Sunday, July 18, 2010

""ஜெ.'' அழைப்பு! "கை' கணக்கு!


""ஹலோ தலைவரே... .... தொண்டர்கள் விரும்புவதுபோல கூட்டணி அமையும்னு கோய முத்தூரில் நடந்த கண்டன கூட் டத்தில் ஜெ பேசியதுதான் இந்த வாரத்தின் அரசியல் பரபரப்பு. எந்த அடிப்படையில் கூட்டணி மாற்றம் பற்றி ஜெ பேசுறார்னு எல்லாக் கட்சிகளுமே யோசிச்சிக்கிட்டிருக்குது.''

""புதுக்கூட்டணின்னா தே.மு.தி.க. வோடா? காங்கிரசோடா?''

""எதிர்பார்ப்பிற்குரிய கூட்ட ணின்னா அது காங்கிரசோடு அமைக்கிற கூட்டணிதான். அப்படின்னா காங்கிரசில் என்ன நடக்குதுன்னு டெல்லி வட்டாரத்தில் விசாரித்தேங்க தலைவரே.. .. அங்கே நம்பர் 12, துக்ளக் லேனில் இருக்கிற இளைஞர் காங்கிரஸ் அலுவலகத்தில் போன 13, 14, 15 மூணு நாட்களிலும் தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளோடும், 45 வயதுக்குட்பட்ட தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களோடும் அகிலஇந்திய இளைஞர் காங்கிரசின் பொதுச்செயலாளரான ராகுல்காந்தி தீவிரமா ஆலோசனை நடத்தியிருக்கிறார்.''

""என்ன சொன்னாராம்?''

""எடுத்த எடுப்பில் தன்னோட கருத்தை வெளிப்படுத்தாமல், தமிழக காங்கிரசாரைப் பேசச் சொல்லி கேட்டிருக்கிறார். படபடப்பு இல்லாம, ஃப்ரீயா பேசுங்கன்னு அருள் அன்பரசு எம்.எல்.ஏகிட்டே சொன்னதோடு, தமிழகத்தில் நம்ம கட்சி வளர்ந்திருக்கான்னு கேட்டிருக்கிறார் ராகுல். அதற்கு அருள், 15% வாக்குகள் நமக்கு நிரந்தரமா உண்டு. இது சைலண்ட் ஓட்டு. இதை சரியானபடி நாம பூத்துக்கு கொண்டு வந்து சேர்க்காததால மற்ற கட்சிக்காரங்க பர்சேஸ் பண்ணிட்டுப் போய்க்கிட்டிருந்தாங்க. நீங்க தமிழ்நாட்டுக்கு வந்துட்டுப் போனபிறகு காங்கிரஸ் கட்சியோட ஓட்டு பலம் 22 சதவீதமாக உயர்ந்திடிச்சின்னு சொல்ல, அசால்ட் டான புன்னகையோடு அருள்அன்பரசை நிமிர்ந்து பார்த்த ராகுல், அந்த பாயிண்ட்டுகளைக் குறிச்சிச் சிட்டார். விவரங்களையெல் லாம் கேட்ட பிறகுதான் ராகுல் பேச ஆரம்பித்திருக்கிறார்.''

""அவரோட கணிப்பு என்ன?''

""எம்.எல்.ஏ. காயத்ரி தேவி போன்றவங்ககிட்ட ராகுல் பேசுறப்ப, தமிழ் நாட்டு மக்கள் தி.மு.க- அ.தி.மு.க.வுக்கு மாற்றாக காங்கிரசைத்தான் நினைக்கிறாங்கன்னு எனக்கு ரிப்போர்ட் வந்திருக்குது. காங்கிரஸ் மட்டும்தான் தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை நியமிக்கப் போகுதுங்கிறதை மனசிலே வச்சிக்கிட்டு செயல்படுங் கன்னு சொல்லியிருக்கிறார். தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ்கிட்டே வரும் சட்டமன்றத் தேர்தலில் தான் காங்கிரசோட பல அவதாரங்களை தமிழகம் பார்க்கப் போகுதுன்னும் ராகுல் சொல்லியுள்ளாராம்.''

""என்ன அவதாரமாம்?''

""ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் சம்பந்தமா ராகுல்காந்தி ஒரு கணக்கைச் சொல்லியிருக்கிறார். அதாவது, காங்கிரசுக்கு 100 சீட்டுன்னு நம்மோட பேரத்தை ஆரம்பிப்போம். 80 சீட்டுக்குக் குறையாமல் ஒதுக்கினால்தான் கூட்டணி. இதில் நம்மோட முதல் சான்ஸ் தி.மு.க.தான். அவங்ககிட்டேதான் சீட் கேட்கப் போறோம். சரிப்படலைன்னா அடுத்த கூட்டணி பற்றி பேசுவோம். எந்த அணியிலும் நாம் கேட்கிற சீட்டுகளை ஒதுக்க முன்வரலைன்னா, காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி அமைப்போம்னு ராகுல் சொன்னாராம். அதிக சீட்டா, புதிய அணியா? எந்த அவதாரத்தை காங்கிரஸ் எடுக்கப்போகுதுன்னு இளைஞர் காங்கிரசார் எதிர்பார்த்துக்கிட்டிருக் காங்க. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைகளும், தமிழக காங்கிரஸ் சீனியர்களும் கூட்டணி பற்றி இறுதி முடிவெடுக்கும் அதிகாரமுள்ளவர் சோனியாதானே. அவரோட கணக்கு தி.மு.க. கூட்டணிதானே! இது என்ன புது குழப்பம்னு கேட்கறாங்களாம்.''

