Thursday, June 24, 2010

கோர்ட்டில் தமிழ்! தலைமை நீதிபதியின் கருத்து!




உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழி யாக்க வேண்டும் என்கிற நல்ல நோக்கத்துக்கான வழக்கறிஞர்களின் போராட்டம் இப்போது அரசியலாகி வருகிறதோ என கவலைப்பட தொடங்கி விட்டார்கள் நீதித்துறையை சேர்ந்தவர்கள்.

தொடர் உண்ணாவிரதத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்ட மதுரை வக்கீல்கள் கைது செய்யப்பட்ட நிலையில், சென்னையிலும் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தனர் வக்கீல்கள் சிலர். இதனால் நீதிபதிகள் கூட்டத்தை இரண்டு முறை கூட்டி இது பற்றி விவாதித்தார் தலைமை நீதிபதி எம்.ஒ.இக்பால்.

shockan.blogspot.com
"கோர்ட் வளாகத்துக்குள் போராட்டங்கள் நடத்த 2006-ம் ஆண்டிலேயே தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை' சுட்டிக்காட்டி பேசியிருக்கிறார் தலைமை நீதிபதி இக்பால். அப்போது நாங்கள் யாரும் வக்கீல்களின் உண்ணாவிரதத்தை ஆதரிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்கள் வக்கீல் சங்கத்தின ரும், மூத்த வக்கீல்களும். இதைத் தொடர்ந்து நீதிபதிகளிடம் ஆலோ சித்த தலைமை நீதிபதி, நீதிமன்ற வளாகத்துக்குள் போராட்டம் நடத்துவதை தடுக்கும் அதிகாரத்தை பதிவாளருக்கு கொடுத்தார். இதைத்தொடர்ந்தே பதிவாளர் விமலா, போராட்டம் நடத்துபவர்களை நீதிமன்ற வளாகத்தில் இருந்து அகற்றும்படி காவல்துறையை கேட்டுக்கொண்டார். உண்ணாவிரத வக்கீல்கள் கைது செய்யப்பட்ட நிலையில், பதிவாளர் விமலாவின் அறிக்கைக்கு பிறகும் 3 வக்கீல்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட டென்ஷன் கூடியது. இதற் கிடையே மதுரை வக்கீல்கள் சிலர் மாநாட்டுக்கு வரும் ஜனாதிபதி பிரதீபாவுக்கு கறுப்புக்கொடி காட்டுவது என திட்டமிட்டுள்ளனர். இன்னும் சில வக்கீல்களோ அதிக பட்ச உணர்ச்சியில், தமி ழுக்காக தீக்குளிப்போம் என்றும் கூறிவருவதை காவல்துறை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

வக்கீல்களின் இந்த போராட்டம் குறித்து நம்மிடம் பேசிய சென்னை ஐகோர்ட் வக்கீல்கள் சங்கத் தலைவர் பால்கனகராஜ், ""தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்கிற கோரிக்கையை யாருமே எதிர்க்கவில்லை. எங்களிடம் பேசிய நீதிபதி களும் கூட அரசாணை வரும் வரையில் காத்தி ராமல் இப்போதே தமிழில் வாதாடுவதை நாங்கள் அனுமதிக்கிறோம் என்றே சொன்னார்கள். இத்தனை வருடம் பொறுத்தவர்கள் இன்னும் சில மாதங்கள் பொறுப்பதில் தவறில்லை. உண்ணாவிரதம் இருக் கும் வக்கீல்கள் தாங்களாக அந்த முடிவை எடுத்துக் கொண்டு ஒட்டு மொத்த சங்கங்களும் தங்கள் முடிவை ஆதரிக்க வேண்டும் என்று நிர்பந்திக்க பார்க்கிறார்கள். நம்முடைய கோரிக்கையின் மீது கவன ஈர்ப்பை ஏற்படுத்த ஒரு நாள் கோர்ட் புறக்கணிப்பு செய்திருக்கிறோம். குறிப்பிட்ட கால அளவுக்கு மேலும் தாமதமானால் மீண்டும் போராட்டம் பற்றி யோசிக்கலாம். அரசியல் கட்சிகள் தங்கள் சுயலாபத்துக்காக சில காரியங் களில் ஈடுபடுவதை வக்கீல்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் அர சியலுக்கு நாம் இரையாகி விடக்கூடாது என்பதே எங்களின் நிலைப்பாடு'' என்கிறார் பால்கனகராஜ்.

செம்மொழி மாநாட்டில் தமிழை வழக்காடு மொழியாக்குவது தொடர்பான அறிவிப்புகள் வருமா என்பதே வக்கீல்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments:

Post a Comment