Thursday, June 24, 2010

தமிழர்களே! தமிழர்களே!



முள்ளிவாய்க்கால் நந்திக் கடல் பகுதியை சீன நாட்டு நிறுவனம் ஒன்றிடம் ராஜபக்சே அரசு ஒப்படைக்கப் போவதாய் செய்தி வந்திருக்கிறது. மீன்வள ஆராய்ச்சி என்ற பெயரில் அந்நிறுவனம் வருகிறதாம். ஆனால் அவர்களுக்கு தரப்பட்டுள்ள உண்மையான வேலை முள்ளிவாய்க்கால் பகுதியெங்கும் தமிழர் இன அழித்தலின் ஆதாரங்களாய் புதையுண்டு கிடக்கிற எலும்புக் கூடுகளையெல்லாம் அப்புறப்படுத்தி துப்புரவு செய்து அழிப்பது என்று சொல்லப்படுகிறது.

தமிழர்களே, நண்பர்களே! இது போலொரு அவலம் உலகில் வேறெந்த மக்கள் இனத்திற்கும் இந்நவீன காலத்தில் நடக்கவில்லை. நம் கண்ணெதிரே நம் இனத்தின் குரல்வளை அறுக்கப்பட்டது. நாதியற்றிருந்தோம். பாய்ந்தோடிய குருதியின் வாசனை நம் மனசாட்சியின் நாசியிடை மண்டியிட்டுக் கெஞ்சுகிறது. குறைந்த பட்சம் நொறுக்கப்பட்ட அப்பாவிகளின் நினைவுகளைக் கூட காப்பாற்ற முடி யாதவர்களாய் நாம் கேவலப்பட்டு நிற்கிறோம்.

உணர்வுகளின் கைதியாகி, விரக்தியுற்று, எதுவும் செய்ய முடியாத இயலாமையில் ஒருவரை யொருவர் பிறாண்டிக் கிழிக் கிறோம். நம் பிரதான எதிரிகளான சிங்களப் பேரினவாதமும், இந்திய வெளியுறவுக் கொள்கையும் அலட்டிக் கொள் ளாமல் அமைதி பூத்து தம் அசுர நடை யைத் தொ டர்கின்றன. செல்லுமிட மெல்லாம் உணர்வாளர்கள் வந்து கரம் பற்றுகிறார்கள். தமிழினத்திற்காய் விதைநெல்கள் இன்றும் நிறையவே மிச்சமிருக்கின்றன. ஆயினும் அனைவரையும் பொதுநோக்கில் ஒன்றிணைக் கிற அமைப்போ, தலைவர்களோ இல்லை. ஈழத்தின் அழிவை பாவித்து திடீர் தலைவர்களாய் மாறிவிட முடியுமா என்றுகூட சிலர் பரிசோதித்துப் பார்க்கிறார்கள். இனி சில காலம் தமிழராகிய நமக்கு கதாநாயகர்கள் எவரும் அவசியமில்லையென்றே கருதுகிறேன். அரசியல் லாப நோக்கு ஏதுமில்லா, கூட்டுத் தலைமையை, செயற்பாட்டுத் தணிக்கையை நம்புகிற சமூக இயக்க மொன்று தேவைப்படுகிறது.

இன்னும் நமக்கு சற்று தேவைப் படுவது நண்பர்கள். தோழமை தருகிறவர் கள். துணை நிற்கிறவர்கள். பாறைக்கு என்றுமே பிரச்சினைகள் இருப்பதில் லை. அதன் மேல் வளர்கிற கொடிதான் தன் வளர்ச்சி வழியை பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழராகிய நாம் இன்று கொடியின் நிலையில் இருக்கிறோம். கொஞ்சம் பணிந்தும் வளைந்தும் தான் பயணிக்க வேண்டியிருக்கிறது. பாறையின் முகடு தொட்டு பூத்துச் சிரிக்கிற காலம் வராமலா போய்விடும்?

