Sunday, July 25, 2010

ரத்தம் குடிக்கும் மாஞ்சா! சென்னை பயங்கரம்!

ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி. உறவினர் வீட்டிலிருக்கும் தன் மனைவியையும் குழந்தைகளையும் அழைத்து வர டூவீலரில் கிளம்பினார் திருப்பதி. சென்னை வண்ணாரப் பேட்டை அம்பேத்கார் சாலையில் சென்று கொண்டிருந்த திருப்பதியின் கழுத்தில் மாஞ்சா நூல் பட்டதுதான் தாமதம். அடுத்த நிமிடமே கழுத்திலிருந்து குபு குபுவென இரத்தம் பீறிட் டுக் கிளம்ப... நிலை தடுமாறி கீழே விழுந்த வர்தான்... எழுந்திருக்கவே இல்லை. அதே மாஞ்சா நூல்தான் பின்னால் வந்த சரவணன் என்ற வாலிபரின் கழுத்தையும் பதம் பார்த்தது. இப்படி மாஞ்சா நூலின் கூர்மையால் கழுத்தறுபட்டு உயிரிழக்கும் சம்பவம் தமிழக தலைநகரான சென்னைக்கு புதிதல்ல. சில மாதங்களுக்குள்ளேயே பதினைந்துக்கும் மேற்பட்ட உயிர்களை குடித்து இரத்த வெறியாட்டம் ஆடிக் கொண்டிருப்பதால்தான் "இனி மாஞ்சா காத்தாடி விட்டு அதன் மூலம் உயிரிழப்பை ஏற்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரித்திருக்கிறார்கள் காவல்துறை உயர் அதிகாரிகள்.

இந்த கடுமையான எச்சரிப்புக்குப் பிறகும் மாஞ்சா காத்தாடி விடுகிறார்களா? என்பதை கண்டறிய மாஞ்சா காத்தாடி விடுவதை உலக விளையாட்டை போல் நினைத்து விளையாண்டு கொண்டிருக்கும் வடசென்னை பகுதியில் ரவுண்ட் அடித்தோம்.

போலீஸ் அதிகாரிகளின் கட்டுப்பாட்டையும் மீறி பலர் காத்தாடி விட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். "அப்படி என்னதாய்யா இருக்கு? இந்தக் காத்தாடி விடுறதுல?' இளைஞர்களிடம் நைஸாக பேச்சுக் கொடுத்தோம்.

""இன்னா தல இப்டி கேக்குற! உங்க எல்லாருக்கும் கிரிக்கெட்டு எப்டியோ அந்த மாதிரிதான் எங்களுக்கு மாஞ்சா நூல்ல காத்தாடி வுடுறதும்'' என்று அசால்ட் டாக சொல்லி அதிர வைத்த கொருக்குப்பேட்டை இளைஞர்கள்... இந்த விபரீத விளையாட்டைக் குறித்தும் சொல்கிறார்கள்.

""இப்ப சாதாரணமாத்தான் விள்ளாண்டுனுருப் பானுங்க. இதுவே தீபாவளி சீசன் நெருங்குற சமயத்துல பெட் கட்டி டோர்னமென்ட் மேட்சே நடத்துவானுங்க. கொருக்குப்பேட்டையில தொடங்குற மேட்ச்(!) வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, வண்ணாரப் பேட்டை, எம்.கே.பி.நகர், ஓட்டேரி, எண்ணூருன்னு ஏரியாவே களை கட்டும்'' என்கிற காந்தி ""எத்தனை காத்தாடியை நம்ம மாஞ்சா காத்தாடியில அறுக்குறோமோ அந்த அளவுக்கு நமக்கு பவரு. அறுக்குறதுக்கு பேரு லொடாய். அதுக்குத்தான் காத்தாடி கயிறுல மாஞ்சா தடவி ப்ளேடு மாதிரி சார்ப்பாக்குறானுங்க பசங்க'' என்றதும்... பொய்யது என்பவ ரோ ""இப்டி லேசா பட்டதும் அறுக்குற மாதிரி ரெடி பண்றது பசங்களுக்கு சப்ப மேட்டரு. காத்தாடி சாமான்னாவே நாட்டு மருந்துக்கடையிலே குடுத்துடு வாங்க. நூலு 45 ரூபாய், வஜ்ரம், சூடுமாவு, கலரு இதோட பாட்டில் ஓடு களை ஒடைச்சுத் தூள் தூளாக்கி கலந்துதான் வேக வைப்போம். அப்படியே சூடாக்கி நூலில் தடவுனதும்... வெய்யிலில் விட்டு காய வைப்பானுங்க. தண்டையார் பேட்டை சிமெண்ட் ரோடு ஏரியா முழுக்க கடைகள்ல காத்தாடியும், நூலும், காத்தாடி செய்யத் தேவையானதும் விக்குறாங்க.

இப்படி செய்யுற காத்தாடிக்கு கோரப்பல்லு, ஒத்தக்கயிறு, ரெட்டைக் கண்ணு, ஹார்ட் பானா, பாம்பை காத் தாடி, பறவை, பல்லு பானா, ரெட் பானா, ட்யூப் லைட்டுன்னு நிறைய பேருக்கீது. இதுல ரெட்டைக்கண்ணு, கோரப்பல்லும் தான் பார்க்குறதுக்கு டெரரா இருக்கும்.

