Thursday, June 24, 2010

முஸ்லிம் தீவிரவாதியின் சிறை அனுபவங்கள்!




shockan.blogspot.com

13 ஆண்டுகள் கழித்து விடுதலையாகியிருக்கும் தடா அப்துல்ரகீம் ஒரு சிறைப் பறவை. முஸ்லிம் தீவிரவாதி எனப் போலீசாரால் முத்திரை குத்தப்பட்டவர். 1993-ம் ஆண்டில் நடந்த ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பில், தீவிர வாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக தடாவில் கைதாகி 3 ஆண்டுகள் சிறை யில் இருந்தவர். 1997-ல் திருச்சியில் நடந்த திருச்சூர் எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி, கடந்த மே-21 அன்று குணங்குடி அனீபாவுடன் விடுதலை யான 8 பேரில் ஒருவர் அப்துல் ரகீம்.

காஞ்சிபுரத்திலிருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ள நெய் யாடு கிராமம்தான் அப்துல் ரகீமின் சொந்த ஊர். சென்னையில் அச்சகம் நடத்தி, பழனிபாபாவின் புனிதப் போராளி பத்திரிகையை அச்சிட்டுக்கொடுத்து, அவரது அகில இந்திய ஜிகாத் கமிட்டியில் முக்கிய பங்காற்றினார். பாபாவுடன் பா.ம.கவிலும் சேர்ந்து பொறுப்பு வகித்தார். இஸ்லாமிய இளைஞர்களை தீவிர வாதிகளாக முத்திரை குத்து வதால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அனுபவ சாட்சியாக இருக்கும் அப்துல் ரகீமை சந்தித்தோம்.

""பத்திரிகைகள் எழுதுவது போலவோ, போலீசார் சித்தரிப் பது போலவோ நான் ஒன்றும் தீவிரவாதியல்ல'' என்ற ரகீமின் மனதில் சிறைவாழ்வின் காயங் களும் கசப்பான அனுபவங் களும் ஆறாமல் இருப்பதை உணர முடிந்தது. ""வெளியில் தான் மதவெறியர்களின் கொடுமை தாங்க முடியவில்லை என்றால், சிறையிலும் மதவெறி அரசியல்-அதிகாரம்தான் இருந்தது. அதனால் நாங்கள் நசுக்கப்பட்டதை நக்கீரன் கிட்ட மனம் திறந்து சொல்ல விரும்புறேன்'' என்றபடி பேச்சைத் தொடர்ந்தார்.





95-ம் வருசம் விடுதலைப்புலிகள் 9பேர் சென்னை மத்திய சிறையிலிருந்து தப்பிச்சிட் டாங்க. இதற்கு போலீசாரும், சிறை அதிகாரிகளும்தானே பொறுப்பு. அவங்களை தப்பிக்க விட்டுட்டு, தடா கைதிகளாக இருந்த எல் லோரையும் ஆடு-மாடுகளை அடிப்பதுபோல கொடு மைப்படுத்தினாங்க. நான், அல்-உமா பாட்சா, தமிழ் நாடு விடுதலைப்படை முரு கேசன், நல்லரசன், ஆர்.ஒய். எல். வேலுன்னு 25 பேர் இருந்தோம். பக்ரீத் பண்டி கைக்காக புது டிரஸ் வாங்கி வச்சிருந்தோம். அதை யெல்லாம் போலீசார் தூக் கிட்டுப் போயிட்டாங்க. எங் களை ஜட்டியோடு நிற்க வச்சு அடிச்சாங்க. 3 நாள் இப்படித்தான் சரியான அடி. இந்த விஷயம் எப் படியோ தெரிஞ்சு, வழக்கறிஞர் சங்கரசுப்பு மனு தாக்கல் செய்ய, தடாகோர்ட் நீதிபதி ராதாகிருஷ்ணன் நைட் 7 மணிக்கு ஜெயிலுக்கு வந்து டார்ச் லைட் வெளிச்சத்தில் எங்க காயங் களைப் பார்த்து, நேர்மையா அறிக்கை தயாரித்து தாக்கல் செய் தார். அதனால அந்த நீதிபதியை நாகர்கோவிலுக்கு மாத்திட்டாங்க. அப்புறம் ஆட்சி மாறியதும், ஜெ.வும் சசிகலாவும் அரெஸ்ட் டாகி வந்தாங்க. சசிகலா ஆஸ் பத்திரியில் படுத்துக்கிட்டப்ப அவருக்கு ஃபாரின் மேக்கப் சாதனங்கள், உலர் உணவுகள், டேபிள் ஃபேன், வெஸ்டர்ன் டாய்லட்டுன்னு எல்லா வசதியும் செய்து தரப்பட்டது. அதுபோல ஜெ.வுக்கு சிறையின் தனி அதிகாரி ராஜேந்திரன் பல சலுகைகள் கொடுத்தார். திரும்பவும் ஜெ ஆட்சிக்கு வந்ததும் டெபுடி ஜெயிலர் ராஜேந்திரன் சூப்பிரண் டென்ட் ஆகிவிட்டார்.

