Saturday, June 26, 2010

சம்மந்தி ஃபைட்!


shockan.blogspot.com

""ஹலோ தலைவரே... ஒட்டுமொத்த உலகத் தமிழினமும் பூரித்துப் பெருமைகொள்ளும் வகையில் கோவையில் உலகச் செம்மொழி மாநாடு, கோலமாகத் தொடங்கியிருக்கு. உலகில் எந்த மொழிக்காரர்களும் இப்படி ஒரு மாநாட்டை நடத்தியதில்லைன்னு பல திசைகளில் இருந்தும் வந்திருக்கும் தமிழறிஞர்கள் பரவசப்படுறாங்க.''’’

""இருக்காதே பின்னே. உயிருக்கு நிகரா தாய்மொழியை மதிக்கும் இனம் தமிழினம். தமிழுக் காக இதுவரை எத்தனை யோ மாநாடுகள் நடந் திருக்கு. கடைசியா தஞ்சை யில் நடந்த ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு உட்பட இதற்கு முன் நடந்த அத்த னை தமிழ் மாநாடுகளையும் தூக்கிச் சாப்பிடும் வகையில்... இந்த மாநாட்டைக் கலைஞர் மிகவும் ஆக்கப்பூர்வமாகவும் எதிர்காலத் தமிழ் வளர்ச்சிக்கு அடித்தளம் போடும் வகையிலும் நடத்துகிறார்னு பல நாட்டுத் தமிழறிஞர்களும் நெகிழ்ந்துபோய்ச் சொல்றாங்க. அதே சமயம் அவங்களுக்கு ஏதுவாகத் தங்கும் வசதியும் உணவு வசதியும் சரியா இல்லைங்கிற ஆதங்கம் இருக்கு. இருந்தாலும் தமிழுக்காக இப்படிப்பட்ட சின்னச் சின்ன அசௌகரியங்களை ஏற்றுக்கொள்வதில் தவறில்லைன்னு அவங்க நினைக்கி றாங்க. அது சரி கலைஞரின் மாநாட்டுப் பூரிப்பு எப்படி இருக்கு?''’

""மாநாடு, தான் எதிர்பார்த்ததைவிட மிகச்சிறப்பா நடப்பதில் அவர் ரொம்ப உற்சாகமா இருக்கார். தன் வாழ்நாளில் தான் செய்த சாதனைகளிலேயே மிகப்பெரிய சாதனையா இந்த செம்மொழி மாநாட்டைத்தான் நினைக்கிறார். எதிர்பார்க்காத அளவுக்கு திரண்ட கூட்ட மும்... உலகத்தின் எல்லாத் திசையிலும் இருந்து குவிந் திருக்கும் அறிஞர்கள் சேனையும் அவரை அளவுகடந்த பூரிப்பில் ஆழ்த்தியிருக்கு. மேலும் இருபது முப்பது வருடங் கள் வாழ்வதற்கான ’சார்ஜ்’ அவர் உடம்பில் ஏறியிருக் குன்னா பார்த்துக்கங்க.''’

""ஜெ’கூட்டணியில் இருக்கும் சி.பி.எம். இந்த மாநாட்டில் கலந்துகொண்டிருக்கு போலிருக்கே? மத்த கட்சிகள் எப்படி?''’’

""ஆமாங்க தலைவரே... சி.பி.எம். சார்பில் என்.வரதராஜனும் பாலபாரதியும் கோவை மாநாட்டில் கலைஞரை சந்தித்து சால்வை போர்த்தி வாழ்த்து தெரிவிச்சிருக்காங்க. கடைசிநாள் மாநாட்டில் கலைஞ ருடன் சி.பி.ஐ.கட்சித் தலைவர்களும் மேடை ஏறுறாங்க. இப்படி தன் கூட்டணியில் இருக்கும் ம.தி.மு.க. தவிர்த்த இந்த இரண்டு கட்சிகளும் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்வது ஜெ’வுக்கு சங்கடத்தை உண்டாக்கி யிருக்கு. இந்தக் கூட்டணிக்கு வெளியில் இருக்கும் தே.மு.தி.க. விஜயகாந்த் மாநாட்டில் கலந்துக் கலை. வெளியில் இருக்கும் இன்னொரு கட்சியான பா.ம.க. என்ன செய்யப் போகுதுங்கிற கேள்வி பரவலா இருக்கு.''’’

