Thursday, June 24, 2010

மனிதா... மனிதா...!

shockan.blogspot.com

நாமோ அடுத்தவர்களோ தங்களது கவனத்தை தவற விடும்போதும், அடுத்த மனிதர்கள் மீது அக்கறைப் படாத போதெல்லாம் ஏதோ ஓர் அசம்பாவிதம் நிகழ்ந்து விடுகிறது. அப்படியான ஓர் அசம்பாவித சம்பவம்தான் சேலம் இரயில் நிலையத்தில் நடந்தேறியிருக்கிறது; நடந்தேறிக் கொண்டுமிருக்கிறது.

யாரும் அக்கறைப்படாத அந்த அடுத்த மனிதன் பெயர் ஜினில். கோவை கங்கா ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் செய்து ஐ.சி.யூ.வில் கிடத்தப்பட்டிருக்கும் ஜினில் நம்மிடம் சேலம் இரயில்வே நிலையத்தில் நடந்ததை வலியோடு சொல்லத் தொடங்கினான்... ""எனக்கு சொந்த ஊரு கேரளாங்க சார். நான் பெரம்பலூர்ல இருக்கற ஒரு காலேஜ்ல பி.சி.ஏ. படிச்சுட்டு இருக்கறேன். வீட்ல ஒரு விசேஷம் வச்சிருந்ததால அம்மாவும் அப்பாவும் லீவு போட்டுட்டு வாப்பான்னு சொன்னாங்க. அவுங்க கூப்புடுறாங்களேன்னு ரெண்டு நாள் லீவு போட்டுட்டு கேரளாவுக்கு போக சேலம் இரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தேன். வந்து நின்ன கொஞ்ச நேரத்துக்கெல்லாம் ட்ரெயின் வந்துருச்சு.

யாரோ ஒருத்தர் ட்ரெய்ன்ல சீட் புடிக்கிறதுக்காக ஓடி வந்து என் மேல மோதிட்டாரு. செல்போன் பேசிட்டு வந்த நான் பேலன்ஸ் இல்லாம இரயில் பெட்டிக்கும் ப்ளாட் பார்முக்கும் இடையில இருந்த கேப்புல விழுந்துட்டேன்.

என் ரெண்டு கால் மேல ட்ரெயின் வீல் ஏறி கால் ரெண்டும் சொத சொதன்னு ஆயிருச்சு. இரத்தம் கொட்ட கொட்ட காப்பாத்துங்க காப்பாத்துங்கன்னு கதறினேன்.

என்னோட கதறல கேட்டு ட்ரெயின்ல வந்த ஏதோ காலேஜ் பசங்கதான் என்னைய தூக்கிட்டு இரயில்வே ஸ்டேஷன்ல இருக்கற ஆர்.பி.எஃப். ஓ.பி.க்கு கொண்டு போனாங்க. அங்கயிருந்த போலீஸ்காரர் ஒருத்தர்கிட்ட சீக்கிரமா ஆம்புலன்ஸ கூப்புடுங்க சார்னு காலேஜ் பசங்க சொல்ல... அவரும் கூப்பிட்டாரு.

என் செல்போன்ல இருந்த எங்கப்பா நம்பருக்கு போன் போட்டு "உங்க பையனுக்கு ஒரு சின்ன ஆக்ஸிடெண்ட். சேலம் ஜி.ஹெச்.சுக்கு கொண்டு போறாங்க. பயப்படாம வாங்க'ன்னு சொல்லிட்டுத்தான் காலேஜ் பசங்க கிளம்பி னாங்க.

அவுங்க போனதுக்கப்புறம் கிட்டத் தட்ட ரெண்டு மணி நேரமா ஆம்புலன்ஸ் வரவேயில்லை. வலி தாங்க முடியாம போலீஸ்காரர்கிட்ட "சார்... எவ்வளவு பணம் வேணாலும் தர்றேங்க சார். வலி தாங்க முடியலை'ன்னு அழுதேன். "108-க்கு போன் பண்ணிட்டேன் தம்பி நான் என்ன பண்றது'ன்னு அவுரு சொன்னாரு.

இடையில எங்கப்பா போன் போட்டு போன் போட்டு இன்னும் ஆம்பு லன்ஸ் வர்லியா சாமீன்னு அழ ஆரம்பிச் சிட்டாரு. அதுக்கப்புறம் நான் கெஞ்சுனது னால போலீஸ்காரரே திரும்பவும் 108-க்கு போன் போட்டார். அதுக்கப்புறம்தான் 108 ஆம்புலன்ஸ் வந்துச்சு. சேலம் ஜி.ஹெச்.சுக்கு கொண்டு போனபோது டாக்டர்ஸ் பர்ஸ்ட் எய்டு பண்ணி விட்டாங்க. இங்க பெரிசா ஸ்பெஷாலிட்டி இல்லை. சீக்கிரமா கோயமுத்தூருக்கு போய் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கப்பான்னு டாக்டர்ஸ் சொன்னதால கோயமுத்தூருக்கு 108 ஆம்புலன்ஸ்ல கொண்டு போனாங்க.