உரையாடுவதை சமரசம், சரணாகதி என்று பார்க்கிற பக்குவமற்ற மனநிலை உணர்வாளர்களிடையே இருக்கிறது. காங்கிரசோடு உரையாடுவதால் அக்கட்சியின் கொள்கைகளை நாம் ஏற்றுக் கொள்கிறோ மென்றோ, நமது நம்பிக்கைகளை விட்டுக் கொடுக்கிறோமென்றோ ஆகாது. இது எல்லா கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும், தலைவர் களுக்கும் பொருந்தும். முள்ளிவாய்க்கால் கடைசி கட்டத்தில் சண்டை நிறுத்தம் ஏற்பட்டிருந்தால் விடுதலைப் புலிகள் கொடூரனாகிய அந்த ராஜபக்சேவுடன்தான் பேச்சுவார்த்தை நடத்தி யிருப்பார்கள். அப்படிப் பேசுவதாலேயே தமி ழீழத்தை சமரசம் செய்து விட்டார்களென்பது ஆகாது. ஆட்சியில் இருக்கிறவர்கள், அதிகார அமைப்பை கட்டுப்படுத்துகிறவர்கள், நமக்கு எதிரான கட்சிகள், அமைப்புகள் அனைவ ரோடும் நாம் பேச வேண்டும், பேசித்தான் ஆக வேண்டும். நம் மக்களுக்காக, நம் இனத்திற்காக, தமிழகத்தைப் பொறுத்தவரை இடை விடா உரையாடல்கள் மூலம் தமிழகத்தின் அரசியற் கட்சிகளிடையே ஈழம் தொடர்பான குறைந்தபட்சம் பொதுக் கருத்தினை நம் மால் உருவாக்க முடியுமானால் அது மிகப் பெரிய செயலாக அமையும், முயன்று பார்ப்போம்.

நாம் தோற்றுப் போய்விட்டோமே என்று தோழர்கள் அங்கலாய்க்கிறார்கள். தவறு. நாம் தோற்கவில்லை, தோற்கவும் முடியாது. லட்சக்கணக்கான அப்பாவி மக்களை ஒரு சிறு பரப்பில் அடித்து விரட்டிக் கூட்டி குழந்தைகள், பெண்கள், முதியோர் என்றெல்லாம் பிரித்துக் கூட பார்க்காமல் கொன்றழித்த ஓர் கொலைகார கும்பலா வென்றவர்கள்? ரத்தமும் சதையுமாய் சிதறுண்டு கிடந்த தமிழரின் உடல் களுக்கு மேல் நின்று வெற்றிவிழா கொண்டாடிய பேரின வாத வெறிபிடித்த ஓர் இனத்தையா வெற்றி பெற்ற இனமென்று கருதுவது? நாகரீக உலகின் குமட்டும் குறைபிறவி இனம் அது. இந்த வெறியின் வெற்றி நீண்டு நிற்காது. இயற்கை இறங்கி வரும். தமிழருக்குச் செய்த கொடுமை களுக்கு சிங்களம் பதில் சொல்லித்தான் தீரவேண்டும்.

நாமொன்றும் தோற்றுப் போகவில்லை. சில சண்டைக் களங்களை இழந்திருக்கிறோம். ஆனால் போர் ஒன்றும் முடிந்துவிடவில்லை. இப்போதுதான் புதிய வேகத்தோடு தொடங்கியிருக்கிறது. உலகின் பரப்பெல்லாம் இன்று தமிழர்கள். இணைய வெளியெங்கும் இன்று தமிழ். கால் நூற்றாண்டுகளுக்கு முன் அகதியாய் வந்திறங்கிய ஈழத் தமிழன் இன்று உலகின் சமூக- பண்பாட்டு- பொரு ளாதார சக்தி களுள் ஒன்றாய் சத்தமின்றி உரு மாறியிருக்கிறான்.

