Thursday, June 24, 2010

முதியவனுக்கு வந்த சபலம்!



shockan.blogspot.com

முதியவர்கள், எல்லா வகையிலும் மாணவிகளுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையை நாசம் செய்திருக்கிறார் இந்த 70 வயது தாளாளர்.

மலைகளின் இளவரசியான கொடைக் கானலில், 300-க்கும் அதிகமான மாணவ- மாணவிகள் பயிலும் கே.பி.எஸ். (கொடைக் கானல் பப்ளிக் ஸ்கூல்) பள்ளியின் தாளாளர் 70 வயதைத் தாண்டிய பிரைட்.

பிரைட்டின் கெஸ்ட் ஹவுஸில் வலுக்கட்டாயமாக தங்க வைக்கப்பட்டிருந்த 10-ஆம் வகுப்பு ஏழை மாணவி கர்த்தவ்யா, தனது உறவினரான ஏற்காடு சி.எஸ்.ஐ. சர்ச் பாதிரியார் சார்லஸ் சாமுராஜுக்கு போன் செய்தாள்.

""அங்கிள்... வார்டன் ரத்தினம் செல் ஃபோன்ல பேசுறேன்... கரஸ்பாண்டண்ட் பிரைட் சார்... ரொம்ப அசிங்கமா... ஆபாசமா நடத்து கிறார். செக்ஸ் டார்ச்சர் பண்றார்... ப்ளீஸ் அங்கிள் உடனே வந்து என்னை கூட்டிட்டுப் போயிடுங்க. இல்லைனா... செத்துப் போயிடுவேன் அங்கிள்!'' கதறினாள் கர்த்தவ்யா.

கொடைக்கானல் பப்ளிக் ஸ்கூலுக்கு காரமடை, கன்னிவாடி, கோத்தகிரியிலும் பள்ளிக்கூட கிளைகள் உள்ளன. காரமடைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு வரை படித்த கர்த் தவ்யாவை, கூட்டி வந்து இந்த கே.பி.எஸ்.சில் சேர்த்திருந்தார் சார்லஸ் சாமுராஜ்.

""என் மனைவியின் சொந்தக்கார மாணவி இந்த கர்த்தவ்யா. ரொம்ப ஏழ்மையான குடும்பம். ஏழை மாணவிகளை மிகக் குறைந்த கட்டணத்தில் கே.பி.எஸ். பள்ளியில் பிரைட் சேர்த்துக் கொள்கிறார் என்று ஃபாதர் கிறிஸ் டோபர் சொன்னார். அதனால்... அங்கு 9-ஆம் வகுப்பில் சேர்த்தேன். ஹாஸ்டலில் தங்க வைத்தார். மாதா மாதம் 500 ரூபாயை தவறாமல் செலுத்திக் கொண்டிருந்தேன். திடீரென்று கர்த்தவ்யா எனக்குப் போன் செய்து பதட்டத்தோடு சொன்னதும் உடனே கொடைக்கானல் போனேன்.... அந்த 70 வயதுப் பெரியவர் நடந்து கொண்ட விதத்தை நீங்களே கர்த்தவ்யாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!'' கர்த்தவ்யாவை நம்முன் நிறுத்தினார் பாதிரியார் சார்லஸ் சாமுராஜ்.

""நான் ஸ்கூல்ல இருந்து ஹாஸ்டலுக்குப் போகும் போது வழிமறிச்ச பிரைட் சார் "இனிமே நீ ஹாஸ்டல்ல தங்கக் கூடாது. உன்னை மாதிரி ஏழைப்பசங்க 16 பேர் என் கெஸ்ட் ஹவுஸ்ல தான் தங்கிப் படிக்கிறாங்க. நீயும் தங்கிக் கொள்'னு கூட்டிப்போனார். அன்னைக்கி நைட்... நைட்டியை போட்டுக்கிட்டு படம் பார்க்க மாடிக்கு வாங்கனு கூப்பிட்டார்.





