Thursday, June 24, 2010

""எங்களின் எதிர்காலம்''! மாணவர்களின் கவலை!


shockan.blogspot.com

சர்வதேச அளவில் புகழ் பெற்ற சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை சத்த மில்லாமல் ஒருமைப் பல் கலைக்கழகமாக அரசு மாற்றியிருக்கும் விவ காரம், தற்போது பொறியியல் கல்லூரி மாணவர்களிடமும் மாணவ அமைப்பு களிடமும் கவலை யையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன.

நடந்து முடிந்த சட்டமன்ற கூட் டத்தொடரில், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தை ஒருமைப் பல்கலைக்கழகமாக மாற்றி அமைக் கும் சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றினார் உயர் கல்வி அமைச்சர் பொன்முடி. இதன் மூலம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரி களை தனியாகப் பிரித்து சென்னை அண்ணா தொழில் நுட்ப பல்கலைக்கழகம் என புதிதாக ஒரு பல்கலைக் கழகத்தை சென்னை தரமணியில் உருவாக்குகிறது அரசு.

இந்த புதிய சட்டம் மாணவர்களிடம் சர்ச்சையை உருவாக்கியிருக்கும் நிலையில், இந்திய கம்யூனிஸ்டின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் பெருமன்றத் தின் நிர்வாக கமிட்டி உறுப்பினர் திரு மலை,’’""இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக் கழகமான சென்னை அண்ணா பல்கலைக்கழகம், பொறியியல் கல்வியில் சர்வதேச அளவில் பெருமை கொண்டது. இப்பல்கலைக்கழகத்தில் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் உறுப்பு கல்லூரிகளாக இருக்கின்றன. இதிலிருந்து வருஷத்திற்கு சுமார் 25 ஆயிரம் மாணவ-மாணவியர் கள் படித்துவிட்டு வெளியே வருகிறார் கள். இவர்கள் அனைவருக்கும் சென்னை அண்ணா பல்கலைக் கழகம் என்கிற சான்றிதழ் கொடுக்கப் படும்.

ஒரு மாணவன் திறமை யுள்ளவன் என்பதை நிரூபிக்க இந்த சான்றிதழே போதும். அண்ணா பல்கலைக் கழகத்தை ஒருமைப் பல்கலைக் கழகமாக மாற்றி, அதன் உறுப்புக் கல்லூரிகளை தனியாக பிரித்து அதற்காக சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்று புதிதாக உருவாக்குவதன் மூலம் மாணவனின் சான்றிதழ் தகுதி பல வீனமாகிவிடுகிறது. அதாவது, அண்ணா பல்கலைக்கழகத்தில் உறுப்பு கல்லூரி களாக இருக்கும் கிண்டி பொறியியல் கல்லூரி, எம்.ஐ.டி., ஏ.சி. டெக் மற்றும் ஆர்க்கிடெக் கல்லூரிகளைத் தவிர மற்ற பொறியியல் கல்லூரிகள் அனைத்தையும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து பிரித்து புதிதாக உருவாகும் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத் தோடு இணைத்துவிடுகிறார்கள்.

இதனால் இந்த கல்லூரிகளில் படித்து முடித்து வெளியே வரும் மாணவ- மாணவியர்களுக்கு இனி அண்ணா பல்கலைக் கழகத் தின் சான்றிதழ் வழங்கப் படாது, மாறாக அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்றே சான்றிதழ் கிடைக்கும். உயர்கல்விக்காக அல்லது வேலைக்காக மேலை நாடுகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு இது தடையை ஏற்படுத்தலாம். அதனால் மாணவர்களின் தகுதியை குறைக்கும் இந்த புதிய சட்டத்தை திரும்ப பெறுவது அவசியம். இது குறித்து அரசின் கவனத் திற்கு கொண்டு போக முடிவு செய்திருக்கிறோம்'' என்கிறார்.




இந்த மாற்றம் குறித்து உயர்கல்வித் துறை வட்டாரங் களில்விசாரித்த போது,’""அண்ணா பல்கலைக் கழகத்தை ஒருமைப் பல் கலைக்கழகமாக மாற்றி அமைக்கப்பட்டதின் பின் புலமாக இருந்தவர்கள் அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர்களான அனந்தகிருஷ்ணன், குழந்தைசாமி ஆகியோர்தான்''’என்கிறார்கள்.

