Thursday, June 10, 2010

ஜெ. கொடநாடு பயணம்-இன்னொரு மாஜி அதிமுக எம்எல்ஏவும் திமுகவுக்கு 'பயணம்'!


shockan.blogspot.com

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நாளை மீண்டும் கொடநாடு செல்கிறார்.

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை செல்லும் அவர் அங்கிருந்து கொடநாட்டுக்கு காரில் செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நேற்று வந்த ஜெயலலிதா அங்கு திரண்டிருந்த அதிமுக தொண்டர்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டார். ஒரு மணி நேரம் மட்டுமே மனுக்களை பெற்றுக் கொண்ட ஜெயலலிதா போயஸ் கார்டன் திரும்பிவிட்டார்.

இதனால் அவரிடம் மனு தர கூடியிருந்த ஏராளமான தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர். இதையடுத்து தலைமைக் கழகத்தில் இருந்த அதிமுக நிர்வாகிகள் மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

இப்போது விஜய்காந்தின் தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவதாகக் கூறப்படு்ம் நிலையில் திடீரென ஜெயலலதா மீண்டும் கொடநாடு புறப்படுகிறார். அவர் எப்போது சென்னை திரும்புவார் என்று தெரியவில்லை.

இன்னொரு மாஜி அதிமுக எம்எல்ஏவும் திமுகவுக்கு தாவல்:

இதற்கிடையே திமுகவில் சேரும் அதிமுக பிரமுகர்கள் வரிசையில் அடுத்ததாக பெரணமல்லூர் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரனும் இணையவுள்ளார்.

அதிமுகவிலிருந்து சாரை சாரையாக பலரும் திமுகவுக்குப் போய்க் கொண்டுள்ளனர். கரூர் சின்னச்சாமி இன்று திமுகவில் இணைகிறார். யாரும் அதிகம் அறி்ந்திராத ராசிபுரம் முன்னாள் எம்.எல்.ஏ. பழனியம்மாளும் திமுகவில் இணையவுள்ளார்.

அடுத்தபடியாக பெரணமல்லூர் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரனும் திமுகவில் இணையப் போவதாகக் கூறப்படுகிறது. கட்சியில் பதவிகள் தருவதற்கெல்லாம் காசு கேட்பதாக கட்சி நிர்வாகிகள் மீது சந்திரன் புகார் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment