Tuesday, June 15, 2010

ஐந்தடி உயர குத்துப் பூச்செடி ஜோதிராணா!


shockan.blogspot.com

இரண்டாயிரம் நாவல்களுக்குமேல் எழுதி உள்ள க்ரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ் குமாரின் "இரவில் ஒரு வானவில்' நாவலைத் தழுவி "அகராதி' என்ற படத்தை திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் நாகா வெங்கடேஷ். வசனத்தை ஆர்.எம். முருகன் எழுதியுள்ளார்.

"பழனியப்பா கல்லூரி' படத்தில் ஹீரோவாக நடித்த பிரதீப் ஹீரோ. கீர்த்திசாவ்லா, மோனிகா, சௌந்தர்யா, அர்ச்சனா என்று நான்கு கதா நாயகிகள்! அர்ச்சனா மட்டும் தெலுங்கு, கன்னடத்தில் முன்னணி நடிகை.

தமிழ்ப்பட உலகின் முதல் கராத்தே ஆர்ட்டிஸ்டான கராத்தே மணியின் மகன் ராஜ்குமார் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார். இன்னொரு வில்லன் பவன். இவர் களோடு விபச்சார வழக்கு புகழ் பூனைக்கண் புவனேஸ்வரி, வையாபுரி, சத்யன், வாசுவிக்ரம், அலெக்ஸ், ஹெலன், வெ.ஆ. மூர்த்தி, டெல்லி கணேஷ், பாலா உட்பட பலர் "அகராதி' யில் இடம் பெறுகிறார்கள்.

செய்யக் கூடாத ஒரு காரியத்தைப் பணத்துக் காகச் செய்யத் துணிகி றான் ஒருவன். அதனால் என்னென்ன விளைவு களைச் சந்திக்கிறான் என்பதுதான் "அகராதி'யின் ஒன்- லைன் கதை.

ஆக்ஷன், த்ரில்லரில் கிளாமர் இல் லாமல் முடியுமா? இருக்கிறது.

"ஐந்தடி உயர பூச்செடியே

அருகில் என்னை அசத்துறியே...'

என்ற குத்துப் பாடலுக்குப் பிரம் மாண்ட செட்டில் குத்தாட்டம் போட்டி ருக்கிறார் (தெலுங்கு "போக்கிரி' பட இரண் டாவது நாயகி) ஜோதி ராணா- ஹீரோ பிரதீப்பு டன்!

வர்னிகா மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத் தயாரிப்பாளர்களில் ஒருவர் டைரக்டர் நாகா வெங்க டேஷ்!

குடும்பம் தயாரிக்கும் திகில் படமோ?

No comments:

Post a Comment