Thursday, June 24, 2010

வைத்தீஸ்வரன் கோயிலின் ஊழல் புராணம்!



shockan.blogspot.com

"கோயிலையே சுரண்டி சாப்பிட்டுக் கிட்டு இருக்கார் அந்த ’அகா சுகா’ முருகேசன். இவரை யாரும் தட்டிக்கேட்க மாட்டேங்கறாங்க. அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம்'’என கொந்தளிக்கிறார்கள் வைத்தீஸ்வரன் கோயில் ஊர்மக்களும் பக்தர்களும்.

நாகை மாவட்டம் சீர்காழி அருகே இருக்கும் வைத்தீஸ் வரன்கோயில்... நாடி ஜோதிடத்துக்கு பிரசித்தி பெற்ற ஊர். "புள்ளிருக்கும் வேளூர்' என இலக்கியங்களில் குறிக்கப்படும் இந்த ஊரில் எழுப்பப்பட்டுள்ள வைத்தியநாதசுவாமி திருக் கோயில் மிகத்தொன்மைச் சிறப்பைக் கொண்ட கோயிலாகும். இந்த கோயிலைத்தான் முருகேசன் என்கிற தனி நபர் சூறை யாடிவருவதாக கொந்தளிக்கிறார்கள் பலரும்.

என்ன நடந்தது?

பெரியார், அண்ணா, காமராஜர் கல்வி அறக்கட்டளையை நடத்திவரும் எம்.ஆர்.சுப்பிரமணியனே விவரிக்கிறார். “""இலக் கியங்களில் பாடப்பட்ட எங்கள் வைத்தீஸ்வரன்கோயில்... அங்கார கன் என்னும் செவ்வாய்க்கு உரிய தலம். இங்கு கோயில் கொண் டிருக்கும் சிவபெருமானான வைத்தியநாதரை முருகக்கடவுளே வந்து வழிபட்டதாக புராணங்கள் சொல்கிறது.. அதனால் எங்கள் வைத்தியநாதசுவாமி திருக்கோயிலைத் தேடி தினம் தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுவருகிறார்கள். இந்தக் கோயில் தருமை ஆதீனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. இந்த கோயிலுக்கு வருமானம் அதிகம். அதோடு 1000 ஏக்க ருக்கு மேல் சொத்துக்கள் இருக்கு. இதையெல்லாம் குறிவைத்து இந்தக் கோயிலுக்குள் கிளர்க்காக 92-ல் அடியெடுத்து வைத் தார் முருகேசன். இவர் தருமை ஆதீனகர்த்தரின் அண்ணன் மகன். இவருக்கு மாத சம்பளம் வெறும் 1,695 ரூபாய்தான். சாதாரண நிலையில் கோயிலுக்குள் அடி யெடுத்து வைத்த முருகேசன்... கோயில் நிர்வாகத்தை கையிலெடுத்துக்கிட்டு... கோயில் சொத்துக்களை எல்லாம் இஷ்டத்துக்கும் விற்று பணத்தைச் சுருட்ட ஆரம்பிச்சார். இதன் விளைவு இப்ப... கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் அவ ருக்கு சொத்துக்கள் சேர்ந்துவிட்டது. கோயில்தான் இப்ப ஓட்டாண்டியாகி விட்டது''’என்றார் காட்டமாய்.

""அப்படி என்னதான் கோயில் சொத்துக் களை இவர் இஷ்டத்துக்கு கையாண்டிருக்கிறார்? '' என்று அவரிடமே நாம் கேட்டபோது... கிறுகிறுக்க வைக் கும் அளவிற்கு ஒரு பட்டியலையே போட்டார் அவர்.