எல்லாரும் மாடிக்குப் போனோம். அசிங்கமான இங்கிலீஷ் படத்தை டி.வி.யில போட்டுக் காட்டி... "இந்த மாதிரி படங்களைப் பாருங்க அப்பத்தான் இங்கிலீஷ் சரம் சரமா பேச வரும்' என்றார் பிரைட்.
மறுநாளும் அதே மாதிரி படம்... 4-ஆம் வகுப்பு, 5-ஆம் வகுப்பு மாணவிகள் எல்லாரும் படம் பார்த்தபடியே தூங்கிட்டாங்க. அப்ப எங்க நடுவில வந்து உட்கார்ந்த பிரைட் சார்... முதல்ல தோள்ல கையைப் போட்டார். பிறகு, கண்ட கண்ட இடத்தில எல்லாம் தொட்டாரு... நான் அழுதுகிட்டே எழுந்து கீழே ஓடி வந்துட்டேன். காய்ச்சல் வந்துவிட்டது. மறுநாள் கிளாசுக்கு போக முடியலை. படுத்துக்கிடந்தேன். கெஸ்ட் ஹவுஸ்ல நான் மட்டும் இருந்ததை தெரிஞ்சுக்கிட்டு பிரைட் சார் வந்தார்... கட்டிப் புடிச்சு டார்ச்சர் செஞ்சாரு... எழுந்து சுவரோரமாப் போய் நின்னேன்...

"உன் மாமன் மாதம் 500 தான் கொடுக்கிறான்... மீதியை நான்தான் போடுறேன்... என் இஷ்டப்படி நடக்கலைனா வெளியே போடி'னு மிரட்டினாரு... அதுக்குப் பிறகு தான் வெளிய ஓடினேன். ஹாஸ்டலுக்கு போய் வார்டன்ட்ட செல்ஃபோனை வாங்கி அங்கிள்ட்ட சொன்னேன்!'' திக்கித் திணறி கண் கலங்கியபடி சொன்னார் மாணவி.

இனிமேல் "பிரைட்' டின் கட்டுப்பாட்டில் கர்த்தவ்யாவை படிக்க வைக்க விரும்பாத பாதிரியார் சார்லஸ் சாமுராஜ் மாணவியின் டி.சி.யை வாங்குவதற்காக தலைமையாசிரியர் சீபாபால் அறைக்குச் சென்றிருக்கிறார்.

""ஹெச்.எம்.மிடம் பேசிக் கொண்டிருக் கும் போது ரொம்ப கோபமா அங்கே வந்த பிரைட் "டேய்... இந்த புள்ளை உடம்பில எங்கெங்கே நான் தொட்டம்னு சொல்லச் சொல்லுடா'னு என்னை அடிக்க வந்தார்... நான் சத்தமா பேச ஆரம்பிச்சதும் உடனே டி.சி.யை கொடுத்துவிட்டார்கள். சின்னஞ்சிறுமிகளை பாழ்படுத்தும் இப்படிப்பட்ட ஒழுக்கங்கெட்ட முதியவரை சும்மாவிடக் கூடாது. காவல் துறையில் புகார் கொடுக்க விரும்புகிறேன். நக்கீரன் எனக்கு உதவி செய்யணும்!'' -நடந்ததை விளக்கி, நமது உதவியைக் கேட்டார் பாதிரியார் சார்லஸ் சாமுராஜ்.

பாதிரியாரை, டி.எஸ்.பி. பாஸ்கரனிடம் அழைத்துச் சென்றோம். நடந்த விஷயங்களை பொறுமையாகக் கேட்ட டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் ஜெயராஜ், எஸ்.ஐ. ராஜபுஷ்பம் தலைமையில் ஒரு டீமை அந்த ஸ்கூலுக்கு அனுப்பினார்.

தாளாளர் பிரைட் டின் கெஸ்ட் ஹவு ஸில் தங்கியிருந்த மாணவிகளிடம் விசாரணை நடத்திய ஸ்பெஷல் டீம் பிரைட் மீது எஃப். ஐ.ஆர். போட்ட தும் தலைமறை வாகி விட்டார் பிரைட்.
பள்ளியின் முதல்வர் சீபா பாலோ ""அந்த மாணவி வேண்டுமென்றே பொய் சொல்கிறார்!'' என்கிறார்.

""பிரைட்டைத் தேடிக் கொண்டிருக்கிறோம். அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக அவருடைய பாஸ்போர்ட்டையும் முடக்கப் போகிறோம்!'' என்கின்றது போலீஸ். யாரைத் தான் நம்புவதோ?

No comments:

Post a Comment