Tuesday, June 15, 2010

இதுதான் நஷ்டத் திலும் லாபக் கணக்கு!


shockan.blogspot.com

நஷ்டத்திலும் லாபம் பார்க்கிற மாயாஜாலம் கோடம்பாக்கத் தில்தான் நடக்கும். படுதோல்வி கண்ட விஜய் யின் "சுறா' படத்தின் தயாரிப்பாளர் சங்கிலிமுருகன். படத்தை சன் டி.வி.க்கே கொடுப்பது என்று முடிவாகி விட்டாலும் ஒரு ரேட் பிக்ஸ் பண்ணி ஒரு சின்ன தொகையை அட்வான்ஸாகக் கொடுத்து; ஃபர்ஸ்ட் காப்பி பார்த்த பின்பே மிச்சமெல்லாம் என்று சொல்லி விட்டது சன் தரப்பு. அதனால் படம் எடுக்க ஃபைனான்ஸ் வாங்க வேண்டிய சூழ்நிலை சங்கிலி முருகனுக்கு!

விஜய் அப்பா எஸ்.ஏ.சி.யை அணுகி இருக்கி றார். அவர் தனக்கு வேண்டிய சில ஃபைனான் ஸியர்களிடம் சொல்லி பணம் வாங்க உதவி இருக்கிறார். அதற்கு நன்றி சொல்லப்போன சங்கிலி முருகனிடம், "முருகன், ஒரு சின்ன விஷயம்... சன் டி.வி. கொடுக்கற தொகையில வர்ற லாபத் தொகையில் நம்ம ரெண்டு பேருக்கும் ஃபிப்டி ஃபிப்டி' என்றாராம் எஸ்.ஏ.சி. ஃபர்ஸ்ட் காப்பி பார்த்த சன் டி.வி. நிர்வாகத்தார், "படம் சுமாராத்தான் இருக்கு. அதனால நாங்க முதல்ல சொன்ன தொகையிலிருந்து மூணு கோடி கம்மி பண்ணி தான் கொடுப்போம்' என்று கட் அண்ட் ரைட்டா கச் சொல்லிவிட, அதற்கும் சம்மதித்து ஒப்பந்தம் போட்டு பணத்தை வாங்கி விட்டாராம் சங்கிலி முருகன். அந்தத் தொகையிலும் ரெண்டு கோடி ரூபாய் லாபம் கிடைத்திருக்கிறது. அதில் பாதி தொகையாக ஒரு கோடியை எஸ்.ஏ.சி.க்குக் கொடுத்திருக்கிறார் சங்கிலி!

இதுதான் நஷ்டத் திலும் லாபக் கணக்கு!

No comments:

Post a Comment