Sunday, July 25, 2010

அ.தி.மு.கவின் பலவீனம்


4 ஆண்டுகளில் பெரும் பாலும் ஜெ. ஓய்வாகவே இருந்தது அ.தி.மு.க தொண் டர்களிடம் சோர்வை உண் டாக்கியுள்ளது.

நெய்வேலி, விழுப்புரம், கோவை என ஜெ. கலந்து கொண்ட ஆர்ப்பாட்டங்களில் தொண் டர்களின் எழுச்சி இருந்தபோதும் எப்போதாவது இத்தகைய எழுச்சி உண்டாவதும் இதற்காக பெரியளவில் ஏற்பாடுகளை செய்யவேண்டி யிருப்பதும் நிரந்தரப் பலனைத்தராமல் இருக்கிறது. தலைமையைத் தொண் டர்கள் சந்திக்க முடியவில்லை என்ற குறை இன்றளவும் அ.தி.மு.கவில் நீடிக்கிறது. மனு வாங்கும் முகாம் நடத்திய ஜெ.வால் முழுமையான நேரத்தைச் செலவிட முடியாமல் போனதும் அதிருப்தியை அதிகரிக்கச் செய்துள்ளது. ஜெ.வின் உடல்நிலை பற்றிய கேள்விகளையும் தொண்டர்களிடம் எழுப்பி யுள்ளது. லோக்கல் மா.செ.க்கள், ஒ.செக்களின் எடுபிடியாக இருந்தால்தான் கட்சியில் இருக்கமுடியும் என்ற நிலைமை நீடிப்பதை தொண்டர்கள் விரும்பவில்லை.

கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் ஆளுந்தரப்புக்கு தாவியிருப்பது அ.தி. மு.கவின் இமேஜை பாதித்துள்ளது. எம்.ஜி.ஆரின் 11ஆண்டு ஆட்சிக்காலத்தில் எம்.எல்.ஏக்களாக இருந்த 200 அ.தி. மு.கவினரில் விரல்விட்டு எண்ணக்கூடிய பிரமுகர்கள் மட்டுமே இன்றைய அ.தி.மு.கவில் நீடிக்கின்றனர். மற்றவர் கள் மாற்று முகாம்களுக்கு சென்று விட்டனர்.

அ.தி.மு.கவின் தலைமைப் பொறுப்பில் ஜெ. இருந்தாலும் முக்கிய நிர்வாகிகளை நியமிப்பதிலும், முக்கிய முடிவுகளை எடுப்பதிலும் மன்னார்குடி குடும்பமே கோலோச்சுகிறது என்ற எண்ணம் தொண்டர்களிடம் அழுத்தமாகப் படிந் துள்ளது. இது கட்சியின் வளர்ச்சியைப் பாதிக்கிறது.

மதுரை மற்றும் தஞ்சை மண்டலங்களில் உள்ள தலித் மக்கள் அ.தி.மு.கவை முக்குலத்தோர் கட்சியாகப் பார்க்கின்றனர். இப்பகுதிகளில் அ.தி.மு.க சார்பில் முக்குலத்து சமுதாய வேட்பாளர் நிறுத்தப்பட்டால் தலித் மக்கள் வேறு கட்சிக்கு வாக்களிக்கின்றனர். எம்.ஜி.ஆர். காலத்தில் தலித் வாக்குவங்கியை பெருமளவு கொண்டிருந்த அ.தி.மு.கவின் இன்றைய நிலைமை இது. அதுபோல, சிறுபான்மை சமுதாயத்தினர் ஜெ.வை இந்துத்வா சக்தியாகவே பார்ப்பதும் அ.தி.மு.கவின் வாக்கு பலத்தை பெருமளவு குறைக்கிறது.

தேர்தல் களத்தில் தி.மு.க செலவிடும் தொகைக்கு ஈடுகொடுக்க முடியாமல் அ.தி.மு.க தலைமை தயங்குவது ஏன் என்ற காரணம் புரியாமல் அ.தி.மு.க தொண்டர்கள் விழிக்கிறார்கள். ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 2 கோடியாவது செலவு செய்யவேண்டும் என்ற நிலைமை உள்ளதால், தலைமையின் மீது அவர் களின் எதிர்பார்ப்பு திரும்பியுள்ளது.

தற்போது கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் வாக்குபலம் இல்லாத நிலையில், காங்கிரஸ்- தே.மு.தி.க போன்ற கட்சிகள் தங்கள் பக்கம் வராவிட்டால் வெற்றிபெற முடியாது என்ற எண்ணம் அ.தி.மு.க தொண்டர்களிடம் உள்ளது.

தி.மு.கவைச் சேர்ந்த குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக அதே கட்சிக்கு வாக்களிப்பதுபோல, அ.தி.மு.கவில் பரவலாக இல்லை. எம்.ஜி.ஆர். மீதுள்ள விசுவாசம் மட்டுமே கட்சியின் வாக்குவங்கியில் முக்கிய பங்காற்றுகிறதே தவிர, அது அமைப்பு ரீதியான வாக்குகளாக மாறவில்லை. இது, ஜெயலலிதாவின் தலைமை மீது அ.தி.மு.க வாக்காளர்களுக்கே இருக் கின்ற அவநம்பிக்கையை வெளிப் படுத்துவதாக உள்ளது.

No comments:

Post a Comment