Sunday, July 11, 2010

சிறையில் செக்ஸ் டார்ச்சர்!



shockan.blogspot.com

கோவை ரயில்வே நிலையத்தில் கத்தி முனையில் ரமேஷ்பாபு என்ற பயணியிடமிருந்து 1400 ரூபாயை பிடுங்கிக்கொண்டதாக ரயில்வே போலீஸாரால் 2007-ம் வருடம் கைது செய்யப்பட்ட நான்கு பேரில் ஒருவன்தான் கைதி விஷ்ணுவர்த்தன். அந்த விஷ்ணுவர்த்தனை 29-06-10-ந் தேதி அன்று மத்திய சிறைச் சாலையிலிருந்து அழைத்து வந்த போலீஸார் கோவை 2-வது நீதிமன்ற வளாகத்துக்குள் நீதிபதி கோமதிநாயகம் முன்பு அவனை ஆஜர்படுத்திய போது...

""அய்யா... ஜெயிலுக்குள்ள எங்களை வார்டனுக ரொம்பவே கொடுமைப்படுத்தறாங்கய்யா. போன தடவை எங்கண்ணன் மனு போட்டுப் பார்க்க வந்தபோது 2000 ரூபாய் எனக்குக் கொடுக்க வந்தாரு. அந்தப் பணத்த எங்கிட்ட கொடுக்கறதுக்காக வார்டன்க 400 ரூபாய் லஞ்சம் வாங்கினதுக்கப்புறம் தான் எங்கிட்ட 2000 ரூபாயக் கொண்டு வந்து கொடுத்தாங்க. ஆனா இப்ப கோர்ட்டுல ஆஜர்படுத்த கொண்டு வர்றதுக்கு முன்னால எங்கிட்ட இருந்த 2000 ரூபாயைக் கேட்டு கன்னா பின்னான்னு அடிச்சு காயப்படுத்திட் டாங்க'' என்று சட்டையைக் கழற்றி காயங்களை அழுதுகொண்டே காட்டி யவன்... ""அய்யா உங்ககிட்ட இதையெல் லாம் சொன்னா "திரும்பவும் ஜெயிலுக்குத்தான் வரோணும்... கொன்னுபோடுவோம்'னு மிரட்டறாங்கய்யா'' என்று அவன் சொல்ல... அதிர்ந்துபோன நீதிபதி, கைதி விஷ்ணுவர்த்தனை ஜி.ஹெச்.சில் அட்மிட் செய்யும்படி சொன்னார்.

அதேநாளில் சிறைச்சாலையில் கைதிகள் மனுநாள். ""எங்களுக்கு தரம் குறைவான சாப்பாட்டையே போடுகிறார்கள். வார்டன்கள் எங்களிடம் பணம் கேட்டு சித்திரவதை செய்கிறார்கள்'' என்று சில கைதிகள் புகார் செய்த அன்றைய மாலைதான் புகார் கொடுத்த சிலரை வார்டன்கள் புரட்டி எடுத்திருக்கிறார்கள். கைதிகள் தாக்கப்பட்ட விஷயம் அறிந்து மற்ற கைதிகள் உண்ணாவிரதமிருக்க...


அதற்குப்பின் நடந்த சம்பவங்களை சிறையில் உள்ள நம் காக்கி சோர்ஸ்களிடம் கேட்டோம். ""புதிதாய் கோவை ஜெயில் சூப்பிரண்ட்டாய் இன்சார்ஜ் எடுத்திருக்கும் சேலம் ஜெயில் சூப்பிரண்ட்டான பழனி வந்ததற்குப் பிறகுதான் தரமற்ற உணவு கைதிகளுக்குப் போடப்பட்டது. இதை எதிர்த்துப் பேசிய கைதி பிரகாஷ் என்பவனை சில போலீஸ்காரர் களும் வார்டன்களும் சேர்ந்து பாவம்... செமத்தை யாய் அடித்துவிட்டார்கள். ஆனால் அவன் மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயற்சி செய்தான் என்று மூச்சுப் பேச்சற்றுக் கிடந்த அவனை ஜி.ஹெச்.சில் கொண்டுபோய் சேர்த்தார் கள்'' என்கிறார்கள் காக்கிகள்.

சேலம் சிறைச்சாலையில் கூட அனைத்துக் கைதிகளும் உண் ணாவிரதமிருக்கிறார் கள் என்ற தகவலைத் தொடர்ந்து என்ன பிரச்சினை என்று அலசினோம். சேலம் சிறையில் இருந்து காக்கிகளின் துணை யோடே நம்மைத் தொடர்புகொண்டு பேசிய கைதிகள் முனு சாமி (5662), ராஜ ராஜசோழன் (4456) ஆகிய இருவரும் ""உண்மையாலுமே ரொம்ப மட்டமான சாப்பாட்டையும், குழம்பையும் ஊத்தி சாப்புடச் சொல்றாங்க. எப்படிங்க சாப்புட முடியும்னு பழனி எஸ்.பி.கிட்ட நாங்க ரெண்டு பேரும் கேட்டதுக்காக அப்படி அடிக்கிறாங்க சார். சாப்பாட்டுல பிளேட துண்டு துண்டா உடைச்சுப் போட்டு இப்ப சாப்புடுன்னு சொல்றாங்க. ஏற்கனவே எதிர்த்துப் பேசினவங்கள கண்ணு மண்ணு தெரியாம அடிச்சு இந்த ஜெயிலுக்குள்ளயே இறந்து போயிருக்காங்க. இந்த எஸ்.பி. பழனிகிட்டயிருந்து முடிஞ்சா எங்கள காப்பாத்துங்க சார்'' என்று விசும்பல் ஒலியை எழுப்பிய இருவரின் குரலும் அவசர அவசரமாய் கட்டாகிப்போனது.

