Sunday, July 25, 2010

சோனியாவின் மூன்று முகம்!


தன் காதல் மனைவி சோனியாவைக் காணவில்லை என்று ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருக்கிறார் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத் தங்கரை ராதாகிருஷ்ணனின் மகன் கிருபாகரன். பிறகுதான் நக்கீரனைச் சந்திக்க வந்தார்.

""செம்மண் நிலத்தில் பெய்த மழை போன்றது நம் காதல் என்று சொன்னாள் சோனியா... நானும் அப்படித்தான் நம்பினேன். நான் சொன்னேன்... "நம் காதல் இமயமலையைக் காட்டிலும் உயரமானது. வான்வெளியைக் காட்டிலும் அகலமானது. கடலைக் காட்டிலும் ஆழமானது என்று சொன்னேன்... ஆமாம் ஆமாம் என்றாள். சக மாணவ-மாணவிகளின் விழிகள் வியப்பில் விரிந்தன.
சோனியா-திருப்பத்தூர் நந்தனம் பொறி யியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவி. நான் வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் இரண்டாமாண்டு பி.ஏ. மாணவன். அவள் கல்லாவியில் இருந்து ஊத்தங்கரை வந்துதான் கல்லூரிக்கு போக வேண்டும். ஊத்தங்கரையில் தான் எங்கள் காதல் வளர்ந்தது.

2 வருடம் காதலித்தோம். 6 மாதம் முன்பு நண்பர்கள் உதவியோடு கோயிலில் தாலி கட்டி மாலை மாற்றிக் கொண்டோம். பர்கூர் சார்பதி வாளர் முன்னிலையில் எங்கள் திருமணத்தை பதிவு செய்தோம். சோனியாவின் படிப்பு முடியும் வரை இரண்டு குடும்பங்களுக்கும் இதைப் பற்றி சொல்லக்கூடாது என்று முடிவு செய்தோம்.

இந்த 6 மாதமும்... சோனியாவின் வாழ்க்கை ரொம்ப கஷ்டமான, நாடக வாழ்க்கைதான். தன் வீட்டில் கன்னி கழியாத, குனிந்ததலை நிமிராத ஒரு நல்ல மகளாக நடித்தாள். கல்லூரியில் நல்ல மாணவியாக நடித்தாள். தினமும் இரண்டு மூன்று மணிநேரம் மட்டும் ஒரு நல்ல மனைவி யாக என்னிடம் வாழ்ந்தாள். சோனியாவின் படிப்பு முடிந்ததும் மே மாதம் தனி வீடு எடுத் தோம். வாழத் தொடங்கினோம்... 10 நாள்தான் பகிரங்க கணவன் மனைவி வாழ்க்கை... சோனியா வின் அப்பா வந்தார்... அவர் வயதுக்கு... அவரும் நடித்திருக்கிறார்... நான்தான் உண் மை என்று நம்பி விட்டேன். ஒரு வாரத்தில் அழைத்து வருவதாகச் சொல்லி கூட்டிப்போனார். எங்கேயோ பூட்டி போட்டுவிட்டு என் மீது புகார் கொடுத்திருக்கிறார்.

நான் என் காதல் மனைவி சோனியாவைக் காணவில்லை என்று ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருக்கிறேன். நிச்சயம் கோர்ட்டுக்கு கூட்டி வருவார்கள். எங்கள் காதல் எவ்வளவு உயரம், அகலம், ஆழம் என்பதை நீதிபதி முன் அவள் கொடுக்கும் வாக்குமூலம்தான் நிர்ணயிக்கும்...'' வன்னியர் இன வாலிபனான கிருபாகரன் கல்யாண ஆல்பத்தை காட்டியபடி நம்மிடம் சொன்னதில் நூறில் ஒரு பகுதியைத்தான் இங்கே எழுதியிருக்கிறோம்.

சோனியாவைச் சந்திக்க கல்லாவி கிராமம் சென்றோம். சோனியா அங்கே இல்லை.

""எங்கள் சோனியா எஸ்.பி. பாபுவிடம் புகார் கொடுத்திருக்கிறாள். மிரட்டி மயக்கி திருமணம் நடந்திருக்கிறது. பதிவு செய்ததும் அப்படித்தான்... தன்னோட மார்க்ஷீட் சர்டிபிகேட்ஸ் எல்லாம் அந்தக் கிரிமினலிடம் மாட்டிக் கொண்டுவிட்டது வாங்கித் தாருங்கள். அவன் என் கணவனே இல்லை. அவனோடு வாழ்வதைக் காட்டிலும் சாவது மேல் என்று புகாரில் எழுதியிருக்கிறாள் சோனியா...'' -நம்மை விரட்டாத குறையாக சொன்னது சோனியாவின் குடும்பம்.

கோர்ட்டில், நீதிபதியிடம் சோனியா கொடுக்கப் போகும் வாக்குமூலத்தால் தான் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவை உண்டாக்க முடியும். தன் காதலும் கல்யாணமும் செம்மண் நிலத்தில் பெய்த மழையாகத்தான் இந்த நிமிடம் வரை நம்பிக் கொண்டி ருக்கிறார் கிருபாகரன்.

No comments:

Post a Comment