Saturday, June 26, 2010

புரிதலின்றி பிரியும் உறவுகள்!


shockan.blogspot.com

"தங்கள் பிள்ளைகள் பட்டப்படிப்பு படிக்க வேண்டுமென்று ஏழ்மை நிலையில் உள்ள பெற்றோரே பெரிதும் முயற்சிப்பதில்லை. ஆனால், வறுமையில் உழலும் சமுத்திரமோ தன் மனைவி பாண்டி ஈஸ்வரி படித்து பட்டம் பெறவேண்டும்' என இக் கல்லூரியில் சேர்த்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் மதுரை லேடி டோக் கல்லூரியே வியந்து பாராட்டிய சமுத்திரம் சோகம் அப்பிய முகத்தோடு நம்மைச் சந்தித்தார்.

""பொண்டாட்டிய படிக்க வச்சேன்ல... அவளுக்கு உலகம் புரிஞ்சுப் போச்சு. தளுக்கி மினுக்கி குஷியா வாழற வழி தெரிஞ்சுப் போச்சு. அதான் இனிமே புருஷன் எதுக்குன்னு என்னைக் கழட்டி விட்டுட்டா. 11 வருஷ குடும்ப வாழ்க்கைல எனக்குப் பொறந்த ரெண்டு பிள்ளைகளும் இப்ப தப்பான அவங்க அம்மா கிட்ட வளருது. எம்.ஏ. பட்டதாரியாகி, ஆசிரி யர் வேலை பார்த்த நான் இப்ப ஒரு வேலையும் இல் லாம சிவகாசி போலீஸ் ஸ்டே ஷன்ல கண்டி ஷன் பெயில்ல கையெழுத்துப் போட்டுட்டிருக் கேன். ஆமா சார்... மாமியாரை வெட்டிட் டேன்னு என்மேல கேஸ் போட்டுட்டாங்க'' என்று பெருமூச்சு விட்டவர்...

""கட்டுன பொண்டாட்டியே கை நீட்டி என்னை அடிக்கிறா. வாரத்துக்கு ஒருநாள்னு "அதை'க்கூட ரேஷனாக்கிட்டா. அதுவும் கசந்து இப்ப என்னை விட்டுட்டுப் போயிட்டா. அவ உருவத்துல, நடை, உடை, பாவனைல அப்படி ஒரு தலைகீழ் மாற்றம். ஒரு மலையாளியின் பிடியில் முழுநேர தொழிலாளி யாகிவிட்டாள். ஆஸ்திரேலியாவுக்கு அவளைக் கடத்தும் திட்டம் இருக்கு. இதை நான் தடுத்துருவேங்கிற கோபத்துல என்னைக் கொலை செய்ய கூலிப்படையை ஏவிவிட்டிருக்கா. என்னைக் குறிவைத்து கூலிப்படை பின் தொடர்வது குறித்து முதலமைச்சர் வரைக்கும் புகார் அனுப்பியிருக்கேன். மதுரையில் சொகு சான ஒரு விடுதியில் சிக்கியிருக்கும் அவள் அங்கிருந்து மீண்டு நல்வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும்'' என்று விக்கி விக்கி அழுதார்.

"படிக்க வைத்த கணவனை பரிதவிக்கச் செய்வாளா மனைவி?'

மனதுக்குள் உறுத்தலாக கேள்வி எழ... "தீர விசாரிப்பதே மெய்' என மதுரை பீபிகுளம் ஏரியாவில் உள்ள அந்த வீட்டை முதலில் நோட்டமிட்டோம். பிறகு, உள்ளே சென் றோம். பெண்கள் சிலர் நம்மை வரவேற்று அமரச் செய்தார்கள். டேவிட் என்ற முதியவரை அழைத்து வந்தார்கள். அவர் நம்மிடம் ""சலோம் என்ற பெயரில் மனவளர்ச்சி குன்றியோருக் காக நாங்கள் நடத்தும் தொண்டு நிறு வனம் இது. பாண்டி ஈஸ்வரி திருமண மானவள். அதனால், அவள் தங்கிப் படிக்க லேடி டோக் கல்லூரி அனுமதிக்க வில்லை. அக்கல்லூரியிலேயே இயங்கும் சுடர் நிறுவனத்தின் பரிந்துரையின் பேரிலேயே பாண்டிஈஸ்வரி இங்கு தங்கியிருக்கிறாள். அவளது வெளி நடவடிக்கைகள் குறித்தெல்லாம் நாங்கள் ஆராய முடியாது'' என்றார்.

தேர்வை முடித்துவிட்டு கல்லூரியிலிருந்து திரும்பிய பாண்டி ஈஸ்வரியை அங்கு சந்தித்தோம். குடும்பப் பாங்கான சாதாரண தோற்றத்தில் இருந்த அவர் ""மொதல்ல படிக்க வச்ச என் கணவரே அப்புறம் படிப்பைக் கெடுக்க நினைச்சாரு. அவரு சொல்லுற மாதிரி எங்கம்மா தப்பான வங்க கிடையாது. மாறி, மாறி அவர் கொடுத்த புகாரால் மதுரை தல்லாகுளம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி போலீஸ் ஸ்டேஷன்கள்ல விசாரணையைச் சந்திச்சு என் தரப்பு நியாயத்தை விளக்கியிருக்கேன். கணவன்ங்கிற முறை யில என்னைக் கேவலப்படுத்துற உரிமை அவருக்கில்லைன்னு விசாரணை பண்ணுன போலீஸ் ஆபீசர்கிட்ட அழுத்தமாச் சொல்லிட்டு வந்தேன். நான் தப்பானவ கிடையாது. நல்லவள்னு இன்னும் எத்தனை பேருகிட்டதான் நிரூபிக்கணுமோ தெரியலை. பிரிஞ்ச பிறகும்கூட என் நிம்மதியைக் கெடுக்கிற சைக்கோவா இருக்காரு. அந்த ஆளைப் பார்க்கணுமே... நல்லா நாலு கேள்வி கேட்கணுமே...'' என்றார் ஆதங்கத்துடன்.

