Saturday, June 26, 2010

விவசாயக் கடன் மோசடி!

shockan.blogspot.com


""சார் விவசாயக் கடன் வேணும் இந்தாங்க டாக்குமெண்ட்ஸ்.''

""ம்... எல்லாம் கரெக்டாத்தான் இருக்கு ஓ.கே... இந்தாங்க விவசாயக்கடன்'' -டாக்குமெண்டுகளை சரிபார்த்த பாரத ஸ்டேட் பேங்க்கின் அதிகாரி விவசாயக் கடனைக் கொடுக்க... சந்தோஷத்தில் மிதந்தபடி போகிறது லோன் அப்ளை பண்ணிய விவசாயி(?) டீம்.

என்ன ஆச்சர்யம்! வங்கி அதிகாரி களின் காலில் விழுந்து கும்பிடாத குறையாய் கெஞ்சி... நாயாக பேயாக அலைந்து வாங்க வேண்டிய விவசாயக் கடனை இவ்வளவு ஈஸியாக வாங்கி விட்டுப் போகிறார்கள் விவசாயிகள். புளகாங்கிதப்பட்டுக்கொண்டு நின்ற போதுதான் தூக்கிவாரிப்போட வைத்தது அந்த அதிர்ச்சித் தகவல்.

ஆமாங்க.. பேங்க்கில் விவசாயிகள்(?) டீம் கொடுத்த டாக்குமெண்டுகள் ஃபோர் ஜரியானது. அதுக்குத்தான் கடலூர் மாவட்டம் கானூரிலுள்ள பாரத ஸ்டேட் பேங்க்கின் அதிகாரி உடனடியாக விவ சாயக் கடன் சாங்ஷன் பண்ணி புண்ணியம் கட்டியிருக்கிறார். இப்படிப் போலி டாக்கு மெண்டுகளைக் கொடுத்து வங்கியை ஏமாற்றிய (வங்கி அதிகாரி ஏமாந்துதான் கடன் கொடுத்தாரா... என்பது வேறு கதை) கடலையத்தூர் பாலமுருகன், தில்லை கோவிந்தன், காவலாக்குடி பிச்சைமணி, கானூர் காசிநாதன் என 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது காவல் துறை... கடந்த வருடம் நவம்பர் 24-ந் தேதி.

இதன் அடிப்படை யில் இன்னும் பலர் மோசடி செய்திருப்பார்களோ என்று அலர்ட்டான மாவட்ட எஸ்.பி. அஸ்வின் கோட்னிஸ், எஸ்.ஐ. அம்பேத் கர் தலைமையிலான டீமை அதிரடி யாக ரெடிபண்ணினார்.

வங்கி மோசடி வேட்டையில் சிக்கினான் ஸ்ரீமுஷ்ணம் - நாகபந்தல் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணியின் மகன் செந்தில். டீமிலுள்ள காக்கியோ ""தன் குடும்பத்தில் கிடைத்த பங்கு ஆறு ஏக்கரோடு ஆசை தீரவில்லை செந்தி லுக்கு. அம்மா, அப்பா, அண்ண னுக்கு சேரவேண்டிய நாலு ஏக்கர் நிலத்தையும் தனது அப்பா தண்ட பாணி பத்துரத்துல எழுதி கையெ ழுத்து போட்டது போல... தாசில்தார் ஆபீசுக்குப் போகாமலேயே பத்திரப் பதிவு செஞ்ச மாதிரி டாக்குமெண்டு களை ரெடிபண்ணியிருக்கான். இவனுக்குத் துணையா இருந்த தர்மா நல்லூரைச் சேர்ந்த ரங்கநாதனையும் பிடிச்சு விசாரிச்சோம். அடப்பாவிப் பய... போன வருஷம் கானூர் பாரத ஸ்டேட் பேங்க்ல ஃபோர்ஜரி பண்ணின அக்யூஸ்ட்ல ஒருத்தன்தான் இவனும். திருந்தாம அதுக்கப்புறமும் போலி பட்டா தயாரிக்கிறது, போலி டாக்குமெண்டுகள் கொடுத்து வங்கி மோசடியில் ஈடுபடுறதுன்னு கிட்டத் தட்ட ஒரு கோடிக்கு மேல சீட்டிங் பண்ணியிருக்கான்.

