Thursday, June 24, 2010

13 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை!


shockan.blogspot.com
தனியார் மருத் துவமனையொன்றில் பயிற்சி பெற வந்த ஒரு நர்ஸிங் மாணவி, தான் தங்கியிருந்த விடுதியில் தனக்குத் தானே பிரசவம் பார்த்து, குழந்தையைப் பெற்றெடுத்தாள். பின்னர் அக்குழந்தையை கேரிபேக்கைப் போட்டு அதை அவள் தூக்கி வீசப் பார்த்தபோது குழந்தையை ஓடிவந்து காப்பாற்றிய அவ்விடுதி காப்பாளரால் விஷயம் மருத்துவமனைக்கு சென்று, அந்த மாணவியும் குழந்தையும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

திருச்சி கல்லூரி ஒன்றில் படித்து வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவி ஒருத்தி... பாத்ரூமுக்குப் போய் தனக்குத்தானே பிரசவம் பார்த்துக்கொண்டு குழந்தை பெற்றுக்கொண்டதையும், அந்தக் குழந்தையை பை ஒன்றில் வைத்து தனது விடுதி அறையில் வைத்துவிட்டு... ஒன்றுமே தெரியாததுபோல் வகுப்பறையில் வந்து உட்கார்ந்ததையும் "பாத்ரூமில் பிரசவம்' என்ற தலைப்பில் கவலைக்குரிய செய்தியாகத் தந்திருந்தோம்.

இது கடந்த வருடம் நடந்த சம்பவம்.

தற்போது அதைவிட மோசமான சம்பவம் ராமநாதபுரத்தில் நடந்துள்ளது. இதனால் பெற்றோர்கள் பலர் அச்சத்தில் உள்ளனர். என்னதான் நடந்தது?

ராமநாதபுரத்தில் பாரம்பரியமான பெண்கள் பள்ளி, சி.எஸ்.ஐ. நிர்வாகத்தால் நடத்தப்படும் புனித ஆந்திரேயா மேல்நிலைப்பள்ளி. கண்டிப்புக்கும் ஒழுக்கத்துக்கும் பேர் பெற்ற பள்ளி. ராமநாதபுரத்துக்கு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த அந்த மாணவி பத்தாம் வகுப்பு படித்து வந்தாள். (மாணவியின் பெயர் வேண்டாமே).

கடந்த 14-ந் தேதி பள்ளி வளாகத்திலிருந்த பாத்ரூமுக்குப் போய்விட்டு வந்த அந்த மாணவியின் யூனிஃபார்ம் முழுவதும் ரத்தக்கறை. இருந்தும் அலட்டிக்கொள்ளாமல் அந்தக் கறையோடு வகுப்பறையில் வந்து உட்கார்ந்தாள். இதைக்கண்டு திகைத்த வகுப்பாசிரியை அவளுக்கு மாற்று உடை கொடுத்தார். பிறகு பள்ளித் தாளாளர் வழக்கறிஞர் மனோகரன் மார்ட்டினே சங்கடத்துடன் விவரிக்கிறார்.

""இந்தப் பகுதி மக்களுக்கே எங்க பள்ளியோட கட்டுப்பாடுகள் தெரியும். அந்தளவுக்கு மாணவிகளை ஒழுக்கத் தோடு உருவாக்கி வருகிறோம். இப்ப நடந்த சம்பவத்தால் ரொம்ப சங்கடமாப் போச்சு.

சம்பந்தப்பட்ட அந்த மாணவி ஒரு மாதிரியா வந்து க்ளாஸ்ல உட்கார்ந்தபோது டீச்சர்ஸ் விசாரிச்சிருக்காங்க. அந்தப் பொண்ணு எதுவும் சொல்லலை. சரி... மாதந்தோறும் பெண்கள் சந்திக்கிற பிரச்சினைன்னு நினைச்சு முதல்ல விட்டுட்டாங்க.

இந்த நிலையில் பாத்ரூம்ல குழந்தை அழற சத்தம் கேட்டு போய்ப் பார்த்தா... பிறந்த குழந்தை சீரிய ஸான நிலையில் கிடந்தது. உடனே குழந்தையை மீட்டு ஆஸ்பிட்டல்ல சேர்த்துட்டு அந்தப் பொண்ணுகிட்ட விசாரிச்சதுல, நான்தான் இதை பெத்தெடுத்தேன்னு ஒத்துக்கிடுச்சு. நஞ்சுக்கொடியைக்கூட கண்ணாடித் துண்டை வச்சு தனக்குத்தானே அறுத்திருக்கா. நினைக்கவே பயமா இருக்கு. என்ன செய்யுறோம்னு தெரிஞ்சு செஞ்சாளா, தெரியாமல் செஞ்சாளான்னு தெரியலை. இருந் தாலும் நாங்க அந்தப் பெண்ணோட எதிர்காலத்தை யோசிச்சி யார்கிட்டேயும் இதுபத்தி சொல்லாம அவங்க அம்மாவை வரவழைச்சு விஷயத்தைச் சொன்னோம். பொண்ணையும் குழந்தையையும் கூட்டிட்டு போயிடுங்கன்னு சொல்லிட்டோம்.