""அறநிலையத்துறையின் அனுமதியைப் பெறாமலே... பல கோயில் சொத்துக்களை வித்தி ருக்கார். உதாரணமா... சர்வே நம்பர் 2729-ஐக் கொண்ட கோயிலுக்கு 1 ஏக்கர் நிலத்தை சக்தி மரவாடி குமாருக்கு வித்துட்டார். அதே சர்வே நம்பர்ல இருந்த 7 ஏக்கரை சங்கர் பிள்ளைக்கிட்ட வித்துட்டார். இதேபோல் சர்வே எண் 20/1, 17/2, 17/3-ஐக் கொண்ட 12.3 ஏக்கரை ராஜி என் பவரிடம் வித்துட்டார். சென்னை தி.நகர் உஸ்மான் ரோட்டில் இருக்கும் தருமை ஆதீன பிரச்சார நிலைய இடத்தை... தனியார் ஒருத்தருக்கு நட்சத்திர ஓட்டல் கட்ட குத்தகை என்னும் பெய ரில் தாரை வார்த்துட்டார். இங்க இருக்கும் சிவ சாமி ஜோதிடருக்கு 100 குழியையும் சிவா என் பருக்கு 80 செண்ட்டையும் வித்துட்டார். இப்படி கோயிலுக்கு சொந்தமான இடங் களையெல்லாம் வித்த முருகேசன்... இங்க எங்க ஊரைச் சேர்ந்த ஜட்ஜ் ஒருத்தர் ஐயனார் கோயில் கட்ட அனுப்பிய ஒன்றரை லட்ச ரூபா செக்கை (எண்: 448962)... இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் இருக்கும் தன் அக்கவுண்ட்டில் போட்டுக்கிட்டார். (அக்கவுண்ட் எண்:7949) இப்படி அவர் செய்த மோசடிகளை யெல்லாம் பட்டியல் போடணும்னா... தனியா ஒரு புத்தகமே போட் டாகனும். வறுமையில் ஒருகாலத்தில் உழன்ற முருகேச னுக்கு இப்ப கும்பகோணம் நால்ரோட்டில் ஒரு பங்களா, சொந்த ஊரான உக்கடையில் நிலபுலன், வீடுகள் இருக்கு. இப்படி பல இடங்களில் பல பினாமிப் பெயர் களில் சொத்துக்கள் இருக்கு. இதையெல்லாம் ஒரு தனி குழுவைப் போட்டு அறநிலையத்துறை விசாரிக்கணும்''’என்கிறார் எரிச்சலாய்.





கோயிலில் இருக் கும் துரை குருக்களோ..... “""இந்த கோயிலின் மாத உண்டியல் வருமானமே லட்சக்கணக்கில் இருக் கும். சித்திரையில் நகரத் தார் எனப்படும் செட்டி நாட்டுக்காரங்களும் பங்கு னியில் சேலத்தார்களும் ஆயிரக்கணக்கில் வருவாங்க. எல்லோரும் வசதியானவங்க. ஏகத்துக்கும் கோயிலுக்கு டொனேசனை அள்ளிக்கொடுப்பாங்க. இந்த நிதியெல்லாம் எங்க போகுதுன்னே தெரியலை. கேட்க நாதியில்லை''’என்கிறார் வருத்தமாய்.

தி.மு.க. பேரூராட்சித் தலைவரான மோகன்ராஜோ ""ஊரைச் சுத்தியிருக்கும் 28 குளங்களும் கோயில் நிர்வாகத் தின் கீழ்தான் இருக்கு. கோயில் கழிவுகளை அதில் கலக்க விட்டு ஊரை நாற வைக்கிறார் முருகேசன். கோயிலுக்குள்ளேயே இருக்கும் அழகான திருக்குளத்தில்.. மீன்களுக் குன்னு சொல்லி மாட்டு இறைச்சியையும் அழுகிய இறைச்சி களையும் போட்டு சுகாதாரக் கேட்டை உண்டுபண்றார். இவரை ஆதீனமும் கண்டுக்கலை. அறநிலையத் துறையும் கண்டுக் கலை. மக்கள் கொந்தளிப்பில் இருக்காங்க. அவங்களை நாங்க தான் சமாதானப்படுத்திக்கிட்டு இருக்கோம்''’என்றார் ஆதங்கமாய்.

கோயிலுக்கு வந்த பக்தர்களோ ""கோயில் நிர் வாகம் ஒரு விடுதி வசதியையோ... கழிவறை வசதியையோ வர்றவங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கலை. குழந்தை குட்டிகளை வைத்துக் கொண்டு தவிக்க வேண்டி யிருக்கு''’என்கிறார்கள் கொதிப்பாய்.

இந்தக் குற்றச்சாட்டுக் களுக்கெல்லாம் நாம் முருகேசனிடமே விளக்கம் கேட்ட போது “""நான் ரொம்ப பிஸியா இருக்கேன். இப்ப உங்களோட பேசமுடியாது. ஃபிரீயா இருக்கும்போது உங்களைக் கூப்பிடுறேன்''’என்று முடித்துக் கொண்டார்.

இந்தப் புகார்கள் குறித்து மயிலாடுதுறையில் இருக்கும் இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் பொன்.செல்வராஜிடம் நாம் கேட்டபோது “""அந்த முருகேசன் மீது ஏகப்பட்ட புகார்கள் எங்களிடமும் வந்து குவிந்திருக்கிறது. இது தொடர்பாக அங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையிலேயே முரு கேசனை விசாரித்து... அதன் பேரில் உரிய நடவடிக்கையை விரைவில் எடுப்போம்''’என்றார் அழுத்தமாக.

பழமை வாய்ந்த ஒரு திருக்கோயிலை ஒரு தனி மனிதர் எப்படி இஷ்டத்துக்கும் ஆட்டிப் படைக்கிறார்? சுரண்டுகிறார்?

No comments:

Post a Comment