Sunday, July 18, 2010

யுத்தம் 71 - நக்கீரன் கோபால்


""நக்கீரன்தான்...''

""நீங்கதாண்ணே...''

""உங்களை விட்டுவைக்கப் போறதில்லைன்னு அந்தம்மா கொக்கரிச்சிக்கிட்டிருக்குது.''

-பொடா நட வடிக்கை பற்றி நமக்குத் தெரிந்த சோர்ஸ்களில் இருந்து வந்த தகவல்கள்தான் இவை. வைகோவைத் தொடர்ந்து பொடாவில் நம்மை உள்ளே தள்ள வேண்டும்ங்கிறதுதான் ஜெயலலிதா அரசின் அடுத்த டார்கெட். அதற்கான வேலைகளில் அதிகார வர்க்கம் ஈடுபட்டுக்கொண்டிருப்பது நம் காதுகளுக்கு வந்த படியே இருந்தது.

மூத்த பத்திரிகையாளர் சோலை அண்ணன், எனக்கு போன் செய்தார்.

""தம்பி கோபால்... உங்ககிட்டே நேரிலே பேசணும். ரொம்ப அவசரம்'' என்றார். அவர் வசிக்கும் பெருங்களத்தூருக்கு கிளம்பிப் போனேன்.

""சொல்லுங்கண்ணே... அவசரமா வரச்சொன்னீங்களே''-என்றதும் சோலையண்ணன் ஒரு குண்டை வீசினார்.

""வைகோவுக்கு அடுத்தபடியா உங்களைத்தான் பொடாவில் குறி வைக்கிறாங்க. எனக்குத் தெரிஞ்ச சோர்ஸ் மூலமா கிடைச்ச தகவல் இது.''

""எங்களுக்கும் இந்த தகவல் கிடைச்சுதுங் கண்ணே... வைகோ அரெஸ்ட் நடவடிக்கை எப்படி போகுதுன்னு பார்ப்போம்.''

""நீங்க ஜாக்கிரதையா இருக்கணும் கோபால்...''-சக பத்திரிகையாளர் மீது மூத்த பத்திரிகையாளருக்குள்ள அக்கறையும் கவலையும் சோலையண்ணனின் குரலில் ஒலித்தது. அலுவலகத்திற்குத் திரும்பினேன். நிருபர் தம்பி பிரகாஷ் என்னிடம், ""அண்ணே.... உங்கள தேசிய பாதுகாப்பு சட்டத்துல கைது பண்ணப் போ றாங்கங்கிறதுதான் பத்திரிகைக்காரங்களோட பேச்சாக இருக்குது'' என்றார். இது என்ன புது குண்டு. சரி வரட்டும் அதையும் பார்த்துரு வோம். எல்லாத் தரப்பிலும் எதிர்பார்ப்பிற்குரியதாக மாறியிருந்தது நக்கீரன்.

நாம் சட்டரீதியானப் போராட்டங்களில் கவனம் குவித்திருந்தோம். சுப்ரீம் கோர்ட்டில் தம்பி சிவசுப்ர மணியத்தின் கூடுதல் அஃபிடவிட்டைத் தாக்கல் செய்வதற் காக அட்வகேட் பெருமாள் சார் தயாராகிக் கொண்டி ருந்தார். அதனால் தம்பிகள் சிவக்குமார், சிஸ்டம் ஆபரேட்டர் கணேசன் ஆகியோர் பெருமாள் சாருடன் இரவு பகலாக டாக்குமென்ட்டுகள் தயாரிப்பு பணியில் ஈடு பட்டிருந்தார்கள். அந்த அஃபிடவிட்டில் கோவை சிறை யில் உள்ள சிவசுப்ரமணியத்திடம் கையெழுத்து வாங் கச் சொல்லிவிட்டு, அதிகாலை ஃப்ளைட்டில் டெல்லிக் குப் புறப்பட்டார் அட்வகேட் பெருமாள். அவரை தம்பி கவுரி ஏர்போர்ட்டுக்கு அழைத்துச் சென்றார்.

