Thursday, July 15, 2010

சேலம் மண்டலத்தின் ஒட்டு


அரசியல் கட்சிகளில் ரகசிய சந்திப்புகள்-பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கிற தருணம் இது. யாருடன் யார் கூட்டணி சேரப்போகிறார்கள், எந்தெந்த விதத்தில் அணிமாற்றம் நிகழும் என அரசியல் பார்வையாளர்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள ஒரு கட்சியும், ஆட்சியை மீண்டும் பிடிக்க இன்னொரு கட்சியும், ஆட்சியில் பங்கு என மற்றொரு கட்சியும், இந்த முறை பெரிய கட்சிகளின் தூண்டிலில் சிக்கிவிடாமல், நமக்குரிய பங்கை வாங்கவேண்டும் என சிறிய கட்சிகளும் வியூகங்களை வகுத்துக்கொண்டிருக்கும் நிலையில்தான், தமிழக அரசியல் நிலவரம் குறித்த நக்கீரனின் கள ஆய்வு முடிவுகள் ஒவ்வொரு இதழிலும் வெளியிடப்பட்டு வருகின்றன.

சென்னை, வேலூர், கடலூர் மண்டலங்களைத் தொடர்ந்து, இந்த இதழில்.... சேலம் மண்டலம்.

கர்நாடக மாநிலத்திலிருந்து காவிரி ஆறு தமிழகத்திற்குள்நுழைந்து, மேட்டூர் அணையில் தேங்கி, தமிழகத்தின் விவசாயத்திற்கு நம்பிக்கையும் உத்தரவாத மும் அளிக்கும் மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியே சேலம் மண்டலமாக வரையறுக் கப்பட்டு, கள ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. 3 நாடாளுமன்றத் தொகுதி களைக் (சேலம்- கிருஷ்ணகிரி- தர்மபுரி) கொண்ட இந்த மண்டலத்தில் ஓமலூர், இடைப்பாடி, சேலம் (மேற்கு), சேலம் (வடக்கு), சேலம் (தெற்கு), வீர பாண்டி, ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி, பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிபட்டி, அரூர், மேட்டூர் ஆகிய 18 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

சேலம் மண்டலத்தின் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் வன்னிய சமுதாயத்தினரே அதிகமாக உள்ளனர். அவர்களையடுத்து, தலித் மக்கள் உள்ளனர். எண்ணிக்கையில் வேறுபாடு இருந்தாலும் பொருளாதார நிலையில் இரு சமுதாயத்தினருமே இங்கு ஒரேயள வில் பின்தங்கியே இருப்பதை நேரடி யாகக் காண முடிகிறது. சேலம் மாவட் டத்தில் குறிப்பிடத்தக்க அளவில் உள்ள வெள்ளாளக் கவுண்டர்கள் சமுதாயத் தினர் பொருளாதார நிலையில் முன் னேற்றம் கண்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தெலுங்கு பேசும் சமு தாயத்தினர் 28% அளவுக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது. அதுபோலவே, கர்நாடக எல்லையை ஒட்டி இந்த மாவட்டம் இருப்பதால் கன்னடம் பேசுவோரும் அந்த மாநிலத்தில் அதிக முள்ள சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் இங்கு குறிப்பிடத்தக்க அளவில் உள்ள னர். சேலம் மண்டலத்தில் இஸ்லாமி யர்களின் வாக்குகளும் கணிசமான அளவில் உள்ளன.

கட்சிகளைப் பொறுத்தவரை அ.தி.மு.கவும், தி.மு.கவும் இங்கு பலத்த போட்டியில் இருப்பதை அவற் றிற்கிடையிலான வாக்கு சத வீதத்தில் மிகக்குறைந்த இடைவெளி இருப் பதிலிருந்தே காண முடியும். எம்.ஜி.ஆர். மீதான பிடிப்புகொண்டவர்கள் இன்னமும் இரட்டை இலைக்கே வாக்களிக்கிறார்கள். வன்னியர், தலித், தெலுங்குபேசுவோர் என பல தரப்பிலும் இரட்டை இலைக்கான ஆதரவு உள்ளது. வெள்ளாளக் கவுண்டர்கள் சமுதாயத்தில் பெரும்பகுதியினர் அ.தி.மு.க ஆதரவாளர்களாக உள்ளனர். எம்.ஜி.ஆர். பற்றுதலால் இறுக்கமாக உள்ள அ.தி.மு.க வாக்குவங்கியை ஜெயலலிதாவின் அரசியல் அணுகுமுறைகள் சிதைத்து வருவதாக சொந்தக் கட்சிக்காரர்களே வருத்தப் படுகிறார்கள். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி இந்த 3 மாவட்டங்களிலும் அ.தி.மு.கவில் கோஷ்டிகளுக்குப் பஞ்சமில்லை. செல்வாக்கு மிக்க நபர்கள் தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொண்டதும், சிலர் ஆளுங்கட்சிப் பக்கம் சாய்ந்துவிட்டதும் அ.தி.மு.கவின் கோட்டை யாக விளங்கிய மண்டலத்தில் சிறிய ஓட்டையைப் போட்டிருக்கிறது.

தி.மு.கவின் பலம் என்பது வன்னியர் கள், தலித், இஸ்லாமியர்கள் பகுதிகளில் உள்ள வாக்கு வங்கிகள்தான். அதைத்தாண்டி, கடந்த 4 ஆண்டுகால செயல்பாடுகளால் கலைஞர் என்ற இமேஜ் அனைத்து தரப்பு மக்களிடமும் தி.மு.க.வின் செல்வாக்கை உயர்த்தியுள்ளதை நேரடியாக களத்தில் காண முடிகிறது. சில கட்சிக்காரர்கள் செய்யும் ரவுடீசம், கட்டப் பஞ்சாயத்து, நில அபகரிப்பு ஆகியவை சேலம் மாவட்ட பொதுமக்க ளிடம் பெரியளவில் பயத்தை உருவாக்கி யுள்ளது. எனினும், கலைஞர் அரசின் நலத்திட்டங்கள் வீடு தேடி வருவதும், இன்னும் பல திட்டங்களை கலைஞர் நிறை வேற்றுவார் என்ற நம்பிக்கையும் தி.மு.க.வுக்கு சாதகமான அம்சங்களாக மாறுகின்றன.






வன்னியர்கள் நிறைந்துள்ள மண்டலம் என்பதால் பா.ம.க.வின் பலம் இங்கே சில இடங்களில் பெரிய கட்சிகளுக்கே போட்டியாக உள்ளது. பென்னாகரம் இடைத்தேர்தலில் பெற்ற வாக்குகளால் இப்பகுதியில் பா.ம.க. தலைமை கூடுதல் கவனம் செலுத்துகிறது. பா.ம.கவுக்கு செல்வாக்குள்ள பகுதிகளில் விஜயகாந்த்தின் தே.மு.தி.க வளர்ந்துவருவதை கள ஆய்வுகளின் போது காண முடிந்தது. கிராமப்புறத்தைச் சேர்ந்த புதிய வாக்காளர்கள் தே.மு.தி.க.வுக்கு ஆதரவான மனநிலையில் இருக்கிறார்கள். தலித் வாக்குகள் தி.மு.க, அ.தி.மு.க பக்கமே அதிகள வில் இருந்தாலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் பல இடங்களில் அமைப்புகள் உள் ளன. அருந்ததியர் சமுதாயத்தினரும் இந்த மண்டலத்தில் ஆங்காங்கே உள்ளனர். பா.ம.க வேட்பாளராக வன்னியர் சமுதாயத்தவர் கள மிறங்கும் தொகுதிகளில் அவருக்கு எதிராக தலித் ஓட்டுகள் ஒருங்கிணைவது இங்கு வழக்கமாக இருக்கிறது. பாரம்பரியமாக காங்கிரசுக்கு விழும் வாக்குகள் அதே நிலையில் தொடர்ந்து பதிவா கின்றன. சேலம் உருக்காலை, மேட்டூர் அனல்மின் நிலையம் போன்ற உற்பத்தித் தளங்களில் கம்யூனிஸ்ட் கொடி பறக்கிறது.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டிலும் அதிருப்திகள் நிலவினாலும் ஆளுந்தரப்பு மீதான அதிருப்தியை சாதகமாக்கிக்கொள்ளும் நிலை யில் பிரதான எதிர்க்கட்சி இல்லை என்பதே சேலம் மண்டலத்தின் நிலவரம். மலர் உற்பத்தி யும் காய்கறி விளைச்சலும் பெருகியுள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பூ ஏற்றுமதி செய்வதற்கும் காய்கறி விற்பனையைப் பெருக்குவதற்கும் ஓசூரில் ஒரு ஏர்போர்ட் வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. ஏர்போர்ட் வசதி இருந்தால் பெங்களூரு வரை பூக்களை ஏற்றிச் செல்லாமல் ஓசூரிலிருந்தே சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு பூக்களை உடனடியாக அனுப்பி வைக்கமுடியும். இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு காய்கறிகளை அனுப்பி வைக்க முடியும் என்கிறார்கள் விவசாயிகள்.