சமுத்திரத்தை அழைத்து வந்து மனைவி பாண்டி ஈஸ்வரி யின் முன் அமரச் செய்தோம். "பழைய குப்பைகளைக் கிளறா தீர்கள். அதனால் ஒரு பலனுமில்லை. வீண் சந்தேகங்களுக்கு இடம் தராதீர்கள். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளுங்கள். குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொள்ளுங்கள்' என்று பேச்சைத் துவக்கி வைத்தோம்.

சமுத்திரமோ முந்திக்கொண்டு ""அநியாயத்தைக் கண்டால் நான் மனம் கொதிப்பேன்னு உனக்குத் தெரியாதா?'' என்று வாஞ்சையாகக் கேட்க... ""நான் பேசற ஒவ்வொரு வார்த் தைக்கும் என்னோட ஒவ் வொரு செயலுக்கும் தப் பர்த்தம் கண்டுபிடிக்கு றீங்க. சின்னச் சின்ன விஷயத்தைக்கூட பெரிசுபடுத்திக் கிட்டே இருக் கீங்க. உங்களை விட எனக்கு 14 வயசு கம்மி. என்னைவிட உசரத்துல நீங்க கம்மி. இந்தத் தாழ்வு மனப்பான்மை உங்ககிட்ட ரொம்ப இருக்கு. அசிங்க அசிங்க மாத் திட்டுனீங்க. என்னை அடிச் சீங்க. எத்தனை காலத்துக்குத்தான் விட்டுக் கொடுக்க முடியும்? எவ்வளவுதான் பொறுமை காக்க முடியும்?'' என்ற பாண்டி ஈஸ்வரியை இடை மறித்து ""நீயும்தான் என் னை அடிச்ச... உங்க குடும்பமே ஒண்ணு சேர்ந்து என்னை அடிச்சுச்சு. இப்ப கொலை வெறியோட திரியுது...'' என்று சமுத்திரம் அழ... ""எதையும் அழுது சாதிக்க நெனைக்கிறது ஒரு ஆணுக்கு அழகா? கணவன்- மனைவியோட அந்தரங்க விஷ யங்களைக்கூட முதலமைச்சர் வரைக்கும் கொண்டு போயிட் டீங்க. நல்ல மனசோட இப்ப நக்கீரன் பண்ணுற மாதிரி, இதுக்கு முன்னாலயும் ரெண்டு, மூணு கவுன்சிலிங்ல நாம உட்கார்ந்திருக்கோம். ஆனா ஒண்ணுசேர முடியலை. நீங்க மாறுவீங்கங்கிற நம்பிக்கை எனக்கில்லை'' என்று பாண்டி ஈஸ்வரி அழுத்தமாகச் சொல்ல... ""நான் வேணாம்னு நீயே முடிவெடுத்த பிறகு நான் என்ன பண்ண முடியும்?'' என்று கண் கலங்கினார் சமுத்திரம். பிறகு நம் பக்கம் திரும்பிய பாண்டி ஈஸ்வரி...

""தப்பானவளா இருந்தாத் தான் பயப்படணும். எனக்கு ஒரு பயமும் இல்ல. அடுத்தடுத்து படிக்கணும். நல்ல வேலைக்குப் போகணும். இந்தச் சமுதாயம் மதிக்கிற அளவுக்கு முன் னேறணும். அப்புறம் ஆஸ்திரேலியா என்ன? அமெரிக்கா, லண்டனுக்கு கூட வாய்ப்பிருந்தா போவேன். அடுக்கடுக்கா கற்பனையான குற்றச் சாட்டுகளை என் மேல சுமத்தி, சதா சந்தேகப் படற இவர் நிச்சயம் எனது வளர்ச்சிக்குத் தடையாத் தான் இருப்பாரு. அத னாலதான் இவர் வேண்டவே வேண்டாம்னு ஒரு முடி வெடுத்துட்டேன். அதற்கான சட்ட நடவடிக்கைகளை சீக்கிரமே எடுப்பேன்'' என படபட வென்று பேசி விட்டு சற்றே இமைகளை மூடினார்.

பிறகு முகத்தை துடைத்து விட்டு ""பாவம் சார் என் கணவர். என் மீது கொண்ட அதீத பாசத் தால்தான் என்னைத் தவறானவள் என்று சித்தரிக்க முயல்கிறார். இதுகூட என்னைவிட அவர் நேர்மையானவர் என்று காட்டிக் கொள்ளத்தான். என்னோடு வாழ வேண்டும், இல்லையென் றால் கேவலப்படுத்துவேன் என மிரட்டுவது... அவரை விட்டு நிரந்தரமாகப் பிரியும் நிலையை ஏற்படுத்தி விட்டது'' என்றார் தீர்க்க மாக.

பாண்டி ஈஸ்வரியின் இந்த நிலைப்பாடு சரியா? தவறா? வாசகர்களின் தீர்ப் புக்கே விட்டுவிகிறோம்.

No comments:

Post a Comment