இதுல அய்யாக்கண்ணு காத் தாடின்னு விற்குது. அதுதான் இங்க ரொம்ப ஃபேமஸ். "வீல்' முத்திரை போட்டிருக்கும்'' என்றவர் ""இந்த மாதிரி விடும்போது நிறைய பிரச்சினைலாம் வந்திருக்குதுங்க. அதாவது நடிகர்கள், அரசியல்வாதிகள், கட்சி சின்னம்லாம் போட்டு காத்தாடி விடுறதால் அறுந்து விழுற காத்தாடிக்காரன் பயங்கர காண் டாகிவிடுவான். இதுல ஏரியா பிரச்சினை, கட்சிப் பிரச்சினைன்னு வெட்டுக்குத்து லெவலுக்குப் போய்டும்ங்க'' என்கிறார் மிரட்சியுடன்.

முதலில் சுப்பிரமணி அவரது மகன் பாஸ்கர் பிறகு அவரது மகன் என்று மூன்று தலைமுறையாக காத்தாடி விடுவதை ஹாபியாக வைத்திருக்கும் (மாஞ்சா வம்சமோ) அந்த குடும்பத்தை சந்தித்தோம். ""அப்போ சும்மா ஜாலிக்காக விளை யாண்டுட்டேன் தம்பி... தப்புன்னு தெரிஞ்ச தும் என் மகனை கண்டிச்சேன் கேட்கல. இப்போ என் பேரன எம்புள்ள கட்டுப் படுத்திக்கிட்டிருக்கான்'' என்கிறார் சுப்பிரமணி.

இரண்டு கைகளை இழந்த இளை ஞன் வடிவேலு ""பத்து வயசுல ரொம்ப இன்ட்ரஸ்ட்டா காத்தாடி உட்டுக்கிட்டே ஓடும்போது ரெயில் தண்டவாளத்துல விழுந்து அப்ப வந்த கூட்ஸ் வண்டியில என்னோட கைகள் ரெண்டும் மாட்டி சின்னா பின்னமாகிடுச்சுங்க. இன்னைக்கும் சாப்பிடக் கூட முடியாம... எந்த வேலைக் கும் போக முடியாம கஷ்டப்படுறேங்க'' என்று அழும்போது அவரது தாய், தகப் பனின் கண்களிலும் அழுகை பீறிடுகிறது.

இதைவிடக் கொடுமை, கழுத்தறுபட்டு சமீபத்தில் இறந்து போன திருப்பதி குடும்பத்தின் நிலைமை. கண்ணீருடன் அம்மா லட்சுமியோ ""அய்யோ... 28 வயசுதாங்க ஆவுது அவனுக்கு. கல்யாணமாகி மூன்றரை வயசு ரோகிணி, 10 மாதக் குழந்தை தர்ஷிணின்னு ரெண்டு குழந்தைகள் இருக்கு. என் கணவர் இறந்ததுக்கப்புறம் இந்த ரெண்டு குடும்பத்தையும் அவன்தான் தாங்கிக்கிட்டிருந்தான்... இப்படி போய்ச் சேர்ந்துட்டானே'' என்று குமுறி அழ... மனைவி நித்யாவோ ""அடுத்தவங்க உசுரை எடுக்குறது ஒரு விளையாட்டாங்க. இந்த பிள்ளைங்களை எப்படி காப்பாத்தப் போறேன்னு எனக்கே தெரியல. அப்பா எங்கன்னு கேட்டா என்ன பதில் சொல்வேன்? இப்படிப்பட்ட சாவு யாருக்கும் வரக்கூடாதுங்க. இதுக்கு அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கணும்'' என்று தேம்பித் தேம்பி அழுகிறார் இரு குழந்தைகளை மடியில் வைத்துக் கொண்டு.

இந்த புகாரை விசாரித்து வரும் எம்.கே.பி.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாம் வின்சென்டோ, ""கழுத்தறுபட்டு விழுந்து கிடந்ததை பதறிப் போய் தகவல் சொன்ன அதே பகுதி மக்கள்... காத்தாடி விட்டு உயி ருக்கு உலை வைத்தவர்களை கைது செய்த போது "காத்தாடி விட்ட துக்கு கைதா?' என்று கலாட்டா செய்கிறார்கள். காத்தாடி பொருட்கள் விற்பவர்களை கைது செய்யப் போனால் "எங்க ளுக்கு விற்க உரிமை இருக்கு'ன்னு கோர்ட் ஆர் டரை காண்பிக்குறாங்க. இப்படியிருந்தால் என்ன செய்ய முடியும் நாங்கள்? மாஞ்சா காத்தாடி விட்டு அதன் மூலம் இறந்தால் கொலைக்குற்றமாக கருதி கைது செய்ய சட்டம் கொண்டு வர வேண்டும் என்றுதான் காவல்துறை போராடுகிறது.

அதற்கு சட்டம் தான் அனுமதிக்கணும். இல்லைன்னா இந்த மாதிரியான விபரீதங்கள் நடப்பதை முழுமையா தடுக்க முடியாது'' என் கிறார் வேதனையுடன்.

No comments:

Post a Comment