Thursday, June 24, 2010

யுத்தம் 64 -நக்கீரன் கோபால்



""அதோ பாரக்கா...'' என்ற கமெண்ட் டுடன் வெளியான அந்தப் படத்தை நாம் எங்கிருந்தும் எடுக்கவில்லை. ஜெ.வும் சசிகலாவும் சேர்ந் திருக்கும் அந்தப் படம் போயஸ் கார்டன் வழி யாகத்தான் நமக்கு வந்தது. தோட்டத்துச் சுவரில் உள்ள ஓட்டையை அடைக்காமல், போட்டோ கிராபர்களையும் லேப் டெக்னீ ஷியன்களையும் அள்ளிக் கொண்டு வந்து சகட்டுமேனிக்குத் தாக்கி யிருக்கிறார்கள்.

ஊட்டியில் உள்ள அனைத்து ஸ்டுடியோக்களுக்கும் 6 நாட்கள் லீவு விடச் சொல்லியும், ""ஓய்வு என்ற பெய ரில் மேற்கொண்ட டீலிங் விசிட் பற்றிய ரகசியங்கள் வெளியாகிவிட்டதே'' என்ற கோபத் துடன்தான், ""மீசை வச்சிருக்கிற ஆளை அடிச்சிட்டு வா'' என்று ஆட்டோவில் ஆட்களை அனுப்பியிருக்கிறார்கள். பெரிய மீசை வைத்திருப்பது அப்போது இருந்த ஆட்சியாளர்களை மிரளவைத்ததுடன், பழிவாங்கும் வெறியையும் தூண்டியதென்றால், அது பலருக்கு இன்ஸ் பிரேஷனாகவும் இருந்திருக்கிறது.

"தேவர் மகன்' படம் வெளி யாகியிருந்த நேரம். நடிகர் திலகம் சிவாஜி சாரும், கமலும் பெரிய மீசையுடன் அப்பா- மகனாக நடித்திருந்தார் கள். சிவாஜி சார் எத் தனையோ கெட்டப்புகள் போட்டு வித விதமான மீசை வைத்தவர். கமல் இந்த மாதிரி மீசை வைத்திருப்பது அதுதான் முதல் முறை. தென்மாவட் டத்துக்காரர்களுக்கேயுரிய கம்பீர மீசையுடன் பரமக்குடிக் காரரான கமல் அந்தப் படத்தில் நடித்திருந்தார். அந்த சமயத் தில், குமுதம் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில், "இந்த மீசையை எப்படி செலக்ட் செய் தீர்கள்' என்ற கேள்வி கேட்கப்பட, தனக்கு இன்ஸ் பிரேஷனாக இருந்த பல மீசைகளில் என்னுடைய மீசையும் ஒன்று என்றும் அவர் சொல்லி யிருக்கிறார். வண்ணத்திரை என்ற பத்திரிகையிலும் அப்போது ஆசிரியராக பணியில் இருந்த ரெகோ வும் இதை செய்தியாக்கி இருந்தார்.

சன் டி.வி.யில் நேருக்கு நேர் நிகழ்ச்சி. என்னை பேட்டி எடுத்துக் கொண்டிருக்கிறார் ரபி பெர்னாட். (ரபி பெர்னாட் அப்போது சன் டி.வி.யில் பணியாற்றினார்.) அவர் என்னிடம் கேட்ட கேள்விகளில் ஒன்று, இந்த மீசையைப் பற்றியது. "தேவர் மகனில் கமலுக்கு உங்க மீசைதான் இன்ஸ்பிரேஷனாமே?' என்றார்.

