Saturday, June 26, 2010

வணிகர் சங்க கலாட்டா! -கிளம்பிய பகீர் புகார்!



shockan.blogspot.com

காலாவதியான உணவு தொடர்பான விவகாரமா? பெப்ஸி, கோக் போன்ற பன்னாட்டு பகாசூர குளிர்பான கம்பெனிகளுக்கு எதிராக சுதேசி பொருட்களை வாங்கச் சொல்லும் போராட்டமா? தமிழ் ஈழத்திற்காக உயிர் தியாகம் செய்த முத்துக் குமாரின் அஸ்தியை தமிழ்நாடெங்கும் எடுத்துச் சென்று பொதுமக்களை வழிபடச் செய்ய வைக்கும் யாத்திரையா? இப்படி பொதுமக்களின் நலனுக்காக வித்தியாசமான வடிவங்களில் செயல்பட்டு வந்த வெள்ளையன் தலைமையிலான தமிழ்நாடு வணிகர் பேரவை, இந்த வித்தியாசமான செயல்பாடுகளி னாலேயே உடையும் அபாயத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறது. இந்தச் சிக்க லின் எதிரொலியாக அதன் நிர்வாகி ஒருவரையே அடி யாட்களை வைத்து கொலை முயற்சி செய்யும் அளவிற்கு இரு பிரிவுகளாகப் பிரிந்து மோதிக்கொண்டிருக்கிறார் கள்.

காஞ்சிபுரம் மாவட்ட வணிகர் பேரவை நிர்வாகியான அமல்ராஜ்தான் கொலை முயற் சிக்குள்ளான அந்த நிர்வாகி. ஜூன் 20-ந் தேதி நடந்த அந்த சம்பவத்தைப் பற்றிக் கேட் டால் இப் பொழுதும் பதட்டத் துடனேயே பேசுகிறார்.

""அன்றைய தினம் எனது கடைக்கு வந்த ஒரு இளைஞன் சடாரென என் காலில் விழுந்தான். ராவணன் மளிகைப் பொருள் மொத்த விற்பனைக் கம்பெனியின் ஆட்கள் வந்து தனது கடை முன் தகராறு செய்கிறார்கள், என்னைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சினான். அவனுடன் பைக்கில் சென்ற என்னை தாம்பரம் பக்கத்திலுள்ள ஒரு மாந்தோப்பு வழியாக ஒரு குளக் கரைக்குக் கொண்டு சென்றான். அங்கு நின்ற நான்குபேர் எனது சட்டையின் காலரை பிடித்து இழுத்து கத்தியால் வெட்ட வந்தார்கள். அவர்களிடமிருந்து தப்பித்த நான் ஓடிப்போய் அருகேயிருந்த பிளாஸ்டிக் கம்பெனிக்குள் புகுந்து அதன் ஷட்டரை மூடி தப்பினேன். இதுவரை எனக்கு இதுபோன்ற சங்கடம் வந்ததில்லை. இப்பொழுது வணிகர் சங்கத்தில் நிர்வாகி கள் மத்தியில் ஒரு பெரும் குழப்பம் நிலவு கிறது. தலைவராக உள்ள வெள்ளையன் என்னை காஞ்சி மாவட்ட நிர்வாகப் பொறுப்பிலிருந்து நீக்குவதாக ஒரு அறிக்கை வெளியிட்டார். பொதுச்செயலாளரான மோகன், "வெள்ளையன் போட்ட உத்தரவு செல்லாது' என அறிவித்துவிட்டார். இந்த சூழ்நிலையில்தான் என்மீது தாக்குதல் நடத்த முயற்சித்திருக்கிறார்கள். இதற்கும் வணிகர் சங்கத்தில் நிலவும் குழப்பத்திற்கும் நிச்சயம் தொடர்பு உண்டு'' என்றார்.