அட்வகேட்டை வழியனுப்பிவிட்டு, கோவை எக்ஸ்பிரஸ் ரயிலின் கேன்ட்டீன் பொறுப்பில் இருந்த ஒருவரிடம், அஃபிடவிட்டைக் கொடுத்து, அதை நமது கோவை நிருபர் தம்பி மகரன் கையில் சேர்க்கச் சொன்ன கவுரி, மகரனையும் தொடர்புகொண்டு தகவலைத் தெரிவித்துவிட்டார். மதியம் தம்பி மகரன் எனக்குப் பேசினார்.

""அண்ணே... கோவை எக்ஸ்பிரசில் அந்த அஃபிடவிட்டை வாங்கிட்டேன்.''

""தம்பி.. நீங்க அதை வக்கீல் அபுபக்கரிடம் கொடுத்து, ஜெயிலுக்குப் போய் சிவாவைப் பார்க் கச் சொல்லி கையெழுத்து வாங்கச் சொல்லுங்க. கையெழுத்து வாங்கியதும் அதை டெல்லியில் உள்ள பெருமாள்சார்கிட்டே எப்படியாவது சேர்க்கணும். கவனம் தம்பி.''

அரசாங்கம் சட்டத்திற்குப் புறம்பாக எவ்வளவு வேகமாக வேலை பார்த்துக் கொண்டிருந்ததோ, அதைவிட வேகத்துடன் நமது சட்டப்போராட்டம் தொடர்ந்துகொண்டிருந்தது. டெல்லியிலிருந்து அட்வகேட் பெருமாள் பேசினார்.

""அண்ணாச்சி... இங்கே சர்மாஜியைப் பார்த்து, சுப்ரீம் கோர்ட்டில் சீனியர் அட்வகேட் மூலம் அஃபிடவிட் ஃபைல் பண்றது பற்றிப் பேசிட்டேன். சாந்திபூஷண் சரியா இருப்பாருன்னு எல்லாரும் சொல்றாங்க'' என்றார். உச்சநீதிமன்றத் தில் அஃபிடவிட் தாக்கல் செய்யும் முயற்சிகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, சி.பி.ஐ. விசாரணை கேட்டு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பெட்டிஷன் தொடர்பான நடவடிக்கைகள் இன்னொருபுறம் வேகமெடுத்தன.

பெருமாள் சார் மீண்டும் லைனில் வந்தார். ""சர்மாஜி மூலமா சாந்திபூஷண்கிட்டே பேசி யாச்சுங்க அண்ணாச்சி. சாயங்காலம் அப்பாயிண்ட் மென்ட். கேஸை ஒத்துக்குவாரான்னு அப்பதான் தெரியும்.''

""நீங்க அதை கவனிச்சுக்குங்க சார்'' என்றேன். அதற்குள் கோவையிலிருந்து ஒரு தகவல்.

அஃபிடவிட்டில் கையெழுத்து வாங்கு வதற்காக கோவை சிறைக்கு சென்ற அட்வகேட் அபுபக்கரிடம், ""சிவசுப்ரமணியத்தை வேற கேசுக்காக மைசூருக்கு கொண்டு போயிட்டாங்க. நீங்க சந்திக்க முடியாது'' என்று சொல்லிவிட்டது சிறை நிர்வாகம். அபுபக்கர் அங்கிருந்து எனக்கு போன் செய்து விவரம் சொன்னார்.

""என்ன வழக்கு? ஏன் மைசூருக்கு அழைச் சிட்டுப் போகணும்?'' -பதட்டத்தோடு நான் நமது பெங்களூரு நிருபர் ஜெ.பிக்கு போன் செய்து விசாரிக்கச் சொல்கிறேன். தம்பி சிவக்குமார் ஒரு பக்கம் விசாரித்துக் கொண்டிருக்கிறார். அட்வ கேட் ப.பா.மோகன் இன்னொரு பக்கம் விசாரித்துக் கொண்டிருக்கிறார். சிவாவை மைசூரில் எங்கு வைத்திருக்கிறார்கள் என்பது பற்றி யாருக்கும் எந்தத் தகவலும் கிடைக்க வில்லை.

