Thursday, June 24, 2010

அரசின் ஈரப்பார்வை திரும்புமா?

shockan.blogspot.com
கலைஞரய்யாவோட 108 ஆம்புலன்ஸ் ஆயிரக்கணக்கான வங்க உயிரைக் காப்பாத்திக்கிட்டு இருக்கு. ஆனா அதே 108 எங்க செந்தில்குமாரை...’’ என முழுதாக சொல்லி முடிக்கமுடியா மல் கதறுகிறார்கள் அந்த அப்பாவிப் பெற்றோர். என்ன நடந்தது?

திருச்சி சமயபுரம் அருகே இருக்கும் போக்கு வரத்துநகர் அய்யாவு, அன்னக்கிளி ஆகியோரின் மகன்தான் செந்தில்குமார். பெற்றோரின் கூலிவேலை உழைப்பில்.. ஜமால் முகமது கல்லூரியில் எம்.எஸ்.சி. விலங்கியல் படித்து விட்டு... நல்ல வேலைக்குப் போய் குடும்பத்தை உயர்த்த வேண்டும் என கனவு கண்டார் 23-வயது இளைஞரான செந்தில். அவருக்கு 108 ஆம்புலன்ஸில் முதலுதவி டெக்னீஷியனாக வேலை கிடைத்தது. பிறகு...

வழிந்த கண்ணீரை துடைத்தபடியே அப்பா அய்யாவு சொல்கிறார்... ""108 ஆம்புலன்ஸில் வேலைன்னதும் சந்தோசமாப் போனான். "அப்பா இந்தவேலை மனசுக்கு நிறைவா இருக்குப்பா. கலைஞரய்யாவோட நல்லதிட்டம்ப்பா இது. நிறையபேர் உயிரைக் காப்பாத்த முடியுதுப்பா'ன்னு அடிக்கடி பெருமிதமா சொல்லிக்கிட்டு இருப்பான். சமீபத்தில் கூட "துரைசாமிபுரத்தில் சாக்கடையோரம் அனாதையாக் கிடந்த ஒரு குழந்தையைக் காப்பாத்தினோம்ப்பா... வையம்பட்டியில் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய 4 பேரை சரியான நேரத்துக்குப் போய் காப்பாத்திட்டோம்ப்பா'ன்னு சொன்னான். அப்படிப்பட்ட புள்ளையை அதே 108-லேயே இழந்துட்டோம்ய்யா''’என்றபடி தலையில் அடித்துகொண்டு அழுதார்.

அழுகைக்கு இடையிடையே பேசிய அம்மா அன்னக் கிளியோ “""சாப்பாடு தூக்கத்தைக்கூட பாக்கமாட்டான். வேலை வேலைன்னு பறப்பான். அன்னைக்கு மதியத்தோட டூட்டி அவனுக்கு முடிஞ்சிடிச்சி. மாற்றிவிட ஆள் இல்லைன்னு அவனே தொடர்ந்து டூட்டி பார்த்தான். அப்ப இரவு பத்தே முக்காலுக்கு திருவளர்ச்சிபட்டியில் இருந்து ராஜேஸ்வரிங்கிற அம்மா சீரியஸ்னு போன்வர... அரக்கபரக்க அங்க போயிருக்கான். போகும் வழியில் டி.வி.எஸ். டோல்கேட்டுக்கிட்ட ஒரு கும்பல் ஆம்பு லன்ஸை வழிமறிச்சி.. குடிபோதையில் சீரியஸா இருக்கான்னு சதீஷ் என்ற பையனை ஏத்திட்டுப் போகச் சொல்லியிருக்காங்க. அவனை ஸ்ட்ரெச் சர்ல எங்க புள்ளை ஏத்தும்போது... மரம் ஏத்திக் கிட்டு அந்தவழியா எம வேகத்தில் வந்த ஒரு லாரி ஆம்புலன்ஸில் மோத... அதில் ராஜேஸ்வரி, சதீசோட.. எங்க புள்ளை யும் இறந்துட் டான்யா... பலரைக் காப்பாத்திய எங்க புள்ளைய கடவுள் காப்பாத்தலையே.. கடவுள் இருக்கானா இல்லையான்னு தெரியலையே''’என்று கதறினார்.

போக்குவரத்துநகர் வாசிகளோ ""இந்த விபத்தில் இறந்துபோன மத்த ரெண்டு பேருக்கும் தலா 1 லட்ச ரூபா தரப்படும்னு அரசு அறிவிச்சி ருக்கு. ஆனா... முதலுதவி டெக்னீஷியனாக இருந்த செந்தில் பேர் எப்படியோ விடுபட்டுடுச்சி. இந்த நிமிசம் வரை உதவித் தொகை அறிவிக் கப்படலை. அரசுதான் செந்தில் குடும்பத்துக்கு உதவணும்''’என்றார்கள் ஒரே குரலில்.

இது தொடர்பாக 108 ஆம்புலன்ஸ்களின் திருச்சி மாவட்ட மேலாளர் ரவியிடம் கேட்டபோது ""விடுபட்டது உண்மைதான். செந்தில்குமாருக்கும் உதவித்தொகை வழங்கணும் என்று அரசைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம். இது தவிர... எங்கள் ஊழியர்களின் ஒருநாள் சம்பளத்தை செந்தில் குடும்பத்துக்கு வழங்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறோம்''’என்றார் நம்மிடம்.

அரசின் ஈரப்பார்வைக்குக் காத்திருக்கிறது செந்தில்குமார் குடும்பம்.

1 comment:

  1. யார் எங்கே வேலை செய்கிறார்கள் என்ற விவரமே தெரியாத அளவிற்கு நிர்வாகம் மெத்தனமாக இருந்தால், மக்களுக்கு எப்படி இவர்கள் சேவை செய்ய போகிறார்கள்.

    ReplyDelete