வணிகர் பேரவையில் என்ன குழப்பம் என அதன் பொதுச்செயலாளரான மோகனிடமும் விக்கிரமராஜாவிடமும் கேட்டோம். "" 1986-ல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வணிகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது அப்பாதுரை என்பவர்தான் இந்தப் பேரவையை உருவாக்கினார். கடந்த ஜெ. ஆட்சியில் 1992-ம் ஆண்டு தொழில்வரிக்கு எதிராக மாநிலம் முழுவதும் பேரவை போராட்டம் நடத்தியபோது வெள்ளையன் பெரம்பூர் வணிகர் சங்கத் தலைவராக இருந்தார். கேரளா போன்ற மாநிலங்களில் வணிகர்கள் மிகவும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். அதுபோல வணிகர்களை ஒற்றுமைப்படுத்த வேண்டும் என வெள்ளையன் சொன்னபோது ஆகா என்று அவரை தலைவராக்கினோம். அவர் புகழ் கூட ஆரம்பித்தது. பேரவையும் வளர்ந்தது. எனக்காகத்தான் சங்கம், என் போட்டோவைப் போட்டால்தான் மரியாதை என பேரவை நிர்வாகிகளை மதிக்காமல் செயல்பட ஆரம்பித்தார். திடீரென்று கடந்த சட்டமன்றத் தேர்தலில் பேரவை நிர்வாகிகளை போட்டியிட உத்தரவிட்டார். பெப்ஸி, கோக் விற்கக்கூடாது என தீர்மானம் போட்டார். பெப்ஸி, கோக் இல்லாமல் இன்று தமிழகத்தில் யாராவது குளிர்பானக்கடை நடத்திவிட முடியுமா? திடீரென்று ஈழப் பிரச்சினைக்காக உயிர்நீத்த முத்துக்குமாரின் அஸ்தியை எடுத்து தமிழகம் முழுவதும் ஊர்வலம் போனார். இதற்கும் வியாபாரிகளுக்கும் என்ன தொடர்பு.

இறுதியாக தமிழக அரசு அதிகாரிகள் தமிழகம் முழுவதும் காலாவதியான உணவுப் பொருட்களை விற்கிறார்கள் என வணிகர்கள் மீது நடவடிக்கை எடுத்தபோது... வெள்ளையன் அதை எதிர்த்து ஒரு போராட்டம் மட்டும் நடத்திவிட்டு போய்விட்டார். அரசு அதிகாரிகளின் நடவடிக்கை வியாபாரிகள் மீது தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. இறுதியாக எங்களைப் போன்றவர்கள் தமிழக அரசுடன் பேச்சு நடத்தி வியாபாரிகளைப் பாதுகாத் தோம். வியாபாரிகள் எங்கள் பேரவையிலிருந்து விலகிச் சென்றுகொண்டிருக்கிறார்கள். அதை நாங்கள் தடுத்து நிறுத்திக் கொண்டிருக் கிறோம். எங்களை வெள்ளையன் கடுமையாக எதிர்க்கிறார். அதனால் பேரவையின் பொதுக் குழுவைக் கூட்ட முடிவு செய்துள்ளோம். அதுதான் குழப்பம்'' என்கிறார்கள் மோகனும் விக்கிரமராஜாவும்.
இது என்ன கலாட்டா என வெள்ளை யனை கேட்டோம்.

""நான் தலைவராக இருப்பதால் -நான் பிரபலமடைந்து வருகிறேன் என்பதால் என்னுடன் இருப்பவர்கள் தாங்கள் தலைவராக ஆக விரும்புகிறார்கள். அதற்காக பவர் பாலிடிக்ஸ் செய்கிறார்கள். இதனால் எங்கள் சங்கம் உடையாது. சட்டமன்றத் தேர்தலில் போட்டி யிடுவது, பெப்ஸி, கோக்குக்கு எதிராக போராட் டம் உட்பட அனைத்து முடிவுகளையும் என்மீது குற்றம் சுமத்தும் இந்த நிர்வாகிகள் அடங்கிய மாநில நிர்வாகக் குழுவில் ஆலோசனை நடத்திய பிறகே எடுக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகி அமல்ராஜ் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

No comments:

Post a Comment