Tuesday, July 20, 2010

நித்தியானந்தாவுடன் என்னைத் தொடர்புப்படுத்தலாமா?-விசனத்தில் மாளவிகா


சாமியார் நித்தியானந்தாவை டிவி நடிகை மாளவிகா அவினாஷ் சந்தித்ததை, நான்தான் சந்தித்தேன் என்று கூறி விட்டார்களே என்று வருத்தப்பட்டுள்ளார் நடிகை மாளவிகா.

ரஞ்சிதா சிக்கலிலிருந்து முழுமையாக இன்னும் மீளாத நிலையில் நித்தியானந்தா மீண்டும் போதனைகளில் இறங்கி விட்டார். கோர்ட் அனுமதி கொடுத்ததைத் தொடர்ந்து சமீபத்தில் தனது ஆசிரமத்திற்குள்ளேயே சீடர்களுக்கும், தன்னைத் தேடி வந்த பக்தர்களுக்கும் ஆசி வழங்கி உரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சிக்கு டிவி நடிகை மாளவிகா அவினாஷும் வந்திருந்தார். இவர் சிவராசன்-சுபா கதையான சயனைட் படத்தில் நடித்திருந்தவர். தமிழ் டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார். நித்தியானந்தா பேசி முடித்ததும் அவரை சந்தித்து காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றுச் சென்றார்.

ஆனால் சினிமா நடிகை மாளவிகாதான், நித்தியானந்தாவை சந்தித்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. இதனால் மாளவிகா அப்செட்டாகி விட்டாராம்.

நானே சினிமாவை விட்டு ஒதுங்கியிருக்கிறேன். குடும்பம் ஆகி விட்டது. இப்படி இருக்கையில் நான் ஏன் போய் அவரைப் பார்க்க வேண்டும். எனக்கும் பெங்களூர் சொந்த ஊர் என்பதால் இப்படி எழுதி விட்டார்களோ என்னவோ. இருந்தாலும் ஒரு வார்த்தை என்னிடம் கேட்டிருக்கலாம் இல்லையா என்று கூறினார் மாளவிகா.

இதற்கிடையே, நித்தியானந்தாவைப் பார்த்து ஆசி வாங்கி விட்டு வந்த மாளவிகா அவினாஷைப் பார்க்கவே தமிழ் டிவி சீரியல் நடிகைகள் அஞ்சுகிறார்களாம். பார்க்கக் கூடாததைப் பார்த்தது போல அவரைக் கண்டால் சற்று விலகி போய் விடுகிறார்களாம். இதனால் இந்த மாளவிகாவும் அப்செட்டாக இருக்கிறாராம்.!

No comments:

Post a Comment