வங்கிகளில் கரும்புக் கடன் வாங்கணும்னா அந்தப் பகுதியில இருக்குற மற்ற வங்கிகளில் கடன் பாக்கி இல்லைன்னு நோ-அப் ஜெக்ஷன் சர்ட்டிபிகேட் வாங்கிட்டு வரணும். அதேபோல் "கடன் பெறும் விவசாயி எங்கள் ஆலைக்கு கரும்பு வெட்டி அனுப்புவதாக ஒப்பந்தம் செய்திருக்கிறார்... இத்தனை ஏக்கர் கரும்பு நட்டுள்ளார்'னு கரும்பு ஆலை நிர்வாகம் பரிந்துரைக் கடிதம் கொடுக் கணும். அதையும் போலியா தயார்பண்ணியிருக்கு இந்தக் கும்பல். குறிப்பா எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை, அம்பிகா சர்க்கரை ஆலைகளின் "கரும்புப் பதிவுச் சான்று' கொடுத்ததாக 100-க்கும் மேற்பட்ட சான்றிதழ்களைக் கொடுத்து ஏமாத்தியிருக்காங்க. 35 விதமான போலி ரப்பர் ஸ்டாம்புகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கு. இந்தப் பகுதியில இருக்கிற பல தேசியமய மாக்கப்பட்ட வங்கிகள்லதான் இவர்களின் மோசடி அதிகமா நடந்திருக்குன்னு விசாரணையில் தெரிய வருது. இதற்கு பேங்க் மேனேஜர்களும் உடந்தையா?ன்னு விசாரிச்சிக்கிட்டிருக்கோம்'' என்கிறார் அதிரடியாக.

போலீஸ் பிடியில் இருந்த செந்தில், ரங்கநாதன் இருவரிடமும் இப்படியெல்லாம் பண்ணலாமா? என்று கேட்டபோது... ""பின்ன என்ன சார்... மயிலே மயிலேன்னா இறகு போடாது. அதான் நாங்களே புடுங்குனோம். வங்கிகள் எங்களை நம்பி லோன் கொடுக்கணும்ங்கிறதுக்காக "எங்க வங்கியில் வாங்கிய கடனை உரிய தவணை முறையில் செலுத்திவிட்டார்'னு மற்ற வங்கிகள் நோ-அப்ஜெக்ஷன் சர்ட்டிபிகேட் கொடுக்கிற மாதிரி போலியா தயார்பண்ணிக் கொடுத்தோம். அதை நல்லா நம்பிட்டாங்க?'' என்கிறார்கள் அசால்ட்டாக.

இவர்கள் கொடுத்த வாக்குமூலத்துக்குப் பிறகுதான் சுத்துப்பட்டிலுள்ள வங்கிகள் டாக்கு மெண்டுகளை ஆய்வு செய்யத் துவங்கியுள்ளன.

சத்தியவாடியைச் சேர்ந்த விவசாயி பாஸ்கரன், ""கருவேப்பிலங்குறிச்சி ஸ்டேட் பேங்க்ல பல வருஷமா என்னோட சில ஏக்கர் நிலங்களை வைத்து பயிர்க்கடன் வாங்கி தவணை முறையில் சரியா செலுத்துறேன். என் சொத்து பத்திரங்கள் கூட வங்கியிலதான் இருக்கு. இதையெல்லாம் ஜாமீனா வெச்சுக்கிட்டுக் கூட சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்துல படிக்கிற என்புள்ள நீதிதேவனுக்கு கல்விக்கடன் கொடுங்கன்னு கெஞ்சினேன். ஆனா கொடுக்கல. அதனால தான் பலர் போலி டாக்குமெண்டுகளை கொடுக்க ஆரம்பிக்கிறாங்க'' என்கிறார் வேதனையோடு.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் காமராஜ், ""உண்மையான விவசாயிகளுக்கும், ஏழைபிள்ளைகள் கல்விக் கடன் கேட்டால் கொடுக்க மறுக்கும் வங்கி கள்... போலி டாக்குமெண்டுகள் கொடுத்தால் மட்டும் வாரி வழங்குகின்றன. அதுக்கு காரணம்... வங்கி அதிகாரிகளின் துணை இல்லாமல் இப்படிப்பட்ட மோசடிகள் நடப்பதில்லை'' என்கிறார் அவர்.

கடலூர் மாவட்ட தமிழ்நாடு விவசாயி சங்க செயலர் ரவீந்திரனோ ""உண்மையா போய் லோன் கேட்கிறவங்களை எப்படி எப்படியெல்லாம் விசாரிக்கிறாங்க? சரியாக விசாரிக்கும்போதே உண்மையா பொய் யான்னு தெரிஞ்சிடும். வங்கியின் ஃபீல்டு ஆபீஸர்கள், வருவாய்த்துறையினர், கூட்டு றவுத்துறையினர்னு பலரது துணையில்லாம இவ்வளவு பெரிய மோசடிகள் செஞ்சுட முடியாது.

இந்த வழக்கை சி.பி.ஐ. அல்லது சி.பி.சி.ஐ.டி. விசாரிச்சாதான் பல உண்மைகள் வெளிவரும், இல்லேன்னா ஆர்ப்பாட்டம் நடத்துவோம்'' என்கிறார் அதிரடியாக.

No comments:

Post a Comment