Saturday, June 26, 2010

தாதாக்களுக்கு ஆஜரான வக்கீல் கைது!


shockan.blogspot.com
நீதிக்காக வாதாடவேண்டிய வழக்கறிஞர்களில் சிலர்... க்ரைம் பிரைனாக செயல்படுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டுக் குரல்... அங்கங்கே ஒலித்துக்கொண்டிருக்கும் நிலையில்...

க்ரைம் பிரைனாக இருந்தார் என்று காரணம் காட்டி.. சென்னை எழும்பூர் கோர்ட் அருகே ரவுடி சின்னாவோடு இருந்த வழக் கறிஞர் பகத்சிங்கையும் போட்டுத்தள்ளியது ஒரு கும்பல். இது கருப்புக்கோட் தரப்பை அண்மை யில் அதிரவைத்த திகில் சம்பவம்.

இப்படிப்பட்ட விபரீத சூழலில்.... குற்றவாளிகளுக்கு க்ரைம் பிரைனாக இருந்தார் என்ற அதிரடிக் குற்றச்சாட்டின் பேரில்... திருச்சியின் பிரபல வழக்கறிஞரான புனிதனைக் கைது செய்து... வழக்கறிஞர் தரப்பைத் திகைக்க வைத்திருக்கிறது தஞ்சை போலீஸ்.

முட்டை ரவி, குணா, ரோக்கு, பன்னி சேகர், பன்னி பெரியசாமி, கொக்கி ஜேம்ஸ், நெட்டை ஜேம்ஸ், பிச்சைமுத்து போன்ற திருச்சி பகுதியில் பிரபல திகீர் பகீர் தாதாக் களுக்கு வக்கீல் என்ற முறையில் பிரபல மானவர்தான் இந்தப் புனிதன். பார் அசோசி யேசனே குறுக்கே நிற்கும் விவகாரங்களிலும்... தயங்காமல் வரிந்துகட்டிக் களம் இறங்குவது இவரது ஸ்பெஷாலிட்டி.

ரியல் எஸ்டேட் விவகாரம் தொடர்பான மோதலில்... கீரனூர் வக்கீல் கார்த்திகேயன்... படுகொலை செய்யப்பட்டார். இதில் அரிவாள் தூக்கிய நாகேந்திரனுக் காக... எந்த வக்கீலும் ஆஜராகக் கூடாது என்று வக்கீல்கள் சங்கம் தீர்மானம் போட்டது. இருந்தும் இதுபற்றிக் கவலைப் படாமல் நாகேந்திரனுக்காகவும் கருப்பு கோட்டை மாட்டினார் புனிதன்.

இதேபோல் 76 வயது குற்றவாளி ஒருவர், அஜ்மல் என்கிற வக்கீ லைக் கோர்ட்டில் வைத்தே தன் காலணியால் தாக்க... இதிலும் வழக்கறி ஞர்கள் எதிர்ப்பையும் மீறி... 76-க்காக ஆஜராகி கோர்ட் தரப்பில் சலசலப் பை புனிதன் ஏற் படுத்தினார்.

இப்படி சர்ச்சைக்குரிய வழக்கறிஞ ரான புனித னைக் குறி வைத்து... தஞ் சையில் இருந்து திருச்சிக்குப் புறப் பட்டு வந்த ஒரு போலீஸ் டீம்... கண்ட் டோன்மெண்ட் பகுதியில் இருக்கும் அவரது வீட்டை அதிகாலையில் முற்றுகையிட்டது. "கொலை முயற்சிக்கு ஆலோசனை வழங்கினார்... சதித்திட்டம் தீட்டினார்' என்ற புகாரை வாசித்து அதிரடியாக அவரைக் கைதுசெய்ய... பரபரப்பு பற்றிக்கொண்டிருக்கிறது.

என்ன நடந்தது?

தஞ்சை மாவட்ட திருக்காட்டுப்பள்ளி அருகே இருக்கும் பவனமங்கலம் கிராமத்தில் பொன்னியம்மன் கோயில் நிலத்தை ஏலம் எடுப்பது தொடர்பான பிரச்சினையில்... ஊர்க்காரரான ரத்தினகுமார் அரிவாளால் வெட்டப்பட்டார். இது தொடர்பாக பிரகாஷ், முத்துக்குமார், கணேசமூர்த்தி, சேகர், ரமேஷ் உள்ளிட்ட கும்பலை போலீஸ் வளைத்தது. உயிர் பிழைத்த ரத்தினகுமாருக்கு... கைகாலெல்லாம் ஏகப்பட்ட வெட்டுகாயம்.

இந்தப் பிரச்சினையில்தான் வழக்கறிஞர் புனிதன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த தாக்குதல் நிகழ்ச்சிக்கும் வழக்கறிஞர் புனிதனுக்கும் என்ன தொடர்பு?