இந்நிலையில், அனந்தகிருஷ்ணனை தொடர்பு கொண்டு இப்பிரச்சினை குறித்து பேசிய போது,’’""பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் அதன் சார்ந்த அறிவியல்துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்பு கள் வழங்குவதுடன் பல்வேறு ஆராய்ச்சிகளையும் மேற்கொள்கிறது அண்ணா பல்கலைக்கழகம். இப்பல் கலைக் கழகத்தோடு இணைந்துள்ள அரசு மற்றும் தனி யார் பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை, தேர்வுகள், கல்லூரிகளில் ஆய்வு மேற்கொள் ளுதல் போன்ற பல்வேறு பணிச்சுமைகள் அதிகரித்த தால் கற்பித்தல் பணியும் ஆராய்ச்சி பணிகளும் முழு வீச்சில் நடைபெறவில்லை. அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் அறிவியல் வளர்ச்சிக்கேற்ப பொறி யியல் கண்டுபிடிப்புகளிலும், ஆராய்ச்சிகளிலும் அண்ணா பல்கலைக்கழகமும் வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. காரணம் பல்கலைக்கழகத்திற்கான நிர்வாகச் சுமைகள்தான். அதனால்தான் முதல்வரை சந்தித்து இந்த பல்கலைக் கழகத்தை ஒருமைப் பல்கலைக்கழகமாக மாற்றினால் தான் ஆராய்ச்சிப்பணிகளில் அண்ணாபல்கலைக்கழகம் கடந்த காலங்களைப்போல வளர்ச்சியடைய முடியும் என்று வலியுறுத்தினோம்.

மாணவர்களின் தகுதி என்பது சொந்த முயற்சி யாக இருக்க வேண்டும். பல்கலைக் கழகத்தை சார்ந்து இருக்கக்கூடாது. அவர்களின் திறமையும் ஆற்றலும் தான் பெருமைகொள்ள பேசப்பட வேண்டுமே ஒழிய அந்த மாணவன் சார்ந்த கல்லூரி மூலம் இருக்கக் கூடாது. ஒரு மாணவனுக்கு திறமையும் ஆற்றலும் இருக்குமேயானால் அண்ணா தொழில் நுட்ப கல்லூரி மூலமும் அவனுக்கு பெருமை கிடைக்கும். அண்ணா பல்கலைக் கழகத்தில் இனி ஆராய்ச்சி பணிகள் முழு வீச்சில் நடக்கும். அதேசமயம் சிலபல வழிகளில் பணம் வரும் பாதை அடைக்கப்பட்டு விட்டதால் எழுந்த அதிர்ச்சியில் சிலர் இப் படி புரளி கிளப்புகிறார்கள், அவ்வளவு தான்'' என்கிறார்.

மாணவர்களின் பிரச்சினைக்காக தேசிய அளவில் போராடும் அகில பாரத வித்யார்த்தி பரிஷத்தின் அமைப்பு செயலாளர் சந்தீப்,’’""நிர் வாகச் சுமைகளால்தான் ஆராய்ச்சிப் பணிகள் தடைபடுவதாக சொல்வது ஏற்புடையதாகத் தெரியவில்லை. காரணம், நிர்வாக பணிச் சுமைகள் அதிகமிருப் பதைக் காட்டித்தான் அண்ணா பல் கலைக் கழகத்தை 2007-ல் சென்னை அண்ணா, திருச்சிஅண்ணா, கோவை அண்ணா என்று பிரித்தார்கள். அப்படிப் பட்ட நிலையில் ஆராய்ச் சிப்பணிகள் வளர்ச்சி யடைந்திருக்க வேண்டும். ஆனால் இல்லையே? மாறாக கரப்ஷன்தான் அதிகரித்தது. பிரிப்பதினால் ஆராய்ச்சிகள் அதிகரிக்கும், புதிய கண்டுபிடிப்புகள் பெரு கும் என்பதிலெல்லாம் நம்பிக்கையில்லை. மொத்தத்தில் இந்த பிரிப்பு வேலைகளால் மாணவர்களின் தகுதி எதிர்காலம் பாதிக்கப்படும்''’’என்கிறார்.

இதுகுறித்து முதல்வர்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப் பே மாணவர்களிடத்தில் எதிரொலிக்கிறது.

No comments:

Post a Comment