Saturday, June 26, 2010

தமிழச்சிகள் கற்பழிப்பு! -சிங்கள ராணுவம்...


shockan.blogspot.com

தடுப்பு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு லட்சம் ஈழத்தமிழர்களை அவர்களது வாழ் விடங்களில் குடியமர்த்தா மலும் அவர்களின் வாழ் வாதாரங்களுக்குத் தேவை யான அடிப்படை வசதிகளை செய்து தராம லும் வஞ்சித்து வருகிறார் மகிந்த ராஜபக்சே!

இத்தகைய துயரங்கள் ஒருபுறம் அதிகரித் துக்கொண்டிருக்க, மற்றொரு புறம் ஈழத்தமிழச்சி கள் மீது சிங்கள ராணுவத்தினர் நடத்திவரும் பாலியல் வன்முறைகள் ஜீரணிக்க முடியாத அதிர்ச்சிகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன.

கிளிநொச்சி நீதிமன்றத்தில் பதினைந்து தினங்களுக்கு முன் அடையாள அணி வகுப்பு ஒன்றை நடத்தினார் நீதிபதி சிவக்குமார். இந்த அணிவகுப்பில் 20-க்கும் மேற்பட்ட சிங்கள ராணுவத்தினர் நிறுத்தப்பட்டிருந்தனர். நீதிபதி சிவக்குமாரின் உத்தரவின் பேரில் 30 வயதான மேரி மார்க்கிரட்டும் 28 வயதான திருக்குமரியும் அழைத்து வரப்பட்டனர். அணிவகுப்பை உற்றுக் கவனித்த இரு வரும், தனுஷ்பிரிய ரத்ன நாயக, புஸ்ப குமர, பதிலமுடித்துவ பண்டார நாயகே, சாந்தசுபசிங்கே ஆகிய 4 சிங்கள ராணு வத்தினரை அடையாளங் காட்டினார்கள்.

இந்த 4 பேரையும் வவுனியா சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி சிவக் குமார், ""எந்தச் சூழலிலும் இவர்கள் தப்பி யோடி விடாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்'' என்று போலீஸை கடுமையாக எச்சரிக்கை செய்தார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட 4 சிங்கள ராணுவத்தினரும் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஏன், எதற்கு இந்த அடையாள அணிவகுப்பு?

கிளிநொச்சியில் உள்ள தமிழர்களை தொடர்பு கொண்டு பேசியபோது... ""வவுனியா தடுப்பு வதை முகாமிலிருந்து 2 குழந்தைகளுடன் வெளியே வந்த திருக்குமரி, தனது சொந்த ஊரான விசுவமடு பகுதிக்கு வந்தபோது, அவரது வீடு இருந்த இடம் சிங்களவர் களின் ஆக்ரமிப்பில் இருந்தது.

இதனால் தங்குவதற்கு இடமின்றி தவித்தார் திருக்குமரி. அங்கிருந்த தமிழர்களின் உதவியோடு ஓரிடத்தில் டெண்ட் அடித்து வசித்தார். தமிழர் பகுதிகள் முழுவதும் சிங்களமயமாக்கப் பட்டுவிட்டதால் எங்கு பார்த்தாலும் சிங்களர்களும் சிங்கள ராணு வத்தினருமே சுற்றித் திரிந்துகொண்டிருக்கிறார்கள்.

இரு வாரங்களுக்கு முன்பு இரவில் ரோந்து வந்துகொண்டிருந்த 2 சிங்கள ராணுவ காடைகள், திருக்குமரியின் டெண்டுக்குள் புகுந்து அவரை தாக்கி கற்பழித்திருக்கிறார்கள். அவர்களை எதிர்த்து திருக் குமரியால் போராட முடியவில்லை. கதறித் துடித் திருக்கிறார். அவரது கதறலைக் கேட்டு அந்த வழியாக சென்ற மேலும் 2 ராணுவத்தினர் வர... அவர்களும் திருக்குமரியை நாசப்படுத்தியுள்ளனர். தாயின் கதறலில் 2 குழந்தைகளும் விழித்துக்கொண்டு அழ... அந்த குழந்தைகளை அடித்து வெளியே கொண்டு வந்தான் ஒரு சிங்களவன். மற்ற மூன்றுபேரும் தங்கள் காரியத்தை முடித்துக்கொண்டு வெளியே வந்ததும் குழந்தைகளை உள்ளே கொண்டுபோய் விட்டுவிட்டுப் போய்விட்டனர். குற்றுயிரும் குலையுயிருமாக விடியும்வரை போராடிக் கொண்டிருந்தார் திருக்குமரி. மறுநாள் காலையில் இந்த சம்பவத்தை அறிந்து திருக்குமரியை ஹாஸ்பிட்டலில் சேர்த்தனர் அங்கிருந்த தமிழர்கள்.