பொன்னியம்மன் கோயில் நிர்வாகியான சந்திரசேகரன் சொல்கிறார்... ""“எங்க கோயில் நிலத்தை வருசா வருசம் ஏலம் விடுவோம். போன தடவை 3,100 ரூபாய்க்கு பிரகாஷ் ஏலம் எடுத்தார். அதே நிலத்தை இந்த வருடம் குணசேகரன் என்பவர் 7,100 ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். இருந்தும் பிரகாஷ் குணசேகரன்கிட்ட இடத்தை விட்டுக்கொடுக்க மறுத்தார். இது சம்பந்தமா பேச்சுவார்த்தை நடந்தது. அப்ப.. தி.மு.க. பிரமுகரான ரத்தினகுமார்... ஏலம் எடுத்த குணசேகருக்கு இடத்தை விட்டுக்கொடுப்பதுதானே முறைன்னு நியாயம் பேசினார். இதனால் கோபமான பிரகாஷ் டீம்.... ரத்தினகுமார் ஏலம் எடுத்த மீன் வளர்ப்புக் குளத்தில் விஷம் கலந்து மீன்களை சாக அடித்தது. இருந்தும் ரத்தினகுமார்... குணசேகருக்காக குரல்கொடுத்தபடியே இருக்க... இதில் ஏகக்கடுப்பான பிரகாஷும் அவர் ஆளுங்களும்... வயல்ல தண்ணீர் பாய்ச்சிக்கிட்டு இருந்த ரத்தினகுமாரை சுத்திவளைச்சி அரிவாளால சரமாரியா வெட்டிட்டு ஓடிட்டாங்க. இந்த வழக்கு தொடர்பா முதல்ல 4 பேர் போலீஸ்ல ஆஜரானாங்க. அதில் ரெண்டுபேரை புனிதன் ஜாமீன்ல எடுத்தார். மேலும் இரண்டுபேரையும் அவர் ஜாமீனில் எடுக்க முயற்சித்தார். மேலும் 4 குற்றவாளிகளுக்கு புனிதன்.. பாதுகாப்பு கொடுத்திருந்தார். இதை போலீஸ்ல சொன்னோம். இதன் பிறகுதான்... புனிதன் இருக்கும் தைரியத்தில்தான்... அந்தக் கும்பல் ரத்தினகுமாரை வெட்டிய விஷயமே போலீஸுக்குத் தெரிஞ்சிது. இது சம்பந்தமா விசாரணை செய்த இன்ஸ்பெக்டருக்கு 3 தடவைக்கு மேல வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் புனிதன். இதில் எரிச்சலான இன்ஸ்பெக்டர்... புனிதன் சதித் திட்டம் தீட்டியது விசாரணையில் தெரிய வந்ததுன்னு எஃப்.ஐ.ஆரில் எழுதிவச்சிட்டு டிரான்ஸ்பரில் போய்ட்டார். அவர் எழுதியதுதான் இப்ப வேலை செஞ்சிருக்கு''’என்று முடித்துக்கொண்டார்.

ரத்தினகுமாரோ ""ஏலம் எடுத்த குணசேகர்ட்ட நிலத்தை ஒப்படைங்கன்னு சொன்னது தப்பா? உடனே புனிதன்கிட்ட பிரகாஷ் போயிருக்கார். "போய் பொலி போட்டுட்டு வாங்கடா... நான் பார்த்துக்குறேன்'னு அவர் சொல்ல... இதன் பிறகுதான் அவங்க என்னைத் தாக்குனாங்க. அரிவாளால் என்னை வெட்டியபிறகு அதே ஸ்பாட்ல இருந்து... புனிதனுக்கு அந்த கும்பல் தகவல் கொடுத்தது'' என்கிறார்.

திருவையாறு நீதிமன்ற வளாகத்தில் நாம் பார்த்த வழக்கறிஞர் புனிதனோ, ""ரத்தினகுமார் மட்டுமல்ல. பிரகாஷும் குணசேகரும் கூட தி.மு.க. காரங்கதான். இருந்தும் அமைச்சர் பழனி மாணிக்க மும் அவர் தம்பி ராஜ் குமாரும் பிரஷர் கொடுத்து தான் என்னைக் கைது பண்ணவச்சிட்டாங்க. ஒரு வழக்கறிஞரா குற்றம் சாட் டப்பட்டவங்களுக்கு நான் ஆஜராவது தவறா?. இந்த விவகாரத்தை சட்டப்படி நான் எதிர்கொள்வேன்''’என்றார் கொஞ்சமும் அசராமல்..

காவல் துறையின் கருத்தை அறிய எஸ்.பி. செந்தில்வேலனை சந்தித்தோம். அவரோ, ""இதை டி.எஸ்.பி. அமித்குமார் தான் விசாரிக்கிறார். அவரிடமே இது பற்றிக் கேளுங்கள்''“என ஒதுங்கிகொண்டார்.

டி.எஸ்.பி.அமித்குமாரையும் நாம் விடவில்லை. நிதானக்குரலில் பேச ஆரம்பித்த அவர், ""சாட்சிகளை விசாரிச்சப்ப... வக்கீல் புனிதன் தான் இந்தத் தாக்குதலுக்கு ஐடியாக் கொடுத்தார்னு தெரிஞ்சிது. அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் இது. மற்றபடி எங்களுக்கு பிரஷர் என்று சொல்வதெல்லாம் தவறான தகவல்''’என்றார் புன்னகையோடு.

தற்போது வழக்கறிஞர் புனிதனை ஆதரிப்பதா? கூடாதா? என விறுவிறுப்பாய் விவாதம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் வழக்கறிஞர்கள்.

1 comment:

  1. மிகவும் தவறான தகவல். போலீஸ் உண்மையான குற்றவாளிகள் மீது மட்டுமே வழக்கு பதியுமானால், தவறான நபர்களுக்கு முன்னிலையாவது என்ற கேள்விக்கே இடமற்றுப்போகும். எனக்கு எதிராக எந்த சாட்சியமும் இல்லை என்று விடுவிக்கப்பட்டேன்.

    ReplyDelete