Thursday, June 24, 2010

அழியும் மொழியா தமிழ்? சவால் மாநாடு!


shockan.blogspot.com

இனி உலகத் தமிழர்கள் இதுபோலொரு தமிழ் செம்மொழி மாநாட்டைக் கண்டிடக்கூடாது என்பதையும், இனி யாரும் இப்படியொரு மாநாட்டை நடத்திவிடக்கூடாது என்பதையும் கவனத்திற்கொண்டு மிக மிக சவாலாக எடுத்து அதை சாதகமாக்கிக்கொண்டும் கோவையை கலகலத்துப் போக வைத்திருக்கிறார்கள் கலைஞரின் உடன்பிறப்புகள்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், செம்மொழியான தமிழ் மொழியே, என திரும்பும் இடமெங்கும் பாடல்களாலும் பேனர்களாலும் தமிழால் நிரம்பி வழிகிறது கோவை.

துணை முதல்வர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி., தமிழக அமைச்சர்கள் என பலரும் தொடர் கோவை விசிட் அடித்து இறுதி கட்டப் பணிகளை வேகமாக முறுக்கிவிட தங்கத் தொட்டியில் இடப்பட்ட நிலவாய் மின்னத்தொடங்கியிருக்கிறது கோவை.





மாநாடு தொடக்க நாளன்று இனியவை நாற்பது என்ற தலைப்பில் தமிழரின் வீரத்தையும், ஐவகைத் திணைகளில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கை முறைகளையும் விளக்கும் சிலைகளைக் கொண்டு நடக்கும் எழிலார் பவனி காண்போரையெல்லாம் மயக்கிவிடும் என்பது கட்டியம் எனக்கூறும் ஓவியர் மருது நம்மிடம்... ""தமிழர்களைப் பற்றியான வாழ்க்கை முறைகளை கண்ணெதிரே காண்பிக்கப் பட வேண்டிய சிலைகளை செய்ய வேண்டுமென் றாலே என்னைப் போன்ற ஓவியர்கள் மிகுந்த உற் சாகத்தோடுதான் ஓவி யக் களத்தில் குதிக் கிறோம். தனக்கிழைக் கப்பட்ட அநீதியின்போது வயதானவர்களையும், குழந்தைகளையும், தாய்மார்களையும், தந்தைகளையும் பத்திரப் படுத்திய பின்பே மதுரையை எரித்த கண்ணகி யின் உக்கிரச் சிலையும், சாதி மறுத்த வீரர்களின் போராட்டம் என்ற தலைப்பில் மருதநாயகம் தொட்டு புலித்தேவன், சுந்தரலிங்கம் என பலரும் சாதி மறுத்து வெள்ளை யர்களுக்கு எதிராய் போரிட்டு நின்றதையும் சிலையாக்கியிருந்தேன்.

கடந்த முறை கோவைக்கு விசிட் செய்திருந்த முதல்வர் கலைஞர், இந்த சாதி மறுத்த வீரர்களின் போராட்டச் சிலையைப் பார்த்துவிட்டு "என்ன ஓர் அருமையான வேலைப்பாடு' என்று ஆச்சரியப்பட்டவர் என்னை அழைத்து பாராட்டி மகிழ்ந்தார்'' என்கிறார் உற்சாகமாய்.

"இனியவை நாற்பது' சிலைகளைப் போலவே பிரம்மாண்டத்தோடு மக்களை ஈர்க்கக்கூடிய வல்லமை வாய்ந்தது மாநாட்டுப் பந்தல். பனையோலைகளால் வேயப்பட்ட முகப்பும், 65,000 பேருக்குமேல் அமரக்கூடிய வகையிலான பந்தலும் பிரம்மாண்டத்தின் உச்சம் என்கிற பொதுமக்களின் கூற்றைப் பற்றி மாநாட்டுப் பந்தல் அமைப்பாளரான பந்தல் சிவாவிடம் பேசினோம்...





""இது பெரிய விஷயம்தான். ஏன்னா தளபதி தலைமையில் நடந்த இளைஞரணி மாநாட்டுப் பந்தல்தான் தி.மு.க.வின் மாநாடுகளில் போடப்பட்ட பிரம்மாண்ட பந்தல். அதையும் தாண்டி இப்படியொரு பிரம்மாண்ட பந்தலை இனி யாராலும் செய்ய முடியாது என தளபதியும் பேராசிரியருமே இங்கு வந்து பார்வையிட்டபோது கூறியது என் வாழ்வில் மறக்க முடியாதது.