""சார்... கமல் ரொம்ப ஜீனியஸ். ஒரு கேரக்டருக்காக அவர் எவ் வளவோ பாடுபட்டு நடிக்கிறார். அதற்கான மேக்கப், கெட்டப், காஸ்ட்யூம் என்று பல இடங்களிலும் தேடுகிறார். அவருக்கு எவ்வளவோ விஷயங்கள் கிடைக்கும். அப்படிப்பட்டவர், தன்னுடைய மீசைக்கு நானும் இன்ஸ்பிரேஷன் என்று சொல்லியிருக்காருன்னா அது அவரோட பெருந்தன்மை. அவர் அப்படி சொன்னதுக்காக, நான் உடனே... கமல் என்னோட மீசையைத்தான் வச்சிருக்காருன்னு சொல்ல மாட்டேன். இதை எங்க ஊரு பக்கம் போய் சொல்ல முடியாது. சொன்னா விளக்குமாறு பிஞ்சு போகும். ஊருல ரோட் டோரக் கடையில முட்டை புரோட்டா அடிக்கிறவரு, மூட்டை தூக்கு றவங்க, முள்ளுவெட்டுறவங்க, டிரைவரு, கண்டக்டரு, வயல்ல கலப் பைய பிடிச்சு ஏர் ஓட்டுறவங்க எல்லாரும் இதே மாதிரிதான் மீசை வச்சிருப்பாங்க.

என்னைப் பார்த்துதான் கமலே மீசை வச்சாருன்னு சொன்னா, அவங்க பதிலுக்கு, "யேய் இங்க வா... நீயே எங்களைப் பார்த்துதான் மீசை வச்சிக்கிட்டு பட்டணத்திலே இருக்கே... கமல் வச்சிருக்கிறது உன்னோட மீசையா'ன்னு கேட்டு அங்கேயே வச்சு வெட்டுவாங்க. அதனால தேவர் மகனில் கமல் வைத்த மீசைக்கு நான் உரிமை கொண் டாட முடியாது. அதற்கான காப்பிரைட் எங்க தென்மாவட்ட மக்கள் கிட்டே இருக்குதுன்னு சொன்னேன். ரபி பெர்னாட் அதை ரசித்தார்.





கமலைப் பற்றிய கேள்வி முடிந்ததும், ரஜினி சம்பந்தமான கேள்விக்குச் சென்றார் ரபி பெர்னாட்.

""ரஜினி உங்க நண்பரா?''

""ஆமா... கிளிண்டனும், பிரதமரும், ஜனாதிபதியும் என் நண்பர்கள்தான்...''

""சார்... நான் சீரியஸா கேட்கிறேன்...''

""நானும் சீரியஸாகத்தாங்க சொல்றேன். நான் அவருக்கு நண்பர் என்று ரஜினிதாங்க சொல்லணும். நான் சொல்லக் கூடாது'' என்றேன்.

""ஏன்?''

""அவர் இப்ப படுபிஸியா இருக்கார். அவரை நண்பர்னு சொல்லிக்கொள்ள எல்லோருக்கும் ஆசை இருக்கும். ஆனா, அவர் தானே தன்னோட நண்பர்கள் யாருன்னு சொல்ல முடியும். அதனால, என்னை அவர் தன்னோட நண்பர்னு சொன்னாருன்னா அதுதான் சரியா இருக்கும். நான் பாட்டுக்கு ரஜினி எனக்கு நண்பர்னு சொன்னா... நான் ரோட்டுல போகும்போது... "அந்தா போறான் பாரு இவன் எல்லோரையும் நண்பன்னு சொல்லி ஒரே பீத்து பீத்திக்கு வான்' என்று நக்கலடிக்க மாட்டாங்களா?'' என்றேன்.

-ரபி பெர்னாட் இதுக்கும் சிரித்தார்.

இந்த நேருக்கு நேர் நிகழ்ச்சி சன் டி.வி.யில் ஒளிபரப்பான அன்று இரவு ரஜினி லைனில் வந்தார்.

