Thursday, July 15, 2010

நரகத்துலயிருந்து தப்பிக்கணும்... -நயினார்!


"நயினார் நாகேந்திரன் ஒரு முடிவெடுத்து விட்டார்' என நெல்லை மாவட்ட ர.ர.க்களே அடித்துச் சொல்கிறார்கள். "காரணம் என்ன' வென்று கேட்டால் கூடை கூடையாகக் கொட்டு கிறார்கள்.

""ஜெ. பேரவைச் செயலாளர் நயினார். நெல்லை மாநகரச் செயலாளர் பாப்புலர் முத்தையா. ரெண்டுபேருக்கும் ஆகவே ஆகாது. நெல்லை புறநகர் மா.செ. செந்தூர்பாண்டியன் கூட இணக்கமாத்தான் இருந்தாரு. இப்ப அதுவும் கட் ஆயிடுச்சு. மா.செ. ஆகணும்னு நயினார் காய் நகர்த்துனாரு. எப்படித் தெரியுமா? டாக்டர் வெங்கடேஷ் இங்கே தென்காசி பாசறைக் கூட்டத்துக்கு வந்தப்ப, 25 லட்ச ரூபாய் செலவழிச்சு "கையில பணமே இல்லாத செந்தூர் பாண்டியனை விட நான் பெரியவன்'னு காட்டிக் கிட்டாரு. நயினாரின் இந்தச் செயல் செந்தூர் பாண்டியனை டென்ஷன் ஆக்கிருச்சு. இப்படி மாவட்டத்துல, கட்சில முக்கிய புள்ளிக ரெண்டு பேரும் பகையாளியா நெனைக்குற நயினாருகிட்ட யிருந்து இப்ப அவரோட ஆதரவாளர்களே கழண்டுக் கிட்டிருக்காங்க.

நயினாருகிட்ட அம்புட்டு நெருக்க மாயிருந்தாரு ஏ.கே.சீனிவாசன். இப்ப மாவட்ட மாணவரணி செயலாள ராகி அவரு ஒட்டுன போஸ்டர்ல நயினார் படம் மிஸ்ஸிங். நயினாரால பொறுப்புல யிருந்து தூக்கப்பட்ட சங் கர்நகர் பேரூர் செயலாளர் சங்கருக்கு ஒரே மாசத்துல திரும்பவும் பொறுப்பு வாங்கிக் கொடுத்துட் டாரு பாப்புலர் முத் தையா. சொந்த மாவட்டத்துல யே பேரவை செயலாள ரான நயினா ருக்குத் தெரியாம லேயே, பீர் முக மதுவை சங்கர்நகர் பேரவை நகரச் செயலாளரா அறிவிச்சிருச்சு தலைமை. "கட்சித் தலைமையும் தொடர்ந்து அவமானப்படுத்திக்கிட்டே யிருக்கு. கட்சித் தொண்டனும் மதிக்க மாட்டேன்கிறான். எதுக்கு இந்தக் கட்சி? இந்த நரகத்துலயிருந்து தப்பிக்கணும்'னு தனக்கு நெருக்கமானவங்ககிட்ட புலம்பிக் கிட்டிருக்காரு நயினார். இந்தப் புலம்பல் அழகிரிக்கு எட்டிருச்சு. அதான், இணைப் புக்கான பேச்சுவார்த்தை ஜரூரா நடக்கு. இந்த 2011-ஐ தி.மு.க.வுக்குப் போயி குஷியாக் கொண்டாடப் போறாரு நயினார்'' என்று கிசுகிசுக்கிறார்கள்.

""ஆமாங்க... மனோஜ் பாண்டியனை ராஜ்யசபா எம்.பி. ஆக்கிருச்சு கட்சி... அடுத்து ஆட்சிக்கு வர்றப்ப தன்னோட அப்பா பி.எச்.பாண்டியனை அமைச்சராக்க ணும்னுதானே அவர் ஸ்டெப் எடுப்பாரு. இந்தப் போட்டில நயினாரு மண்ணைக் கவ்வ வேண்டியதுதான். எதுக்கு ரிஸ்க்? இருக்குற கொஞ்சநஞ்ச மானத்தோடு தி.மு.க.வுக்கு போறதுதான் பெட்டர்'' என்கிறார்கள் நயினாரின் விசுவாசிகள்.

என்னைப் போலவே நயினாரும் தி.மு.க.வுக்கு வருவாருன்னு கொளுத்திப் போட்ட தீப்பொறி ஆறுமுகத்திடம் நாம் பேசியபோது, ""தன்னை ராஜ்யசபா ஆக்க லைங்கிற வருத்தம் நயினார்கிட்ட இருக்கு. அவர் தி.மு.க.வுக்கு வருவார்'' என்றார்.

"கட்சி தாவும் மனநிலையில் இருக்கிறாரா?' என்றறிய நயினார் நாகேந் திரனின் கைபேசியில் தொடர்பு கொண்டபோது, காரியதரிசி தொடங்கி அவரது சொந்தபந்தங்கள் வரை நம் லைனுக்கு வந்தார்கள். ""பெரிய தொந்தர வாப் போச்சுன்னு அவரோட போனை எங்ககிட்ட கொடுத்துட்டாரு'' என்றார்கள். யாரிடமும் எதுவும் பேசக்கூடாது என்ற நயினாரின் வைராக்கியமான இந்த மௌனம் அவர் ஏதோ ஒரு முடிவெடுத்து விட்டதையே உணர்த்துகிறது.

No comments:

Post a Comment