சரியாக 45 நாளில் 500 தொழிலாளர் களின் உழைப்பில்தான் இப்படியொரு பிரம்மாண்டத்தை செய்தோம். மாநாட்டுப் பந்தலின் உள்ளே உலகத் தமிழர்களுக்காக சாப்பாடு வசதிக்கு வேண்டி 12 பிரம்மாண்ட சமையற்கூடங்களும், ஒரே நேரத்தில் 60,000 பேருக்கு மேல் சாப்பிடும் அளவுக்கு அமைக்கப்பட்டிருக்கும் தனி அரங்குகளும் பார்ப்போரை எளிதில் ஆச்சரியப்படுத்திவிடும்'' என்கிறார் சற்றும் குறையாத பூரிப்போடு.

தங்குமிட வசதிக்கான ஏற்பாடுகள் குறித்து செம்மொழி மாநாட்டுச் சிறப்பு அலுவலர் பிரபாகரனிடம் கேட்டோம்...

""வெளிநாடுகளிலிருந்து சுமார் 4 ஆயிரம் தமிழறிஞர்களின் வருகை கோவையில் தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. கோவை வரும் தமிழ் அறிஞர்களை விமானநிலையத்தில் வரவேற்று, அத்தமிழறிஞர்கள் செம்மொழி மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பு வதற்கு ஏதுவாக இன் னோவா போன்ற கார் களை கொடுக்கிறோம். ஸ்டார் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டு அங்கேயே அவர்களுக்கு உணவும் வழங்கப்படுகிறது.





கட்டுரை ஆராய்ச்சியாளர்களுக்கு என ஓர் ஏ.சி. பேருந்தில் 30 பேர் வீதம் என அழைத்து வரப்பட்டு அவர்களுக்கும் தங்குமிட வசதிகளோடு உணவு வழங்கப்படுகிறது. தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரை கொடுத்த 5000 பேரில் 1020 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும் சகல வசதிகள் செய்து தரப்பட்டு தங்க வைக்கப்படுகிறார்கள். அதைப் போலவேதான் இந்த மாநாட்டில் பங்கேற்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு 71 ரூபாய் மதிப்பு கொண்ட சாப்பாடை 30 ரூபாய்க்கு அளிக்கிறோம்.

லட்சக்கணக்கான மக்களின் தேவைக்காக குடிநீரும், நடமாடும் கழிப்பிட வண்டி வசதிகளும் தயாராகிவிட்டன. தமிழின் மகத்துவத்தை உணர்ந்து அனைத்து தமிழர்களும் பங்கேற்று சிறப்பிக்கும் இந்த மாநாட்டில் பங்கேற்கும் தமிழர்களுக்கு எந்தக் குறையும் இருக்காது என்பதை தெரிவுபடுத்தி விடுகிறோம்'' என்கிறார் பொறுப்பாய்.

""இப்படி எல்லா ஏற்பாடுகளும் மாநாட்டிற்காக நடந்துகொண்டிருக்கும் நிலையில் இவ்வளவு பேர் கூடும் மாநாட்டில் ஏதாவது அசம்பாவிதம் உண் டானால் சிகிச்சை அளிப்பதற்கென்றுதான் கோவை அரசு மருத்துவமனையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு சிறப்பு சிகிச்சைப் பிரிவை ஏற்படுத்தியிருக்கிறோம். அதில் இரவு பகலாக டாக்டர்ஸ் டீம் ஒன்று செயல்பட்டுக் கொண்டேயிருக்கும்.

அதுமட்டுமல்லாமல் ரயில் நிலையம், ஆர்.எஸ்.புரம் போன்ற முக்கிய 9 இடங்களில் எந்நேரமும் சிகிச்சைக்கான சகல வசதிகளோடு ஆம்புலன்ஸ்களை நிறுத்தி வைத்திருக்கிறோம். அதுபோக அவினாசி சாலையில் 8 ஆம்புலன்ஸ் களை நிறுத்தி வைத்திருக்கிறோம்.