இந்த சம்பவம் நடந்த இரண்டாம் நாள், இதே பகுதியைச் சேர்ந்த மேரி மார்க்கிரட்டையும் கொடூர மாக சீரழித்திருக்கிறார்கள் சிங்கள ராணுவத்தினர். இந்த இரண்டு சம்பவங்களும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த... ராணுவத்தின் பாலியல் வன்முறையை கண்டித்து கிளிநொச்சி நீதிமன்றத்தில் மனு போடப்பட்டது. இதன்மூலம் இரண்டு கொடூர சம்பவங்களையும் அறிந்து அதிர்ச்சியடைந்த நீதிபதி, அடையாள அணிவகுப்புக்கு உத்தரவிட்டார். அந்த அணிவகுப்பில்தான் பாதிக்கப்பட்ட 2 பெண்களும் தங்கள் மீது பாலியல் வன்முறை நடத்திய சிங்கள ராணுவத்தினரை அடையாளம் காட்டினர்'' என்று விவரித்தனர்.

இதேபோல மட்டக்களப்பு, அம்பாறை, வவுனியா, யாழ்ப் பாணம் பகுதிகளில் உள்ள பள்ளிக் கூடங்களில் படிக்கும் சிறுமிகள் கடத்தப்பட்டு கற்பழிக்கப்படும் கொடுமைகள் அதிகரித்து வரு கிறது.

""அம்பாறையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்துக்கொண் டிருந்த கமலினி, நந்தினி, தேன் மொழி ஆகியோர் பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும் பிக்கொண்டிருந்தனர். ஊரைவிட்டு தள்ளியிருந்தது இந்த சிறுமிகளின் வீடுகள். ஒற்றையடிப் பாதை வழியாக இவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த ராணுவ வாகனத்தில் இந்த மூவரும் கடத்தப்பட்டு வாகனத்திலேயே கற்பழிக்கப் பட்டார்கள். தங்கள் வேலை முடிந்ததும் கடத்தப்பட்ட இடத்திலேயே கொண்டு வந்து அவர்களை இறக்கிவிட்டுப் போனது ராணுவம்'' என்கிறார் அம் பாறை மாவட்ட மருத்துவமனை டாக்டர் ஒருவர்.

வவுனியா முதல்நிலைப் பள்ளி யில் 7-ம் வகுப்பு படித்துக்கொண்டி ருக்கும் தனது மகள் சாந்தியை அழைத்துச் செல்ல பள்ளிக்கூட வாச லில் காத்திருந்தார் மலர்விழி. அப்போது பள்ளியினுள்ளே இருந்து வந்த விக்ரமசிங்கே என்ற சிங்கள ராணுவத்தினன், மலர்விழியின் கையைப் பிடித்து இழுத்து வம்பு செய்ய... மலர்விழி கதறினார். பள்ளிக்கூடம் அருகே கடை வைத்திருந்த சிலர் ஓடிவந்து மலர்விழியை காப்பாற்றியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த விக்கிரமசிங்கே தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து நீட்டி, ""இன்னைக்கு நீ தப்பிச்சிருக்கலாம், நாளைக்கு என் நண்பர்களோடு வந்து உன்னை கடத்தறேன்'' என்று கூறிவிட்டுப் போயிருக் கிறான். அவனைப் பிடிக்க முடியாமல் நின்றிருக்கிறார்கள் தமிழர்கள். நடந்த சம்பவத்தை நினைத்து கதறித் துடித்த மலர்விழி, பள்ளிக் கூடத்திற்கு மகள் செல்வதை நிறுத்திவிட்டார்.

இப்படி பல்வேறு சம்பவங்கள் தினம் தினம் நடந்து கொண்டிருப்பதால் தமிழ்ப்பெண்கள் செத்துச் செத்துப் பிழைத்துக் கொண்டி ருக்கிறார்கள். தாய்மார்கள், இளம்பெண்கள், பள்ளிச் சிறுமிகள் என தமிழச்சிகளை குறி வைத்து பாலியல் வன்முறைகளை நடத்திக்கொண்டிருக்கிறது சிங்கள ராணுவம்.

No comments:

Post a Comment