Saturday, June 26, 2010

ஜனாதிபதி விருது புறக்கணிப்பு!


shockan.blogspot.com
இனிமேல், எந்த ஊராட்சி மன்றத் தலைவரும், நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு ""எனக்கு நிர்மல் புரஷ்கார் விருது கிடைத்திருக்கிறது. டில்லிக்குச் சென்று, பாராளுமன்ற மைய மண்டபத்தில், ஜனாதிபதி யிடம் பெறப் போகிறேன்!'' என்று சொல்லி பெருமைப்பட முடியாது.

அத்தனை சாலைகளும் சிமெண்டுச் சாலைகள். கழிவுநீர்க் கால்வாய்கள், மரங்கள், தேவையான இடங்களில் குப்பைத் தொட்டிகள், அத்தனை வீடுகளிலும் கழிவறைகள் -இப்படி முழுச் சுகாதாரத்தைப் பேணும் ஊராட்சிமன்றத் தலைவ ருக்கு நிர்மல் புரஷ்கார் விருதினை வழங்குவார் குடியரசுத் தலைவர்.

இந்த விருதினைப் பெறுகின்ற ஊராட்சிமன்றத் தலைவர்கள், இதை மிகப்பெரிய கௌரவமாக, பொக்கிஷமாக கருதினார்கள்.

அப்படிப்பட்ட புரஷ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 19 ஊராட்சிமன்றத் தலைவர்களை, நெல்லை மாவட்டம் வி.கே.புரத்தில், சபாநாயகர் ஆவுடையப்பன் கலந்து கொண்ட இலவச டி.வி. வழங்கும் விழாவுக்கு அழைத்திருந்தார்கள். 8 பேர் வந்து சபாநாயகரிடம் "புரஷ்கார் விருதினை' பெற்றுக் கொண்டார்கள். 11 பேர் புரஷ்கார் விருதினைப் புறக்கணித்து விட்டார்கள்.

சபாநாயகர் தரும் புரஷ்கார் விருதினை புறக்கணித்துவிட்ட கடை யம் ஒன்றியம் முதலியார்பட்டி ஊராட்சிமன்றத் தலைவரான பஸ்லூர் ரஹ்மான் ஆதங்கத்தோடு நம்மிடம்..

""இந்தக் கௌரவமான விருதை குடியரசுத் தலைவர் கரங்களால் வாங்க ணும்கிறதுக்கு எவ்வளவு மெனக்கெட் டோம்... அரசு கொடுக்கிற மானியம் போதாமல், என் சொந்தப் பணம் 2 லட்சத் தைப் போட்டு முழுச் சுகாதாரக் கிராமமாக மாற்றினேன். என்னமோ தெரியலை... இனிமே ஜனாதிபதி தரமாட்டாங்க. அந்தந்த மாநிலத்தின் கவர்னரே தருவார்னு சொன்னாங்க. கொஞ்சம் மனத்தாங்கல் ஏற்பட்டாலும் கவர்னர் கொடுக் கிற விருதாச்சே என்ற சந்தோஷம் ஏற்பட்டது. கடைசியா பார்த்தா இலவச டி.வி. விழாவுக்கு வந்து சபாநாயகர்ட்ட வாங்கிக் கோனு சொல்லிட்டாங்க. இலவச டி.வி. பெட்டி வாங்கும் வரிசையில் நின்று "நிர்மல் புரஷ்கார்' விருதி னைப் பெற மனம் வரவில் லை. அதான் புறக்கணித்து விட்டோம்!'' விரக்தியோடு சொன்னார் பஸ் லூர் ரஹ்மான்.

இதைப் பற்றி நெல்லை மாவட்ட ஆட்சியர் ஜெயராமனிடம் கேட்டோம்.

""கடந்த ஆண்டு வரை நிர்மல் புரஷ்கார் விருதை குடி யரசுத் தலைவர்தான் வழங்கினார். தற்போது கவர்னர் அல்ல மத்திய- மாநில மக்கள் பிரதிநிதிகளை வைத்து வழங்கலாம் என்று முடிவெடுத்ததால் சபாநாயகரைக் கொண்டு கொடுக்க ஏற்பாடு செய்யப் பட்டது!'' என்றார் அவர்.

முழு சுகாதாரச் செழுமை பெற்ற ஊராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கு கிடைத்த மகத்தான விருது, தற்போது மரியாதையை இழந்துவிட்டதாகவே கிராம மக்களும் கருதுகின்றனர்.

No comments:

Post a Comment