இதற்கடுத்த நாளே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மகளிர் சிறையிலிருந்து கோர்ட்டுக்கு கொண்டு செல்வதற்காக வெளியே கொண்டு வரப்பட்ட மைதிலி என்ற பெண் தன்னுடைய சேலையை அவிழ்த்தெறிந்துவிட்டு ""ஜெயிலுங்கிறது எதுக்கு? குற்றம் செஞ்சவங்க திருந்தற இடம்ங்கறாங்க. ஆனா நிச்சயமா இல்லை. கஞ்சா வித்த வழக்குல என்னை கைது செஞ்ச போலீஸ்காரங்க இப்ப உள்ளுக்குள்ளேயே என்னை கஞ்சா விக்கச் சொல்றாங்க. முடியாதுன்னு மறுத்ததுக்கு சரியா சாப்பாடு போடாம தண்டிக்கிறாங்க. என்னைப் பாக்கறதுக்காக வந்த எங்கம்மா மேல கஞ்சா வித்ததா பொய் கேஸ் போட்டு உள்ள தள்ளிட்டாங்க'' என்றவளிடம்... "சரிம்மா அதுக்காக இப்படி அரைகுறையா பப்ளிக்ல நிக்கிறது சரியா?' என்றோம். ""உள்ளுக்குள்ள எங்கள நிர்வாணமாவே நிறுத்தி அங்க இங்கன்னு போலீஸ்காரங்க கை வைக்கறாங்க சார். அதை செல்போன்ல வேற படம் புடிச்சுட்டு "வெளிய போய் சொன்னீனா நெட்ல போட்டுவுட்ருவோம்'னு மிரட்டறாங்க. இவுங்கள்லாம் போலீஸ்காரங்களா சார்....? மனசும் உடம்பும் உடைஞ்சுப்போய்தான் இப்படி நின்னுட்டிருக்கேன்'' என்றவள் அப்படியே தரையில் உட்கார்ந்து அழ ஆரம்பித்துவிட்டாள்.

இந்தச் சம்பவங்களைக் கேட்டு கொதித் துப்போயிருக்கும் கோவை வழக்கறிஞர் கலை யரசன்... ""ஏற்கனவே 2005-ல் இதே ஜெயில் சூப் பிரண்ட்டான பழனி மீது கைதிகளை துன் புறுத்தியதாக வழக்குப் போடப்பட்டிருக்கிறது. இதை கருத்திற்கொண்டு சரியான முறையில் நீதித்துறை விசாரணை செய்தால் உண்மைகள் வெளிப்படும்'' என்கிறார் கோபமாய்.

இதையொட்டி ஜெயில் சூப்பிரண்ட் பழனியிடம் பேச எவ்வளவோ முயன்றும் தொடர்புகொள்ள முடியவில்லை. அதனால் கோவை சிறைத்துறை டிஐ.ஜி. கோவிந்தராஜ னிடம் பேசினோம். ""ஜெயில் சூப்பிரண்ட் பழனி மீது கூறப்படுபவை நூற்றுக்கு நூறு இட்டுக் கட்டப்பட்ட பொய்கள்தான். எஸ்.பி. பழனி, கைதிகளுக்கு பீடி சப்ளை செய்யும் போலீஸ்காரர்கள் மீது கூட நடவடிக்கை எடுத்த ஸ்ட்ரிக்ட் ஆபீசர். பிரகாஷ் என்ற கைதிகூட பீடி கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில்தான் மரத்தின் மீது ஏறி தூக்குப் போட முயன்றான். சேலம் சிறையில் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று... கைதிகள் சுகமாய் வாழ அல்ல சிறைச்சாலை. அவர்கள் திருந்தி வாழ்வதற்காகவே'' என்று ஜெயில் சூப்பிரண்டு பழனி மீதான புகார்களை உறுதியாய் மறுக் கிறார்.

இந்நிலையில் சிறையில் நடந்த சம்பவம் குறித்து அறிய மாவட்ட கூடுதல் நீதிபதி சதீஷ்குமார் தலைமையிலான குழு கோவை சிறைச்சாலைக்குள் சென்று கைதிகளிடம் நடந்த சம்பவங்களைக் கேட்டிருக்கிறது.

அந்தக் குழு சேலம் சிறைக்குள் நுழையுமே யானால்... போலீஸிடமிருந்து கைதிகள் முனுசாமியையும் ராஜராஜ சோழனையும் கூடவே மைதிலி போன்ற பெண்களின் மானத்தையும் ஒருசேரக் காப்பாற்றலாம்.

No comments:

Post a Comment