Wednesday, June 30, 2010

ஆசிரம பிஸினஸ்! ரஞ்சிதா-நித்யானந்தா பேட்டி பின்னணி!



shockan.blogspot.com

""நித்யானந்தாவோடு வீடியோவில் அகப்பட்ட நடிகை ரஞ்சிதா, தன்னோட அனுபவங் களை புத்தகமா எழுதுவேன்னு சென்னையில் பேட்டி கொடுத் திருக்காரே?''

""அதேநாளில், பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தாவும் பேட்டி கொடுத்திருக்கிறார். பாப் தலை முடியோடு ஜீன்ஸ், டி-ஷர்ட்டில் வித்தி யாசமான கெட்டப்பில் பேட்டி கொடுத்த ரஞ்சிதா, நித்யானந்தா சாமி தொடர்பா கடந்த 6 மாதத்தில் எனக்கு ஏற்பட்ட பிரச்சினைகள், அதனால ஏற்பட்ட அவலங்கள், மன உளைச்சல்கள் இதையெல்லாம் நான் எதிர்கொண்ட விதம் இதையெல்லாம் விவரித்து ஒரு புத்தகம் எழுதப்போறேன். இந்தப் புத்தகம் தனிப்பட்ட பிரச் சினைகளில் சிக்கித் தவிக்கிறவங்களுக்கு உதவுற வகையில் என்னோட புத்தகம் இருக் கும். இது சம்பந்தமா சில பதிப்பகங்களோடு நான் பேசிக்கிட்டிருக்கேன்'னு சொன்னார்.''

""பிடதியில் நித்யானந்தர் என்ன சொன்னார்?''

""நடிகையோடு இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் என்னோட ஆன்மீக பயணத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தலை. மார்ச் மாதம் முதல் என்னோட ஆசிரமத்தில் உள்ள பெண்கள்கிட்டே சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினாங்க. ஆனா ஒரு பெண்கூட எனக்கெதிரா இதுவரை புகார் செய்யலைன்னு நித்யானந்தர் பேட்டி கொடுத்தார்.''

""இன்னமும் இவங்க இரண்டுபேரும் வீடியோ காட்சிகளில் இருப்பது தாங்கள்தான்னு ஒத்துக்கலையே... அந்த உண்மையை ஒப்புக் கொள்ளாமல் அனுபவங்களை புத்தகமா எழுதினா எப்படி பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறவங்களுக்கு உதவுமாம்?''

""தலைவரே... நித்யானந்தர் விசா ரிக்கப்பட்டபோது, ரஞ்சிதாவுக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகலை. ஆனா, இரண்டுபேரும் இன்னமும் தொடர்பில் தான் இருக்காங்க. ஆசிரமத்தோட பேரு ரிப்பேராயிடிச்சி. தன்னோட நிகழ்ச்சி களில் 23 லட்சம் பெண்கள் பங்கேற்றதா நித்யானந்தா பேட்டியிலே சொல்லியிருக் கிறார். ஆனா, இப்ப அவர் ஆசிரமத் துக்கு 23 பெண்கள் கூட வர்றதில்லை. அவரால பாதிக்கப்பட்ட பெண்கள், தங்களோட நிலைமையை ஏற்கனவே நம்ம நக்கீரன்கிட்டே சொல்லியிருக் காங்க. வெளிப்படையா புகார் கொடுத்தால் தங்களோட எதிர் காலம் பாதிக்கப்படும்ங்கிற பயம் அந்தப் பெண்களிடம் இருக்குது. அதேபோல, பாதிக்கப்பட்ட பெண் களோட பெற்றோரும் நித்யா னந்தர் மேலே சரியான கோபத் தில் இருக்காங்க. ஆனா, புகார் சொன்னா குடும்பத்துக்கு அவமானம் வருமேன்னு யோசிக்கிறாங்க.''

""பாதிக்கப்பட்டவங்க அவமானத்திற்குப் பயப்படுவதுதான் நித்யானந்தருக்கு இன்னைக்கு வரைக்கும் சாதகமா இருக்குது.''

""ரஞ்சிதாவும் தனக்கு வேண்டியவங்ககிட்டே நித்யானந்தர் மூலமா ஏற்பட்ட பாதிப்புகளை சொல்லி புலம்புறாராம். ஒரு பிரபல டைரக்டரும் பிரபல நடிகரும் ரஞ்சிதாகிட்டே அடிக்கடிப் பேசிக்கிட்டிருக்காங்க. அவங்ககிட்டே ரஞ்சிதா, கல்யாணமாகியும் எனக்கு குழந்தை இல்லை. மெடிடேஷன், ஹீலிங் தெரபி மூலமா நித்யானந்தரிடம் சிகிச்சை கிடைக்கும்னு போனேன். அவரோ நானே கடவுள்னும், என்னோடு நீ இருந்தால் கடவுளின் குழந்தை உனக்குள்ளே உருவாகும்னும் சொல்லி சாய்ச்சிட்டாருன்னு புலம்பியிருக்கிறார்.
இப்ப வீடியோ விவகாரம், விசாரணை, ஜெயில்னு பிரச்சினை அடுத்தடுத்த கட்டத்துக்குப் போனதால நித்யானந்தர் ஆசிரமத்திலும் கூட்டமில்லை. நடிகை ரஞ்சிதாவுக்கும் நடிக்க சான்ஸ் இல்லை. இரண்டு தரப்புமே ரீ-என்ட்ரிக்கு முயற்சி பண்ணுது. பிசினஸை மீண்டும் பிக்-அப் பண்ணணும்னா இமேஜை டெவலப் பண்ணணும். அதற்கான வேலைகள்தான் இரண்டு தரப்பிலும் இப்ப நடந்துக்கிட்டிருக்குது.''

No comments:

Post a Comment