அந்தப் பொண்ணோட அப்பா வெளிநாட்டில் இருக்காரு. கிராமத்துல நடந்த முளைக்கொட்டு விழா நேரத்துலதான் தன் பொண்ணை ஊர்ல எவனோ இப்படி பண்ணியிருக்கான்னு அந்தம்மா அழறாங்க. ஆனா தைரியமா குழந்தை பெத்துப்போடத் தெரிஞ்ச அந்தப் பொண்ணு, தன்னை இந்த மாதிரி ஆக்கினது யாருங்கிறதை சொல்லவே மாட்டேங்குது. அதோட அந்த மாணவியை வீட்டுக்கு அழைச்சிட்டுப் போயிட்டாங்க. நாங்க எங்க டயோசிசனுக்கும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் தகவல் சொல்லிட்டோம்'' என்றார் அதிர்ச்சி விலகாமலே.

பள்ளியுடன் முடிந்துவிடும் என்று நினைத்த இந்த விஷயம் கொஞ்சம் கொஞ்சமாய் பரவி மாவட்டம் எங்கும் எதிரொலிக்க ஆரம்பித்துவிட்டது. இதைத்தொடர்ந்து முதன்மைக் கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன், விஷயத்தைத் தெரிவிக்காத பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறி மாவட்ட கல்வி அலுவலர் மூலம் விசாரணைக் குழுவையும் அமைத்தார்.

விசாரணைக் குழுவோ, "அந்த பள்ளிக்குள் எந்தத் தவறும் நடக்கவில்லை. அந்த மாணவிக்கு நடந்த கொடுமை அவளுடைய கிராமத்தில்தான் நடந்துள்ளது. சாதாரணமாக குண்டாக இருந்த அந்த மாணவி எட்டு, ஒன்பது மாத கர்ப்ப காலத்தில் கோடை விடுமுறையில் தன் வீட்டில்தான் இருந்திருக்கிறாள். அவள் குடும்பத்தினர்தான் கர்ப்பமான விஷயத்தைக் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறார்கள். பள்ளி மனிதாபிமான முறையில்தான் நடந்திருக்கிறது' என்று ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது.

நாம் அந்த மாணவியின் கிராமத்திற்குச் சென்றோம். ஆனால் ஊர்க்காரர்களோ அப்படியொரு சம்பவம் தங்கள் ஊரில் நடக்கவில்லை என்றும், சிலர் அந்தக் குடும்பம் ஊரை விட்டு வெளியூர் சென்றுவிட்டது என்றும் மாறி மாறிப் பேசி நம்மை அனுப்புவதிலேயே குறியாக இருந்தார்கள்.

கலெக்டர் பொறுப்பில் இருக்கும் டி.ஆர்.ஓ. பாலசுப்ரமணிய மோ... ""நடந்த சம்பவம் மோசமானது. அந்த மாணவியை நாசப் படுத்தியது யார் என்பதை விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். அவர்கள் விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள்'' என்றார்.

நம்மிடம் பேசிய ஆசிரியர் ஒருவர், ""அந்த மாணவியைக் கெடுத்தது யாரென்று அந்த ஊர்க்காரர்கள் கண்டுபிடித்து விட்டார்கள். மாணவியின் வீட்டிற்கு அருகில் வசித்த 60 வயது கிழவன்தான் மாணவியை வசப்படுத்தி அடிக்கடி அவளை பயன்படுத்தியிருக்கிறான். மிரட்சியில் இருந்த மாணவியோ தனக்கு நிகழ்ந்த கொடுமையை வெளியில் சொல்லாமல் மறைத்திருக்கிறாள். இந்த மாணவியின் அம்மா விவரமில்லாதவராக இருந்திருக்கிறார். தற்போது இந்தப் பிரச்சினையை போலீஸ் விசாரிப்பது தெரிஞ்சதும் அந்தக் கிழவன் எஸ்கேப் ஆயிட்டான். சம்பந்தப்பட்டவனை பிடித்து தண்டனை வாங்கிக்கொடுக்க தடையாக இருப்பவர்கள் அந்த ஊர்க்காரர்கள்தான்'' என்றார் வருத்தம் வழிய.

தொடரும் இதுபோன்ற சம்பவங்கள் பெற்றோர்கள் பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துக் கொண்டிருக்கிறது.

இதுபோன்ற கொடுமை களுக்கு முற்றுப்புள்ளி விழவேண்டு மானால் தவறு நேரும் முன்பே பெற்றோர்கள் விழிப்பாய் இருந்து தடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment