Thursday, July 15, 2010

தீவிர அரசியலிலிருந்து ஓய்வு! -ராமதாஸ் முடிவு!


shockan.blogspot.com

கட்சி வேண்டாம் சங்கமே போதும் என்கிற முடிவை எடுத்திருக்கிறாராம் டாக்டர் ராமதாஸ். பா.ம.க.வை வழிநடத்தும் பொறுப்பை இனி டாக்டர் அன்புமணி கவனிப்பார் என்கிறார்கள் அந்தக் கட்சியின் மாநில நிர்வாகிகள். கடந்த 9-ம் தேதி சென்னையில் நடைபெற்ற பா.ம.க.வின் பொதுக்குழுக் கூட்டத்தை கூர்ந்து கவனித்தவர்களுக்கு இந்த அதிகார மைய மாற்றத்தை உணரமுடிந்தது.

மாநில அளவிலான இந்தப் பொதுக்குழுவின் போது புதிய நிர்வாகிகள் அனைவரும் பொறுப்பேற்றுக் கொண்டனர். கோ.க.மணி 7-வது முறையாக தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்ற பதவிகளில் மாநில அளவில் தொடங்கி ஒன்றியம் வரை அத்தனை பொறுப்புகளிலும் புதிதாக பதவியேற்றவர்களில் 80 சதவீதம் பேர் டாக்டர் அன்புமணியின் நேரடி அறி முகத்தில் இருப்பவர்கள்தானாம். பொதுக்குழுவுக்காக வைக்கப்பட்ட பேனர்களில் தொடங்கி பல இடங்களி லும் அன்புமணியே பிரதானமாக தெரிந்தார். பொதுக் குழுவில் டாக்டர் அன்புமணி பெயர் உச்சரிக்கப்பட்ட போதெல்லாம் கைதட்டல் சத்தம் அதிகமாக இருந்தது.

பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகளாக பொறுப் பேற்ற அத்தனை பேரும் அன்புமணிக்கான முக்கியத் துவத்தை அதிகமாகவே கொடுத்தார்கள். ஏழாவது முறையாக தலைவரான கோ.க.மணியும் மத்திய அமைச்சராக அன்புமணி என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்று பட்டியலிட்டு அவரைப் போல திறமையான நிர்வாகி யார் இருக்கிறார் என கேள்வி எழுப்பினார். எம்.ஜி.ஆர். அழைத்தும் போகாத தன்னுடைய விசுவாசத்தையும் அந்த மேடையில் மீண்டும் ஒருமுறை பதிவு செய்தார் மணி.

அன்புமணி பேச்சின்போது வழக்கத்தை விட கொஞ்சம் வேகம் தெரிந்தது. புதிய நிர்வாகிகளை தேர்தலுக்கு உசுப்பிவிடும் விதத்தில் பேசினார். ""ஒருசில கட்சிகளைப் போல அண்ணன் கோஷ்டி, தம்பி கோஷ்டி என்றெல்லாம் நம்முடைய கட்சியில் இல்லை. இங்கே எல்லாம் அய்யா கோஷ்டிதான்'' என்ற அன்புமணி, ""வரும் தேர்தலில் புதிய நிர்வாகி கள் எல்லோரையும் அரவணைத்து கடுமை யாக உழைக்க வேண்டும். பென்னாகரம் ஃபார்முலா படி நாம் உழைக்க வேண்டும். நம்முடைய வெற்றியை யாராலும் தடுக்க முடியாது'' என்றெல்லாம் குரல் உயர்த்தி பேசியபோது அரங்கம் அதிர கைதட்டி அவரின் பேச்சை வரவேற்றார்கள் புதிய நிர்வாகிகள்.

டாக்டர் ராமதாஸ் பேசிய போதும், இனி கட்சியின் முக்கிய முடிவுகளை அன்புமணிதான் எடுப்பார் என்பதை உணர்த்தி னார். ஒரு கட்சி செல்வாக் கோடு இருக்க இளைஞர்கள் அவசியம். இந்த கட்சி இளைஞர் இயக்கமாக மாறவேண்டும்' என்றெல்லாம் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசியவர் "பதவி, பொறுப்பு போனவர்கள் இதற்காக கவலைப்படக்கூடாது. புதிதாக பதவியேற்றவர் களிடம் இருந்து பதவியை மீண்டும் பெறும் வகையில் செயல்படவேண்டும். உங்கள் உழைப்புக்கு ஏற்ற வகையில் பதவிகள் தேடிவரும். உங்களுக்கான பதவி சின்ன அய்யா மூலம் உங்களுக்கு கிடைக்கும்' என்றார். பதவியை தீர்மானிப்பவர் டாக்டர் அன்புமணிதான் என்பதை ராமதாஸ் வெளிப்படையாகவே பேசியதால் இந்த மாற்றத்துக்கு ஏற்ப அரசியல் செய்ய தயாராகி வருகிறார்கள் பா.ம.க.வினர்.