மாநாட்டுப் பந்தலுக்கு முன்பு 2 ஆம்புலன்ஸ் களும் மாநாட்டுப் பந்தலுக்குள் அவசர சிகிச்சை யளிக்க என்று தனி அறையும் முன்னெச்சரிக்கை யாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது'' என்கிறார் செம்மொழி மாநாட்டு சுகாதாரக் குழுவின் உறுப் பினரும் கோவை அரசு மருத்துவமனையின் பொறுப்பு டீனுமான சிவப்பிரகாசம்.

இதேவேளையில் திருடர்களை கண்காணிக் கும் கேமராக்களை கோவையின் பிரதான சாலைகளெங்கும் பொருத்தியிருக்கிறது கோவை மாநகர காவல்துறை. சமீபத்தில் ரயில் தண்டவாளங் கள் தகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால் செம்மொழி மாநாட்டுக்கு இடையூறு செய்யவேண்டி சமூக விரோதிகள் முயலக்கூடும் என கருதுகிறது காவல்துறை.

அதனால் கோவை மாவட்ட எல்லைக்குட்பட்ட ரயில் தண்டவாளங்களில் ஒரு கி.மீட்டருக்கு ஒரு போலீஸ் என 24 மணி நேரமும் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

இதுபோக ஈழத்தமிழர் பிரச்சினையை முன்னிறுத்தி போஸ்டர்களும், மாநாட்டை எதிர்த்துத் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்படலாம் என்றும் போலீஸ் தரப்புக்கு தெரிய வந்திருப்பதால் அப்படி வெளியிடும் முக்கிய இயக்கங்களை வாட்ச் செய்துகொண்டும் இருக்கிறது போலீஸ் டீம்.

உலகத் தமிழர்களின் ஒற்றுமைகளை மேம்படுத்தவும், உலகின் அழியும் மொழிகளில் ஒன்றாக தமிழ் இருக்கிறதென்ற யுனெஸ்கோவின் அறிவிப்பை மூட்டை கட்டி ஒரு பாழுங் கிணற்றில் வீசவும் ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த தமிழ் செம்மொழி மாநாடு உபயோகப்பட வேண்டும் என்று உலகத் தமிழர்கள் வேண்டுவது உறுதியாய் நடக்கும்.



தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி 3 நாட்கள் நடைபெறும் கலை விழாவை 11 இடங்களில் துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்துவிட்டுப் போக... தமிழர்களின் பாரம்பரிய கலைகளை கோவைவாசிகள் கண்டு களிப்பதோடு இலவச உணவுத் திருவிழாவில் கலந்துகொண்டு குதூகலிக்கிறார்கள்.

வெறும் மொழிக்காக எதற்கு இவ்வளவு செலவும் ஆர்ப் பாட்டமும் செய்கிறார்கள் என்று தமிழக அரசு நிறுவனங்களில் பணியாற்றும் மலையாள அலுவலர்கள், கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழியைப் பற்றி விமர்சிக்கிறார்களாம். "தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடத்துவதற்கு முன், நடத்தியதற்கு பின்' -என இரண்டு வகையாகப் பிரிக்கலாம் என்கிறார்கள் கோவைவாசிகள். எங்கும் பளிச் சாலைகள், புதிய மின் விளக்குகள், பூங்காக்கள் என தற்போது மிளிரும் கோவைக்கு நிறைய திட்டங்கள் வகுத்திருப்பதும், கோவை அரசு மருத்துவமனையைப் பராமரிக்க 50 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியிருப்பதும் கோவை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பந்தலில் அமைக்கப் பட்டிருக்கும் உணவு அரங்கத்தை துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துவிட்டுப் பந்தலில் சாப்பிட... ஸ்டாலின், எ.வ.வேலு, கனி மொழி எம்.பி. ஆகியோர் அமர அல்வா, இட்லி, வடை, பொங்கல் என ஆளுக்கொரு பிளேட் கொடுக்கப்பட்டது. வாங்கிப் பார்த்த ஸ்டாலின் "என்னய்யா எடுத்தவுடனேயே அல்வா கொடுக்கறீங்க' என கிண்டல் செய்ய... மொத்தக் கூட்டமும் சிரிப்பலையில் மிதந்தது.

No comments:

Post a Comment