Sunday, July 25, 2010

ஆதித்யா கொலை வழக்கு! வெளிவராத அதிர்ச்சித் தகவல்கள்!


ஜூலை-18. நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில்... சென்னை பேருந்துகள் வந்து நிற்கும் இடத்தில் ஒரு மர்ம சூட்கேஸ் பெட்டி கிடந் திருக்கிறது. ஈக்கள் வேறு மொய்த்துக் கொண்டிருந்ததால்... அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் வலுத்தது. அடுத்த நிமிடமே அருகிலுள்ள கடைக்காரர் கள் நமக்கு தகவல் கொடுக்க விரைந்து சென் றோம். அருகிலுள்ள வெளிப்பாளையம் காவல் நிலையம் போலீஸாரும் வர... பரபரப்பு தொற்றிக் கொண்டது. வெடி குண்டு இருந்தால் என்ன செய்வது என்று போலீஸார் அஞ்சி நிற்க... "ஈக்கள் மொய்ச் சிக்கிட்டிருக்கு நிச்சயமா வேறு ஏதோ இருக்கணும்' என்றபடி போலீஸார் முன்னிலையிலேயே சக பத்திரிகையாளர்களுடன் அந்த பெட்டியை தூக்கிக்கொண்டு போய் ஓரமாய் வைத்தோம். சூட்கேஸ் அளவுக்கதிகமான வெயிட்டாக இருந்ததால் சூட்கேஸின் "சிப்'பை அவிழ்க்காமல் நகராட்சி ஊழியரை வைத்து பிளேடால் கிழித்து சூட்கேஸை திறந்தோம். இதயத் துடிப்பும் அப்படியே நின்றுவிட்டது போல்தான் இருந்தது. காரணம்... முகத்தில் பாலித்தீன் கவரால் இறுக கட்டப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் உடல்தான் அதற்குள் இருந்தது.

""உங்கப் பையனை காணோம்னு புகார் கொடுத்திருக்கீங்களே. இந்தப் பையனா பாருங்க. சென்னை உயர்நீதிமன்றம் அருகிலுள்ள எஸ்பிளனேடு போலீஸார் இறந்த சிறுவனின் உடலை போட்டோவில் காண்பிக்க... "இவ்ளோ பெரிய பையன் இல்லைங்க... மூன்றரை வயசுதாங்க ஆகுது' என்று மறுத்திருக்கிறார் காணாமல் போன சிறுவன் ஆதித்யாவின் தந்தை ஜெயக்குமார். ஆனால்... சிறுவன் அணிந்திருந்த டி-ஷர்ட்டையும் பேண்டையும் காண் பிக்க "அய்யய்யோ அவன் என் புள்ளதாங்க' என்று அடித்து முட்டிக் கொண்டு தாய் அனந்தலட்சுமி கதறி அழ... காணாமல் போன சிறுவன் ஆதித்யாதான் என்பதை உறுதி செய்த காக்கிகள்... இன்வெஸ்டிகேஷனை இன்னும் சீரியஸ் ஆக்கினார்கள்.

இறந்து போன சிறுவன் ஆதித்யாவின் தந்தை ஜெயக்குமாரிடம் விசாரணையை தொடங்கியது காக்கிகள் டீம். இந்த வழக்கில் வெளிவராத அதிர்ச்சித் தகவல்கள் வெளிவர ஆரம்பித்தது.


""என்னோட ஃபேமிலி ப்ரண்டு பூவரசியோடுதான் என் பையனை அனுப்பி வெச்சோம். அவங்களும் என் பையன் மேல ரொம்ப பாசமா இருப்பாங்க. ஆனா, கடத்திட்டுப் போன பாவிங்க... லட்ச லட்சமா பணம் கேட்டிருந்தாக்கூட கொடுத் திருப்பேனே... ஆனா என் செல்லத்தோட உசுரை இப்படி...'' அதற்கு மேல அவரால் பேச முடியவில்லை.

அடுத்து குடும்பத் தோழியான (!) பூவரசியை தனியாக விசாரித்தனர். ""ஆதித்யா என் உசுருங்க. அந்த சின்னக் குழந்தைக்கிட்ட கொஞ்சிப் பேசுறது எனக்கு சந்தோஷம். அடிக்கடி கடைக்கு எல்லாம் கூட்டிட்டுப் போய் பிடிச்சதை எல்லாம் வாங்கிக் கொடுப்பேன். அப்படிப்பட்ட செல்லக் குழந்தையை ஜெயக்குமாரே...'' என்று பூவரசி தேம்பி அழ ஆரம்பிக்க... திடுக்கிட்டுப் போன காக்கிகள்... ""பெத்த புள்ளையை அப்பனே... நீ என்ன சொல்ற?'' நெற்றிப் புருவத்தை சுருக்கியபடி பூவரசியிடம் கேட்க... ""உண்மையை சொல்லிடுறேங்க.

நானும், ஜெயக்குமாரும் ஒரே ஆபீஸ்ல வேலை பார்த்தோம். அப்போதான் எனக்கும் அவருக்கும் காதல் பூத்தது. நாங்க ரெண்டுபேரும் சுத்தாத இடமே இல்ல. அந்தளவுக்கு உயிருக்குயிரா காதலிச்ச ஜெயக்குமார்... என் முன்னாலேயே அனந்தலட்சுமியை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. ஆனாலும், எங்களுக் குள்ள உள்ளத் தொடர்பு எப்போதும் போல தொடர்ந்துக்கிட்டுத்தான் இருந்தது. என்னை ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கோன்னு கெஞ்சினேன். கொஞ்ச நாளாகட்டும்னான். எனக்கும் ஒரு குழந்தை பொறந்து கொஞ்சணும்னு ஆசை இருக்காதா? அந்த ஆசையை யும், பாசத்தையும்தான் அவனோட மகன்... ஆதித்யாமேல காண்பிக்க ஆரம்பிச்சேன்.
அன்னைக்கு காலையில எப்பவும் மீட் பண்ற இடத்துல வெயிட் பண்ணிக்கிட்டிருந்தேன். அப்போ குழந்தை ஆதித்யாவையும் கூட்டிக்கிட்டு வந்திருந் தான்... ஜெயக்குமார்.

சாப்ட்டு முடிச்சதும்... தண்ணி கேட்டான் ஆதித்யா. பக்கத்திலேயே இருக்கிற என்னோட ஒய்.டபுள்யூ.சி.ஏ. ஹாஸ்டலில் போய் வாட்டர் பாட்டில் எடுத்துட்டு வரும்போது... அய்யோ... அவன் மனுஷனா மிருகமா? கார் பின் சீட்ல வச்சு... கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லாம பெத்த புள்ளையை கயிறால இறுக்க ஆரம்பிச்சுட்டான்.

என்னால அதைப் பார்க்கவே முடியல... "டேய்... என்னடா பண்ற? ஏண்டா இந்தப் பச்சப் புள்ளையை இப்படி பண்றே?ன்னு பதறிப் போய் கேட்டதுக்கு... "நீ இவன் மேல வெச்சுருக்குற பாசத்துலதான் என்னை விட்டு போகமாட்ற... இவனை கொன்னுட்டா'ன்னு சொல்லிக்கிட்டே வெறிப்பிடிச்ச சைக்கோ மாதிரி அந்தக் குழந்தையை கழுத்துல இறுக்கிட்டான். நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன். செஞ்ச கொலையை மறைக்கத்தான் பையன் காணாம போயிட்டான்னு புகார் கொடுத்தோம்'' என்று கதறி அழ... டென்ஷனான காக்கிகள் "பெத்த புள்ளையை கொலை செஞ்சிட்டு நாடகமா ஆடுற?' -ஜெயக்குமாரை தனியாக அழைத்து விசாரணையை தீவிரப் படுத்த...

""ஆபீசுக்கு கூட் டிக்கிட்டு வந்த என் பையனை "சர்ச்சுக்கு கூட்டிட்டுப் போய் ப்ரேயர் பண்ணிட்டு வரேன்'னு கூட்டிட்டுப் போனவளே அவதாங்க. அவளை கல் யாணம் பண்ணிக் கலன்னு ரொம்ப கோவ மா இருந்தா. ஆனா குழந்தை மேல பாசமா இருக்காளேன்னுதான் அவகூட அனுப்பி வைச்சேன்'' என்று ஜெயக்குமாரும் கதற... இருவரையும் ஒரே இடத்தில் உட்கார வைத்து விசாரிக்க ஆரம்பித்தனர்.

"ஏண்டி என் புள்ளைய கொலை செஞ்ச?' என்று ஜெயக்குமாரும், "அப்பவே உன்னை போலீஸ்ல புடுச்சுக் கொடுத்திருக்கணும்... இல்லைன்னா இப்படியொரு நிலைமை வந்திருக்காது'... இருவரும் அங்கேயே அடித்துக் கொள்ளும் அளவுக்குப் போக... அதட்டிய காக்கிகள், சிறுவன் கொலை செய்யப்பட்டிருந்த சூட் கேஸ் யாருடையதுன்னு தெரிஞ்சுப் போச்சு. உண்மை யைச் சொல்லுங்க. ஏன் அந்தக் குழந்தையை இப்படிக் கொடூரமா கொலை செஞ்சீங்க? விசாரணை காக்கி களின் கண்கள் சிவக்க... பூவரசி சொன்ன ஸ்டேட்மெண்ட் நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சியதுபோல் இருந்தது.