எங்கப்பா போன் பண்ணி "கங்கா ஆஸ்பிடல்ல அட்மிட் ஆயிருப்பா. கோயமுத்தூர்ல இருக்கற நம்ம சொந்தக்காரங்க கங்கா ஆஸ்பிடல் முன்னால நின்னுட்டு இருக்கறாங்க'ன்னு சொன்னதால இங்க அட்மிட் ஆனேன்.

ஆஸ்பிடலுக்கு ஓடோடி வந்த எங்கப்பா ஒரு கால் எடுக்கப்பட்ட நிலையிலதான் என்னையப் பார்த்தாரு. ஒரு மணி நேரத்திற்கு முன்னால கொண்டு வந்திருந்தா இன்னொரு காலயும் காப்பாத்தியிருக்கலாம்னு டாக்டர்ஸ் சொல்றாங்க'' என்ற ஜினில் ""ஆம்புலன்ஸ்க்காக ரெண்டு மணி நேரம் காத்துக் கிடந்தேன் சார்... சிரத்தையெடுத்து அந்த போலீஸ்காரரோ இல்லை யாராவதோ ஆம்புலன்ஸை சீக்கிரமாக வரவழைத்திருந்தால் என் இன்னொரு கால...'' என்னும்போதே நா தழு தழுக்க கண்கள் கலங்குகின்றன.

அவன் அப்பாவான ஆண்டனியோ... ""சின்ன வயசுல இருந்தே கிரிக்கெட், ஃபுட்பால்னு சாப்புடாம கொள்ளாம ஓடி ஓடி விளையாடிட்டு இருப்பவன் இப்படிக் கிடக்குறானே. இப்ப வரைக்கும் பையனுக்கு இப்படி ஆனது இவன் அம்மாக்கு கூடத் தெரியாது. தெரிஞ்சுதுன்னா தாங்க மாட்டாளே...'' என்கிறார் பரிதாபமாய்.

""இந்த சேலம் ரயில்வே நிலையத்தில் இப்படி நடப்பது இது ஃபர்ஸ்ட் டைம் இல்லீங்க... இந்த ஒன்றரை மாதத்தில் இது நாலாவது சம்பவம்ங்க... ஒரு முஸ்லிம் லேடி ட்ரெயின்லயிருந்து லக்கேஜ் எல்லாம் எடுத்து வச்சிட்டிருக்கும் போது ட்ரெயின் கிளம்ப... பர்தா படிக்கம்பியில மாட்டி இதே கேப்புல விழுந்து அந்தம்மா ஸ்பாட் அவுட் ஆயிட்டாங்க.

அடுத்தடுத்து ரெண்டு பசங்க கிளம்பிட்டிருந்த ட்ரெயின்ல ஓடி வந்து ஏறும் போது படியில கால் வழுக்கி கேப்புக்குள்ள விழுந்து ரெண்டு பேருமே ஸ்பாட் அவுட்தான். இவ்வளவு மர ணம் நிகழ்கிறது பேசன்ஜரோட அஜாக்கிரதை ஒரு காரணமா இருந்தாலும் ப்ளாட்பார்முக் கும் ரயில் படிக் கட்டுக்கும் இடையில் இவ்வளவு இடைவெளி இருக்கறதாலதான் பேசன்ஜர்கள் மரணம் நேருதுன்னு பல பேர் புகார் சொல்லியும் இரயில்வே நிர்வாகம் கண்டுக்கவே யில்லை'' என்கிறார்கள் சேலம் ரயில் நிலையத்து கடைக்காரர்கள்.

இதுகுறித்து ரயில்வே நிர்வாகத்தினரிடம் கேட்டபோது... "கவனத்தில் கொள்கிறோம். முடிந்தவரை சரி செய்யப் பார்க்கிறோம்' என்ற சம்பிரதாய வார்த்தைகளையே உதிர்க்கி றார்கள்.

ஆனால் சேலம் சமூக சேவகியான சிஸ்டர் செலின்... ""ரயில்வே நிர்வாகமும் சரி... ரெண்டு மணி நேரமாய் கால்கள் நசுங்கிக் கிடந்த அந்த இளை ஞனை ஆம்புலன்ஸுக்காக காக்க வைத்த அந்த போலீஸ்காரரும் சரி தங்கள் கடமையை செய்திருந்தால் அந்த இளைஞனை முன்னைப் போல் நடக்க வைத்திருக்கலாம். உரிய நிவாரணத்தை ரயில்வே நிர்வாகம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் போராட்டம் நடத்துவோம் '' என்கிறார் கொதிப்பாய்.

சேலம் ரயில்வே இன்ஸ்பெக்டர் பாபுவிடம் பேசியபோது... ""நடந்த சம்பவம் என் கவனத்துக்கு வந்தது. மிகவும் வேதனையான விஷயம்தான். சம்பவ நாளில் பணியில் இருந்த போலீஸ்காரர் யார் என்பதை தெரிந்து கொண்டு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்போம் '' என்கிறார் உறுதியாய்.

சேலம் ரயில்வே நிர்வாகம் பயணிகளின் வசதியை முதன்மை யாகக் கருதி பயணிகளின் தேவை யை பூர்த்தி செய்ய வேண்டும். அதைத்தான் கால்கள் நசுங்கிக் கிடக்கும் பரிதாப இளைஞன் ஜினில் மட்டுமல்ல... அனைத்துப் பயணிகளின் சார்பாய் நாமும் அன்போடு வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment