Wednesday, June 23, 2010

வங்காளப் பெண்ணை மணக்கிறார் மேனகா மகன் வருண் காந்தி


shockan.blogspot.com

டெல்லி : இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி- மேனகா காந்தி தம்பதியின் ஒரே மகனான வருண் காந்திக்கு, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண்ணை நிச்சயம் செய்துள்ளனர். இவர்களின் திருமணம் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

இந்திரா காந்தியின் பேரனான வருண் காந்தி பாஜக எம்.பியாக உள்ளார். கட்சியின் தேசியச் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். ராகுல் காந்திக்கு எதிராக பாஜகவால் வளர்க்கப்பட்டு வரும் வருண் காந்திக்கு தற்போது திருமணம் நிச்சயமாகியுள்ளது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த யாமினி ராய் சவுத்ரியை மணக்கவுள்ளார் வருண் காந்தி. இவர் டெல்லியில் வசித்து வருகிறார். இது காதல் திருமணம் என்று கூறப்படுகிறது. காரணம், யாமினியை கடந்த 4 வருடங்களாக வருணுக்குத் தெரியுமாம்.

டிசம்பரில் திருமணம் நடைபெறும் எனத் தெரிகிறது. இருப்பினும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மகன் திருமணம் நடக்கப் போவதை உறுதிப்படுத்தியுள்ளார் மேனகா காந்தி. மேலும், தனது வருங்கால மருமகளுக்காக வாரணாசி சென்று பட்டுப் புடவைகளையும் அவர் வாங்கியுள்ளார்.

No comments:

Post a Comment