""அடிக்கடி நானும் ஜெயக்குமாரும் ஒண்ணா இருந்ததால கர்ப்பம் ஆனேன். ஆனா இரண்டுமுறை என் கர்ப்பத்தை கலைக்கச் சொல்லிட்டு என் வயித்துல இருக்கிற குழந்தையையும் அழிச்ச பாவியை எப்படி தண்டிக்கிறதுன்னு ஒவ்வொரு நாளும் துடியாய் துடிச்சது மனசு(!). அவனோட குழந்தை ஆதித்யா மேல அவன் உசுரே வச்சிருந்தான். என் குழந்தையை அழிக்கும்போது என் மனசு எப்படி அணு அணுவா துடிச்சதோ, அதே சித்ரவதையை அவனும் அனுபவிக்கணும்னா ஒரே வழி... இதுதான்னு தோணினது. அந்த வெறியோடதான் ஆதித்யாவை நைஸா ஹாஸ்டலுக்கு கூட்டிவந்தேன். ஆதித்யாவின் கழுத்தை நாடாவால் இறுக்கி கொலை பண்ணினேன். மனசு கேட்காமத்தான் சர்ச்சுக்கு பாவமன்னிப்பு கேட்கப் போனேன். அங்கே மயங்கி விழுந்துட்டேன்'' என்று உண்மையை கக்கியிருக்கிறாள் கொஞ்சமும் ஈவு இரக்கமே இல்லாத படுபாதகி பூவரசி.

இவர்களின் கள்ளக்காதலில் அப்பாவியான ஒரு குழந்தையோட உசுரை கொன்னுட்டாளே என்று பொதுமக்கள் பலர் கொதிப்படைந்து கோர்ட்டை முற்றுகையிட்டதால... பூவரசியை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டின் வீட்டில் கொண்டுபோய் விசாரித்தனர். அங்கு வந்த பூவரசியை துப்பட்டாவால் மூடிய பெண் காக்கிகள் கடைசி வரையில் அவரது முகத்தை போட்டோ எடுக்க விடாமல் பாது காப்பாக சென்றனர். பூவரசியை புழல் சிறைக்கு கொண்டுபோக அங்குள்ள பெண் கைதிகளே பூவரசி மீது வெறுப்பையும் வேதனையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இறந்த சிறுவன் ஆதித்யாவின் தாய் அனந்த லெட்சுமியை சந்திக்க சென்னை விருகம்பாக்கம் பத்மாவதி நகர் இரண்டாவது தெருவிலுள்ள வீட்டுக்குச் சென்றோம்.

பிள்ளையை இழந்த துக்கத்தில் படுத்துக் கிடந்த அனந்தலெட்சுமி ""என் புருஷனை எதுவும் பண்ணவேணாம்ங்க. இருக்கிற ஒரு பொம்பளைப் பிள்ளையையாவது நல்லபடியா வளர்க்கணும்'' என்று கைகூப்பி அழுகிறார் அப்பாவியாக.

அருகில் ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தவர்களோ, ""இவர்களின் கள்ளக்காதல் அனந்த லெட்சுமிக்கு தெரிஞ்சுதான் இங்க குடிவந்தாங்க. வீட்டிலுள்ளவர்களை எதிர்த்துதான் ஜெயக்குமாரை காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க இவங்க. அதனால அனந்தலெட்சுமிக்கும் ஆதரவா யாருமில்ல. பூவரசியும் சொந்த ஊரான வேலூர்-ராணிப் பேட்டையில் கமல்சந்துங்கிறவனை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்காமலேயே குடும்பம் நடத்த... பூவரசியை தலைமுழுகிட்டாங்க பெற்றோரும் உறவினரும். இப்படி பலரிடம் ஏமாந்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துட்டு சென்னைக்கு ஓடிவந்த பூவரசிக்கும் ஆதரவா யாருமில்லை. இந்த பலவீனத்தையும் தன்னோட பலமாக ஆக்கிக்கிட்டு இந்த ஜெயக்குமார் மன்மத லீலைகளை புரிஞ்சுக் கிட்டிருந்திருக்கான். ஆக... முதல் குற்றவாளி ஜெயக்குமார்தான்'' என்கிறார்கள் உறுதியாக.
மனநல மருத்துவர் கீர்த்தியோ, ""ஏற்கனவே ஆண்களிடம் ஏமாந்த பூவரசிக்கு ஜெயக்குமாரிடமும் ஏமாறப்போகிறோம் என்று தெரிய ஆரம்பிக்கும்போது அவரது ஆளுமையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. காதல னுக்கு திருமணமான பிறகும் உறவை நீட்டித்திருப்பது பூவரசியின் சறுக்கலான நிலை. எதிரியை பழிவாங்க அந்த எதிரிக்குப் பிடித்தவர்களை வைத்து மிரட்டுவதற்கு மேனிப்புலேஷன் என்று பெயர். ஆனால் அதற்கும் எதிரி பயப்படவில்லையென்றால் அடுத்த நிலை, அதை செயல்படுத்துவதற்கு டிஸ்ப்ளேஸ்மென்ட் என்று சொல்வோம். அதைத்தான் செயல்படுத்தியிருக்கிறார் பூவரசி'' என்கிறார் அவர்.

பழிக்குப் பழி வாங்க... அதற்கு சம்பந்தமே இல்லாதவர்களை- அதுவும் குழந்தைகளை கொலை செய்கிறவர்களை தூக்கில்தான் போட வேண்டும்.

No comments:

Post a Comment