""நண்பா... அதுக்காக இப்படி என்ன கேவலப்படுத்தக் கூடாது'' என்று அன்போடு பேச ஆரம்பித்தவர், நேருக்கு நேர் நிகழ்ச்சியை முழுமையாகப் பார்த்ததாகவும், ரொம்ப நேச்சுரலா பேசிய தாகவும் பாராட்டினார். அவரைப் பற்றி நான் சொன் னதைக் குறிப்பிட்டு, ""கரெக்ட்.. கரெக்ட்.. எஸ்... எஸ்... நான்தானே சொல்லணும், நேரம் வரும்போது நிச்சயமா சொல்வேன்'' என்று தன் பாணியில் சொன்னவர், மீசை யின் பின்னணி பற்றி நான் சொன் னதையும் ரசித்ததாக சொன்னார். பின்னாளில் பெங்களூரில் கர்நாடக சி.எம்.மை பார்க்க எனக்கு துணையாக வந்தபோது எஸ்.எம்.கிருஷ்ணா விடமும், ராஜ்குமார் குடும்பத்திடமும் என்னை ""என் நண்பர் கோபால்'' என்று அறிமுகப்படுத்தி விட்டு, "கோபால் நான் சொன்னேன் னில்ல நேரம் வரும்போது சொல் றேன்'னு என்றார்.

இந்த மீசைதானே போலீசின் சந்தேக கேள்விகளை அதிகப்படுத்திக் கொண்டிருக் கிறது. என் மீதான விசாரணைக் கானக் கேள்விகளை தயாரிக்கும் குழுவுக்குத் தலைமை தாங்கும் தேவாரமும் பெரிய மீசைதான் வைத்திருக்கிறார். வீரப்பன் இன்ஸ் பிரேஷனில்தான் அவரும் மீசை வைத்தாரா என்று யாரும் கேட்பதில்லை. கேட்டா சுட்ரு வார்.

டி.எஸ்.பி. நாகராஜனும் அவரது டீமும் என்னைச் சுற்றி யிருந்தது. மீசை பின்னணி பற்றிய கேள்விகளைத் தொடர்ந்து, ரஜினி பற்றிய கேள்விக்கு வந் தார் டி.எஸ்.பி. வீரப்பனோடு முடிச்சுப் போட்டு மீசை வரைக்கும் போனவர் கள், ரஜினி யோடு முடிச்சுப் போடுவதன் நோக்கம் புரிந்தது.
""ராஜ்குமார் கடத்தலில் ரஜினியோட பங்கு என்ன?'' -டி.எஸ்.பி. கேட்டார்.

""ரஜினி கர்நாடக மாநிலத்துக்காரர். தமிழ்ப் படங்களில் நடித்து தமிழர்களின் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். தனது மாநிலத்தைச் சேர்ந்த மூத்த நடிகரைக் கடத்தியிருப்பவர் ஒரு தமிழர் என்பதால், இரண்டு மாநிலங்களிலும் சிக்கல்கள் ஏற்படுமே என்று யோசித்தார். என் மீது அவருக்கு நம்பிக்கை உண்டு. அதனால், அவர் என்னிடம் ராஜ்குமாரை மீட்டுத்தரணும்னு சொன்னார். நான் பல முறை உங்ககிட்டே சொல் லிட்டேன். கலைஞர், சிவாஜிசார், ரஜினி சார், சின்னக்குத்தூசி அய்யா இவங்க வலியுறுத்திய தாலதான் நக்கீரன் இந்த மிஷனில் இறங்கியது.''

""சரி.. ரஜினிக்கு வேற என்ன பங்கு இருக்குது?''

""ராஜ்குமாரை பத்திரமா மீட்கணும்ங்கிற அக்கறையோடு இரண்டு மாநில முதல்வர்கள் கிட்டேயும் அவர் பேசினார். ராஜ்குமார் குடும் பத்தினருக்கு தைரியம் கொடுத்தார். கர்நாடகா வில் பதட்டத்தையும் சந்தேகத்தையும் தணிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பா கலைஞர் என்னை கர்நாடக முதல்வரையும், ராஜ்குமார் குடும்பத்தாரையும் சந்திக்க அனுப்பினாங்க. உடன் ரஜினியும் வந்தார் எனக்கு உதவியாக.''

""இன்னும் வேற என்ன பங்கு இருக்கு?''