""தேர்தல் நாள் நெருங்குகிற வரைக்கும் யூகங்களும் வியூகங்களும் தொடர்ந்து கிட்டுத்தான் இருக்கும்ப்பா...''

""ஆமாங்க தலைவரே... அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெ.வும் தேர்தலை மனசிலே வச்சி பல வியூகங்களை வகுத்துக்கிட்டிருக்கிறார். கோவையில் நடந்த கண்டனப் பொதுக் கூட்டத்துக்கு வந்த கூட்டத்தைப் பார்த்துட்டு ரொம்ப தெம்பாகி, ஒவ்வொரு மாவட்டத்திலும் தன்னோட தலைமையில் இதேபோல கண்டனக் கூட்டத்தை ஒவ்வொரு மாதமும் நடத்துறதுன்னு முடிவு செய்திருக்காராம். அடுத்த கூட்டத்தை, ஆகஸ்ட் 29-ந் தேதி மதுரையில நடத்துவது பற்றி கார்டனில் ஆலோசனைகள் நடந்துக்கிட்டிருக்குது. அதற்கடுத்த கூட்டம், செப்டம்பர் 16-ந் தேதி திருச்சியிலாம். அதற்கப்புறமா சேலம், கிருஷ்ணகிரி, சென்னைன்னு தேர்தல் தேதி அறிவிக்கிற வரைக்கும் மாதம் ஒரு பொதுக்கூட்டம் நடத்துறதா இருக்கிறாராம்.''

""தேர்தல் வருதுன்னா எல்லாத் தலைவர்களும் மக்கள்கிட்டே நெருங்கி வந்துதானே ஆகணும்!''

""நான் அடுத்த மேட்டருக்கு வர்றேங்க தலைவரே... ... தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சுட்டுக் கொல்வதும் அடித்துக் கொல்வதும் தொடர்ந்து கிட்டேதான் இருக்குது. ஆளுங்கட்சியான தி.மு.க.வே இதை எதிர்த்து போராட்டம் நடத்தவேண்டிய அளவுக்கு நிலைமை இருக்கிற நிலையில், ஜூலை 14-ந் தேதியன்னைக்கு வைகோ, பழ.நெடுமாறன், விடுதலை ராசேந்திரன், ம.நடராசன் இவங்க ஒண்ணாக போராட் டம் நடத்தினாங்க. சென்னையிலே இருக் கிற இலங்கைத் துணை தூதரகத்தை இழுத்து மூடணும்ங் கிறதுதான் இவங்க ஆர்ப்பாட்டத்தோட நோக்கம்.''

""ஆர்ப்பாட்டம் செய்த தலைவர்களையும் அதில் கலந்துக்கிட்டவங்களையும் கைது செய்து ரிமாண்டு பண்ணிட்டாங்களே?''

""ஆமாங்க தலைவரே... ... வைகோவை திருச்சி சிறைக்கும், நெடுமாறனை கடலூர் சிறைக்கும் மற்றவங்களை வேலூர் உள்ளிட்ட பிற சிறைச் சாலைகளுக்கும் அனுப்பிட்டாங்க. எல்லோரையும் ஒரே ஜெயிலில் அடைச்சா, அங்கே ஒன்றுசேர்ந்து ஆலோசனை செய்து அடுத்த திட்டத்தை வகுத்திடுவாங்கங்கிறதாலதான் தனித்தனி ஜெயில். இலங்கைத் துணை தூதரகத்தை கைப்பற்ற முயற்சி செய்ததா இவங்க மேலே கடுமையான செக்ஷன்களில் வழக்குப் போடப்பட்டி ருக்குது. இத்தனை செக்ஷன்களில் வழக்கு போடுவாங்கன்னு நாங்க எதிர்பார்க்கவே யில்லைன்னு ஜெயிலுக்குப் போனவங்க சொல்லிக்கிட்டிருக்காங்க.''

""ஏன் இத்தனை சீரியஸான நடவடிக்கையாம்?''

""ஆர்ப்பாட்டத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளைப் பார்த்தப்ப, அதில் சோனியாவும் ராஜ பக்சேவும் இருக்கிற படங்களை ஆர்ப் பாட்டக்காரர்கள் செருப்பால அடிக்கிற காட்சியெல்லாம் இருக்குது. போடப் பட்டிருக்கிற 7 செக்ஷன்களில் 2 செக்ஷன்களில் மட்டும் விசாரணை நடத்தி, 4 மாதத்தில் வழக்கை முடித்து, அரசு தரப்பால் தண்டனையும் வாங்கிக் கொடுத்து விட முடியுமாம். இதைச் சுட்டிக்காட்டும் ம.தி.மு.க வக்கீல்கள், சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கிட்டிருக்கிற நேரத்திலே, போட்டி யிட விடாதபடி செய்வதற்காகத்தான் இவ்வ ளவு வேகமா நடவடிக்கை எடுக்கப்படுதுன்னு பயப்படுறாங்க.''