எனக்கு சட்டென யோசனை. மகரனை லைனில் பிடித்தேன். ""தம்பி... உங்க சோர்ஸ் மூலமா கோவை சிறை வட்டாரத்தில் விசாரித்துப் பாருங்க. உண்மை என்னன்னு தெரியணும்.''

""சரிங்கண்ணே...''

-அடுத்த ஒரு மணி நேரம் கழித்து லைனில் வந்தார் மகரன். ""சிவா கோவையிலதானுங் கண்ணே இருக்காராம். அட்வகேட்கிட்ட ஜெயில் அதிகாரிகள் தப்பா டைவர்ட் பண்ணி யிருக்காங்க'' என்றார். நாம் மீண்டும் அட்வகேட் அபுபக்கரிடம் சொல்லி, அபுபக்கரை கோவை சிறைக்கு அனுப்பி, அஃபிடவிட்டில் சிவாவிடம் கையெழுத்து வாங்கி, அதை டெல்லியில் உள்ள அட்வகேட் பெருமாளுக்கு உடனடியாக அனுப்பி வைத்தோம்.

அஃபிடவிட் தன் கைக்கு கிடைத்ததும் பெருமாள் சார் போன் செய்தார். ""அண்ணாச்சி... நம் கேஸ் சம்பந்தமான விவரங்களையெல்லாம் நோட் போட்டுத் தரும்படி சாந்திபூஷண், சர்மாஜிகிட்டே சொல்லியிருக்காரு'' என்றார். நக்கீரன் அலுவலகத்தின் சுறுசுறுப்பு மேலும் அதிகமானது. இரவு பகலாக நக்கீரன் தம்பிகள் எல்லா விவரங்களையும் தொகுத்து டீடெய்லாக டெல்லிக்கு இ-மெயில் செய்தனர். ஃபேக்சும் அனுப்பப்பட்டது.

எல்லா விவரங்களையும் பெற்றுக் கொண்ட அட்வகேட் பெருமாள் உடனே லைனில் வந்தார். ""அண்ணாச்சி... சாந்தி பூஷணுக்கு என்.ராம் சாரை நல்லாத் தெரியும். அவர் ஒரு வார்த்தை சொன்னால் நல்லா இருக்கும்'' என்றார்.

நான் உடனே என்.ராமைத் தொடர்பு கொண்டேன். அவரும், சாந்தி பூஷணிடம் பேசுவதாகச் சொன்னார். அடுத்த சிறிது நேரத்தில், என்.ராமிடமிருந்து போன்.

""கோபால்... சாந்தி பூஷண்ங்கிறது பெஸ்ட் சாய்ஸ். அவர்கிட்டே பேசிட்டேன். உங்க விஷயங்களை கேட்டு ரொம்ப வருத்தப்பட்டார். கேஸைப் பொறுத்த வரைக்கும் ஸ்ட்ராங் கேஸ்னு சொன்னார். கட்டாயம் சுப்ரீம்கோர்ட்டில் அட்மிட்டாகி நோட்டீஸாகும்னு சொன்னார். உங்க கேஸ் பற்றி மீடியாக்களில் வந்ததையெல்லாம் படிச்சிக்கிட்டிருக்கிறதா சொன்னார்'' என்றார் ராம்.

அட்வகேட் பெருமாளும் சர்மாஜியும் சாந்திபூஷணை சந்தித்து, நாம் அனுப்பியிருந்த டீடெய்ல்களைக் கொடுத்து, வழக்கு பற்றி விவரிக்க அவரும் ஆஜராக ஒப்புக்கொண்டார். சிவா கையெழுத்திட்டுக் கொடுத்திருந்த அஃபிடவிட்டும் சாந்திபூஷணிடம் தரப்பட்டது. பெருமாள் சார் போன் செய்து, நமது கேஸில் ஆஜராவதற்கு சாந்திபூஷண் ஒப்புக்கொண்டதை சந்தோஷத்துடன் சொன்னார். சோனை முத்து மச்சானின் நண்பரான செங்கோட்டு வேலு டெல்லியில் இருந்தார். உடனடியாக அவர் ஃபீஸ் தொகையை கடனாகக் கொடுத்து உதவினார்.