2009 செய் யப்பட்ட மேம் போக்கானதொரு மதிப்பீட்டின்படி புலம் பெயர் ஈழத் தமிழர்களின் நிகர பொருள்வள மதிப்பு 1,500,000,000,000 அமெரிக்க டாலர்கள். இந்திய ரூபாய் மதிப்பில் அறிய வேண்டு மென்றால் 45-ஆல் பெருக்கிப் பாருங்கள். கணக்குக் குறியீட்டில் கொண்டு வருதல் கடினம். 60 டிரில்லியன் ரூபாய்கள் என்று சொல்லலாம். புலம்பெயர் தமிழர்களின் நிகர ஆண்டு வருமானம் இருபது பில்லியன் டாலர்கள். இந்திய ரூபாய்க்கு சுமார் 1 லட்சம் கோடி. சிங்கள தேசத்தின் நிகர ஆண்டு வருவாயை விட இது அதிகம். லட்சம் கோடி ரூபாயை ஆண்டு வருவாயாகக் கொண்ட ஓர் குழுமம் சற்றே அரசியல் மயப்பட்டு விட்ட தென்றால் எந்தக் கொம்பனாலும் அதன் எழுச்சியை தடுத்து நிறுத்த முடியாது. அவ்வகையில் நாமெல்லாம் நினைத்துப் பார்த்திராத பெரும் உயரங்களுக்குத் தமி ழினத்தை வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற மனிதன் கொண்டு வந்து நிறுத்தியிருப்பதை விரைவில் வரலாறு பேசத் தொடங்கும்.

அச்சம் தவிர்க்க நம் இனத்திற்கு கற்றுத் தந்த தலைவன் அவன். கோழைகள் ஒருநாளும் பெருமையின் கிரீடங்களை சூடிக் கொள்ள முடியாது. நீண்டகாலமாய் இந்த இனத்தின் மீது படிந்திருந்த தாழ்வு மனம், தயக்கம், கூழைத்தனம் அனைத்தை யும் துடைத்தெறிந்து துணிவு கற்பித்தவன்.



நான் அவரை நேர் கண்டபோது நிறைவாக ஒரு கேள்வி கேட்டேன். வீடியோவில் அக்கேள்விக்கான பதிலை பதிவு செய்ய முடியவில்லை. ""உலக நாடுகளின் பொதுப் படை உங்களை அழிக்க வந்தால் என்ன செய்வீர்கள்?'' என்றேன். அவரது பதில் எளிதாயும் தெளிவாயுமிருந்தது. ""என் மக்கள் மீது சிங்களம் நடத்திய கொடுமை கண்டு தான் நான் போராடப் புறப்பட்டேன். அன் றைய என் இலக்கு என் இனத்தின் பெண்களது கற்பினைச் சூறையாடும், என் மக்களை கொல்லும் சிங்கள ஆமிக்காரன், போலீசில் இரண்டுபேரைக் கொல்வது. ஆனால் பயணத்தில் பலவற்றைக் கற்றுக் கொண்டு மிகப்பெரும் விடுதலைப் போராட்டமொன்றை கட்டி யெழுப்பினோம். இன்று உலகப் பொதுப்படை வந்தால் எளியவர் களாகிய எங்களால் என்ன செய்துவிட முடியும்? அவர் களில் இரண்டுபேரை சுட்டுப் போட்டுச் சாவேன்''. பகை கண்டு அஞ்சியவன் அல்ல வேலுப்பிள்ளை பிரபாகரன். கடந்த ஆயிரமாண்டு நம் வரலாற்றினை தமிழ் காத்தது. அடுத்த ஆயிர மாண்டுப் பயணத்தினை வரையறுக்கப் போவது இந்த மனிதனின் ஆளுமைதான்.
shockan.blogspot.com