""தலைமைச் செயலக வட்டாரத்தில் என்ன சொல்றாங்க?''

""துரைமுருகனிடமிருந்த பொதுப் பணித்துறையை முதல்வர் தன் நேரடி பொறுப்பில் எடுத்துக்கொண்டு ஒரு வருட மாகிவிட்டது. ஜூலை 13-ந் தேதிதான் ஓராண்டு நிறைவுநாள். அதனால, பொ.ப.து. உயரதிகாரிகளெல்லாம் முதல்வரை நேரில் சந்தித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்தியதோடு, நீங்களே பொ.ப.துறையை கையிலே வச்சிருக்கணும்னு கேட்டுக்கிட்டாங்க. ஏன்னா, போன ஜூலையில் பொறுப்பைக் கையிலெடுத்த முதல்வர் ஆகஸ்ட், செப்டம்பர் இந்த 2 மாசத்திலேயே 1500 ஃபைல்களில் கையெழுத்துப் போட்டு க்ளியர் பண்ணிட்டாராம். 3 வருசத்துக்குமேலே தேங்கியிருந்த ஃபைல்கள் 2 மாசத்திலே க்ளியரானதால பொ.ப.துறையில் பல வேலைகள் வேகமா நடந்திருக்குது. அதன்பிறகும், ஃபைல்கள் சரியா க்ளியராகி வேலைகள் தொடர்வ தால்தான், முதல்வரே பொ.ப.துறையை வச்சிக்கணும்னு அதிகாரிகள் கேட்டுக்கிட்டாங்க.''

""முதல்வர் டெல்லிக்குப் போறாராமே... அரசியல் ரீதியான முக்கிய மூவ்கள் இருக்குமா?

""டெல்லியில் ஜூலை 24-ந் தேதி தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டம் நடக்குது. அதில் கலந்துக்கிற யோசனையில் முதல் வர் இருக்கிறார். கூட்டணி பற்றியெல்லாம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பா பேசப்படுவதால, டெல்லியில் கலைஞர்- சோனியா சந்திப்பு நடக்க லாம்னும், அரசியல் ரீதியான முக்கிய பேச்சுகள் நடக்கும் னும் டெல்லி வட்டாரங்கள் சொல்லுது.''

மிஸ்டுகால்!



அண்ணா சதுக்கத்திற்கும் எம்.ஜி.ஆர். சமாதிக்கும் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வது அங்குள்ள அணையா விளக்கு. புயல், மழை என இயற்கை சீற்றங்களை மீறி இந்த விளக்கு அணையாமல் எரியும். காமராஜர் நினைவிடத்திலும் இதே போன்ற அணையாவிளக்கு ஏற்றப்படும் என கலைஞர் அறி வித்திருக்கிறார். காமராஜர் மீது பெருமதிப்பு கொண்டிருக்கும் தமிழக மக்களுக்கு இந்த அறி விப்பு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.



ஜெயிலிலிருந்து ஜாமீனில் வெளியே வந்திருக்கும் நித்யானந்தா சாமியார், தன் இமேஜ் டெவலப்மென்ட்டுக்காக தெய்வீக பிரச்சார பாதயாத்திரை யை தமிழகத்தில் நடத்தவிருக் கிறார். இதற்கான பேனர்கள், அவரது சொந்த ஊரான திரு வண்ணாமலையில் ரெடியாகி பல மாவட்டங்களுக்கும் அனுப்பப் பட்டு வருகிறது.



அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் செயல்பாட்டை நேரில் ஆய்வு செய்வதற்காக சென்னைக்கு வந்த மத்திய அமைச்சர் கபில்சிபல், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கை கொடுத்து, மற்ற மாநிலங்க ளெல்லாம் எப்படி இந்த திட் டத்தை செயல்படுத்தவேண்டும் என்று தெரிந்துகொள்ளவேண்டிய அள வுக்கு தமிழகத்தில் இந்தத் திட்டம் சிறப்பாக நடக்கிறது என்று பாராட் டியதுடன், அடுத்த கல்வியமைச் சர்கள் மாநாட்டை சென்னையில் தான் நடத்தப்போகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.



செம்மொழி மாநாட்டின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட அலாவுதீன் ஐ.ஏ.எஸ். மாநாட்டுப் பணிகளை வேகமாக நிறைவேற்றிய தற்குப் பரிசாக ஊரக வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளர் + முதல்வரின் முதன்மைச் செயலா ளர் என இரட்டைப் பதவிகள் பரிசாக அளிக்கப்பட்டிருக்கிறது

No comments:

Post a Comment