Wednesday, July 28, 2010

தமிழ்ப் பெண்களை மிரட்டி கற்பழித்தோம்


நெல்லை செங்கோட்டையை ஒட்டிய கேரள கும்பாவுருட்டி அருவிக்குச் சுற்றுலாச் செல்லும் தமி ழகப் பெண்களுக்கு ஏற்பட்ட கொடூரத்தை அதிர்ச்சி சி.டி. ஆதாரத்தோடு "அடர்ந்த வனம்! கொட்டும் அருவி! இளம்பெண்களை வேட்டையாடிய வனக்கும் பல்' என்ற தலைப்பில் 17.7.10 இதழில் வெளியிட்டி ருந்தோம். கேரள காவல்துறை உடனடியாக களத்தில் இறங்கியது.

கேரள வனத்துறையின் உளவுப் பிரிவு விசாரணை நடத்துமென்றார்கள் வனத்துறை அமைச்சர் பினோய் விஸ்வமும் வன அதிகாரி வர்க்கீசும்.

கேரள உள்துறை அமைச்சரான கொடியேறி பால கிருஷ்ணன், எதையும் தட்டிக்கழிக்கும் தென்மலைக் காவல்நிலையம் மீது நம்பிக்கை இல்லை என்பதால் கொல்லம் டி.எஸ்.பி. வரதராஜனிடம் பொறுப்பை ஒப்படைத்தார். குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக குளத்துப்புழா இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் தலைமையில் ஸ்பெஷல் டீம் அமைக்கப்பட்டது.

கொல்லத்தில் பதுங்கியிருந்த மணிகண்டனும் சாகுல்ஹமீதும் உன்னிகிருஷ்ணனும் கைது செய்யப் பட்டு, கும்பாவுருட்டிக்கு கொண்டுவரப்பட்டார்கள்.

இந்த மூவரும் கேரள அச்சன்கோயிலைச் சேர்ந்தவர்கள். கேரள வனத்துறை யால் அமைக்கப்பட்ட வனப்பாது காப்புக் குழுவில் உறுப்பினர்கள்.

ஏற்கனவே "சிறப்பு'க் கவனிப் பால் கிறங்கிப் போயிருந்த அவர்கள் மறுபடியும் உடம்பை புண்ணாக்கிக் கொள்ள விரும்பவில்லை.

""சொல்லுங்கடா...?'' -இன்ஸ் பெக்டர் சந்தோஷ்குமார் விசாரித்தார்.

""மலையாளிகள் யாரும் இங்கே வருவதில்லை. தென்காசி, செங் கோட்டை, இலத்தூர் பகுதி தமிழர் கள்தான் வருவார்கள். குழந்தை, குட்டிகளோடு வருபவர்களை நாங்கள் ஒன்றும் செய்வதில்லை. நல்ல மனிதர்களாக நடந்துகொள் வோம். இளம் தம்பதிகள்... காதல் ஜோடிகள் இப்படிப்பட்டவர்களிடம் தான் தப்பு செய்தோம்.''

""எவ்வளவு காலமாக இப்படிச் செய்கிறீர்கள்?''

""இப்பதான் ஒண்ணரை வருஷ மாக.''

""எத்தனை கொலை செய்திருக் கிறீர்கள்?''

""சார்... அதைச் செய்யவே யில்லை சார்!''

""ஆண்களை என்ன செய்வீர்கள்?''

""அடிச்சு விரட்டிவிடுவோம் சார்... எதிர்த்தான்னா மரத்தில் கட்டிப் போடுவோம்.''

""இவனுங்க சொல்றானுங்க... நீ மட்டும் ரவுடி மாதிரி நிக்கிறே... சொல்டா... சொல்லுடா...'' 43 வயது உன்னிகிருஷ்ணன் கன்னத்தில் பளாரென விழுந்தது உபசரிப்பு.

""வர்ற டூரிஸ்ட்ல பெண்களா பார்த்து... "கும்பாவுருட்டி சாதாரண அருவிதான்... அந்தப் பாறைகளைக் கடந்து போனால் மணலாறு காணலாம் சூப்பரா யிட்டிருக்கும்'னு இரக்கமா, பணிவா பேசுவோம். தமிழ்ப் பொண்ணுங்க நம்பிடுவாங்க. பட்டப்பகல்தானேன்னு நம்பி எங்க பின்னாடி வருவாங்க. பாறையிடுக்குக்குப் போனதும் கத்தியைக் காட்டி, திமிர விடாம நெனைச்சதை முடிச்சிக்குவோம்.''

""யாரும் போலீஸ்ல புகார் கொடுக்க லையா?''

""இது அசிங்கமா யிருக்குல்ல... கொடுக்க மாட்டாங்க சார்...''

""இப்ப வெப்சைட்ல நக்கீரன்ல வந்த படம் எல்லாம் எப்ப எடுத்தது? யார் எடுத்ததுடா?''

""என்சனங்கில்... எங்க ஆசை, சல்லாபம் எல்லாம் முடிஞ்சதும் அவங்களை நிர்வாணமா... விதம் விதமா செல்கேமராவில் படம் புடிச்சி... அதை புளூஃபிலிம் சி.டி.யாக்கி கேரளாவுல உள்ள முக்கிய நகரங்கள்ல எங்களுக்கு நம்பிக்கையான கடைகளில் விற்பனை செய்தோம். இதுல எங்களுக்கு தொடர்ந்து நல்ல வருமானம் கிடைச்சது. அப்படி விற்பனை செஞ்ச ஒரு சி.டி.தான் எப்படியோ அந்த நெட்காரங்களுக்கு கிடைச்சு... எங்களை மாட்ட வச்சிருக்கு சார். இந்த தாயும் மகளும் சி.டி.யும் எங்களோடதுதான். ஆனால் எப்ப எடுத்ததுனு ஞாபகம் இல்லை சார்.''

ஸ்பாட் என்கொயரியை முடித்துக் கொண்டு சாலைக்கு வந்த இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமாரை சந்தித்து விசா ரணையின் போக்கு பற்றி கேட்டோம்.

""பாதிக்கப் பட்ட யாராவது ஒருத்தர், எங்கா வது புகார் கொடுத் திருந்தாலும், ஆரம்பத்திலேயே இந்தக் கொடூரத்தை தடுத்திருக்கலாம். புகார் கொடுக்காததால் ஒன்றரை வருடமா ஆட்டம் போட்டிருக்கிறார்கள்.

இந்த 3 பேரையும் இப்போது ரிமாண்ட் செய்து விட்டு பிறகு போலீஸ் கஸ்டடியில் எடுத்து தனித் தனியே விசாரிக்க வேண்டும். இவர்கள் மட்டும்தான் செய்தார்களா? இவர்கள் பின்னால் வனத் துறையினர் யாராவது இருக்கிறார்களா என்பதை அடுத்தகட்ட விசாரணை மூலம்தான் தெரிந்துகொள்ள முடியும்'' என்றார் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார்.

ஆனால்... நம்மைத் தொ டர்புகொண்ட கொல்லம், குளத்துப்புழா பகுதி மீடியா நண்பர்களோ... ""நோ கம்ப்ளைண்ட்ஸ்... அதனால... இந்த அளவோட விசா ரணையை முடித் துக் கொண்டுவிடப் போகிறார்கள். பாதிக் கப்பட்டவர்கள் யாராவது புகார் கொடுத்தால் மட்டுமே... விசாரணையும் நடவடிக்கையும் தீவிரமாகும்'' என்றார்கள்.

No comments:

Post a Comment