97 டிசம்பர் 6-ல் நடந்த ரயில் குண்டுவெடிப்பில் சதித்திட் டம் தீட்டியதாக 10.01.98-ல் என்னைக் கைது செய்தார்கள். திருச்சியில் பி.ஜே.பி. பிரமுகர் ஸ்ரீதர் கொலை செய்யப்பட்டார். நாங்கள் ஜெயிலில் இருக்கிறோம். எங்களுக் கும் அதற்கும் சம்பந்தமில்லை என்றபோதும், நாங்கள் முஸ்லிம்கள் என்பதாலேயே, தடா கைதிகளான எங்கள் 22 பேரையும் சிறையின் இணை அலுவலர் ஜெயக்குமார் தலைமையில் ஒரு டீம் தினமும் காலையிலும் மாலையிலும் வெளியே இழுத்துப் போட்டு அடிக்கும். இதுபோல 100 நாள் அடிச்சாங்க. நாங்க சாப்பிடுறப்ப எங்க சாப்பாட்டிலே மண்ணை அள்ளிப்போடுவாங்க. இந்தக் கொடுமையால இமாம் அலிக்கு கிட்னி பிரச்சினை ஏற்பட, அவர் போலீசிடமிருந்து தப்பித்து, அப்புறம் என்கவுண்ட்டரில் இறந்துபோனார்.

ஜெயிலில் இருந்த பாக்ஸர் வடிவேலும் அவங்க ஆட்களும் பவுடர் வியாபாரம் செய்திருக்காங்க. அதை டெபுடி ஜெயிலர் ஜெயக்குமார் பிடிச்சிட்டார். அந்த ஆள் வேலையில் நேர்மையான ஆள். ஆனா, சித்ரவதையில் கொடூரக்காரர். இவரது அடிதாங்காமல் எந்தக் கைதியாவது ப்ளேடால் கிழித்து தற்கொலைக்கு முயன்றால், காயம்பட்ட இடத்திலேயே உப்பையும் மிளகாய்த்தூளையும் தேய்ச்சிடுவார். அப்படித்தான், ஒரு கிலோ கஞ்சாவையும் பவுடரையும் கலந்து வடிவேலுவை படுக்க வைத்து வாயிலே ஊத்தினாங்க. அதிலே பாக்ஸர் வடிவேலு செத்துப்போனதாலதான் ஜெயிலுக்குள்ளே கலவரம் வெடிச்சது. ரத்த ஆறுஓடியது. . டெபுடி ஜெயிலர் ஜெயக் குமாரை அடித்து கரிக்கட்டை, பெட்சீட், வாரண்ட் பேப்பர் போட்டு எரிச்சிக் கொன்னுட்டாங்க. இந்தக் கலவரத்தில் எங்களுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனா, எங்களையும் சித்ரவதை செஞ்சாங்க.

இப்படியெல்லாம்தான் சிறைக்கொடுமைகளை அனுபவிச்சோம். முஸ்லிம்ங்கிறதாலதான் எங்களுக்கு இவ்வளவு சித்ரவதையும். ஆனா, எந்த முஸ்லிம் அமைப்பும் எங்களைக் காப்பாத்தலை. அவங்க வேலை என்னன்னா, இங்க உள்ள நிலைமைகளையெல்லாம் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு ரத்தத்தையும் வேர்வையையும் சிந்தி உழைக்கிற முஸ்லிம் இளைஞர்களுக்கு மதஉணர்வைத் தூண்டிவிடுற மாதிரி லெட்டர் எழுதுறதுதான். அதைப் பார்த்ததும் அந்த இளைஞர்கள் பதிலுக்கு கடிதம் எழுதுவதோடு, டி.டி.யும் காசோலையும் எடுத்து அனுப்புவாங்க. அந்த லெட்டரையெல்லாம் தூக்கிப் போட்டுட்டு பணத்தை அக்கவுண்ட்டில் போட்டுடுவாங்க. மாசம் 10 லட்ச ரூபாய்க்கு மேல் பணம் வருது.

முஸ்லிம்களுக்கு இறையச்சம் இருக்கணும். இந்த அமைப்புகளின் தலைவர்களுக்கு இறையச்சம் கிடையாது. தாடி, தொப்பியைப் போட்டுக்கொண்டு முஸ்லிம்களை ஏமாற்றுகிறார்கள். முஸ்லிம் மக்களிடம் கொள்ளையடிக் கிறாங்க. ஜெயில் சித்ரவதைகளை விட கொடூரமான சித்ரவதை இது. அமைப்புகளின் பெயரால் முஸ்லிம்களை வைத்து வியாபாரம் செய்கிறார்கள்'' என்றார் அப்துல் ரகீம் கடுமையான குரலில்.

"தீவிரவாதிகள் என்ற முத்திரையிலிருந்து முஸ்லிம் இளைஞர்களையும், மத அமைப்பு களிடமிருந்து முஸ்லிம் மக்களையும் காப்பாற்ற வேண்டும்' என்கிற வைராக்கியம் அப்துல் ரகீமின் குரலில் எதிரொலிக்கிறது.

No comments:

Post a Comment