சிங்கப்பூர் நாட்டை செதுக்கிய சிற்பி லீ க்வான் யூ கடந்த மாதம் பேட்டி யொன்றில் குறிப்பிட்டிருந்தார்: ""இலங்கையில் சிங்களருக்கு இணையான தொன்மையுடையவர்கள் தமிழர்கள். அந்த நாடு இன்று மகிழ்ச்சியான இன ஒருமைப் பாட்டைக் கொண்டிருக்கவில்லை. புலிகளை ராணுவரீதியாக அழித்துவிட்டதால் பிரச்சினை தீர்ந்துவிட்டதாய் இப்போதைய அதிபர் நம்புகிறார், நாமெல்லாம் அவரைப் போல் நம்பவேண்டுமென்றும் எதிர்பார்க்கிறார். ஆனால், தமிழர்கள் அடிபணிந்து கிடப்பார்களென்று நான் நினைக்கவில்லை. மனஉறுதி நிரம்பவே கொண்ட ஓர் இனத்தின் மக்கள் அவர் கள்''.

"ஈழம் சாத்தியமா?' என்று உணர்வாளர்கள் கேட்கிறார்கள். கேள்வியே தவறு. 37,000 போராளிகளையும் ஒன்றரை லட்சத்திற்கும் மேலான மக்களையும் தியாக வேள்விக்குத் தந்தபின் ஈழம் மலர வைப்போம் என்றுதான் நாம் முழங்க வேண்டுமேயன்றி, ஐயம் கொள்வதல்ல. இன்றைய களத்தின் உடனடி தேவைகள் புனர்வாழ்வு, மீள் கட்டுமானமென இருக்கலாம். ஆனால் நிரந்தர அரசியற் தீர்வு ஈழமே. கூட்டாட்சி, தன்னாட்சி என்று படிப்படியாகக் கூட இறுதி இலக்கை நாம் அடையலாம். ஆனால் இறுதி இலக்கு ஈழமே.

தமிழருக்கென ஓர் தனி நாடு அமைந்தால் உலகின் அத்தனை நாடு களோடும் அரசியல்-வர்த்தக-பண்பாட்டு உறவுகளை தமிழர்கள் விரிவு செய்து இப்பூவுலகின் மிகப்பெரும் இனங்களில் ஒன்றாக எழுந்து விடுவார்கள் என்ப தால்தானே எம்.கே.நாராயணன்களும், சிவசங்கர மேனன்களும் சிங்களப் பேரினவாதத் தோடு அணி வகுத்து நம் இனத்தை அழிக்க நின் றார்கள்? ஆதலினால் ஈழம் தமிழ் இனத்தின் பொதுக் கனவு. ஆயுதம் தாங்கி நாம் பயணிக்க விழையவில்லை. ஜனநாயகம் தந்த வழியில் அணிவகுப்போம். இது இன்று நாளை முடிகிற போருமல்ல. ஆயிரம் ஆண்டு போர். பொறுமை எமக்குண்டு. வெல்லும் வரை ஓயோம்.

இரண்டு இதழ் களென எழுதத் தொடங்கி 122 எழுதி விட்டேன். நம்பிக்கைகள் தகர்ந்துபோன ஓர் காலக்கட்டத்தில் உணர் வாளர்களின் ஆறுதல் தாய் மடியாய் நக்கீரனை ஆக்கிய அண்ணன் கோபால், தோழர் காமராஜ் இருவரும் இவர்களோடு நக்கீரன் குடும்பத்தாரும் என் நன்றிக்குரியவர்கள். நான் எழுத்தாளன் அல்லேன். எழுத வைத்தவர் தோழர் காமராஜ். அதே வேளை வாசகர்கள் படிக்காமல் 122 கட்டுரைகள் தொடர்ந்திருக்கவும் முடியாது. என் உணர்வு களைப் பகிர்ந்து கொண் டது பரிசுத்தமான நக்கீர னின் அக்னிக் குஞ்சுகளது பாதங்களை பக்தியோடு தொடுகிறேன். தொடர்பு கொள்ள விழைவோருக்கு மின் அஞ்சல்:

jegath66@yahoo.co.uk, 94440-72217, 94440-72217.
நன்றி. ஈழம் வரும். தமிழினம் வெல்லும்.

ம.ஜெகத் கஸ்பர்

No comments:

Post a Comment