெ. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் ஆண்டிப்பட்டி யில் அ.தி.மு.க. வேட்பாளர் 6000 வாக்குகள் மட்டுமே கூடுதலாகப் பெற்றார். இந்த இடைவெளியைக் கவனத்தில் கொண்டு மின்வெட்டு, விலைவாசி உயர்வு, வனப்பகுதியில் உள்ள மலைவாழ்மக்களின் வாழ்வுரிமை ஆகியவற்றை முன்வைத்து அ.தி.மு.க. அடிக்கடி போராட்டங்களை நடத்தி பழைய செல்வாக்கை நிலைநிறுத்த முயற்சிக்கிறது. ஜெ.வின் கோட்டையைக் காப்பாற்றவேண்டும் என்ற முனைப்புடன் அ.தி.மு.க. வும், அந்தக் கோட்டையில் ஓட்டை போடவேண்டும் என்ற வேகத்துடன் தி.மு.க.வும் செயல்படுவதால் தேனியில் இரு கழகங்களும் வரிந்துகட்டி நிற்கும் நிலைமையை நம் கள ஆய்வில் காணமுடிந்தது.

மதுரை மண்டலத்தின் இரண்டாம் பகுதியான திண்டுக்கல் மண்டலத்தில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் தி.மு.க.வும், தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க.வும் செல்வாக்குடன் திகழ்கின்றன என்பதே கள ஆய்வு நிலவரம்.

(வரும் இதழில் நெல்லை மண்டலம்)

No comments:

Post a Comment