""என்ன கேட்குறீங்க?''

""நான் என்ன கேட்குறேன்னா..'' என்ற டி.எஸ்.பி. நாகராஜன், அதன் பின்னர் சொன்ன விவரங்கள் ரொம்பவும் முக்கியமானவை.

""1994-ல் டி.எஸ்.பி. சிதம்பரநாதனை வீரப் பன் கடத்தினான். அதற்கடுத்த வருசம், 1995-ல் அந்தியூர் ரேஞ்சர்ஸ் மூணு பேரைக் கடத்தி னான். அவங்களை உயிரோடு மீட்கணும்ங்கிற துக்காக அரசாங்கத்தின் தரப்பில் தூது முயற்சி நடந்தது. எல்லாப் பத்திரிகையிலும் அந்த நியூஸ் வந்தது. அரசாங்கத்துக்கு வீரப்பன் கோரிக்கை வச்சான். தன்னோட கோரிக்கையை நிறைவேத் தினாதான் 3 ரேஞ்சர்களையும் விடுவிப்பேன்னு சொன்னான். அவனோட கோரிக்கை என்னன்னா, ஆஜானுபாகுவான ஒரு ஆளை செலக்ட் பண்ணனும். அவன் சிவப்பு சட்டை போட் டிருக்கணும். சிவப்பு கலரில் மாலை போட் டிருக்கணும். சிவப்பு நிற புல்லட்டில் வரணும்னு சொல்லியிருந்தான். சும்மா வரச்சொல்லலை... 3 கோடி கேட்டிருந்தான்.

அவன் கேட்டமாதிரியே ஒரு ஆஜானு பாகுவான ஒரு ஆளைப் பிடிச்சி, சிவப்பு சட்டை, சிவப்பு மாலையோடு, சிவப்பு புல்லட்டில் முதல் தவணையா 3 லட்ச ரூபாய் பணத்தோடு அனுப்பி வைச்சது அப்போ இருந்த அரசாங்கம். அந்த தூதர் காட்டுக்குள்ளே போய், வீரப்பன் அடை யாளம் சொல்லியிருந்த இடத்துக்கிட்டே நின்னு கொடுத்ததுக்கப்புறம்தான் 3 ரேஞ்சர் களையும் மீட்க முடிந்தது. அதுமாதிரி, ராஜ்குமாரை மீட்கிற முயற்சியில் ரஜினியோட பங்கு என்னன்னு கேட்கிறேன்'' -என்றார் டி.எஸ்.பி. நாகராஜன்.

புரிந்துவிட்டது. ரஜினியை வைத்து போலீ சார் கொக்கிப் போடுகிறார்கள். ""சார்... நீங்க சொல்றமாதிரியான பங்கு எதுவும் ரஜினிக்கு கிடையாது. அவரோட நோக்கம், ராஜ்குமார் நல்லபடியா வரணும்ங்கிறதுதான்''.

அன்றைய விசாரணை முடிந்தது. வெளியே வந்தபிறகு பத்திரிகையாளர்களை வழக்கம் போல் சந்தித்தேன். விசாரணை விவரங்களைக் கேட்டார்கள்.

ஒரு பெரிய செய்தி... ""ஜெயலலிதா ஆட்சியில் (1995) வீரப்பனுக்கு பணம் கொடுத்தோம்னு போலீஸ் அதிகாரியே வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். விசா ரணையை வீடியோ பதிவு செய்யும் கேமரா வில் அது அப்படியே பதிவாகியிருக்கிறது'' என்றேன்.

அடுத்தநாள் வெளியான பத்திரிகை களில், வீரப்பனுக்கு ஜெ அரசு பணம் கொடுத்ததுதான் பரபரப்பு செய்தியாக இடம்பிடித்தது. அதிர்ந்துபோனது காவல்துறை. அந்த அதிர்ச்சி... அடுத்த நாள் விசாரணையில் வெளிப்பட்டது படுபயங்கரமாக..

-யுத்தம் தொடரும்

No comments:

Post a Comment