Saturday, June 26, 2010

இப்படியும் ஒரு சீட்டிங்! -மாணவர்களே உஷார்!

shockan.blogspot.com

மருத்துவம், பொறியியல் படிப்புக்கான டொனேஷன்களை வாரிக் குவித்துக் கொண்டிருக் கின்றன தனியார் கல்லூரிகள் என்றால் அட்மிஷனுக் காக போகும் மாணவர்களிடம் வேறுவித சீட்டிங்கு களும் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. அதென்ன சீட்டிங்? ஏமாந்த மாணவன் சபரிஷே சொல்லட்டுமே.

""அண்ணே... கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க ணும்னு ஆசை. சென்னை வேளச்சேரியில இருக்குற குருநானக் காலேஜுக்கு அப்ளை பண்ணியிருந்தேன். 17-ந்தேதி வந்து பாருங்கன்னு சொன்னதால நானும், எங்க சொந்தக்கார அண்ணனும் 9 ஆயிரம் பணத்தோட போயிருந்தோம். அப்போ 40-லிருந்து 45 வயசு மதிப்புள்ள ஒருத்தர் வந்து "என்னப்பா எதுக்காக வந்திருக்க'ன்னு கேட்டாரு. காரணத்தை சொன்னதுமே "ம்... கம்ப்யூட்டர் சயின்ஸ் சீட் இருக்குற மாதிரி தெரியலையே... சரி வெயிட் பண்ணுப்பா'ன்னு சொல்லிட்டு... செல்ஃபோன்ல "சார்... நம்ம காலேஜ்லேர்ந்து போஸ்ட் கார்டு லேட்டாப் போனதுக்கு பாவம்... அவன் என்ன சார் பண்ணு வான்? நாமதானே ஹெல்ப் பண்ணணும்'னு யார்க்கிட்டயோ பேசினார்.

அதுக்கப்புறம் "10,000 இருக்காப்பா?'ன்னுக் கேட்டார். "சார் ஒன்பதாயிரம்தான் எடுத்துக்கிட்டு வந்திருக்கோம்... ப்ளீஸ் சார் ஆயிரம் ரூபாய் ஏ.டி.எம்.ல எடுத்துட்டு வந்து கொடுத்துடுறேன். இந்தப் பைய னுக்கு சீட் இல்லைன்னு மட்டும் சொல்லிடாதீங்க'ன்னு அவர்கிட்ட கெஞ்சுன என் சொந்தக்கார அண்ணன் எழில்... ஏ.டி.எம்.ல பணம் எடுக்கப் போனாரு.

உடனே அந்தாளு பிரின்ஸ்பாலோட ரிசப்ஷன்ல இருந்த மேடம்கிட்ட ஏதோ பேசினாரு. அதுக்கப்புறம் என்கிட்ட வந்தவர் "சரிப்பா உன்னைப் பார்த்தா பாவமா இருக்கு. அந்த ஒன்பதாயிரத்தைக் கொடு... சீக்கிரமா கட்டிடுறேன். மீதியை அப்புறமா கட்டிடுப்பா'ன்னு சொன்னதால எங்கிட்ட இருந்த ஒன்பதாயிரத்தை கொடுத்தேண்ணே. பிரின்ஸ் பால் ரூமுக்கு பக்கத்துல இருக்குற ரிசப்ஷன்ல வெயிட் பண்ணிக்கிட்டிருந்தேண்ணே. அப்போ தான் ஒரு பையனும், அவங்க அம்மாவும் "அய்யய்யோ பணத்தை ஏமாத்திட்டு ஓடிட் டான்'னு அலறி அடிச்சுக்கிட்டு அழுதுக்கிட்டு ஓடி வந்தாங்க. அதுக்கப்புறம்தான் நானும் அவன்கிட்ட ஏமாந்தது தெரியவந்தது.

அந்தப் பையன் பேரு பாண்டியன். அவன்கிட்ட 23,500 ரூபாய் வாங்கி பேங்க் டி.டி. எடுக்குற மாதிரி எஸ்கேப் ஆகியிருக்கான். போலீஸ்ல புகார் கொடுத்திருக்கோம்ணே. கடன் வாங்கி எடுத்துட்டு வந்த பணம்னே...' சீட்டும் கிடைக்கல, பணமும் போச்சுண்ணே'' என்கிறார் கண்ணீருடன் சபரிஷ்.

குருநானக் கல்லூரியின் பிரின்ஸ்பால் ராகவனிடம் கேட்டபோது, ""சீட் இல்லைன்னு சொன்ன பிறகும்... யாரோ கேட்டாங்கன்னு பணம் கொடுக்கலாமா? இப்படி ஏமாந்ததுக்கு கல்லூரி நிர்வா கம் எப்படிங்க பொறுப்பேற்க முடியும்?'' என்கிறார் பொறுப் பில்லாமல்.

கிண்டி இன்ஸ்பெக்டர் அன்புசாமி, ""விசாரிச்சுக் கிட்டிருக்கோம்'' என்கி றார். அட்மிஷன் நேரத் தில் இப்படியுமா போர் ஜரிகாரர்கள் உலவுவார் கள். அவர்கள் கல்லூரி தரப்புக்கு அறிமுகமான வர்களா என்பதை காவல்துறை விசா ரிக்க வேண்டும்.

No comments:

Post a Comment