பொதுக்குழு பற்றி நம்மிடம் பேசிய மாநில நிர்வாகிகள் சிலர், “""கடந்த ஒரு வருடமாக கட்சிப்பணிகளை அதிகமாக எடுத்துக்கொள்ளும்படி அன்புமணியிடம் சொல்லி வந்தார் டாக்டர் ராமதாஸ். புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடந்தபோது கிளை அமைப்பு தேர்தல் பொறுப்பாளர்கள் வரை மட்டுமே அவர் பார்த்துக்கொண்டார். ஒன்றிய, நகர, மாவட்ட, மாநில அளவிலான பதவிகளுக்கான பொறுப்பாளர் களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அன்புமணியிடம் கொடுத்து விட்டார். டாக்டர் அன்புமணியிடம் பொறுப்பு போனதால் எம்.எல்.ஏ.வேல்முருகன் மாநிலத்தலைவராவார் என்றும் கூட பேச்சு எழுந்தது. ஆனால் அந்த ஒரு பதவியை மட்டும் மீண்டும் மணிக்கே தரும்படி சொன்னா' டாக்டர் ராமதாஸ்.

அதிகார மைய மாற்றம் குறித்து தன்னிடம் பேசிய முக்கியஸ்தர்கள் சிலரிடம், "வர வர எனக்கு அரசியலே பிடிக்காமல் போய்விட்டது. அரசியலுக் காக நிறைய காம்ப்ரமைஸ் செய்ய வேண்டி இருக்கிறது. இதில் எனக்கு உடன்பாடு இல்லை. இனிமேல் சங்கத்தில் கவனம் செலுத்தலாம்னு இருக்கேன். கட்சியை தம்பி பார்த்துக்கட்டும். நானும், குருவும் வன்னியர் சங்கத்தை பார்த்துக்கப்போறோம். சங்க வேலையிலாவது மன நிம்மதி இருக்கும்'’என்று தன் மனநிலையை வெளிப்படுத்தி இருக்கிறார்'' என்கிறார்கள்.

கூட்டணி உள்ளிட்ட முக்கிய விஷயங்களில் மட்டும் ஈடுபடுவாராம் ராமதாஸ். அதிகார மையத்தில் மாற்றம் வந்ததும் பெரிய திட்டத் தோடு மக்களை சந்திக்க திட்டம் வகுத்திருக் கிறார் அன்புமணி. பென்னாகரத்தில் வன்னிய சமுதாய மக்களை சந்தித்து உணர்வுகளை உண்டாக்கியது போல தங்களுக்கு சாதகமாக உள்ள 80 தொகுதிகளை தேர்ந்தெடுத்து அங் கெல்லாம் தீவிரமாக வேலை செய்ய இருக் கிறார்களாம். தொகுதிக்கு 4 நாட்கள். முதல் இரண்டு நாளில் பா.ம.க.வின் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.பி.க்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் தொகுதிக்குள் உள்ள எல்லா கிராமங்களுக்கும் சென்று கொடி ஏற்றி, மக்களோடு மக்களாக தங்குவார்களாம். கடைசி இரண்டு நாட்களில் அன்புமணி களமிறங்கு வாராம்.

தேவைப்பட்டால் கடைசி நாளில் தானும் வருவதாக சொல்லியிருக்கிறாராம் டாக்டர் ராமதாஸ். தேர்தலுக்கு முன்னதாக முடிந்த வரை முக்கியமான தொகுதிகளை சுற்றி விட வேண்டும் என்கிற திட்டத்தில் இருக்கிறார் அன்புமணி. இந்த சுற்றுப்பயணத்தின் போது உள்ளூர் கட்சியினர், வன்னிய சொந்தங்கள் என எல்லோருக்கும் அன்புமணியின் முக்கியத்துவம் புரிய வைக்கப்படுமாம்.

அன்புமணியின் ஆதரவாளர்களும் இந்த அதிகார மாற்றம் குறித்து உற்சாகமாக பேசுகிறார்கள்.

""அண்ணனுக்கு முழுப்பொறுப் பையும் ஒப்படைத்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ். இளைஞ ரணியில் உள்ள பலரும் இப் போது பொறுப்புக்கு வந்திருக்கிறார்கள். அத்தனை பேரும் இளைஞர்கள் என்பதால் உற்சாகமாக களமிறங்கி வேலை பார்ப்பார்கள். தொகுதி சுற்றுப்பயணத்தின் போது தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளில் இருந்து பல இளைஞர்களை பா.ம.க.வில் சேர்க்க இருக்கிறோம். இளைஞரணியைப் போன்று இளம்பெண்கள் அணிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். முழு சுதந்திரம் அண்ணனுக்கு இருந்தாலும் அய்யாவை ஆலோசித்தே எல்லாம் செய்வார். கட்சிக்காரர்களுடன் நெருக்கமாக அண்ணன் பழக ஆரம்பித்ததும் பாருங்கள் மாற்றத்தை''’என்கிறார்கள் நம்பிக்கையோடு.

No comments:

Post a Comment