Thursday, June 24, 2010

டீச்சர் காதலால் பசங்களுக்குத் தடை!



shockan.blogspot.com
"சார்... என்னோட பையன் ஒண்ணாவதிலிருந்து +2 வரை உள்ள இந்த ஸ்கூல்லதான் படிச்சான். பத்தாவதுல 500-க்கு 434 மார்க் எடுத்திருக்கான். ஆனா திடீர்னு டி.சி.யை கொடுத்து +1, +2 ஆம்பளப் பசங்கள சேர்க்க மாட்டோம் வேற ஸ்கூலில் போய் சேர்த்துக்கோங்கன்றாங்க . இப்படி திடீர்னு சொன்னா நாங்க எந்த பள்ளியைப்போய்த் தேடிச் சேர்க்கிறது?' என்று வருத்தப்படுகிறார் மாணவன் பிரகாசின் தந்தை செல்வராசு. இதைப் போலவே ஆண் பிள்ளைகளின் பெற்றோர்கள் பலரும் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்... விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பெஸ்கி மேல்நிலைப்பள்ளியை முற்றுகையிட்டபடி. ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கிற கோ-எஜுகேஷன் ஸ்கூலில் ஏன் இப்படி? விசாரித்தபோதுதான் பல இன்ஃபர்மேஷன்கள் கிடைத்தன.

""ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புதுவை மறை மாவட்ட கண்ட் ரோலில் உள்ளது இந்த பள்ளி. கல்வித்தரம் ரொம்ப நல்லா இருந்ததால சுத்துப்பட்டு கிராமத்துல இருக்கிற பல ஏழை எளிய பிள்ளைகளும் முன்னேற வாய்ப்பா இருந்தது. ஆனா இந்த பள்ளி மாணவன் சமீபத்துல ஒரு மாணவியை கூட்டிக்கிட்டு ஓடிட்டான். அந்த அதிர்ச்சி அடங்கு றதுக்குள்ள அவனை விட கில்லாடி மாணவன்(!) பாடம் சொல்லிக் கொடுத்த டீச்சரையே கரெக்ட்பண்ணி கூட்டிட்டு ஓடிட்டான். இப்படி+1, +2 மாணவர்களின் அட்டகாசங் கள்தான் அட்மிஷன் மறுப்புக்கு காரணம்'' என்கிறார்கள்.

""ஒருசில பசங்க பண்ற தப்பால எல்லா மாணவர்களையும் பழிவாங்கலாமா?'' என்று குமுறிய பெற்றோர்களின் ஆதங்கத்தை அப்பள்ளியின் தலைமை ஆசிரியை பிலியஸ் மேரி குருசம் மாளிடம் கேட்டபோது... ""வகுப் பறையிலும் பள்ளி வளாகத்திலும் நடந்துக்குற விதம் சரியில்லைங்க. எல்லாத்தையும் அடிச்சு சேதப் படுத்துறாங்க. மாணவிகளிடம் தவறாக நடந்துக்கிறாங்க. எங்களால சமாளிக்க முடியலைங்க. ஆம்பள பசங்களை கடந்த மார்ச் மாசமே சேர்க்கிறதில்லைன்னு முடிவு பண்ணி அறிவிச்சுட்டோம். ஆனா இப்போ பிரச்சினை பண்றாங்க'' என்கிறார்.

""அதே பள்ளியில ஒண்ணா வதிலிருந்து படிச்ச மாணவர்களை சமாளிக்க முடியலைன்னா... என்ன தான் சொல்லிக் கொடுத்து உருவாக்கியது அந்தப்பள்ளி? மாணவிகளும் தவறு செய்தால் பள்ளியையே மூடிடுவாங்களா? சிறுபான்மையினர் என்றும் கோ-எஜுகேஷன் என்றும் சொல்லி அரசின் உதவிகளைப் பெற்றுவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக ஆண் களை யே சேர்க்காமல் இருக்க பிளான் பண்ணுவதை எப்படி ஏத்துக்க முடியும்? இதை எதிர்த்து கண்டன போஸ்டர் அடித்து போராடப் போறோம்'' என்கிறார் பா.ம.க. பிரமுகர் சுரேஷ்.

விழுப்புரம் மாவட்ட கல்வித்துறை அதிகாரியோ... ""அப்படியா? உடனடியாக விசாரிக்கிறோம்'' என்கிறார் உறுதியாக.

ஆசிரியர்-மாணவர் உறவு குறித்து எத்தனை தடவை சொன்னாலும் திருந்தமாட்றாங்க ளேப்பா!

No comments:

Post a Comment