""டாக்டர் ராமதாஸிடம் பா.ம.க.வின் மற்ற தலைவர்கள் இது பற்றிக் கேட்டப்ப... கூட்டணி இன்னும் உறுதிசெய்யப்படாத சூழ்நிலையில் நான் கலந்து கொள்வது சரியா இருக்காது. அதனால் கோ.க.மணி கலந்துக்கட்டும்னு சொல்லியிருக்கார். மாநாட்டுக்கு பலத்த பாதுகாப்பு போலிருக்கே?''

""விழுப்புரத்தில் ரயில் தண்டவாளத்தில் குண்டு வெடித்ததால ரொம்பவே எச்சரிக்கையோடு இருந்தது காவல்துறை. ஆனா, இன்னமும் குண்டுவெடிப்புக்கு யார் காரணம்னு உறுதியா கண்டுபிடிக்க முடியலை. தமிழ்நாடு விடுதலைப்படை மீது சந்தேகம் திரும்பியது. அந்த அமைப்பினர், 1980-களில் ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரசுக்கு அரியலூர் பாலத்தில் குண்டு வைத்த போது, பொன்பரப்பி தமிழரசன் தலையில் ஒரு துண்டு கட்டிக்கொண்டு பக்கத்தில் இருந்த ஸ்டேஷனுக்குப்போய் அந்த ஸ்டேஷன் மாஸ்டர்கிட்டே, பாலத்தில் யாரோ குண்டு வைக்கி றாங்கன்னு சொல்லிட்டுப்போனார். ஸ்டேஷன் மாஸ்டரோ ஏதோ ஒரு வழி போக்கன் சொல்றாருன்னு நினைச்சிட்டு விட்டுட்டார்.''

""குண்டு வச்சதே அந்த அமைப் பினர்தான். அப்புறம் ஏன் அந்த அமைப் பைச் சேர்ந்த தமிழரசனே அது பற்றி ஸ்டேஷன் மாஸ்டர்கிட்டே சொல்லணும்?''

""தமிழ்நாடு விடுதலைப்படையின் நோக்கம், ரயிலைக் கவிழ்ப்பதோ உயிர்களைக் கொல்வதோ அல்ல. மக்கள் பிரச்சினைகளை நோக்கி அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கணும்ங்கிறதுதான். குண்டையும் வச்சிட்டு, அங்கேதான் வச்சிருக்காங்கன்னு சொல்றது மூலமா , தங்களோட செயல்பாட் டையும் காட்டிவிடமுடியும். ரயில்வே அதிகாரிகளை அலர்ட்டாக்கி விபத்தையும் தடுத்திட முடியும். இப்ப விழுப்புரம் சம்பவத்திலும் அதே மாதிரி யாராவது வந்து தகவலைச் சொல்லியிருப் பாங்கன்னும் ரயில்வே தரப்பு தான் அலட்சியப்படுத்தியிருக் கும்னு சொல்லப்படுது. இப்ப இந்தக் கோணத்திலும் விசார ணை போய்க்கிட்டிருக்குது.''

""அரசியல் செய்திகள் எந்தெந்தக் கோணத்தில் அலசப்படுது?''

""கோவையில் செம் மொழி மாநாடு நடந்துக்கிட்டி ருக்கிற நேரத்தில் அங்கிருந்து 100 கி.மீ தூரத்தில் இருக்கிற கொடநாட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஜெ, ஜூலை முதல் வாரம் சென்னைக்கு ரிட்டன் ஆகிறார். அவரோட முதல் அஜண்டாவே கோவில்விசிட், பூஜை, புனஸ்காரம் இதுதானாம். அதை யடுத்து, சட்டமன்றத் தேர்தலுக்கு ரெடி யாவது. அதற்காக பெரிய தொழிலதி பர்களிடம் நிதி வசூ லும் ஆரம்பிச் சிடிச்சி. முதல் கட்ட மா, விஜய் மல் லைய்யாகிட்டே யிருந்து ஒரு பெருந் தொகை வாங்க ணும்ங்கிறதுதான் திட்டமாம்.''

