Sunday, July 18, 2010

கல்லூரிப்படிப்பை முடித்த இளம்பெண் துறவியாகிறார்


சென்னையில் கல்லூரிப்படிப்பை முடித்த இளம்பெண் துறவியாக வாழ முடிவெடுத்துள்ளார்.



ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்ட தாராசந்த் - விமலாபாய் தம்பதிகள் சென்னையில் பல ஆண்டுகளாக வசித்துவருகிறார்கள்.


இத்தம்பதிகளுக்கு தர்மேஷ் என்ற மகனும், குணவந்தி, ஹேமா, ரேகா, தீபா என்ற 4 மகள்களும் உள்ளனர்.

தீபா வேப்பேரி ஜெயின் கல்லூரியில் பி.காம். பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார்.

தீபாவின் தங்கை ரேகா கடந்த 3 மாதத்திற்கு முன்பு சாமியாராக சென்று விட்டார். அவர் எடுத்த முடிவு சரி என்று தீபாவும் எண்ணினார். தங்கை வழியில் துறவு பூண உறுதி ஏற்றார்.

கடந்த 3 ஆண்டுகளாக கடுமையான பயிற்சிக்கு பிறகு தீபா சாமியாராவதற்கு தகுதி பெற்றுள்ளார்.

தீபா வரும் 20ம் தேதி கலர் புடவை, நகைகள் அணிந்து ராணி அலங்காரத்துடன் காலையில் ஊர்வலமாக தங்க சாலை ஜெயின் கோவிலுக்கு அழைத்து செல்லப்படுகிறார்.



மறுநாள் 21-ம் தேதி வெள்ளை நிற ஆடை அணிந்து சாமியாராக தீட்சை பெறவிருக்கிறார்.

21-ம்தேதி முதல் தீபாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையேயான உறவுகள் அறுந்து விடும். துறவியர் கூட்டத்தில் சேர்ந்து தீபாவும் உலகை சுற்ற தொடங்கி விடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



துறவுக்கோலம் பற்றி தீபா, ’’தனியாக வந்தோம்;கடைசி காலத்தில் தனியாகவே செல்கிறோம். அப்பா, அம்மா, யாராவது கூட வருவார்களா? யாரும் வரப்போவது இல்லை.



என்றும் நம்மோடு இருப்பது கடவுள் ஒருவர்தான்.

போன ஜென்மத்தில் என்ன செய்தோமோ தெரியாது. இந்த ஜென்மத்தில் சாமியாராக புண்ணியம் செய்யும் வாய்ப்பை கடவுள் தந்து இருக்கிறார்.

துறவியாகி விட்டால் சுகம், துக்கம், இன்பம், துன்பம் எதை பற்றியும் கவலை இல்லை. எங்களுக்கு மந்திரம் உள்ளது. அந்த மந்திரத்தை மனதில் ஜெபித்தால் போதும். எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து விடும்’’ என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment