Sunday, July 25, 2010

ஆட்டுக்கறி! அதிரடி ஆபரேஷன்!


இரவு 10.00 மணி. சேலம் வ.உ.சி. மார்க்கெட்டை ஒட்டிச் சென்றுகொண்டிருந்தது அந்த மினி வேன்.

""மேடம்... நீங்க சொன்ன மாதிரி இந்த இடம்தான் பப்ளிக்கிற்கு டிஸ்டர்பன்ஸ் இல்லாத இடம்... வேனை மடக்கிடலாமா?'' -சேலம் மாநகராட்சி நகர் நல அலுவலர் பொற்கொடியிடம், செல்போனில் பர்மிஷன் கேட்டனர், அந்த வேனை பின்தொடர்ந்துகொண்டிருந்த நகர்நலத்துறை பணியாளர்களான மணிகண்டனும் சந்திரனும் சரவணனும் ஞானப்பிரகாசமும். ""ஓ.கே. கேட்ச் இட்'' என்றார் அதிகாரி.

புயல் வேகத்தில் மினி வேனை சுற்றி வளைக்கிறது நால்வர் டீம். பதறிப்போய் வேன் டிரைவர் இறங்க, ""நாங்க மாநகராட்சி நகர்நல துறையிலிருந்து வர்றோம்'' என்றபடியே வண்டியை சீஸ் செய்தார்கள்.

ஒன்றரைமணி நேர டெர்ரர் ஃபாலோ-அப் செய்து அதிரடியாக சீஸ் செய்யும் அளவுக்கு அப்படி அந்த வேனில் என்ன இருக்கிறது? என்றபடியே பின் கதவைத் திறந்து பார்த்தால் குப் பென்று நாற்றமடித்து நம் குடலைப் புரட்டியது. நூற்றுக் கணக் கான செம்மறி ஆட்டுத் தலைகளும், புழு வைத்து நாறிப்போன 1000 கிலோவிற்கும் மேலான ஆட் டுக் குடல், நுரையீரல்களும் நிரம்பியிருந்தன.

""என்னடா ஆட்டுக் கறியை பிடிச்சதுக்கு இவ்ளோ பில்ட்-அப்னு நினைக்கிறீங்களா சார்'' என கவனத்தைத் திருப்பிய நால்வர் டீம் ""ஆனா இவை எல்லாம் ஹோட்டலுக்குப் போயிருந்தா சாப்பிடுற எல்லோரும் காலிதான்... ""ஆமாங்க... அத்தனையும் விஷம்'' என்றபடியே விரிவாய் பேசத் தொடங்கினர்.

""இங்க சேலத்துல கூலி வேலைக்குப் போய் பொழப்பு நடத்துற அன்றாடம் காய்ச்சிகள்தான் அதிகம். இவங்க அதிகம் உபயோகப்படுத்துறது கையேந்தி பவன்கள், சின்னச் சின்ன ஹோட்டல்களைத்தான். ஏற்கனவே ஒன்றரை மாதம் முன் ரோட்டோர சில்லி சிக்கன், மீன் கடைகளை ரெய்டு செய்து பழைய எண்ணெய்யை உபயோகப்படுத்தக் கூடாதுன்னு எச்சரிக்கை செய்து வந்தாங்க எங்க மேடம். அப்படி யிருக்க அதன்பின் மக்கள் பலர் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டு வர்றதா தகவல் வந்துக்கிட்டு இருந் தது. குறிப்பா இந்த 15 நாட்கள்ல பல மருத்துவமனை டாக்டர்ஸ் மூலம் நிறைய பேஷன்ட்ஸ் வாந்தி, பேதியால ட்ரீட்மென்ட்டிற்கு வர் றாங்க என தகவல் வந்தது. இந்த பிரச்சினைக்கு மூல காரணம் உணவுதான் என தெரிந்த மேடம் விசாரணையில் இறங்கிய போது தான் கெட்டுப்போன பழைய கறிகளை ஹோட்டல்களில் கலந்து விநியோகித்துவிடுகின்றனர் என அதிர்ச்சி ரிப்போர்ட் கிடைச்சது.

மேலும் துருவியபோதுதான்... ஞாயிற்றுக்கிழமை அன்று பெரும் பாலானவர்கள் கறி சாப்பிடுவதால் சனிக்கிழமை தோறும் இரவுகளில் பெங்களூரிலிருந்து மினி வேன் களில் காலாவதியான கறிகள் சேலத்திலுள்ள முக்கிய ஹோட் டல்களுக்கு விநியோகிக்கப்படு கிறது உறுதியா தெரிஞ்சது. சரா சரியா ஆட்டுக்கறி கிலோ 250 ரூபாய்க்கு விற்கப்படுது. பெங்களூர், ஹைதராபாத் போன்ற பெரு நக ரங்கள்ல, பெரிய ஹோட்டல்கள்ல டேமேஜ் ஆகி வேஸ்ட் ஆகுற கறியிலயும் லாபம் பார்க்க... அந்த கறிகளை பாதி ரேட்டுக்கு வித்துடுவாங்க. அதை வாங் குற சின்னச் சின்ன ரோட்டோர ஹோட்டல்கள் பிரி யாணியில கலந்து வழக்கமான விலையிலயே பொதுமக்களுக்கு தருவாங்க. பொதுமக்களால இது புது கறியா, பழைய கறியானு பார்க்க முடியாது. டேஸ்ட்டா இருந்தா ஓ.கே.னு போயிடுவாங்க. இந்த நெட்வொர்க் ஒரு சோர்ஸ் மூலம் தெரியவந்துதான் ஸ்கெட்ச் போட்டு இன்னிக்கு கையும் களவுமாக பிடிச்சிருக்கோம்'' என்றனர் பெருமிதமாக.

"வாழ்த்துக்கள் மேடம்' என்றபடியே பொற்கொடியிடம் பேசினோம்.

""பொதுவா உடனே அறுத்து சமைக்கப்படும் கறிதான் உடலுக்கு நல்லது. காலாவதியான பழைய கறிகளை சாப் பிட்டால் அமீபியாஸ் வரும், கல்லீரல் பாதிக்கப்படும். பேக் டீரியாஸ் ஃபார்ம் ஆனா வாந்தி, பேதி வரும். பழைய கறி களால் கல்லீரல் பாதிக்கப்பட்டு டைபாய்டு, காமாலை போன்ற நோய்கள் வரும். இப்போ நாங்க பிடிச்ச கறிகளை பார்த்தீங்கன்னா 2 வாரத்திற்கு முன்பு அறுக்கப்பட்டதுன்னு ஆய்வுல தெரியவரும். ரெண்டாவது, புழுக்களெல்லாம் ஃபார்ம் ஆகிடுச்சி. இதை சின்னச் சின்ன கடைக்காரர்கள், குறைந்த விலைக்கு கிடைப்பதால் வாங்கி புழுக்களை அப்புறப் படுத்திவிட்டு பிரியாணியில, மற்ற உணவுல கலந்துடுறாங்க. பெரும்பாலும் ஃபாஸ்ட் ஃபுட் கடைகள்ல இது நடக்குது. ஒரு கடைக்கு 1000 பேர் சாப்பிட வர்றாங்கன்னா இப்படிப் பட்ட கறிகளால அத்தனை பேரும் ஃபுட் பாய்ஸனாகி பாதிக்கப்படுவாங்க. சேலம் சிட்டியில மட்டும் 500-க்கும் மேற்பட்ட சிறு சிறு நான்-வெஜ் ஹோட்டல்கள் இருக்கு. யோசிச்சுப் பாருங்க... எத்தனை பேர் பாதிக்கப்படுவாங்கன்னு. இதைத் தடுக்க மாநகராட்சி கமிஷனர் பழனிச்சாமி சார்கிட்ட தகவல் கொண்டுபோய் டீம் வொர்க்கா இந்த அதிரடியை நடத்தினோம். இது தொடரும்'' என்றார் அக்கறையோடு.

""பெங்களூர் சிவாஜி நகர்ல இருந்து சேலம் மட்டுமல்ல, தமிழகம் முழுக்க பழைய கறிகள் விநியோகம் நடக்குது. செவ்வாய், சனி இரண்டு இரவுகளில் சேலம் சிட்டிக்கு மட்டும் 2000 கிலோ பழைய கறி வருதுன்னா தமிழகம் முழுக்க யசிச்சுப் பாருங்க. இதுல பல கோடி லாபம் கிடைக்குது. பெங்க ளூர், மைசூர்லதான் இந்த பிசினஸ் அதிகம். சேலத்திலுள்ள அனைத்து ஹோட்டல்களிலும் திடீரென அதிரடி ரெய்டு நடத்தி சீல் வைக்கவும் போறாங்க. குறிப்பா "பெண்பாலை' குறிக்கும் பெயரில் நகரத்துல பல இடத்துல வச்சிருக்கிற மெஸ்தான் அடுத்த டார்கெட். சத்தமில்லாமல் செய்யப் போறாங்க மேடம்'' என்கின்றனர் மாநகராட்சி வட்டாரத்தினர்.
உடைந்துபோன சுகாதாரமற்ற முட்டைகளை பாதையோர கடைகள் பயன்படுத்துவதை அறிந்து ரெய்டு நடத்தி அவைகளை அழித்துள்ளார் பொற்கொடி.

மாங்கனி மாநகரில் தொடங்கிய இந்த அதிரடி அனைத்து மாநகரங்களிலும் பரவினால் தமிழகம் "சுகாதார மான தமிழகமாய்' காட்சி தருமே!

No comments:

Post a Comment