Saturday, June 26, 2010

சாலையில் படுத்துறங்கிய வருங்கால ராணுவத்தினர்!


shockan.blogspot.com

பதினாறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர் களுக்கான ராணுவத் தேர்வு முகாமை முதல் முறையாக ராமநாதபுரத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். கடந்த ஒரு மாத காலமாக ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு ஆள் தேர்வு செய்யவிருப்பதை விதவிதமாய் பல ஊடகங்களின் மூலமும் விளம்பரம் செய்தனர்.

இதையெல்லாம் செய்தவர்கள்... ஆயிரக்கணக்கில் கலந்துகொள்ளும் இளைஞர்களுக்கு தங்குவதற்கு எந்தவித ஏற்பாடும் செய்யாமல், நாட்டைக் காக்கும் வேலைக்கு வரும் அவர்களை ரோட்டில் படுக்கவிட்டதுதான் பார்ப்பவர்கள் அத்தனை பேரையும் வேதனைப்பட வைத்தது.

14-ந் தேதியில் இருந்து 20-ந் தேதிவரை நடந்த இந்த ஆள் சேர்ப்பு முகாமில், சிப்பாய் டெக்னிக்கல், நர்சிங் உதவியாளர், சிப்பாய் பொதுப்பணி, சிப்பாய் தொழில்நுட்ப வியலாளர், சிப்பாய் கிளார்க், ஸ்டோர் கீப்பர் போன்ற பணிகளுக்கு தேர்வு நடந்தது. இதற்காக காரைக்கால், திருவாரூர், தஞ்சை, பெரம்பலூர் மாவட்டங்கள் உட்பட 16 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கிளம்பி வந்ததால், ராமநாதபுரம் நகரமே ஸ்தம்பித்துப்போனது. பல இளைஞர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரோடு வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் தங்குவதற்கு திண்டாடிப்போனார்கள்.

நம்மிடம் பேசிய ராமநாதபுரம் வழக்கறிஞர் ஒருவர், ""இளைஞர்கள் அதிகச் சம்பளமுள்ள சொகுசான வேலைக் குத்தான் பெரும்பாலும் ஆசைப்படுறாங்க. ஆனா ராணுவ வேலைங்கிறது அர்ப்பணிப்புடன் கூடியது. இந்த வேலைக்கு வருகின்றவர்களை நாம் தாங்க வேண்டும். ஆனால் பெரும்பாலானவர்கள் தங்க இடமில்லாமல் சாலையோரங் களிலும், கோயில் வாசல்களிலும், ரயில்நிலையங்களிலும் படுத்துக் கிடந்ததைப் பார்த்தபோது மனசுக்கு வேதனையாக இருந்தது. கட்சி மாநாடு, அரசு விழா என்றால் எத்த னையோ திருமண மண்டபங்களை பிடிக்கும் அதிகாரிகள் ராணுவ வேலைக்கு வந்த இளைஞர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. ராமநாதபுரத்தில் மொத்தமே 15 லாட்ஜ்கள் தான் உள்ளன. இதில் ஆயிரம் பேர்களுக்கு மேல் தங்க முடியாது'' என்று வருத்தப்பட்டார்.

இசக்கிமுத்து என்ற இளைஞர், ""நாங்க தூத்துக்குடியிலிருந்து வர்றோம். இண்டர்வியூ, டெஸ்ட் எல்லாம் முறையாதான் நடக்குது. எந்தப் பாகுபாடும் இல்லை. போலீஸ் தேர்வுல கூட சிபாரிசு அது இதுன்னு இருக்கும். இது பக்காவா இருந்தது. என்ன ஒரே கஷ்டம்னா அஞ்சுநாள் தங்க வேண்டியிருக்குது. எந்த லாட்ஜ்லயும் ரூம் கிடைக்கலை. குளிக்க, தங்க எந்த ஏற்பாடும் பண்ணலை'' என்றார் ஆதங்கமாய்.

கடலாடியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்ற இளைஞர், ""முன்னெல்லாம் ராணுவ வேலைக்கின்னா கோயமுத்தூருக்கோ திருச்சிக்கோ போகணும்னு சொல்வாங்க. அங்க உள்ள கூட்டத்துல நம்ம மாவட்டத்திலிருந்து போறவங்க போட்டி போட முடியாது. ஆனா இன் னைக்கு நம்ம ஊர்லயே நடக்குது. இருந்தாலும் வெளியூர்லயிருந்து வந்த வங்க ரொம்ப சிரமப்பட்டுட் டாங்க'' என்று வருத்தப்பட்டார்.

விருதுநகரிலிருந்து தன் மகனுக்குத் துணையாக வந்து கலெக்ட்ரேட் கேம்பஸில் தங்கியிருந்த முன்னாள் படை வீரரான வெள்ளையப்பன்... ""நான் எக்ஸ் சர்வீஸ்மேன்தான். என்னுடைய பிள்ளைகளும் ராணுவத்திலேயே பணி யாற்றணும்னு விரும்பினேன். இந்தி கத்திருந்தா ராணுவத்துல உயர் பதவிகளுக்கு சீக்கிரம் போகலாம். ஏன்னா, ராணுவ மொழியா இந்திதான் இன்னும் இருக்கு. மத்தபடி ஆள்தேர்வு முறையா நடத்துறாங்க. ராணுவத்துல தமிழர்களோட எண் ணிக்கை குறைவா இருக்கு. இதை நாம மாத்தணும். இதுக்கு தமிழக அரசு ராணுவ வேலை வாய்ப்பு பற்றி மக்களிடம் இன்னும் பிரச்சாரம் செய்யணும்'' என்றார். நம்மிடம் பேசிய ராணுவ ஆள் சேர்ப்பு துணை இயக்கு நர் ஜெனரல் பங்கஜ் சின்கா, ""ராணு வத் தேர்வு ராமநாதபுரத்தில் சிறப்பான முறையில் நடந்தது. அனைத்துத் தகுதியும் உள்ளவர்கள் எளிதாக தேர்வாகலாம். சமீபகாலமாக ராணுவத்தில் தமிழகத்தின் பங்கு குறைவாக உள்ளது. வெறும் 6 சதவீதம்தான்.

ஆரம்ப நிலையிலேயே 12 ஆயிரம் சம்பளம் கொடுக்கப்படுகிறது. நிறைய சலுகைகள் உள்ளன. மேலும் ராணுவ வீரர்கள் சிலர் குடும்பப் பிரச்சினை களால் தற்கொலை செய்துகொள்கின்றனர். அதை தடுப்பதற்கும் நாங்கள் ஆலோசனைகள் வழங்கு கிறோம்'' என்றார் நம்பிக்கையூட்டும் விதமாய்.

பல கஷ்டத்திற்கு இடையிலும் ஒருவழியாக ராணுவ ஆளெடுப்பு நடந்து முடிந்திருக்கிறது.

No comments:

Post a Comment