ஜூலை 8ஆம் தேதி. காலை 11 மணி.

அட்வகேட் பெருமாள் சார் போன் செய்தார். ""அண்ணாச்சி... க்ஷஹக் ய்ங்ஜ்ள். நம்ம பெட்டிஷன் டிஸ்மிஸ் ஆயிடிச்சி. சாந்தி பூஷண் ரொம்ப நல்லா ஆர்க்யூ பண்ணினார். ஆனா, சுப்ரீம்கோர்ட் டிஸ்மிஸ் பண்ணிடிச்சி. ஆனா ஹைகோர்ட்டை மூவ் பண்ணச் சொல்லியிருக்குது. கெட்டதிலும் ஒரு நல்லதுங்க அண்ணாச்சி.''

சுப்ரீம் கோர்ட்டில் நமது முயற்சிகள் பலனளிக்காத நிலையில், கோர்ட் உத்தரவுப்படியே ஹை கோர்ட்டில் பெட்டி ஷனை மூவ் பண் ணத் தயாராகிக் கொண்டிருந் தோம். தம்பி காமராஜ் போன் செய்து, ""அண் ணே... ரெய்டுக்கு வரப்போறாங்களாம். ஒரு இன்ஃபர்மேஷன் கிடைத்திருக்குது'' என்றார்.

ஆடிட்டர் மோரீஸ் அவசரமாக அலுவலகத்துக்கு வந்தார். தனது சோர்ஸ்களிலிருந்து கிடைத்த தகவல்களை அவர் சொல்லத் தொடங்கினார்.

""ரெய்டு நிச்சயம்னு சொன்னாங்க. அடுத்தது பொடாதானாம். முதலில் உங்களையும் அப்புறம் ஆஃபீசில் இருக் கிறவங்களையும் தேவைப்பட்டால் பொடா வில் தள்ளுவதுன்னு ப்ளான் பண்ணி யிருக்காங்களாம். வைகோவை அரெஸ்ட் செய்ததா, மீடியாவின் கவனத்தையெல் லாம் அவர் பக்கம் திருப்பிட்டு, நக்கீரன் மீது சத்தமில்லாம நடவடிக்கை எடுப்பது தான் கவர்மென்ட்டோட திட்டமாம்'' என்றார்.

எல்லாத் தரப்பிலிருந்தும் நமக்கு இதுபோன்ற தகவல்களே வந்துகொண் டிருந்தன.

ஜூலை 9-ந் தேதி அதிகாலை. என்னுடைய செல்போன் ஒலிக்கிறது. எதிர்முனையில் ரஜினி.

""ஏதோ பொடா கேஸ்னெல்லாம் பேச்சு வருதே கோபால். எப்படி இருக்கீங்க? எப்படி சமாளிக்கிறீங்க?''

""போராட்டம்தான்... எல்லாத்தையும் சட்டரீதியா எதிர்கொண்டுக்கிட்டிருக் கோம்.''

""எல்லாமே பார்ட் ஆஃப் தி கேம்னு சொல்லுவீங்க. அதைத்தான் ஃபீல் பண்ணிப் பார்த்தேன். ஃப்ரீயா ஒரு நாள் பேசணும் கோபால். இவ்வளவு டென்ஷனை யும் எப்படி தாக்குப்பிடிக்கி றீங்க?''

""இதெல்லாம் நடக் கும்ங்கிறது எதிர் பார்த்ததுதானே.. எதிர்கொண்டுதான் ஆகணும்'' என்றேன் ரஜினியிடம்.

எதிர்கொள் வதற்கான களம் மிகப்பெரியதாகவும் மிக பயங்கரமான தாகவும் உருவாகிக் கொண்டிருந்தது.

-யுத்தம் தொடரும்

No comments:

Post a Comment