இன்று வரை அந்த கோரிக்கை கண்டுகொள்ளப் படவேயில்லை. மாம்பழ உற்பத்திக்குப் பெயர் பெற்ற சேலம் மண்டலத்தில், கிருஷ்ணகிரி-தர்மபுரி மாவட்டங் களில்தான் அதிகளவில் மாம்பழங்கள் விளைகின்றன. இவற்றைப் பதப் படுத்துவதற்கும் பயன்படுத்துவதற் கும் ஏற்ற வகையில் ஜூஸ் ஃபேக்டரி ஒன்றை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரியளவில் அரசு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுப்பப்படுகிறது. கிருஷ்மா என்ற பெயரில் இதை அமைக்கவேண்டும் என விவசாய சங்கங்கள் போராடி வருகின்றன. எந்த அரசும் இந்த கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை.

சேலத்திலும் மேட்டூரிலும் ஏற்கனவே உருவாக்கப்பட்ட தொழிற் சாலைகளில் உற்பத்தி குறைந்துள்ள நிலையில், புதிதாக தொழிற்சாலைகள் தொடங்குவதற்கோ வேலைவாய்ப்பைப் பெருக்குவதற்கோ எந்த திட்டமும் உருவாக்கப்படவில்லை. சேலம் மண்டலத்தில் பிரபல தனியார் தொழிற்கல்லூரி கள் அதிகளவில் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் பல இளைஞர்கள் தொழிற்படிப்பில் பட்டம் பெறுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு சேலம் மாவட்டத்தில் உரிய வேலை வாய்ப்பு இல்லை.

சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு வேலை தேடிச் செல்ல வேண்டியிருக்கிறது. சேலத்தில் ஐ.டி. பூங்கா அமைக்கவேண்டும் என்கிற நீண்டநாள் கோரிக்கையும் நிறை வேற்றப்படாமலேயே இருக்கிறது.

பல கோரிக்கைகள் அப்படியே இருக்கும் நிலையில், கடந்த 4 ஆண்டு களில் தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட் டங்களை ஆளுந்தரப்பு முன்வைத்து மக்களின் செல்வாக்கை அதிகரிப்பதில் ஆர்வம் காட்டுகிறது. சேலத்தில் விரைவில் திறக்கப்படவிருக்கும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆளுந்தரப்பின் சாதனையாக முன் வைக்கப்படுகிறது. மத்திய அரசின் உதவியுடன் அமைந்துள்ள இந்த மருத்துவமனைக்கு காரணம் நாங்கள்தான் என பா.ம.க.வினரும் உரிமை கொண்டாடுகிறார்கள். அதுபோல, சேலம் ரயில்வே கோட்டம் உருவாக்கப்பட்டது தொடர் பாகவும் தி.மு.க-பா.ம.க இருகட்சிகளும் உரிமை கோருகின்றன.

சேலத்தில் புதிதாகத் திறக்கப்படவுள்ள கலெக்ட்ரேட் அலுவலகத்தை ஆளுந்தரப்பு தனது சாதனையாக முன்வைக்கிறது. கிருஷ்ணகிரி-தர்மபுரி மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்யும் விதத்தில் முதற்கட்டப் பணிகளில் உள்ள ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனத்தை எழுப்பினாலும், ஆளுந்தரப்பு தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டப்பணிகளின் முன்னேற்றம், தேர்தல் நேரத்தில் கைகொடுக்கும் என்பது ஆளுங் கட்சியின் கணக்கு.

ஒட்டுமொத்த மாக சேலம் மண்டலத்தில் நாம் மேற்கொண்ட கள ஆய்வில், விவசா யம்- தொழில்- வேலைவாய்ப்பு ஆகியவற்றில் பெரி யளவில் முன்னேற் றம் இல்லை என் றாலும் தமிழகம் தழுவிய அளவிலான அரசின் இலவச திட் டங்களும், சேலம் மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களுக்கானச் சிறப்பு திட்டங்களும் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு சாதக மான அம்சமாகவே இருக்கின்றன. ஆட்சி யில் நிறைவேற்றப் படாத திட்டங்களை வலுவாக எடுத்துச் சொல்லும் நிலையில் அ.தி.மு.க அணி இல் லை. பா.ம.கவின் ஜாதி ரீதியான செல்வாக்கும், தே.மு.தி.க.வின் தனிப் பட்ட வளர்ச்சியும் இம்மண்டலத்தின் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத் தக் கூடியனவாக இருக் கின்றன. இதனைப் பெரிய கட்சிகள் இரண்டும் எப்படிக் கையாளப் போகின்றன என்ப தைப் பொறுத் தே சேலம் மண்டலத் தில் சட்டமன்றத் தேர் தல் தீர்ப்பு அமையும்.

(வரும் இதழில் கோவை மண்டலம்)

No comments:

Post a Comment