Thursday, July 15, 2010

அப்பா-தம்பி சிறையில்! என்ன சொல்கிறார் தீபா?


சென்னையை பரபரப்பில் மூழ்கடித்திருக்கிறது அந்தப் படுகொலை. படுகொலைக்குக் காரணம் தகாத உறவு என்கிறது காக்கிகள் தரப்பு. என்ன நடந்தது?

சென்னை மந்தைவெளியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. சென்னையில் பல இடங்களில் கார்கோ கிளியரன்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். தனது மகள் தீபாவையும் மகன் பிரதீக்கையும் தன் நிறுவனத்தின் டைரக்டர்களாக்கி தன்னுடனே வைத்திருந்தார்.

தீபாவுக்கு தினேஷ் என்பவரோடு திருமணமாகி கவ்ரவ் என்ற 4 வயது மகனும் உள்ள நிலையில்... கணவன்- மனைவிக்கு இடையில் பிரச்சினை உண்டாக... வேலையை டெல்லிக்கு மாற்றிக்கொண்டு அங்கேயே போய் செட்டிலாகிவிட்டார் தினேஷ். இதனால் தீபா சென்னை வேளச்சேரியில் அபார்ட்மெண்ட் ஒன்றில் தன் மகனுடன் தனியாக வசித்துவருகிறார்.

இந்த நிலையில் தீபாவிடம் டிரைவராக இருந்த பாபு என்பவர் கடந்த 30-ந் தேதி திடீரென காணாமல்போக... பாபுவின் அப்பா அன்பழகன்... அபிராமபுரம் காவல் நிலையத்தில் மகனைக் காணவில்லை என்று புகார் கொடுத்தார். பாபுவைப் பற்றி போலீஸ் துருவ ஆரம்பித்த நிலையில் கிருஷ்ணமூர்த்தியின் டிரைவரான கண்ணன், தனது சகாக்களான விஜயகுமார், ஜான், செந்தில் ஆகியோருடன் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜராகி "நாங்கள்தான் பாபு வைக் கொன்று உடலைக் கொடைக்கானல் மலையில் இருந்து வீசினோம்' என்று அதிரவைத்தார்கள்.


எதற்கு இந்தக் கொலை என அவர்களிடம் காக்கிகள் துருவியபோது “""தீபாவின் டிரைவராக இருந்த பாபு... தீபாவை வசப்படுத்திவிட்டான். இந்த விசயம் தீபாவின் அப்பா கிருஷ்ண மூர்த்திக்கு தெரிந்ததால்.. தன் மகன் பிரதீக்கைவிட்டு பாபுவைக் கண்டிக் கச் சொன்னார். பிரதீக்கோ பாபு வைக் கண்டிக்கும் பொறுப்பை எங்களிடம் ஒப்படைத்தார். நாங்கள் பாபுவை சானடோரியத்தில் இருக் கும் கிருஷ்ணமூர்த்தியின் இன் னொரு அலுவலகத்துக்கு அழைத் துச் சென்றோம். அவனுக்கு மது வாங்கிக் கொடுத்தோம். தீபா வோடு பழகுவதை நிறுத்தும்படி கண்டித்தோம். அவனோ... "தீபா வை நியூடா விதவிதமா படமெல்லாம் எடுத்து வச்சி ருக்கேன்'னு திமிராப் பேசினான். அந்தப் படங் களைக் கொடுத்துடுன்னு கேட்டோம். முடியாதுன்னு சொன்னவனை அடிச்சோம். அப்பவும் அவன் திமிராவே பேச... உணர்ச்சிவசப்பட்டு... கத்தியால் அவனைக் குத்திக்கொன்னுட் டோம். கிருஷ்ணமூர்த்தியும் பிரதீக் கும் பாபுவைக் கண்டிக்கத்தான் சொன்னார்கள். நாங்கள் கொல் லும்படி ஆகிவிட்டது'' என்றார்கள் பதட்டமே இல்லாமல்.

இந்த நிலையில் தீபாவிடம் நாம்... "மகனைப் பறிகொடுத்த பாபுவின் குடும்பத்துக்கு எவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கு? அதேபோல் கணவரைப் பிரிந்து வாழும் உங்களுக்குப் பாதுகாப்பாக இருந்த உங்க அப்பாவும் தம்பியும் சிறைக்குப் போகவேண்டிய சூழலும் ஏற்பட்டிருக்கு. இதுக்கெல்லாம் காரணம் உங்களின் தகாத உறவுதானே?' என்றோம்.

தீபாவோ ""தேவையில்லாத சந்தேகத்தின் விளைவு தான் இது. என் அப்பாவிடமும் தம்பியிடமும் பாபு வைச் சந்தேகப்படவேண்டாம் என்று சொன்னேன். அவங்க கேட்கலை. இதுக்கு கூலிப்படையையா அனுப்பறது?''’என்றார் ஆதங்கமாய்.

"உங்கள் கன்னத்தில் அறையும் அளவிற்கு அந்த பாபு உங்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொண்டதை அக்கம் பக்கத்தில் இருப்பவர்களே பார்த்திருக்கிறார் களே' என்றோம் அவரிடமே. தீபாவோ ""அதெல்லாம் இல்லைங்க'' என்றவர் லைனை உடனடியாக துண்டித்துவிட்டார்.

டெல்லியில் இருக்கும் தீபாவின் கணவர் தினே ஷைத் தொடர்புகொண்டு "உங்கள் மனைவிக்கும் உங்க ளுக்கும் என்ன பிரச்சினை? ஒரு உயிர் அநியாயமாகப் போவதற்கும்.... உங்கள் மாமனாரும் மைத்துனரும் சிறைக்கம்பி எண்ணுவதற்கும்.... உங்கள் மனைவியின் தகாத உறவுதான் காரணம் என்று கூறப்படுகிறதே?' என்றோம். குரல் கம்ம பேச ஆரம்பித்த தினேஷோ ""என் மனைவி தொடர்பான விவகாரங்களை நான் மறக்க விரும்பறேன். அதே சமயம் பெத்த அப்பாவும் கூடப்பிறந்த தம்பியும்... தகாத உறவு இருக்குன்னு சொல்லும்போது... இங்க இருக்கும் நான் என்ன சொல்ல முடியும்?'' என்று முடித்துக்கொண்டார்.

வழக்கை விசாரித்துவரும் டி.சி.பெரியய்யாவோ ""பொதுவா சென்னையில் நடந்த சில க்ரைம்களுக்கு கார் டிரைவர்கள் காரணமா இருப்பதை அறிய முடியுது. அத னால் டிரைவர்களை எப்படி நடத்தணும், எந்த அளவிற்கு அவங்களை வீட்டிற்குள் அனு மதிக்கணும், எந்த அளவிற்கு அவங்களை நம்பணும் என்பதை யெல்லாம்... அவங்களைப் பத்தி முழுசா தெரிஞ்சிக்கிட்ட பிறகு தான் தீர்மானிக்கணும். இல் லைன்னா பல்வேறு பிரச்சினை களை சந்திக்கவேண்டியிருக்கும்'' என்றார் நம்மிடம்.

தகாத உறவுக்கொலைகள் நாளுக்கு நாள் பெருகிவருகிறது. இத்தகைய போக்குகளுக்கு என்ன காரணம் என பிரபல மன நல மருத்துவர் பூர்ண சந்திரிகாவிடம், நாம் கேட்டபோது ""ஒரு ஆணோ பெண்ணோ... வெளிநபர்கள்ட்ட ஒரு எல்லையோடதான் பழகணும். இந்த எல்லையை நாம எப்போ மறக்கறோமோ அங்கேயே சறுக்க ஆரம்பிச் சிடுவோம். அதேபோல் கணவன் -மனைவிக் குள் புரிதல் என்பது அத்தியாவசியத் தேவை. எவ்வளவு பிஸியா இருந்தாலும் மனம் விட்டுப்பேச.. அன்பைப் பரிமாற... தம்பதிகள் தங்களுக்கு நேரம் ஒதுக்கிக் கணும். எந்தப் பிரச்சினைகள் என்றா லும் பேசித் தீர்த்துக்கொள்ளவேண்டும். முடியவில்லை என்றால் சங்கடப் படாமல் ஒரு உளவியல் ஆலோசகரை இருவரும் அணுகவேண்டும். இது தெரியாமல் சின்னசின்ன விவகாரத் துக்காக கோபித்துக்கொண்டு கணவனை மனைவியும், மனைவி யை கணவனும் விட்டுவிட்டு தனியாகப் போவது பிரச்சினைக் குத் தீர்வாகாது. அது மேலும் மேலும் சங்கடங்களைத்தான் உண் டாக்கும்''’’என்கிறார் அழுத்தம் திருத்தமாய்.

தகும் உறவுகளுக்கு வழி வகைகள் இருக்கும்போது... விபரீதங்களுக்கு வழிகோலும் தகாத உறவுகள் எதற்கு?

No comments:

Post a Comment