''அ.தி.மு.கவின் முன்னாள் எம்.எல்.ஏக்கள் வரிசையா தி.மு.கவில் சேர்ந்துக்கிட்டிருக்கிற நேரத்தில் கட்சியையும் கட்சிக்காரர்களையும் பலப்படுத்தும் நடவடிக்கைகளையும் எடுத்தாகணுமே?''

""தலைவரே... அ.தி.மு.கவில் எம்.பி. சீட் தரலைங்கிற வருத்தத்தில் இருக்கிறார் வடசென்னை அ.தி.மு.க பிரமுகர் வ.நீலகண்டன். அதனால் அவர் கூடிய சீக்கிரம் அறிவாலய ஜோதியில் சங்கமமாயிடுவாருன்னு தகவல் கசிவதால அவரை சமாதானப்படுத்தும் வேலையில் இறங்கியிருக்கும் சசிகலா ஆட்கள், நீலகண்டன் விஷயத்தில் கேம் ஆடும் வடசென்னை மா.செ. சேகர்பாபு மேல நடவடிக்கை எடுக்கணும்னும் வலியுறுத்திக்கிட்டிருக்காங்களாம்.''

""வன்னியர் சமுதாயத்தின் பெருமைகளை வலியுறுத்தும் புத்தக வெளியீட்டு விழாவில் சம்பந்திகள் வார்த்தை யுத்தத்தில் ஈடுபட்டாங்களாமே?''

""ஆமாங்க தலைவரே... அ.தி.மு.க வளர்மதி யோட கொழுந்தனாரான நடனகாசிநாதன் எழுதிய புத்தகம் அது. விழாவுக்கு தலைமையேற்ற காடுவெட்டி குரு பேசுறப்ப, 2011ல் அன்புமணியை முதல்வராக்கிக் காட்டுவோம்னு அவரை வச்சிக்கிட்டு சொன்னார். அப்ப அரங்கத்தில் இருந்த பா.ம.ககாரங்க, தி.முகவோட கூட்டணி உருவாகிக்கிட்டிருக்கிற நேரத்திலே இவர் ஏன் குட்டையை குழப்புறாருன்னு பேசிக்கிட்டாங்க. அவருக்கப்புறம் பேசிய காங்கிரஸ் எம்.பியும், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவருமான கிருஷ்ணசாமி... 1952ல் மெஜாரிட்டி இல்லாமல் காங்கிரஸ் திணறியபோது வன்னியர் தலைவர்களான ராமசாமி படையாச்சியாரும் மாணிக்கவேல் நாயக் கரும்தான் ஆதரவளித்து காங்கிரஸ் ஆட்சியமைய துணை நின்றாங்கன்னு சொன்னார்.''

""அதுதானே வர லாறு!''

""அதோடு, வன்னியர் சமுதாயத்திற்கு நிறைய நன்மைகள் செய்த கலைஞர், உள்இடஒதுக்கீட்டை யும் செய்து தருவாருன்னு சொன்னார். அந்த இரண்டு பேரோட பெயர்களையும் சொல்வதை ராமதாஸ் விரும்பமாட்டாரு. அது போல கலைஞருக்குப் பெருமை சேர்க்கிறதையும் அவர் விரும்பலை. அத னால அவர் பேசுறப்ப, வன்னியர் சமூகத்தை காங்கிரசிடம் ராமசாமி படை யாச்சியும் மாணிக்கவேல ரும் அடமானம் வச்சிட்டதா போட்டுத்தாக்கிட்டார். சம்பந்திகளின் வார்த்தை யுத்தத்தைப்பற்றித்தான் விழாவுக்கு வந்தி ருந்தவர்கள் பேசிக் கிட்டிருந்தாங்க.''

""செவ்வாய்க் கிழமையன்னைக்கு சென்னை உயர் நீதி மன்றத்தில் தமிழில் வக்கீல்கள் வாதாடி னாங்க. அதோடு, தலைமை நீதிபதி அனுப் பிய 5 பேர் குழு மதுரைக்குச் சென்று, போராடிய வக்கீல்களைப் பார்த்து பேசினாங்க. தமிழுக்குத் தடையில் லைங்கிறதால போராட்டம் முடிவுக்கு வந்தது.''

No comments:

Post a Comment